Friday, May 17, 2013

பேர் போன கதை -தாத்தாவின் அதே அவஸ்தை பேரனுக்கு


Social Security Card sample
நியூயார்க் புது நண்பர் :  ஹலோ தியாகராஜன்  How are you?.
ஆல்ஃபி : நல்லாயிருக்கேன், ஆனா என் பெயர் தியாகராஜன் இல்லை.
என்ன அது உங்க பெயர் இல்லையா? உங்க லாஸ்ட் நேம் என்ன?
“தியாகராஜன்”.
என்னங்க குழப்புறீங்க. அப்ப  அது யார் பெயர்?
அது என் அப்பா பெயர்
அப்ப  உங்க பெயர் என்ன?


“ ராஜசேகரன் “
ராஜசேகரனா, சொல்லவேயில்லை? அப்ப  ஆல்ஃபிரட் ?

அது என் first name

ஆல்ஃபி ?

அதுவும் என் பெயர்தான்
ஐயையோ, என்னங்க இடியாப்பச் சிக்கலா இருக்கு. உங்க உண்மையான பெயர் என்ன?
T.A. ராஜசேகரன்
இப்ப ?
ஆல்ஃபிரட்  தியாகராஜன்.
அப்ப  ராஜசேகரன்?.
அது என் மிடில் நேம் ஆயிருச்சு. அதனால் வெறும் R னு சுருங்கியிருச்சு.
உங்கப்பா ஒரு இந்துவா? 
இல்லை கிறிஸ்தவர்தான்.
அப்ப  எப்படி தியாகராஜன்?
உங்களுக்கு டைம் இருந்தா சொல்றேன்.
சரி சுருக்கமா சொல்லுங்க.

ஆச்சுவலா, என் முப்பாட்டன் சந்தியாகு.
ஐயா ஆளவிடு, போன நூற்றாண்டு கதையெல்லாம் எடுத்தா, ரொம்ப கஷ்டம், நான் அழுதுருவேன்.
     இல்ல சுருக்கமா சொல்றேன். என் தாத்தா பேர் “செபஸ்டியான்”. அவரோட மாமா சந்தியாகு, சமூகப்பணி செய்யும்படி, என் தாத்தாவை தேவதானப்பட்டி அனுப்பினார். அங்கு சென்று பள்ளி ஒன்றினை ஆரம்பித்து, பல சமூக மாற்றங்களை செய்தார். ஊருக்கு வரும் வெள்ளைக்காரர்களிடம் சரிக்கு சரிஆங்கிலம் பேசி ஊருக்கு பல நன்மைகளை செய்தார் ."பெரிய வாத்தியார்" என்று அவரை அழைத்த ஊர் மக்களுக்கு அவர் பேரை சரியாக உச்சரிக்க தெரியாமல் 'செவத்தியான்' என்று அழைத்தார்கள். முதலில் கோபத்தை வரவழைத்தாலும், என்ன செய்வது என்று இருந்துவிட்டார். அதனால் மக்கள் கூப்பிடுவதற்கு இலகுவாக இருப்பதற்காக, பிறந்த மூன்று மகன்களுக்கும், ஜெயராஜன், தியாகராஜன் மற்றும் ஜீவராஜன் என்று பெயர் சூட்டினார்.

என் அப்பா, அவருக்குப் பிறந்த மூன்று மகன்களுக்கும், ஒரு ஆங்கில மற்றும் ஒரு தமிழ்ப்பெயரை சூட்டினார். எனவே என் பெயர் T.A.ராஜசேகரன் ஆயிற்று. அதாவது, T.ஆல்ஃபிரட் ராஜசேகரன். என்னை வீட்டில் “சேகர்” என்றும் பள்ளியில் “ராஜசேகரன்” என்றும் கூப்பிட்டனர். எங்கப்பா அம்மா "சேகப்பன்" என்று கூப்பிட்டனர்.
  இதற்கிடையில்,காந்திகிராமம் ,தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் +1 சேர்ந்தேன். அங்கே என் வகுப்பறையில் இன்னொரு ராஜசேகரன் இருந்ததால், என்னை ஆல்ஃபிரட் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். அதிலிருந்து என்னை இஷ்டத்துக்கு பல பேரிட்டு கூப்பிட்டனர்.
பலபேரா?
ஆம், Albert, Albred, Albret, Alfret, Alfert, Alferd, மற்றும் Alfraud என்று கூட கூப்பிட்டனர்.


ஷ் அப்பாடா, இப்பவே கண்ணைக்கட்டுதே? அப்புறம் 'ஆல்ஃபி'ன்னு எப்ப வந்துச்சு?
    அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த போது, அங்கிருந்த பிற நாட்டு நண்பர்கள், என்னை Alfy என்று கூப்பிட ஆரம்பித்து அதுவே இன்றுவரை நிலைத்துவிட்டது.

அப்ப Alfred Thiagarajan?
     US  வரும்போது பாஸ்போட்டில் இனிஷியல் எக்ஸ்பேன்ட் பண்ணி “தியாகராஜன் ஆல்ஃபிரட் ராஜசேகரன்” என்று இருந்தது. இங்கே சோஷியல் செக்யூரிட்டி கார்டுக்காக ஃபர்ஸ்ட் நேம், லாஸ்ட் நேம் என்று கேட்டார்கள். எனவே ஃபர்ஸ்ட் நேம் ஆல்ஃபிரட் என்றும் லாஸ்ட் நேம் தியாகராஜன் என்றும் மிடில் இனிஷியல் R  என்றும் ஆகிவிட்டது. இங்க லாஸ்ட் நேம் வைத்துத்தான் கூப்பிடுகிறார்கள் என்பதால், என் தாத்தா பட்ட அவஸ்தையை நான் பட்டுக் கொண்டிருக்கிறேன். அங்கே தமிழ்
  மக்கள் ஆங்கிலப் பெயரில் தடுமாறியது போல, இங்கே ஆங்கில மக்கள் என் தமிழ்ப் பெயரில் தடுக்கி விழுகிறார்கள் .
இந்த பேர் போனவன்னு சொல்றது இதைத்தானா?. நல்லவேளை வேறு பெயர்கள் எதுவும் இல்லை.
இதோட முடிச்சிட்டீங்க.

 இல்ல இல்ல நிறைய பட்டப்பெயர் இருக்கு. கவிப்பித்தன், ஊமை, புல்தடுக்கி, புலவர், ஒல்லிப்பிச்சா அப்புறம் இப்ப பரதேசி.
இந்தப் பேர் போதுமா ? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?

இல்லை, பாணன் என்று ஒரு புனை பெயர் இருக்கு. அத ஏன்  வச்சேன்னா?
ஐயா ஆள விடு சாமி.
(விரைந்து எழுந்து ஓடுகிறார்)

 

5 comments:

  1. படிக்கிற எனக்கே இப்படி தல சுத்துதே ....

    ஆனாலும் , அந்த புல்தடுக்கி கிற நேம் நல்லாதான் இருக்கு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. இப்பவும் அந்த பெயர் பொருந்தும்தான்

      Delete
  2. நானும் என் பெயரும் -- http://dharumi.blogspot.in/2005/07/31.html

    ReplyDelete