Showing posts with label பயணக்கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக்கட்டுரை. Show all posts

Monday, March 4, 2019

இந்த அம்மனுக்கு கோவிலும் இல்லை நிரந்தர சிலையும் இல்லை!!!!



வேர்களைத்தேடி பகுதி 36
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
https://paradesiatnewyork.blogspot.com/2019/02/35-httpparadesiatnewyork.html
Courtesy : Google
            
      தேவதானப்பட்டியில் காமாட்சியம்மன் திருவிழாவிற்கு அடுத்தபடியாக வெகு விமரிசையாக நடப்பது முத்தாளம்மன் திருவிழா. காமாட்சியம்மன் கோவிலில் அம்மன் சிலை கிடையாது, வெறும் கதவுக்குத்தான் பூஜை என்று சொல்லியிருந்தேன். அதாவது காமாட்சியம்மனுக்கு கோவில் இருக்கிறது சிலையில்லை. ஆனால் முத்தளாம்மனுக்கு கோவிலும் இல்லை, நிரந்தர சிலையும் இல்லை.
          ஒவ்வொரு திருவிழாச் சமயமும் புல்லக்கா பட்டியில் உள்ள மண்பானை செய்யும் குலத்தவர் அம்மனின் சிலையை களிமண்ணில் செய்து வண்ணம் பூசி வனப்பாக்கி தேவதானப்பட்டியில் எங்கள் தெருவிலிருந்த நாட்டாமை வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். அதற்கு ஒரு மண்டலம் முன்னாலேயே பந்தக்கால் நட்டு, காப்புக்கட்டி விரதமிருப்பார்கள். ஏனென்றால் அம்மனுக்கு தோஷமோ கோபமோ ஏற்பட்டால் ஊருக்கு நல்லதல்ல என்பது அவர்களின் நம்பிக்கை.
Courtesy : Google
          நாட்டாமை வீட்டுக்கு வரும் சிலைக்கு கண்கள் மட்டும் இருக்காது. வீட்டுக்கு முன்னால் மக்கள் திரள் கூடியிருக்க பம்பை, உடுக்கை, தவில் நாதஸ்வரம் போன்றவை இடி முழக்கத்தை எழுப்ப, நாட்டாமை வீட்டிலுள்ள சாமி ரூமில் முத்தாளம்மனின் கண்கள் திறக்கப்படும். அதாவது வரையப்படும். அதுவரை மெல்லிய துணியால் மூடியிருந்த சிலையைத் திறந்து கண்கள் வரைவதை நான் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்திருக்கிறேன். கண்களை குயவர்கள் லாவகமாக வரைய அப்படியே சிலை உயிர் பெறும் போது அங்குள்ள பலபேருக்கு அருள் வந்துவிடும். வெளியிலிருக்கும் பலருக்கும் அருள் வரும். பார்ப்பதற்கு பயமாகவும் அதே சமயத்தில் வேடிக்கையாகவும் இருக்கும்.
          அதன்பின் முத்தத்தாளம்மனுக்கு பட்டுடுத்தி பொன் நகைகள் சூடி நாயக்கர் பரம்பரையில் வந்த நாட்டாமை குலத்தவர் வந்து கும்பிடும் வகையில் ஒரு நாள் அங்கு இருக்கும். கிராம அலுவலர் (VAO) வந்தவுடன் இந்தப்பதவிக்கு அதிகாரம் இல்லாமல் போனது. ஆனால் பெரிய நாட்டாமை இருக்கும் வரை அவருக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. எங்கள் தெருவிலேயே அவர்கள் வீடுதான் பெரிது.
          எங்கள் தெரு நாட்டாண்மைக்காரர் தெரு என்று முதலிலும் சின்னப்ப நாடார் தெரு என்று பின்னரும் அழைக்கப்பட்டது. ஊரிலேயே எங்கள் தெரு மிகவும் வித்தியாசமானது. ஏனென்றால் செட்டியார்கள், நாடார்கள், தேவர்கள், நாயுடுக்கள் முஸ்லீம்கள், பட்டானியர், பறையர், பிள்ளைமார்கள், அகமுடையர் என்று ஊரில் ஒவ்வொரு வருக்கும் ஒரு பகுதி இருந்தது. இவர்கள் பெரும்பாலும் குழுவாக வாழ்ந்தாலும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்ந்து வந்தனர்,  இரு குழுவினர் தவிர.  அதனைப்பற்றி அப்புறம் சொல்கிறேன். ஆனால் எங்கள் தெருவில், கிறித்தவர் (நாங்கள்தான் பாஸ்) முஸ்லீம், நாயக்கர், நாடார், முக்குலத்தவர், செட்டியார் என அனைத்து சமுதாயத்தவரும் ஒன்றிணைந்து வாழ்ந்தனர்.
தேவராட்டம்-Google
          நாட்டாமை என்றால் சினிமாவில் வருவது போல் கொண்டை முடிந்து, முறுக்கு மீசை வைத்த ஒருவர் உங்களுக்கு ஞாபகம் வந்தால் அது என் தவறல்ல உங்கள் தவறுமல்ல. அப்படியே நாம் பார்த்துப் பழக்கப்பட்டு விட்டோம். எங்கள் நாட்டாமை அப்படியல்ல, படித்தவர், நல்லகிராப் வெட்டி, மீசை மழித்து இருப்பார். வெள்ளை வேஷ்டி வெள்ளைக்கதரணிந்து  எப்போதும் சிரித்த முகத்துடன் சாந்தமாக இருப்பார். அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் ராஜா அண்ணன். அடுத்து சாந்தி அக்கா மூன்றாவது வெங்கிடு எனப்படும் வெங்கடேசன் தம்பி. அவர்களெல்லாம் எங்கு எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சாந்தி அக்கா மிகவும் அழகாக ஒரு இளவரசி போல இருப்பார்கள். எங்கள் ஊரில் அப்போது வயதுக்கு வந்த பெண்கள், பள்ளி தவிர வேறெங்கும் போகும் வழக்கமில்லை என்பதால் நூலகத்தில் புத்தகங்கள் எடுத்துவர என்னைத்தான் அனுப்புவார்கள். நான் நூலகமும் நடத்தியதால் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். எல்லோரும் என்னுடன் அன்புடன் பழகுவார்கள். இதில் வெங்கிடு மிகவும் உற்சாகமுள்ள தம்பி. என்னைப் பார்த்துவிட்டால் மகிழ்ச்சியடைவான். மகிழ்ச்சியடைந்தால்  கிட்டவந்து இரு விரல்களால் கிள்ளி வைத்துவிடுவான். அது  செல்லக்கிள்ளு என்றாலும் சிலசமயம் வலிக்கும். மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவனுக்கு இப்படி ஒரு பழக்கம். சில சமயங்களில் நானும் அவனும் ஒன்றாக நூலகம் சென்று சாந்தியக்காவிற்காக புத்தகங்கள் எடுத்து வருவோம். 

முளைப்பாரி-Google
          முத்தாளம்மன் அதன்பிறகு நாட்டாமை வீட்டிலிருந்து மேளதாளத்துடன் கிளம்பி பிள்ளைமார் மண்டகப்படிக்காக காந்தி மைதானத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் எழுந்தருளியிருக்கும். பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த மக்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து, முளைப்பாரி சுமந்து ஒரு நாள் விழாவாகக் கொண்டாடுவார்கள். பிற சமூகத்தினரில் சிலரும் அங்கு வந்து வழிபடுவார்கள். பிறகு முத்தாளம்மன் அங்கிருந்து கிளம்பி நாடார் பேட்டைக்குச் சென்று அங்குள்ள காளியம்மன் கோவிலில் இருந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து வடக்குத்தெருவில் உள்ள தேவர் சமூகத்திற்கு நகர்ந்து அருள் பாலிக்கச் செல்லும். அங்கு ஒரு நாள் பகல் மற்றும் இரவு முழுவதும் இருந்து, அடுத்தநாள் அங்கிருந்து கிளம்பும். அங்கிருந்து காமாட்சியம்மன், மஞ்சளாறு அணை பிரிவு வழியாக மெயின்ரோட்டுக்கு வரும். அப்போது தேவர் குல இளஞ்சிங்கங்கள் அம்மனுக்கு முன் தேவராட்டம் ஆடி வருவார்கள். உருமி இசைக் கேற்ப அசைந்தாடுவது மிக அருமையாக இருக்கும். அதோடு காளி அரக்கன் வேடம் போட்டு ஆடுவார்கள். காளிவேடம் போடுபவர் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பார். ஏனென்று தெரியவில்லை. அதோடு ரத்தச்சிவப்பான ஒரு தோல் நாக்கை வாயில் கடித்திருப்பார். காளியின் ரத்தம் தோய்ந்த நாக்குப்போல் அது தொங்கும். அட்டையில் செய்த பல கைகள் முதுகில் இணைக்கப்பட்டிருக்கும். கையில் ஒரு சூலாயுதம் இருக்கும். தலையில் சவுரி முடி இணைக்கப்பட்டு தோளில் புரளும். சரிகையால் ஆன சட்டை பாவாடை அணிந்து, காலில் சலங்கையணிந்திருப்பார். அவரின் இடுப்புப் பகுதியில் கயிறு இணைக்கப்பட்டு அதனை பின்னால் ஒருவர் பிடித்துக் கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார். இல்லையென்றால் சூலாயுதத்தால் அரக்கனைக் குத்திவிடுவார் போலத் தெரியும். அவர் முன்னால் அரக்கன் வேடமிட்ட ஒருவர் மீசை முறுக்கி, கூந்தல் பரப்பி சரிகைச் சட்டையும், சரிகை டிரவுசரும் அணிந்து காலில் சலங்கையும், கையில் ஒரு பட்டாக் கத்தியும் வைத்துக் கொண்டு காளிக்குப் போக்குக்காட்டிக் கொண்டிருப்பார். ஆனால் அவருக்கு எந்தக்கட்டுப்பாடும் இருக்காது. என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனை? காளியைக் கட்டுப்படுத்த பின்னால் ஒருவர், அரக்கனைக் கட்டுப்படுத்த ஒருவருமில்லையே என்று நினைத்திருக்கிறேன். காளியின் ஆவேசம் பெரிதாக இருக்கும். அரக்கனை இதோ சூலம் குத்தப்போகிறது போல மிக அருகில் நெருங்கியவுடன் பின்னால் இருப்பவர் ஒரு இழு இழுத்து காளியைக் கட்டுப்படுத்துவார்.
          மதுரையிலுருந்து சட்டிப்போலிஸ் என்று நாங்கள் அழைக்கும் ரிசர்வ் படையினர் ஏராளமாக வனத்திருப்பார்கள். பெருங்கலவரம் ஒன்றை எதிர்பார்த்தார்கள். அதனைப்பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
தொடரும்

Tuesday, March 21, 2017

விகார மகாதேவி ஆகிப்போன விக்டோரியா மகாராணி !!!!!!!!!!!!

இலங்கையில் பரதேசி - பகுதி -6

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_7.html

Image result for queen victoria height
Queen Victoria 
"அம்ரி என்னப்பா கெஸ்ட் ஹவுஸ்னு போட்டிருந்த வொர்ஸ்ட் ஹவுசிலிருந்து இப்ப கோஸ்ட் ஹவுசுக்கு கூட்டிட்டு வந்துட்ட" என்றேன். "சார் கொஞ்சம் பொறுமையா இரிங்க", என்று சொல்லிவிட்டு அந்த வீட்டையும் கடந்து இடது புறம் திரும்பினால் ஆஹா  நந்தவனம் எதிரில் தெரிந்தது. அந்த நந்தவனத்தின் ஒரு பகுதியில்  அமைந்திருந்தது  ஒரு அழகிய தங்கும் விடுதி. போல்கோடா  பார்க் என்பது அதன் பெயர். நடுவில் இருந்த சிறிய குடில்தான் வரவேற்பரை. அம்ரி போய் அங்கே போய் பேசிவிட்டு என்னை அழைத்துச் சென்றான். அட்வான்ஸ் பணத்தை கட்டிவிட்டு வெளியே இடதுபுற மூலையில் ஒரு அறை கொடுத்தனர். நல்ல அகலமான இரண்டு பெட் உள்ள அறை, பாத்ரூம் என சகல வசதிகளோடு இருந்தது.


"சார் நீங்க ரெடியாகி இருங்க, நான் வீட்டுக்குப் போய் விட்டு வந்துவிடுகிறேன். இங்கே பக்கத்தில்தான் என் வீடு", என்றான். பரவாயில்லை  அவனும் வந்து போவதற்கு வசதிதான் என்று எண்ணிவிட்டு உள்ளே போனேன். அரை மணி நேரத்தில் குளித்து ரெடியாகிரூம் சர்வீசை அழைத்து சாண்ட்விச் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு விட்டு வெளியே வந்தேன். இட்லி தோசை அங்கு கிடைக்கவில்லை என்பது கொஞ்சம் மன வருத்தம்தான். நிர்மலமான நீல வானம் பளிச்சிட அது ஒரு அருமையான நாள். ரூமின் பின்புறம் அழகிய நீச்சல் குளம் இருந்தது. முன்புறம் அழகிய பூந்தோட்டம். அதன் அருகில் பெரிய திறந்தவெளி அரங்கம், மாலை நடக்கவிருக்கும் திருமண வரவேற்பு விழாவுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.


அதன்பின் ஒரு அழகிய ஏரி இருந்தது. இயற்கை அழகு சூழ்ந்த அந்த இடத்தை தேர்வு செய்த அம்ரிக்கு நன்றி சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அம்ரி வந்து சேர்ந்தான். "இன்றைக்கு எங்கே போகலாம்?”, என்ற போது மணி 11 ஆகிவிட்டது. “கொழும்பு நகரின் சில பகுதிகளைப் பார்க்கலாம்", என்றான்.
Fountain at Hotel 

"முதலில் சிறிது தூரத்தில் இருக்கும் பார்லிமென்ட் பில்டிங்கைப் பார்க்கலாம்", என்று அழைத்துச் சென்றான்.
நகருக்கு வெளியே இருந்த கட்டிடத்திற்குச் செல்ல சிறிது நேரமானது. 'ஜெயவர்த்தனபுர கோட்டே' என்ற இடத்தில் இது அமைந்திருக்கிறது. இதுவே தலைநகரம் என்றாலும் கொழும்பினருகிலேயே இருப்பதால் இதனை யாரும் தனி நகராகப் பார்ப்பதில்லை.
Related image
Srilankan  Parliament
இந்த இடம் கொழும்பிலிருந்து  சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள தியாவன்னா ஓயா (Diyawanna Oya) என்ற ஏரியில் உள்ள தீவில் அமைந்துள்ளது. இங்குதான் மூன்றாவது விக்கிரமபாகு என்ற மன்னனின் மந்திரியான நிசாகா அளகேஸ்வராவின் அரண்மனை இருந்ததாம்.
பாதுகாப்பான இடம் என்பதால் இதனைத் தேர்ந்தெடுத்து இலங்கையைச் சேர்ந்த தேஷமான்ய ஜாஃப்ரி பாவா (Geoffry Bawa)  என்ற ஆர்கிடெட் வடிவமைக்க, ஜப்பானிய கம்பெனியான மிட்சுய் (Mitsui) குரூப்பால் கட்டி முடிக்கப்பட்டது. அவர்கள் திட்டமிட்டபடி 26 மாதத்திற்குள் கட்டினார்களாம். கட்டி முடிக்கப்பட்டபோது இதன் மொத்த மதிப்பீடு 25.4 மில்லியன் US டாலர்கள்.
Image result for night view of Srilankan parliament
Night view
1979ல் பிரதம மந்திரியாக இருந்த ரத்னசிங்கே பிரேமதாசா முடிவெடுத்து, ஏப்ரல் 1982ல் அதிபர் ஜெ.ஆர் ஜெயவர்த்தனேவால்  திறந்து வைக்கப்பட்டது.
பழமையும் புதுமையும் சேர்ந்து கட்டப்பட்ட இந்தக் கட்டடம் தூரத்திலிருந்து பார்த்தாலும் மிக அழகாக இருந்தது. ஏரிக்குள் இருக்கும் இந்தத்தீவின் உள்ளே 12 ஏக்கர் பரப்பளவில் இது கட்டப்பட்டு மதிய வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்தது.
என்ன, பிரேமதாசா, ஜெயவர்த்தனே என்ற பெயர்கள்தான் கோபத்தைக் கிளறின. அந்தச் சமயத்தில் நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் பொது ஜெயவர்த்தனேவிற்கு எதிராக ஊர்வலம் போனது ஞாபகத்தில் வந்தது.
சிங்களப் பெயர்களுக்கும் தமிழ்ப்பெயர்களுக்கும் வித்தியாசம் எப்படிக் கண்டுபிடிப்பது என்பது சுலபமாய் இருந்தது. முற்றுப்பெற்று ஒலித்தால் தமிழ்ப்பெயர், முற்றுபெறாமல் தொக்கி நின்று விளித்தால் அது சிங்களப் பெயர். உதாரணத்திற்கு ரத்ன சிங்கம் என்றால் அது தமிழ்ப் பெயர், ரத்ன சிங்கே என்றால் அது சிங்களப் பெயர் எப்பூடி?

"இரவில் விளக்குகளுடன் பார்க்கும்போது அதன் பிம்பம் நீரில் விழுந்து மிக அழகாக இருக்கும்”, என்றான் அம்ரி.
“அடுத்து எங்கே என்று கேட்டதற்கு "விகாரமகா  தேவி பார்க்" என்றான் அம்ரி.
அதுசரி "விக்டோரியா பார்க் எங்கு இருக்கிறது?” என்றேன். விக்டோரியா பார்க் தான் விகாரமகா தேவி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது". என்றான் அம்ரி.
 “பார்க்கெல்லாம் அப்புறம் பார்க்கலாம். ஏதாவது முக்கிய இடங்களுக்கு போகலாம்”
"சரிசார், ஆனால் இதனைச்சுற்றி சில முக்கிய இடங்கள் இருக்கின்றன. அதனையெல்லாம் பார்த்துவிடலாம்".
அம்ரி சொன்னபடி ஒரு விசாலமான பூங்காவிற்கு வந்து சேர்ந்தோம். இந்தப் பூங்காவை அமைத்து அதனை கொழும்புவிற்குக் கொடுத்தவர் பெயர் சார்லஸ் ஹென்றி டிசோசா. இது  நடந்தது பிரிட்டிஷ் ஆட்சியின் போது. இரண்டாவது உலகப்போர் நடக்கும்போது ஆஸ்திரேலியாவின் 17ஆவது படைப்பிரிவு இங்கு வந்து முகாமிட்டிருந்ததாம். உலகப்போர் முடிவுக்கு வந்தபின் இது புனரமைக்கப்பட்டு 1951ல் தான் பொதுமக்களுக்கென திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலத்தில் விக்டோரியா மகாராணியின் பேரில் அழைக்கப்பட்ட இது சுதந்திரத்திற்குப் பின் இலங்கையின் மன்னன் துட்டகாமனுவின் மனைவியான ராணி விகார மகா தேவியின் பெயர் சூட்டப்பட்டது.
Related image
Viharamahadevi Park
அவளைப்போய் ஏன் இந்த மன்னன் திருமணம் செய்தான்?
 “ஏன் சார்?”
“பேரே விகாரமா இருக்கே?. ஒருவேளை மூஞ்சியும் அப்படி இருந்திருக்குமோ?”.      “தெரியாது சார் நான் பார்த்ததில்லை”.  என்று சொன்னானே  பார்க்கலாம். நான் அதன்பின் வாயை மூடிக்கொண்டேன்,

Image result for viharamahadevi park
Add caption
கொழும்பு பகுதியில் இது தான் பழமையான பெரிய ஒரே பார்க். 1927 முதல் 1995 வரை இங்குதான் கிரிக்கெட் விளையாடுவார்களாம். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டீம்கள் இங்கு வந்து விளையாடி இருக்கின்றன.
Related image
Park 
 உள்ளே ஒரு மிகப்பெரிய புத்தர் சிலை, சிறிய மிருகக்காட்சி சாலை, ஒரு சிறுவர் பூங்கா தவிர நிறைய நீர் ஊற்றுகள் அமைந்துள்ளன. இந்தப் பூங்காவின் ஒருபுறம் நேஷனல் மியூசியமும், மறுபுறம் டவுன் ஹால் பில்டிங்கும் இருக்கின்றன. ஒருபுறம் நின்று பார்க்கும்போது வாஷிங்டன் DC -யின் மினியேச்சர் போலத் தெரிந்த டவுன் ஹாலை நோக்கிச் சென்றோம்.

- தொடரும்.