Showing posts with label விஜயகாந்த். Show all posts
Showing posts with label விஜயகாந்த். Show all posts

Monday, May 9, 2016

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்?


கலைஞர் மு.கருணாநிதி:

என்னால் நடக்க முடியாது. இப்போதெல்லாம் என்னால் அதிகநேரம் பேசமுடியவில்லை. அதிக நேரம் என்னுடைய வேனில் உட்காரமுடிவதில்லை. உடல் நலம் அவ்வளவு சரியில்லை. ஆனால் உங்களுக்காக ஓடி ஆடி உழைப்பேன் என உறுதி கூறுகிறேன். எனக்கு 93 வயதாகிறது, 103 ஆனாலும் உங்களுக்காக உழைப்பேன் யாரப்பா அங்கே பரப்புரை இடங்களை கொஞ்சம் குறைங்கப்பா, என்னால முடியல. எங்களாலும் தாங்க முடியல.
புரட்சித்தலைவி ஜெயலலிதா:
Add caption
“சசி, அடுத்த இடம் எங்க?”
“மதுரை அக்கா”
“சரிசரி பூமிபூஜை போட்டாச்சா?”
“போட்டாச்சு அக்கா”
“இந்தத்தடவை களப்பலி ஆகாம இருக்கணும். ஆமா ஹெலிகாப்டர் ரெடியா?”
ரெடி அக்கா”.
“சசி, ஹெலிகாப்டர் நம்ம மொட்டைமாடிக்கு வருமா?”
ஏற்கனவே கேட்டாச்சு, வராதாம்”
இல்ல நடக்க முடியல”
ஒரு வீல்சேர் ரெடி பண்ணலாம்னு அதுக்குத்தான் சொன்னேன்”
“ நோ நோ, அந்தாளும் வீல்சேர்ல வந்து நானும் வந்தா நல்லாருக்காது, ஆமா சொன்னேனே வேனில சீட்டை கொஞ்சம் பெரிசாகச் சொல்லி”,
இதுக்கு மேலே சீட்டை பெருசாக்க முடியாதாம்”.
“சரிசரி வேனை நேராக மேடைக்கு விடச் சொல்லு. மேடையில் லிப்ஃட் ரெடியா?” ரொம்ப மூச்சு வாங்குது, யாரையும் என் கிட்ட வரவிடாதே, இன்ஃபெக்ஷன் ஆயிறப்போவுது.
          “மேடையில எவ்வளவு AC இருக்கு ?”,
“ 20 டன் இருக்கு அக்கா”
“ பத்தலை 30 டன்னா ஆக்கிரு”. “நான் பேசும் போதே மக்கள் கிளம்பிராங்களே ஏன் அப்படி விடுறீங்க? வந்து உட்கார்ந்தவுடனே சுற்றிலும் உயரமா இரும்பு வேலி போட்டிருங்க”. பேச்சு ரெடியா?
அதெல்லாம் ரெடி அக்கா”.
“எழுத்தை இன்னும் கொஞ்சம் பெரிசா எழுத முடியுமா? சரியாத் தெரியல”
இதுக்கு மேல பெரிசாக்கினா, ஒரு பக்கத்துக்கு 2வரி கூட எழுத முடியாது அக்கா”,
 பேசத்துவங்குகிறார்.
மக்களுக்காக நான் மக்களால் நான்
புரட்சிக் கலைஞர் விஜய்காந்த்:
Add caption
“டேய் தள்ளிப் போங்கடா”,
“கீழே விழுந்துறக் கூடாதுன்னதான் நெருக்கமா வர்றோம்.
“என்னடா ஆச்சு எனக்கு ஏறினாலும் தடுமாறுது, இறங்குனாலும் தடுமாறுது, நடந்தாலும் தடுமாறுதுபேசினாலும் தடுமாறுது,ஒரு பக்கம் கோவம் கோவமா வருது, இன்னொரு பக்கம் அழுகை அழுகையா வருது”
“ஹேங் ஓவரா இருக்கும் கேப்டன்”
“இல்லடா அதெல்லாம் விட்டாச்சே”
“அப்ப பழக்கதோஷமா இருக்கும்”.
“இதுக்குத்தான சொன்னேன் , இதெல்லாம் விடக்கூடாதுன்னு”
பேசத்துவங்குகிறார்.
“நான் கிங்காதான் இருப்பேன்னு சொன்னேன். அவிங்க சரின்னு சொல்லிட்டாய்ங்க மக்களே மறக்காம ஓட்டுபோடுங்க. எவண்டா குறுக்கே குறுக்கே பேசறது, வந்தேன்னா தூக்கிபோட்டு மிதிச்சிறுவேன்”.
சீமான் என்ற சைமன்:

“நான் பெரியாரின் வழியில் வந்தவன், ஆனா எனக்கு பெரியாரைப் பிடிக்காது, ஏன்னா அவர் தமிழன் இல்லை.
மதிப்பிற்குரிய அண்ணன் வைக்கோவைப் பிடிக்கும் ஆனா பிடிக்காது.
சினிமாக்காரர்கள் அரசியலைக் கெடுத்துவிட்டார்கள்.
(அப்ப நீங்க?)
எனக்கு ஹிட்லரைப் பிடிக்கும்.
தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும்.
என் முப்பாட்டன் முருகன், பாட்டன் சோழன், தாத்தன் பாண்டியன். தமிழன் தமிழனாக வாழ வேண்டும். ஆனா நான் ஜீன்ஸ்தான் போடுவேன்.
இளநீரை தேசிய பானமாக்க வேண்டும்.
திருமலை நாயக்கர் மஹாலை இடிக்க வேண்டும்.
அடிரா கையைத் தூக்கி சல்யூட்,
 (பாதி வேட்பாளர்களுக்கு கையில் சுளுக்கு)
அன்புமணி:

“எங்கப்பா மரம்வெட்டி, என் தளபதி காடுவெட்டி,
என் தொண்டர்கள் ஆள்வெட்டி
டாக்டருக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்க.( எதுக்கு போஸ்ட்மார்டம் பண்ணவா ?)
வன்னியர் தவிர மத்தவர் எங்களுக்கு அந்நியர், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்.  ஆனால்  எங்கள் கட்சி சாதிக் கட்சி இல்லை,



 இதுல யாருக்கு உங்கள் ஒட்டு.
நம்ம நெலமையைப் பாருங்க மக்களே.

Thursday, April 14, 2016

விஜயகாந்த் முதலமைச்சர் ஆனால் !!!!!!!!!!!!!!!!!

Vijayakanth to be only oppn leader in TN Assembly bench

“என்னது விஜயகாந்த் முதலமைச்சர் ஆவாரா? என்னடா பரதேசி உளர்றே”.
“இல்லடா மகேந்திரா ஒரு பேச்சுக்கு, ஆனால் ?”
“டேய் உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?”
“இல்லடா முதலமைச்சர் ஆகும் தகுதி விஜய்காந்துக்கு இல்லைன்னே நானும் நினைக்கிறேன். அப்படிப்பாத்தா இப்ப அரசியல்ல இருக்கிற யாருக்கும் அந்தத் தகுதியில்ல”.
“சரி நீ என்னதான் சொல்ல வர்ற?”
அதாவது தப்பித்தவறி அமாவாசையும் பெளர்ணமியும் ஒண்ணா வந்து விஜய்காந்த், முதலமைச்சர் ஆயிட்டார்னு ஒரு பேச்சுக்கு வச்சிக்க, என்ன நடக்கும்னு ஒரு கற்பனை”
“ சரி சொல்லித் தொலை”.
அதிகாலையில் விஜய்காந்த் விட்டுக்கு எதிரே:
          ஹேங்க் ஓவரில் இருந்த விஜய்காந்த்தை ஒருபுறம் பிரேமலதாவும், மறுபுறம் சுதிஷீம் கைத்தாங்கலாக அழைத்து வருகின்றனர்.
பத்திரிக்கை நிருபர்கள்: சார் முதலமைச்சர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
விஜய்காந்த்: அடத்தூ, என்னடா சொல்றீங்க, எனக்கு ஒண்ணும் தெரியாதே, இன்னும் நான் பேப்பரை படிக்கலயே
சுதீஷ் தலையில் அடித்துக் கொள்ள பிரேமலதா, விஜய்காந்த் தலையில் அடிக்க, இருவரும் மீண்டும் அவரைத் தரதர வென்று உள்ளே இழுத்துச் செல்கிறார்கள்.
பதவியேற்கப் போகும் வழியில்:

பிரேமலதா: மறுபடியும் சொல்றேன், நீங்க முதலமைச்சரா பதவி ஏற்கப்போறீங்க, பத்திரிகையாளரை பாத்துப் பேசுங்க.
விஜய்காந்த்: முதலமைச்சராக ஆன உடன் முதல்ல இந்தப் பத்திரிகையாளரை எல்லாம்  முதல்ல தடை பண்றேன்.
பத்திரிகையாளர்: கேப்டன் சார் உங்க மந்திரி சபையில யாரை எல்லாம் சேர்க்கப்போறீங்க?
விஜய்காந்த்: நான் முதல் அமைச்சர், பிரேமலதா இரண்டாம் அமைச்சர், சுதீஸ் மூன்றாம் அமைச்சர்.
பத்திரிகையாளர்: அப்ப வைக்கோ ?.
விஜய்காந்த்: அவர் நாலாந்தர,( பிரேமலதா காதில் சொல்ல) மூத்த அமைச்சர்.
பத்திரிகையாளர்: அதுசரி திருமாவுக்கு என்ன பதவி?
விஜய்காந்த்: அவர் தோத்த அமைச்சர், அவர்தான் ஜெயிக்கலயே, டேய் நீ என்ன ஜெயா டிவில இருந்துவர்றியா, தூக்கிப்போட்டு மிதிச்சிடுவேன் ஆமா? நாக்கைத்துருத்துகிறார்.  (பிரேமலதா சாந்தப்படுத்துகிறார்)
பத்திரிகை: உங்க மந்திரி சபையில் முக்கியமாக எந்த இலாக்கா இருக்கும்.
 விஜய்காந்த்: (வெகுவாக யோசித்து) கதை இலாக்கா
ராஜ்பவனில்:
சுதீஷ்: கவர்னர் வரார் கும்பிடுங்க.
விஜய்காந்த்: எவனா இருந்தா எனக்கென்ன, நான் யாரையும் கும்பிட மாட்டேன். நீ தெரிஞ்சதை பார்ரா வெண்ணை.
பதவியேற்கும் மேடையில்: கண்கள் சிவக்க, தள்ளாடியபடி மேடையேறிய விஜய்காந்தைப் பார்த்து  கவர்னர் பயந்து ஒதுங்க, விஜய்காந்த் படிக்கிறார்.
"பிரேமலதாவாகிய நான், என்று ஆரம்பிக்க சுதீஷ் ஓடிப்போய் அது இல்லை என்று சொல்லி, விஜய்காந்த் பேர் போட்ட உறுதிமொழியை எடுத்துத்தர, "டேய் நீ யார்ரா எனக்குச் சொல்றது. எனக்கு எல்லாம் தெரியும்" என்று சொல்லிவிட்டு, மீண்டும் "பிரேமலதாவாகிய நான் என்று சொல்லி வாசித்து முடிக்க கூடியிருந்தவர் எல்லாம் கொல்லெனச்சிரிக்கின்றனர்.
சட்டசபையில் செய்யப்பட்ட மாற்றங்கள்:
Vijaykanth Jayalalitha assembly fight

1.   முதல் அமைச்சர் அறையில் மினிபார்.
2.   சட்டசபை வளாகத்தில் ஒயின்ஷாப் மற்றும் மதுரை முனியாண்டி விலாஸ்.
3.   சட்டசபை முதல் அமைச்சர் இருக்கையில் மூன்று பேர் உட்கார இடம் ஒருபுறம் பிரேமலதாவுக்கும், மறுபுறம் சுதீஷீக்கும்.
4.   நடுவில் விஜய்காந்துக்கு சீட்பெல்ட், மற்றும் எழுந்து யாரையும் அடித்துவிடக்கூடாதென்று முன்னெச்சரிக்கைக்காக காலிலும் சங்கிலி போட்டு இணைக்க வசதி.
5.   விஜய்காந்த் முன்னால் ஒரு டம்மி மைக்.
6.   தமிழ்நாட்டின் தலைநகர் மதுரைக்கு மாற்றம்.
7.   MLA -க்கள் அடிவாங்க தனி ரூம் வசதி.
8.   முதலமைச்சர் ரூமை ஒட்டி மேக்கப் ரூம் மற்றும் மேக்கப் மேனுக்கு அமைச்சருக்கு இணையான பதவி.
9.   தூதூ என்று அடிக்கடி துப்புவதால் பக்கத்தில் ஒரு எச்சில் துப்பும் பாத்திரம்.
10.               எல்லா சினிமா தியேட்டர்களும் அரசுடமையாக்கப் படுகின்றன.
11.               தேசிய நிறமாக கருப்பை அறிவிக்க உண்ணாவிரதப் போராட்டம்.
12.               தேசிய விளையாட்டாக பம்பரம் விடுதலுக்கு சட்டசபை மூலம் பரிந்துரை.
பிரேக்கிங் நியூஸ்:

1.   கவர்னர் உரையை தமிழில் படிக்கச் சொல்லி அடம்பிடித்த விஜய்காந்தின் அலும்பு தாங்க முடியாமல் கவர்னர் வெளிநடப்பு.
2.   பஞ்ச பாண்டவர்களுக்குள் சண்டை வந்து அர்ச்சுணனும் பீமனும் தருமரின் உதை தாங்காமல் ஓடிப்போனார்கள்.
முற்றும். 
New year 2014 greetings in tamil