Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Monday, September 10, 2018

பாம்பிடம் மாட்டிக்கொண்ட பரதேசி!!!!!!


Related image
வேர்களைத்தேடி பகுதி 24


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post.html
காய்ந்து கொண்டிருக்கும் வெயிலில் ஜில்லென ஐஸ்  சாப்பிட்டால், அதுவும் இலவசமாக யாருக்கு ஆசை பிறக்காது.  ஆசையின் உந்துதலில் சரளைக் கற்களில் சத்தம் எழுப்பி தீயாய்ச் சுட்ட மொட்டைப்பாறைகளை தொட்டும் தொடாமல் மேலேறிச் சென்றேன். அந்தப் பெரும் இரட்டைப் பாறையின் கீழே சற்றே நிழல் விழுந்த புதரில் கையை கிட்டத்தட்ட அருகில் கொண்டு போய்விட்டேன். அப்போது தான் படமெடுத்து நின்ற அந்த நல்ல பாம்பைப் பார்த்தேன். பெரியது என்றும் சொல்லமுடியாது. சிறியதும் இல்லை. நடுத்தர வடிவில் பளபளவென்று படம் எடுத்தவாறு ஆடாமல் இருந்தது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் பாம்பு என்றால் தொடையும் நடுங்கும் என்று அன்றுதான் தெரிந்துகொண்டேன். புதையலைக் காக்கும் நாக தேவதை போல் அங்கே இருந்த பாம்பைப் பார்த்து திகைத்துவிட்டேன். விட்டிருந்தால் பாம்பின் படம் என் கையில் பட்டு, பாம்பின் பல் என் மெய்யில்  பட்டு, விஷம் உடலில் பட்டு, என் உடல் தரையில் பட்டு, என் உயிர் மேகத்தில் பட்டிருக்கும்.
ஆடாது அசையாது இருந்த பாம்பின் முன்னால் நானும் ஆடாது அசையாது  சற்றே நடுங்கியவாறே நின்றேன். என் பேஸ்மென்ட் எவ்வளவு வீக்கென்று அன்றுதான் முழுவதுமாகத் தெரிந்தது. என்ன செய்வது என்று திகைத்து நின்றேன். காசை எடுக்க வழியில்லை. திரும்பினால் கொத்திவிடுமோ என்று பயம். அப்படியே சில நிமிடங்கள் கழிந்தது.
Image result for Eagle flying with snake

தீடீரென்று ஒரு பெரும் நிழல் என் மேல் படர மேலே பார்த்தால் ஒரு மிகப்பெரிய கழுகு. சற்றே நான் தலையைச் சாய்க்க. மின்னல் வேகத்தில் அது கீழிறங்கி பாம்பைத் தன் கைகளால் பற்றிக் கொண்டு பறந்து மறைந்தது.
கோழிக்குஞ்சுகளை, ஏன் கோழிகளையே தூக்கிச் செல்லும் பருந்துகளை நான் சிலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தக் காட்சி, எம்மாடி இப்போது நினைத்தாலும் பகீரென்று இருக்கிறது. அன்றுதான் குலோசப்பில் பருந்தின் இறக்கைகள் எவ்வளவு அகலம் என்று தெரிந்தது. கிட்டத்தட்ட என்னை முழுவதும் மறைக்கும் படியான நிழல் என்மேல் விழுந்தது பாம்பும் அதனைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. சட்டென கீழிறங்கி அந்தப் பாம்பை லாவகமாக தன் கால்களில் பற்றிக் கொண்டு மேலே வேகம் எடுத்தது. பாம்பு வளைந்தும் நெளிந்தும் உதறியும் ம்ஹீம் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பருந்தும் பறந்து மறைந்தது. எனக்கு அப்படியே ஆடிப்போனது. காப்பாற்றின பருந்துக்கு நன்றி சொன்னாலும், பாம்பு இல்லா விட்டால் என்னையே தூக்கிச் சென்றிருக்கும் அளவுக்கு மிகப்பெரியது.  தேடிப்பார்த்தால் அங்கு எந்த நாகமாணிக்கமும் தென்படவில்லை.  ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு புதரை நோண்டி காசை எடுத்துவிட்டு (வெறும் 4 நாலனா  என்று சொல்லக்கூடிய 25 பைசா) மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து கீழிறங்கினேன். கார் தலைகீழாக வேகமாகப் புறப்பட்டது. கீழிறங்கி 2 ஐஸ் ஃப்ரூட் வாங்கிச் சாப்பிட்டபின் தான் என்ஜின் சற்று குளிர்ந்தது. அதற்கப்புறம் எக்காரணத்தாலும் நான் தனியாக கரட்டுக்குப் போவதை முற்றிலுமாக கைவிட்டுவிட்டேன். கீழே வந்து நான் சொன்னதை யாரும் நம்பவேயில்லை. நீங்களாவது  நம்புங்க.
Image result for தேவதானப்பட்டி சந்தை

 என் வீட்டிலிருந்து உயர்நிலைப்பள்ளிக்கு போவதற்கு, தேவதானப்பட்டி மெயின்ரோடு, போலீஸ் நிலையம், பூங்கா ஆகியவற்றைக் கடக்கும் வழியில் தான் சந்தைப்பேட்டை இருக்கிறது. அதற்குள் பெரிய புளியந்தோப்பு உண்டு. அதில்தான் புதன் கிழமை தோறும் வாரச் சந்தை நடக்கும். விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த காய்கறி, கனிகளை அங்கு கொண்டு வந்துவிற்பார்கள். மொத்த விலை மற்றும் சில்லைரைக்கும் கிடைக்கும். கத்தரி, வெண்டை, முருங்கை, உருளை, சேனை, கேரட், பீட்ருட், தக்காளி போன்ற பலவகைக் காய்கறிகள் இங்கு கிடைக்கும், வடுக பட்டியிலிருந்து நாடார் பலசரக்குக் கடையும், கருவாடு, தேங்காய்க் கடைகளும் இருக்கும். ஆடு மாடுகள் கூட விற்பனையாகும். இது தவிர பலகாரங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களும் கிடைக்கும். புதன் கிழமை மதிய இடைவேளையில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குப் போகும் போது சந்தைக்குப்போகும் அம்மாவுடன் நானும் இணைந்து செல்லுவேன். எனக்குத்தேவை பத்துப் பைசா. அவர்கள் சில்லறை மாற்றிக் கையில் கொடுத்தவுடன் பள்ளிக்கு அங்கிருந்து குறுக்கு வழியில் ஓடி விடுவேன். என்ன, கீழே பார்த்துப் போக வேண்டும். அங்கே  ஓரமாக வாய்க்கால் ஓடுவதால் கீழே கோரமாக இருக்கும். பன்றிகளும் ஆங்காங்கு மேயும் . சில சமயங்களில் ஆத்திர அவசரத்திற்கு அங்கே போய்  உட்கார்ந்தால் பன்றிகளும் ஆத்திர அவசரத்தில் பின்னால் வந்து முட்டும்.
Related image
சீரணி
சின்ன வயதாக நான் இருக்கும் போது சந்தைக்குப் போகும் என் ஆயா தவறாது வாங்கி வருவது சீரணியும், சர்க்கரைச்சேவும் , இனிப்பும் காரமும் ஒன்றிணைந்து சுவையாக இருக்கும். சீரணி போன்ற ஒன்றை பலநாட்கள் கழித்து பங்களாதேஷ் கடையில் பார்த்தேன். வாங்கிச் சாப்பிட தைரியமில்லை. ஒரு நாள் வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். சொல்லிவிட்டால் மண் குதிரை, மண்ணால் செய்த சிறு விளையாட்டுச் சாமான்கள் அடுப்பு, சட்டி, பானை ஆகியவை வாங்கி வருவார்கள்.   இதில் தண்ணீர் ஊற்றி அரிசி போட்டு சோறு கூட செய்திருக்கிறேன். ஆனால் உயர்நிலைப் பள்ளி  வந்த போது அந்த விளையாட்டுக்கள் மாறிப்போனது.
Image result for தேவதானப்பட்டி சந்தை

புதன்கிழமை சந்தையில் தவறாமல் வாங்குவது மரவள்ளி, ஆழி வள்ளி, குச்சிக்கிழங்கு என்று பல பெயர்களால் அழைக்கப்படும் கப்பக்கிழங்கு வீட்டில் வேறு யாரும் அதனைச் சாப்பிட மாட்டார்கள். நானும் அம்மாவும் மட்டும்தான். மாலை வந்து நானே அதனை செம்மண் போக கழுவி, துண்டு துண்டாக நறுக்கி தோலையும் எடுத்து வைப்பேன். அதில் ஒரு துண்டை எடுத்து பச்சையாகச் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். வெள்ளைப்பால் ஒழுக அது மிக ருசியாக இருக்கும். வேக வைத்தாலும் நன்கு விளைந்த காயாக இருந்தால் வெகு சீக்கிரத்தில் வெந்து விரிந்து மகிழ்ந்து விடும். அப்படியே சுடச்சுட சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.
Image result for மரவள்ளி
மரவள்ளி
அந்த வாரச் சந்தை இன்னும் கூடுகிறதா என்று தெரியவில்லை. பக்கத்தில் உள்ள எல்லா ஊர்களுக்கும் அதுவே சந்தை. சந்தை நடக்கும் போது சில சமயங்களில் ரங்க ராட்டினம் வரும். எப்போதாவது குடை ராட்டினம் வரும். ரங்க ராட்டினம் சிறியதாக இருந்தாலும் அந்தப்பெட்டி மேலே போகும்போது மிகவும் பயமாக இருக்கும். ஒரு முறை வெங்கடேசுடன் நான் ஏறி அவஸ்தைப் பட்டதை நினைத்தால் இன்றைக்கும் நெஞ்சைப்  புரட்டுகிறது. அந்தக் கதையை அடுத்த வாரம் சொல்லுகிறேன்.
- தொடரும்.

Thursday, August 16, 2018

வாட்ஸாப்பில் கலைஞர் !

 கலைஞர் அவர்கள் மறைவுக்குப்பின் நெட்டிசன்கள் ஓவர் டைம் செய்து வெளியிட்ட நெகிழ்வான மீம்ஸுகளில்  சிலவற்றை உங்களுக்கு தொகுத்துத்
  தந்துள்ளேன்.

Add caption
Image result for karunanidhi in whatsapp

Image result for karunanidhi in whatsapp

Image result for karunanidhi in whatsapp












Monday, August 13, 2018

கலைஞர் ஆரம்பித்த திட்டங்கள் !

Image result for karunanidhi

கலைஞர் மறைவுக்கு ஆச்சரியமாக வாட்ஸாப்பில் பெரும்பாலும் நேர்மறை கருத்துக்களே வந்தன .அதிலும் திமுக காரர்களிடமிருந்து இல்லை .பொதுவான எந்தக்கட்சியையும் சேராதவர்களிடமிருந்துதான்   வந்தன .அவற்றுள் முக்கியமான ஒன்று அவர் தமிழகத்தில் செய்த   பணிகளைப் பட்டியலிட்டன.அவற்றை கீழே தருகிறேன்.குறைகளை நீக்கி  நிறைகளைப்பார்த்து நன்றி செலுத்துவோம், அன்னாரின் நினைவைப்போற்றுவோம் .
நீத்தாரைத்   தூற்றுதல் நம்  மரபல்லவே

அணைகளை காமராஜர் கட்டினார். சத்துணவு எம்ஜிஆர் ஆரம்பித்தார் என்று பதிவிடும் போது அரசியல் பார்க்காத நாம் கலைஞர் ஆரம்பித்த திட்டங்களை பார்த்து தெரிந்து கொள்வோம். இதனையும் அரசியலாக பார்க்காமல் இதனை தெரிந்து கொள்வதற்காக படிப்போம்.*
💐💐💐💐💐💐💐💐💐💐


1. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்

2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்

3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்

4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்

5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்

6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்

7. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர்

8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர்

9. கையில் இழுக்கும் ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்

10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்

11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்

12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்

13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்

14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்

15. அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்

16. P.U.C வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்

17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்

20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்

21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்

22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்

23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம் " தந்தது கலைஞர்

24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்

25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்

26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்

27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்

28. SIDCO உருவாக்கியது கலைஞர்

29. SIPCOT உருவாக்கியது கலைஞர்

30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்

31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்

32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்

33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்

34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்

35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தது கலைஞர்

36. மிக பிறப்படுத்தப்பட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்

37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

38. தாழ்த்தப்பட்டோருக்கு18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

40. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்

41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளங்கலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்

42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்.

43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்

44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்

45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்

46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்தது கலைஞர்

47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்

50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்

51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்

52. கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்

54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர்

55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர்

56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்

57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்

58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்

59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு

60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்

61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்

62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர்

63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்

64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்

65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்

66. தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது கலைஞர்

67. ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்

68. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்

69. செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்

70. சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்

71. பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர் கலைஞர்

72. விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர்.
(2006-2011 வரைஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)

73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர் கலைஞர்.
விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று (இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)

74. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர்* கலைஞர்.
********** இதை சொல்வது அரசியல் வாதி அல்ல வரலாறு.🌹

Image result for karunanidhi




Thursday, August 9, 2018

கலைஞரே, நீ வாழ்வாய் என்றும்!

1924-2018


தமிழனத்  தலைவர் , முத்தமிழ் அறிஞர்,  கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவையொட்டி நியூயார்க் தமிழ்ச்சங்கம் சார்பாக 

  எங்கள் தலைவர் அரங்கநாதன் உத்தமன் அவர்கள் ஒரு இரங்கல்  செய்தி வெளியிட்டு இருந்தார் .மேலும் எங்கள் செயலாளர் கவிஞர் சிவபாலன் எழுதிய ஒரு அருமையான கவிதாஞ்சலியும் வெளியிடப்பட்டது ,அதனை கீழே தருகிறேன் .



முத்தமிழ்க் கலைஞனே [மு.க]!
மூத்த தமிழ்ச் செல்வனே!
முடியவில்லை!.......
நம்ப முடியவில்லை!…..-தாங்கிக்
கொள்ள
முடியவில்லை!

உன் இழப்பு
வெறும் இறப்பல்ல!
உலகத் தமிழர் துயரம்!
துயரத்திலோ இது சிகரம்!

நீ தொடாத உயரமா?
தொட்டது போதாதென்றோ
இன்று
தொலைதூரம்  போனாய்?
விட்டது உன் உயிர்- இனி
விடாது தமிழுக்குத்  துயர்!

சங்கத் தமிழா,
இல்லை
தங்கத் தமிழா,
சிங்கத் திமிருடன்,
சீறுமே
உன் விரலும், உன் பேச்சும்!
இனிப் போச்சே
உன்னுடைய மூச்சும்!
தமிழ் வீச்சும்!
இச்செய்தி,
வேலை அல்லவா
 நெஞ்சில் பாய்ச்சும்!

பகுத்து, அறிந்த உன் அறிவும்[பகுத்தறிவும்]
வகுத்து, நீ செய்த அரசியலும்
தொகுத்து, நீ வழங்கிய இலக்கியமும்
சகித்து, நீ உரைத்த சாணக்கியமும்
கொடுத்து வைத்தது  அன்று தமிழ் நாடு!
எடுத்துச் சென்றதேன்
இன்று  உன்னோடு?
நூறுவரை  நீயிருப்பாய்
என நினைத்தோம்!
மறுமுறையும் மீழ்வாய்
என்றிருந்தோம்!
கடமை முடிந்ததென்றோ 
கண்மூடித்
தூங்குகின்றாய்?
காண்பவர்  கண்ணீரைக்
கடலாக  தாங்குகின்றாய்?
தலைவா,
சூரியனில் இரவு இல்லை!
-உதய சூரியனே
உனக்கு  இறப்பு இல்லை!
வள்ளுவன் வாழவில்லையா
இன்றும் எம்மோடு?
கம்பன் கதைப்பதில்லையா
இன்றும் நம்மோடு?
கலைஞரே,
 நீ வாழ்வாய்  என்றும்!
கலைந்திடாது,
உன் புகழ் ஓங்கும்!

கலையை மறந்தது
இன்று உன் செவ்வாய்!
கவலை மறந்து நீ செல்வாய்!

விடை கொடுக்கட்டும்!
 தமிழ் உலகம்! –உன்புகழை
விதைத்திடட்டும்  இனித் தமிழகம்!


Thursday, August 2, 2018

தமிழில் இத்தனை தொழில் முனைவர்களா?



Fetna – 2018 பகுதி 3
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/07/blog-post_26.html

2017 ஆகஸ்ட் மாதமே, 2018-ன் Fetna திருவிழா, டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லஸ் பெருநகரில் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்டேன். அதனைக்குறித்து தமிழ்ச்சங்க விழாக்களில் தொடர்ந்து அறிவித்துக் கொண்டு இருந்தனர்.  நியூயார்க் தமிழ்ச்சங்கத்தில் பொறுப்புக்கு வந்தபின் வரும் முதல் Fetna  என்பதால் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து 2017 செப்டம்பர் மாதமே நான்கு விமானப்பயணச் சீட்டுகளையும் தங்குவதற்கு விடுதிகளையும் புக் செய்தேன். Fetna எப்போதுமே ஜூலை மாதம் 4ஆம் தேதி  வரும் அமெரிக்க சுதந்திர நாளை ஒட்டி வரும் விடுமுறை வார இறுதியில் குறைந்த பட்சம் 3-அல்லது நான்கு நாட்கள் நடக்கும் என்பது உங்களில் பலபேருக்குத் தெரிந்திருக்கும்.
டல்லஸ் நகருக்கு இதுவரை நான் சென்றதில்லை என்பதால் இதனை 2018-ன் குடும்ப சுற்றுலாவாகவும் ஆக்க முடிவு செய்து ஃபெட்னா   மூன்று நாள் தவிர இன்னுமொரு மூன்று நாட்கள் அங்கு தங்கி டல்லஸ் நகரைச் சுற்றிப்பார்த்து விட்டு வருவதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால் இறுதியில் என் மனைவி வரமுடியாத சூழ்நிலையில் நானும் என் இரு மகள்களும் மட்டும் கிளம்பினோம்.
டல்லஸில் இருக்கும் ஃபிரிஸ்கோ என்ற (Frisco) பகுதியில் இருக்கும் டாக்டர் பேப்பர் ஏரினா (Dr.Pepper Arena) என்ற அரங்கத்தில் முக்கிய நிகழ்வுகளும் அதன் பக்கத்தில் இருக்கும் எம்பஸி சூட்டில் (Embassy Suite)  மற்ற இணை நிகழ்வுகளும் நடைபெறும் வண்ணம் திட்டமிட்டிருந்தனர். நாங்கள் தங்கியது அரங்கின் நேர் எதிரேயுள்ள “ஹில்டன் கார்டன்” என்ற ஹோட்டலில், ஜூன் 28 2018 அன்று இரவே சென்று சேர்ந்தோம். 
ஜூன் 29 வெள்ளிக்கிழமை காலை தமிழ் தொழில் முனைவோர் கூட்டம் காலை முதல் மாலை வரை நடந்தது.

அரங்கின் முன்னே மெட்ரோ பிளக்ஸ் தமிழ்ச்சங்க அமைப்பினர் சிறந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். சந்தனம் கற்கண்டோடு பன்னீர்  தெளித்து வரவேற்றனர். ஃபெட்னா விழாவிற்கு வந்திருந்த நன்கொடையாளர்களை, மாபெருங் கொடை வள்ளல், பெருங்கொடை வள்ளல், கொடை வள்ளல் மற்றும் வள்ளல் என்று அவரவர் நன்கொடையின் அளவைக் குறித்து பிரிக்கப்பட்டு பேட்ஜ்களை கொடுத்திருந்தனர்.நான் கொடை வள்ளல் இல்லையென்றாலும் கடை வள்ளல் என்று மகிழ்ந்திருந்தேன்.  ஆகா பேகன்,பாரி ஓரி, நள்ளி ஆகிய வள்ளல்களை அடுத்து இந்த ஒல்லிதான்  அடுத்த வள்ளல் என்று பெருமையோடு அணிந்து ராஜநடை நடந்து கம்பீரத்துடன்  (?) நடந்து சென்றால் அதுதான் கடைசி கேட்டகிரி போல. கடைசி வள்ளல் கேட்டகிரியில் ரிஜிஸ்டர் செய்திருந்தேன் என்று பின்னர்தான் தெரிந்தது.
டாக்டர் பெப்பர் ஏரினா மிகப்பெரிய அரங்கம். அருமையான மேடை அற்புதமான ஒலி / ஒளி அமைப்பு. மேடையின் இருபுறமும் இருபெரிய டிவிக்கள் அதன் மேலேயும் 4 டிவிக்கள், பின்புறம் பிரமாண்டமான எல்சிடி திரையென்று ஆற்றா டிஜிட்டலாக இருந்தன. அதனை ஆப்பரேட் செய்வதற்கு குறைந்தபட்சம் 5 பேர் தங்கள் லேப்டாப் சகிதமாக ஹெட்போனுடன் அமர்ந்திருந்தனர்.
நுழைந்தவுடன் சுடச்சுட இட்லி, வடை, பொங்கல் என்று காலை உணவு தயாராக இருந்தது. தினமும் ஓட்மீலைத்தின்று அல்லது விழுங்கி ஓடாய்த்  தேய்ந்து போயிருந்த இந்த காய்ஞ்ச மாடு ஒரே பாய்ச்சல் பாய்ந்தது. சுகரையும் ஃபிகரையும் மறந்து ஒரு வெளு வெளுத்தேன்.
இலேசான மயக்கத்தில் உட்கார்ந்திருந்த நான் சுற்றிப் பார்த்தபோது தான்  முன்னால் இருந்த நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின்  முன்னாள் இந்நாள் தலைவர்கள் பலபேரைப் பார்த்தேன். அப்புறம் சேர்ந்து உட்கார்ந்து கொண்டோம். வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்தும், அமெரிக்க தேசிய கீதமும் பாடி முடித்தவுடனே  தூத்துக்குடியில் உயிர்நீத்த நம் தமிழ் உறவுகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தி முடித்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

Fetna வின் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள் நம்பி வரவேற்புரை ஆற்றினார். 
பல பேர் தொடர்ந்து உரையாற்றினார்கள். பதின்ம வயதுப் பிள்ளைகள் வந்து அவர்களை அறிமுகப்படுத்திச்சென்றனர். பேசியவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர்களை கீழே தருகிறேன்.
அருள் முருகன் - CEO  11-11 ventures
காஞ்சனா ராமன் - CEO  Avion Networks  
ராம் நாகப்பன் –  CIO BNY Mellom
முரு. முருகப்பன் -CIO BNSF
அருள்பாண்டியன் - Founder :Signal  Corps Recordings
இதில் அருள் பாண்டியன் தன்னுடைய இசைக்காக கிராமி விருது  வாங்கிய இளைஞர் மிகவும் பெருமையாக இருந்தது.
பெரும்பாலும் கூலிக்கு மாரடிக்கும் தமிழர்களில் இத்தனை தொழில் முனைவர்கள் அதுவும் அமெரிக்காவில் இருந்தது பெரும் மகிழ்ச்சியைத்தந்தது.
          அதிமுக அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் வரவில்லை. அவருக்குப் பதிலாக அவரின் மனைவி ஹேமலதா பாண்டியன் வந்து உரையாற்றினார். பாண்டியராஜனும், மு.க. ஸ்டாலினும்  நல்லவேளை வரவில்லை. வந்தால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வெளியே சிலர் காத்திருந்தனர்.
இந்தச் சிறப்பு நிகழ்வில் பிரபுதேவா "உங்கள் வாய்ப்புகளை நீங்களே உருவாக்குங்கள்" என்ற தலைப்பில் பேசுவதாக இருந்தது. அவரும் வரவில்லை. ன் வரவில்லை என்ற அறிவிப்பும் இல்லை.

நடிகர் கார்த்தி வந்து அகரம் அமைப்பினைப் பற்றி ஒரு நெகிழ்வான உரையாற்றினார். அவர் காட்டிய வீடியோவும் அகரம் செய்யும் உதவிகளைக் கோடிட்டுக் காட்டியது. அதுதவிர சிக்காகோ காங்கிரஸ்மேன்  ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை மிகச்சிறப்பாக இருந்தது.
அன்று மாலை '' என்ற சிறப்புப் பாடலுக்கு டல்லஸ் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த குழுவினர் அழகிய நடனம் ஆடினர். மேலும் தமிழ்ப் பாடல்களுக்கு  அமெரிக்கப் பெண்கள் ஆடிய நடனமும் நன்றாகவே இருந்தது.

அதன்பின் ஹிப் ஹாப் தமிழா வந்து ஒரு பொறுப்பான உரையாற்றி ஆச்சரியப்படுத்தினர்.
இப்படியாக TEF Talk  என்னும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருந்த  உணவு ஏற்பாடுகள் பற்றி தனியாகச் சொல்கிறேன்.
-தொடரும். 
Photo Courtesy : Fetna 2018