Showing posts with label பார்த்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label பார்த்ததில் பிடித்தது. Show all posts

Thursday, September 12, 2019

மறந்து போன மகாராஜா !!!!!!



பார்த்ததில் பிடித்தது.
தி பிளாக் பிரின்ஸ்
Image result for the black prince movie


          2017-ல் வெளிவந்த இந்தப்படம் நெட்ஃபிலிக்சில் காணக் கிடைத்தது. இந்தியாவின் கோதுமைக் களஞ்சியமான, ஐந்து நதிகள் பாயும் பஞ்சாப் பகுதியின் வரலாறு, மிகவும் சிறப்பானதொன்று.
          பஞ்சாப் என்றதும் முதலில்  நினைவுக்கு வருவது அதன் வீர வரலாறு மற்றும் குரு நானக்சிங் தோற்றுவித்த சீக்கிய மதம். இந்து மற்றும் முஸ்லிம் மதங்களின் நன்மைகளை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த மதத்தைப் பின்பற்றும் சீக்கிய மக்கள் உலகமெங்கும் வாழ்கின்றனர். தலைநகர் அமிர்தசரசில் இருக்கும் தங்கக் கோவில், விடுதலைப்  போராட்டத்தில் கலந்து கொண்ட லாலா லஜபதி ராய், பகத் சிங் ஆகியோரை மறக்க முடியுமா?. ஜெனரல் டயாரல் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிகழ்வான ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய வரலாற்றின் மாறாத வடுவாகும்  . பிரிவினையில் பாதி பாகிஸ்தானுக்குப் போன சோகம், உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் குஸ்வந்த்சிங் அவர் எழுதிய டிரைன் டு பாகிஸ்தான். பஞ்சாபின் தலைவர்களான, ஜெயில் சிங், சுர்ஜித்சிங் பர்னாவா மற்றும் சிறந்த பொருளாதார நிபுணரான, இருமுறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆகியோர் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள்.  
Maharaja Ranjith Singh
          பஞ்சாப் வரலாற்றின் ஏட்டை  சற்றே பின்னால் புரட்டினால், பஞ்சாப்பை ஒருங்கிணைத்து ஆண்ட மகாராஜா ரஞ்சித்சிங் வருவார். அவருடைய பரந்து விரிந்த சாம்ராஜ்யம், பஞ்சாப் பகுதி மட்டுமல்லாமல் இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதோடு பிரிட்டிஷ்காரர்களால் அசைக்க முடியாத அளவுக்கு பலம் பொருந்தியவராய் இருந்தார். அவருடைய சாம்ராஜ்யம் அவரோடு ஆரம்பித்து அவரோடு முடிந்துபோனது. அவருக்குப்பின் நடந்த வாரிசுப்போட்டியில் பலபேர் அழிந்துபோக எஞ்சியிருந்த ஒரே மகனான மகாராஜா துலிப் சிங் அவருடைய அம்மாவான மகாராணி ஜின்டன் அவர்களின் பெரும் முயற்சியாலும் பிரிட்டிஷாரின் உதவியாலும் முடிசூட்டிக் கொண்டார். அப்போது அவர் ஐந்து வயதான சிறு குழந்தை. அந்த மகாராஜா துலிப்  சிங்கின் சோக வரலாறுதான் “தி பிளாக் பிரின்ஸ்” அவரைப்பற்றி வந்த புத்தகத்தின் விமர்சனத்தை அடியேன் முன்னொரு காலத்தில் பதிவிட்டிருக்கிறேன். 1849ல்  பிரிட்டிஷ் அரசு பஞ்சாபை தன்னுடைய பகுதியில் இணைத்துக்கொண்டு விவரம் தெரியாத  இளவரசனை பிரிட்டிஷ் மருத்துவரான Dr. ஜான் லாகின் என்பவரிடம் ஒப்படைத்தது.  அவருக்கு 15 வயதாகும் போது இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட போது அங்கு விக்டோரியா மகாராணியின் அறிமுகம் கிடைக்கிறது. அவரிடமிருந்து ஏராளமான பொக்கிஷங்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகின்றன. அதில் மிக உயர்ந்த ஒன்றுதான் கோஷினூர் வைரம்.( https://paradesiatnewyork.blogspot.com/2015/03/blog-post_5.html )
அதிலிருந்து மகாராணிக்கு அந்த இளம் டூலீப் சிங்கிடம் ஒரு கரிசனம் ஏற்பட்டு அன்புடன் நடத்துகிறார். கிழக்கிந்திய கம்பெனியும் அவருக்கு எல்லா வசதிகளையும் செய்து தருகிறது. ஆனால் அவருடைய அம்மா மகாராணி ஜின்டன் இந்தியாவிலேயே வீட்டுச்கிறையில் வைக்கப்படுகிறார் Dr.ஜான்லாகினும் அவருடைய மனைவியும் மகாராஜா டூலீப் சிங்கை தங்கள் மகனாகவே வளர்க்கிறார்கள். ஆனாலும் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்ப முயற்சிக்க, அனுமதி மறுக்கப்படுகிறது.
Related image
Maharaja Duleep Singh
          மீதிக்கதையை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.   
          சத்தின்தர் சர்டாஜ், டுலீப் சிங்காவும், அமண்டா ரூட் விக்டோரியா மகாராணியாகவும் ஷபானா ஆஸ்மி மகாராணி ஜின்டாவாகவும் நடித்திருக்கிறார்கள் சத்தின்தருக்கு இதுதான் முதல் படம்.
          லாஸ்  ஏஞ்செல்சில் உள்ள ஹாலிவுட்டில் இருக்கும் இந்திய இயக்குநர் கவிராஸ் என்பவர் இயக்கியிருக்கிறார்.
          இந்தியாவிலும் இங்கிலாந்திலும் எடுக்கப்பட்ட இந்தப்படத்தை தயாரித்தவர்கள் பிரில்ஸ்டெய்ன் என்டர்டைன் மென்ட் பார்ட்னர்ஸ். இது ஒரே சமயத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் எடுக்கப்பட்ட இருமொழிப்படம். பின்னர் பஞ்சாப் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டது. ஜார்ஜ் கல்விஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார்.
          உலகமெங்கிலும் வெளியிடப்பட்டு ஆறுலட்சத்து 33 ஆயிரம் டாலர்கள் வென்றெடுத்த இந்தப்படம், இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகம் வரவேற்கப்பட்டது.
          பரபரப்பாக வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லும்போது மிகவும் மெதுவாகச் சொன்னது சிறிது சலிப்பூட்டியது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாய் அமைத்திருக்கலாம். என்பது என்னுடைய எண்ணம்.
          மற்றபடி இப்படி நம் நாட்டின் வரலாற்று நிகழ்வுகளையொட்டி எடுக்கப்படும் படங்களுக்கு நாம் ஆதரவு அளிப்பது முக்கியமென நினைக்கிறேன்.
          பஞ்சாப் குறிப்பாக மறந்துபோன மகாராஜா டூலிப் சிங்கைப்பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் இதனை கொஞ்சம் பொறுமையோடு கண்டு ரசிக்கலாம்.
- முற்றும்.    

முக்கிய அறிவிப்பு :

நண்பர்களே விடுமுறைப்பயணமாக வரும் செப்டம்பர் 15 முதல் 29 வரை பிரான்ஸ் , ரோம் , மற்றும் இத்தாலியில் உள்ள பாரிஸ், ரோம், வாடிகன், பிளாரென்ஸ் , பைசா , வெனிஸ் ஆகிய நகரங்களுக்கு செல்கிறேன்.அதனால்  பதிவுகள் இரண்டு  வாரங்களுக்கு  வராது .இந்த நகரங்களில்  வாழும் தமிழ் மக்கள் , நண்பர்கள் ஈமெயிலில்  தொடர்பு கொண்டால் சந்திக்கலாம் , நன்றி .
alfred_rajsek@yahoo.com 

Thursday, April 18, 2019

கிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி !!!!!!!!!



பார்த்ததில் பிடித்தது.
சிட்டகாங்
Image result for Chittagong movie

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய நாடெங்கிலும் பலவிதமான கிளர்ச்சிகள் நடந்தன. அவற்றுள் சில அமைப்பு சார்ந்தவை பல தன்னிச்சையாக எழுந்த கிளர்ச்சிகள். அப்படி நடந்த பல போராட்டங்கள் பலருக்கும் தெரியாது. குறிப்பாக தென்னிந்தியாவின் வாஞ்சி நாதனையும், திருப்பூர் குமரனையும் வட இந்தியர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுபோல் சிட்டகாங் என்னுமிடத்தில் நடந்த மாபெரும் எதிர்ப்பு நிகழ்ச்சிதான் இந்த திரைப்படம். நெட் பிலிக்சில் இருப்பதால் எனக்குப் பார்க்க கிடைத்தது. அந்த சிட்டகாங் எனும் ஊர் இப்போது பங்களாதேசத்தில் இருக்கிறது.
2012ல் வெளிவந்த திரைப்படத்தைப் பற்றி நான் இதற்கு முன் கேள்விப்படவில்லை. படத்தின் நிகழ்வைப் பற்றியும் எனக்கு முன்னால் தெரியாது.
இது 1930ல் கிழக்கு வங்காளத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த கிளர்ச்சி அல்லது போர் என்று கூட சொல்லலாம்.
Image result for Surya sen of Chittagong

ஒரு பள்ளிக் கூட ஆசிரியரான சூரியா சென் என்பவரின் தலைமையில் 50 பள்ளி மாணவர்கள் ஏற்படுத்திய கிளர்ச்சி இது. சிட்டகாங் நகரின் ஒரு இரவில் இவர்கள் போய் ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றி அதிலிருந்து துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்து ஒரு சிறு ராணுவம் போல் செயல்படுகிறார்கள். கைப்பற்றியதோடு அங்கே இந்திய தேசியக் கொடியை ஏற்றி விடுதலையைக் கொண்டாடுகிறார்கள். ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்த மெஷின் துப்பாக்கிகள் ஆயுதக் கிடங்கில் இல்லை. அடுத்த நாளே கல்கத்தாவிலிருந்து பெரும் படை வந்தது. எனவே இவர்கள் தப்பியோடி காட்டுக்குச் சென்று அரணமைத்தார்கள்.
உயரமான இடத்தில் இருந்ததால் முன்னேறி வந்த முதலாவது படைப் பிரிவை அவர்கள் துவம்சம் செய்ய முடிந்தது. ஆனால் அடுத்தடுத்த படைகள் வரவர தாக்குப்பிடிக்க முடியாமல் அவர்கள் தங்கள் மாணவர் படையைக் கலைத்துவிட்டுப் பிரிந்து சென்று தலைமறைவாகினர். ஆனால் 14 வயதான ஜின்கு என்பவன் பிடிபடுகிறான். ஆனால் எவ்வளவு கொடுமைப் படுத்தப்பட்டாலும் அவன் மற்றவர்களை காட்டிக் கொடுக்க மறுக்கிறான். இறுதியில் பிடிபட்ட சிலரோடு அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறான்.
Related image
Add caption
23 வயதில் வெளியே வந்தாலும் திரும்பவும் புரட்சியில் ஈடுபடுகிறான். மாணவர்களின் எழுச்சி அவர்களை வழி நடத்திய ஆசிரியர் ஆகியோர் இணைந்து செய்த இந்தப் புரட்சி ஆங்கிலேயரை அச்சப்பட வைத்தது. இப்படி பல அடிகள் அங்குமிங்கும் எங்கும் பட்டதால்தான் இறுதியில் சுதந்திரம் தர சம்மதித்தார்கள். எந்த இடத்திலும் செயற்கைத்தன்மை தெரியாமல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்தவர் பேடபிரட்டா பெயன் (Bedabrata Pain) என்பவர். இவரோடு கூட இருந்து கதையை எழுதியவர் ஷோனாலி போஸ். சூரியா சென்னாக மிகைபடுத்தாத நடிப்பை வெளிப்படுத்தியவர் மனோஜ் பாஜ்பயி.
Image result for manoj bajpai
Manoj Bajpayee 
2012ல் வெளிவந்த இந்தப்படம் ஒரே சமயத்தில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழியில் எடுக்கப்பட்டது. ஒரு பீரியட் படத்திற்குத் தேவையான இசையை அமைத்தவர்கள் சங்கர் ஈஷன் லாய். இதில் சங்கர் என்பவர் நமக்கெல்லாம் நன்கு தெரிந்தவரான சங்கர் மகாதேவன்தான்.
அருமையான ஒளிப்பதிவைக் கொடுத்தவர் எரிக் ஜிம்மர் மேன் என்பவர்.
உலகத்திலேயே மிகச்சிறிய வயதில் புரட்சி செய்த ஜின்கு (14 வயது) வாக நடித்த பையன் சுபோத் ராய் என்பவன்.
திரையிடப்பட்டு நன்கு வரவேற்கப்பட்ட இந்தப்படம் பல திரைப்பட விருதுகளை அள்ளியது. அறுபதாவது தேசிய திரைப்பட விழாவில் கீழ்க்கண்ட விருதுகளைப் பெற்றது.
சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது பேடபிரட்டா பெயினுக்குக் கிடைத்தது. மேலும் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது சங்கர் மகாதேவனுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது பிரசூன் ஜோசிக்கும் கிடைத்தது.
ரூபாய் 45 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறை அறிய ஆவலுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.   
முற்றும்

Thursday, February 7, 2019

தீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் !!!!!!!!!


பார்த்ததில் பிடித்தது   
 ஃபர்ஸ்ட் தே கில்டு மை ஃபாதர்
            First they killed my Father

          
நெட் பிலிக்சில்  கிடைத்த  இன்னொரு அற்புதப்படம் இது. அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் முடிவில்லாத உக்கிரப் போர் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாப்போரை எந்த ராணுவம் வெல்ல முடியும்? இருபுறமும் கடுமையான சேதம். அதே சமயத்தில் பக்கத்து நாடான கம்போடியாவில் ஒரு கம்யூனிய தீவிரவாத இயக்கமான கெமர் ரூஜ்-ன் (Khmer Rouge) போல் பாட்டின் (Pol pot)  படைகள் நாட்டை ஆக்கிரமிக்க துடித்துக் கொண்டிருந்தனர். கம்போடியாவின் ஜனநாயக அரசுக்குச்சாதகமாக அமெரிக்க ராணுவம் உதவிவந்தது.
Pol Pot
          இதற்கிடையில் வியட்நாமின் போரை நிறுத்த அமெரிக்காவில் பல போராட்டங்கள் நடத்த இந்த முடிவில்லாத போரை அப்போது அதிபராக இருந்த லிண்டன் ஜான்சன்  நிறுத்தி ராணுவத்தை தாய் நாட்டுக்கு வரவழைத்தார். அதே சமயத்தில் கம்போடியாவில் இருந்த அமெரிக்கப்படையும் வாபஸ் பெற்றதோடு தன்னுடைய கான்சுலேட்டையும் காலி செய்தது.
Loung ung
          அதன்பின் அரசுப் படைகள், கெமர் ரூஜின் தாக்குதலுக்கு தாக்குப்  பிடிக்க முடியாது ஒளிந்து ஓடினர். இது நடந்தது 1975ல். இந்தப் போராட்டத்தில் சிக்கிக் கொண்ட ஐந்துவயது இளம் பெண் தான் பட்ட கஷ்டங்களை பின்னாளில் 2000ல் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.  அவர் பெயர் லுங் உங் (Loung ung) அப்புத்தகத்தின் பெயர்தான் "First they killed my Father?" அந்தக் கதைதான் 2017ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

          தீவிரவாதிகளின் ராணுவம் ஃபுனோம் பென் (Phnom Penh) என்ற கம்போடியாவின் தலை நகரில் நுழைவதிலிருந்து படம் துவங்குகிறது. அந்த ஐந்து வயதுச் சிறுமி கம்போடிய அரசின் ராணுவ உயர் அதிகாரியான ஒருவரின் ஐந்து குழந்தைகளின் கடைசிக் குழந்தை. ராணுவ கேப்டன் என்பதால் தீவிரவாத ராணுவம் நிச்சயம் சுட்டுக் கொன்றுவிடும் என்பதால் தன் அடையாளங்களையும் பாஸ்போர்ட்டையும் நீக்கிவிடுகிறான்.
          தீவிரவாத ராணுவம், யாரும் நகருள் வாழக்கூடாது எல்லோருக்கும் பொதுவான விவசாயத்தில் ஈடுபட்டு பலனை பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற நினைப்பில் நகர் வாழ் மக்கள் அனைவரையும் வெளியேற்றுகிறார்கள். தங்கள் சொத்து  சுகமிழந்த மக்கள் அப்படியே நடந்தே வெளியேறுகிறார்கள். போகிற வழியிலேயே பசியினாலும் தொத்து வியாதியாலும் பலர் இறந்துவிடுகின்றனர். ஒரு முகாமில் அடைக்கப்படும் அவர்கள், பகலில் கடுமையான வேலை செய்தாலும் சரியான உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஏனென்றால் விளைச்சல் முழுவதும் தீவிரவாதிகளின் படைகளுக்கே சென்று விடுகின்றன.
          முகாமில் எப்படியோ தந்தையைப் பற்றி அறிந்து கொண்ட தீவிரவாதிகள் அவரைக் கொன்றுவிடுகின்றனர். மற்ற பிள்ளைகளைக் காப்பாற்ற அவளின் தாய் முடிவெடுத்து அவர்களை வெவ்வேறு திசைகளில் அனுப்பிவிடுகிறாள். அதில் 5 வயதுப் பெண்ணாகிய அவளும் 9 வயது பெண்ணான அவள் அக்காவையும் படையில் சேர்த்து கடுமையான பயிற்சியில் ஈடுபடுத்துகிறார்கள்.
          இறுதியில் மீண்டும் வியட்நாம் ராணுவம் உள்ளே நுழைந்து தீவிரவாத இயக்கத்துடன் போர் புரிகிறது. அதற்குள் கெமர் ரூஜ் இயக்கத்தின் தவறான கொள்கைகளால் 20  லட்சம் பேர் மடிந்து போயினர். இதில் யார் யார் தப்பித்தார்கள்? இந்தக் குழந்தை எப்படித்தப்பித்தது? தன்னுடைய சகோதர சகோதரர்களை கண்டுபிடித்ததா என்பதை சின்னத்திரையில் காண்க.

          இதனை இயக்கியது ஏஞ்சலினா ஜோலி என்ற ஏஞ்சல் என்பது படம் முடிந்து வந்த டைட்டிலைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். இது நெட்பிலிக்சின் ஒரிஜினல் படம். கம்போடிய மொழியில் தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் ஏஞ்சலினா கம்போடிய நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்திருக்கிறார். அதோடு இந்தச் சமயத்தில் சிக்கி உயிர் பிழைத்த பலரையும் அவர்களுடைய குழந்தைகளையும் இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். கம்போடியாவில் ரிலீஸ் செய்யப்பட இந்தப்படம் மிகவும்  தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் திரைப்படமா அல்லது டாக்குமென்டரியா என்று சந்தேகம் வருமளவிற்கு படம் இருக்கிறது.

          குறிப்பாக அந்த ஐந்து வயதுக் குழந்தையாக நடித்த பெண் தன் உணர்ச்சிகளை இயல்பாகப் காட்டி லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கிறார். அந்தக் குழந்தைக்காகவும் ஏஞ்சலினாவுக்காகவும் இப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும்
-முற்றும்.
முக்கிய அறிவிப்பு: 

அலுவலகப்  பணி நிமித்தமாக மெக்ஸிகோவில் உள்ள குவடாலாஹாராவுக்கு  செல்வதால் வரும் வாரத்தில் (பெப்ருவரி 9 முதல் 16 வரை )  பதிவுகள் எதுவும் வராது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .உங்களின்  தொடர்ந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

Thursday, November 1, 2018

நானொரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா- பகுதி -2


Image result for Nassau county clerk
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.  
https://paradesiatnewyork.blogspot.com/2018/10/part-1.html
அந்த மாபெரும் கட்டிடத்தில் உள்ளே நுழைய முயன்றேன். செக்யூரிட்டி கெடுபிடிகள் இருந்தன. வழக்கம்போல் வாட்ச், வாலட், சாவி என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு மெட்டல் டிடக்டர் மூலம் உள்ளே நுழைந்து நீண்ட வரிசையில் நின்றேன். என் முறை வந்த போது "என்ன உங்களுக்கு வேண்டும்?" என்று கேட்டதற்கு, "கிளர்க்கை பார்க்க வேண்டும்", என்று சொன்னேன். "அப்பாயின்ட்மென்ட் இருக்கிறதா? என்ன வேலையாக பார்க்க வேண்டும்?" என்று கேட்டார்கள். அதன் பின் வேறு ஒரு டிபார்ட்மென்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அதில் உள்ள பல டிபார்ட் மென்ட்கள் பல்வேறு மாடிகளில் செயல்படுகின்றன. இதற்கெல்லாம் தலைவர் அந்த கிளர்க்தானாம். பல நூறுபேர் அங்கே வேலை செய்கிறார்கள். அந்த முழு பில்டிங்கும் ஒரு கிளர்க்கின் அலுவலகம் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அப்படி என்னவெல்லாம் அவருக்குக் கீழ் செயல்படுகின்றன என்று ஒரு போர்டு வைத்திருந்தார்கள். அதில் கண்டவற்றை கீழே கொடுக்கிறேன்.
1)   கோர்ட் ரெக்கார்டிங்
2)   ஜட்ஜ்மென்ட்கள்
3)   லைசென்ஸ் சர்வீஸ்
4)   நோட்டரி சர்வீஸஸ்
5)   தொழில் நிறுவனங்களின் ரிஜிஸ்ட்ரார்
6)   பாஸ்போர்ட் பிரிவு
7)   நில ரிஜிஸ்ட்ரார்
8)   மேப் ஃபைலிங்குகள்
9)   கோர்ட் டாக்குமென்ட் அலுவலம்.
10)               லேண்ட் ரெக்கார்ட்ஸ்
11)               மேப் ரூம்
இன்னும் பல  
யாருப்பா அது  இவ்வளவையும் மேற்பார்வை செய்யும் கிளர்க் என்று விசாரித்தேன்.
Related image
Maureen O'connell
தற்சமயம் இருப்பவர் மரின் ஓகானல் (Maureen O'connell) என்பவர். அவரைப் பற்றிய குறிப்புகளைக் கீழே தருகிறேன்.
1)   ஒரு ரிஜிஸ்டர்டு நர்ஸ் (RN) ஆக தன்னுடைய வேலையை ஆரம்பித்த இவர்கள், கேன்சர் வந்த நோயாளிகளுக்கு வீட்டில் வைத்து எப்படி மருத்துவம் பார்க்க முடியும் என்பதைச் செயல்படுத்த H.O.M.E பைலட் புரோகிராமை ஆரம்பித்தவர்கள்.
2)   ஹாஸ்பைஸ் கேர் (Hospice Care) என்ற ஒரு தலைப்பில் பல கட்டுரைகளை பலருடன் சேர்ந்து எழுதியிருக்கிறார்.
3)   ஃபிளஷிங் ஹாஸ்பிட்டல்  மெடிக்கல் சென்ட்டர் ஸ்கூல் ஆஃ ப் நர்சிங்கில் நர்ஸ் படிப்பை முடித்துப் பின்னர்  ஹெல்த்கேர்  அட்மினிஸ்ட்டிரேசனில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். அதன்பின் செயின்ட் ஜான்ஸ் யுனிவர்சிட்டி  ஸ்கூல் ஆஃப் லாவில் "ஜூரிஸ் டாக்டர்' படிப்பை முடித்து இன்ஸ்யூரன்ஸ் லாவில் சிறப்பு அவார்ட் வாங்கியிருக்கிறார்.
4)   ஈஸ்ட் வில்லிஸ்டன் என்ற ஊருக்கு துணைமேயராக 1991 முதல் 1998 வரை பணியாற்றியிருக்கிறார்.
5)   நாசா கெளன்டி பார்  அசோசியேசன் மெம்பரான இவர் பல அமைப்புகளில் போர்டு மெம்பர் ஆக இருக்கிறார்.
6)   1998-ல் 17ஆவது மாவட்டத்தின் பிரதிநிதியாக, நியூயார்க் ஸ்டேட் அசெம்பிளிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். (நம்மூர் MLA போல) அப்போது பல மக்கள் பணிகளில் சிறந்து விளக்கியிருக்கிறார். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்பெண் இவரே.
7)   லாங் ஐலன்ட் பிஸினெஸ் நியூசில் 50 சிறந்த செல்வாக்குள்ள பெண்மணிகளின் ஒருவராக சொல்லப்படுகிறார்.
Image result for Nassau county clerk's office
Clerk'ss office 
இவையெல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு ஆச்சரியம் தந்த ஒன்று என்றால் நாசா கெளண்ட்டி கிளர்க் என்பது தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பதவி, 2005ல் முதன்முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பின்னர் 2009 மற்றும் 2013  லிலும் தொடர்ந்து தேர்ந்த்தெடுக்கப்பட்டார் . அவர் பதவிக்கு வந்த பின்  தேங்கிக்கிடந்து பத்து லட்சத்துக்கு மேலான பெண்டிங் கேஸ்களை முடிவுக்குக் கொண்டு வந்தாராம். இந்த ஃபைல்களை எல்லாம் கம்யூட்டரைஸ் செய்து ஈபைலிங் முறையைக் கொண்டுவந்த வரும் இவரே.
அம்மாடி நான் ஏதோ கிளர்க் தானே என்று குறைவாக மதிப்பிட்டுவிட்டேன்.
கிளர்க்கை பார்க்க அப்பாயிண்ட்மென்ட்டா என ஏளனமாக நினைத்த நான் இவரைப் பார்ப்பது முன்பதிவு இல்லாமல் சுலபமல்ல என்று தெரிந்து கொண்டேன்.
அமெரிக்காவில் ஒரு கிளர்க் வேலை கூடக் கிடைக்காதா என்று நான் நினைத்த நாட்கள் உண்டு. ஆனால் அது எவ்வளவு பெரிய பதவி என்பதை நினைத்தால் தலை கிறுகிறுக்கிறது.
 முற்றும்
முக்கிய அறிவிப்பு :
அன்பு நண்பர்களே நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் தீபாவளி விழா வருகின்ற சனிக்கிழமையன்று மதியம் நடைபெறுகிறது .பல நல்ல நிகழ்ச்சிகள் உள்ளன .வாருங்கள்  மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம் .மேலும் விவரங்களை கீழே உள்ள போஸ்டரில் பார்க்கலாம் 

Thursday, October 25, 2018

நானொரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா Part -1

Related image
Nassau County office 

எச்சரிக்கை(Disclaimer): மக்களே கிளர்க் வேலை செய்வதை குறைத்து மதிப்பிட்டு எள்ளி நகையாடுவது என் நோக்கமல்ல .

"அவர் என்ன வேலை செய்றார்ப்பா?
"அவரா அவர் ஒரு குமாஸ்தா"
“என்ன வெறும் குமாஸ்தாவா? இவ்வளவு பந்தா பன்றாரு?”
இந்த உரையாடலை நீங்கள் கேட்பதற்கு வாய்ப்பிருந்திருக்கும். குமாஸ்தா என்பது தமிழ் வார்த்தையல்ல, தமாஷ் அல்லது தமாஷா என்பதும் தமிழ் வார்த்தையில்லை.
Image result for British education system in India macaulay


ஆங்கிலேய அரசாங்கம் மீதிருக்கின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு என்பது அவர்களின் அதிகாரியான மெக்காலே என்பவர் அறிமுகப்படுத்திய கல்வித்திட்டம். அதில் என்ன குறையென்று கேட்டால் அது கிளர்க்குகளை மட்டும் உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட கல்விமுறை என்று சொல்வார்கள். இன்றும் அந்த முறை முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.
பியூன் என்பது எப்படி அட்டண்டென்ட் என்று மாறியதோ அதே போல கிளார்க் என்பது அசிஸ்டென்ட் என்று காலப்போக்கில் மாறியது. அதனை ஜூனியர் அசிஸ்டென்ட் சீனியர் அசிஸ்டென்ட் என்று பிரித்திருக்கிறார்கள். தமிழில் இளநிலை உதவியாளர் முதுநிலை உதவியாளர் என்பர். கிளர்க் வேலையினை நேரடியாக தமிழில் மொழி மாற்றம் செய்தால் எழுத்தர் என்று வரும். சில அரசு அலுவலகங்களில் எழுத்தர் என சில பதவிகளும் இன்னும் இருக்கின்றன. 
அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை முடித்து, சமூகப்பணிக்கல்லூரியில் முதுநிலை முடிக்கும் தருணத்தில், பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தில், இளநிலை உதவியாளர் வேலைக்கு எங்கள் கல்லூரி இசைக்குழுவில் இருந்தோரை அழைக்க முதலில் மறுப்புச் சொன்னது நான். அதன் மேலாண்மை இயக்குநர் அக்கழகத்தில் ஒரு நல்ல  இசைக்குழுவை அமைக்க விரும்பினார்.
முதுகலை முடித்த நான் கிளர்க் வேலைக்குப்போக மாட்டேன் என்று தலைக்கனத்துடன் மறுத்துவிட்டேன். ஆனால் என் சக நண்பர்களில் பலபேர் அங்கு சேர்ந்து இன்றுவரை பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பிளஸ் டூவில் கிளார்க்ஸ் டேபிள் அறிமுகம் கிடைத்தபோது, நாமதான் கிளர்க்காக மாட்டோமே இதனை எதற்கு படிக்க வேண்டும், பயன்படுத்த வேண்டுமென முட்டாள்தனமாக நினைத்தது ஞாபகம் வருகிறது. ஆனால் அதன் ஸ்பெல்லிங் வேற என்று சில நாட்கள் கழித்துத்தான் தெரிந்து கொண்டேன். 
ஆனால்     நாங்கள் செய்யும் HR வேலையினை ஒரு குளோரியஸ் கிளர்க் வேலை என்பேன்.
எதற்கு இத்தனை விளக்கம் இத்தனை பீடிகை என்று தாங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அதுக்குத்தான் வருகிறேன் மக்களே, பொறுமை.
நியூயார்க் நகரின் மேன்மை மிகு மேன்ஹாட்டனில் 1997ல் ஆரம்பிக்கப்பட்ட முகமது சதக் குழுமத்தைச் சேர்ந்த "ஓபன்வேவ் கம்ப்யூட்டிங்" என்பதுதான் நான் வேலை செய்யும் கம்பெனி  என்பது உங்களில் பலபேருக்குத் தெரிந்திருக்கும். இதற்கு உதவியாகச் சென்னையில் "ஆஃப்ஷோர் டெவலெப்மென்ட் சென்ட்டர் ஒன்று நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இவை தவிர சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் கிளைகள் உண்டு (www.openwavecomp.com)  

Related image
Openwave Chennai Office 
சமீபத்தில் போன மே  மாதம் நியூயார்க்கின் குயின்சின்  அருகில் உள்ள லாங் ஐலன்ட் பகுதில் உள்ள 'ஹிக்ஸ்வில்' என்ற ஊரில் ஓபன்வேலின் கிளை அலுவலம் ஆரம்பிக்கப்பட்டது. ஹிக்ஸ்வில் இருக்கும் லாங் ஐலண்ட் பகுதி நியூயார்க் மாநிலத்தில் இருந்தாலும் நியூயார்க் நகரம் என்று சொல்லப்படும் 5 போரோவைச்(மேன்ஹாட்டன், குயின்ஸ், புரூக்ளின், பிராங்ஸ் & ஸ்டேட்டன் ஐலன்ட்) சாராதது. எனவே அதெற்கென சில சலுகைகள் உண்டு  அதனால் தான் இங்கே ஒரு கிளை ஆரம்பித்து அதில் நான் வர ஆரம்பித்தேன்.
கடந்த வாரம் மலேசியாவிலிருந்து வந்த என் தலைவர் (President) இந்த இடத்தை ஆய்வு செய்து இதற்கு ஒரு பிஸினஸ் லைசென்ஸ் எடுக்கும்படி சொன்னார். ஏற்கனவே “டிபார்ட்மென்ட் ஆஃப் ஸ்டேட்டில்”  ஒரு நிறுவனமாக பதிவு பெற்ற ஓபன்வேவ் எத்தனை கிளைகளை வேண்டுமென்றாலும் ஆரம்பிக்கலாம். அதற்குத்தனியாக லைசென்ஸ் அல்லது ரிஜிஸ்ட்ரேஷன் தேவையில்லை என்று எனக்குத் தெரியும். அதனை முகமதுவிடம் சொன்னாலும், எதற்கும் அதனை கன்ஃபார்ம் செய்துவிடச் சொன்னார்.
கூகுள் செய்து பார்த்ததில் அப்படி ரிஜிஸ்ட்டர் செய்வதற்கு கெளன்ட்டி கிளர்க்கிடம் (County clerk) போகவேண்டும் என்று சொன்னார்கள் .எனவே கடந்த வாரத்தில் ஒரு நாள், டிரைனில் போகாமல் என்னுடைய காரை எடுத்துக் கொண்டு வந்தேன்.
ஓ கிளர்க் தானே என்று இளக்காரமாக நினைத்து அங்கு போன எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
          குறிப்பிட்ட முகவரியில் மிகப்பெரிய ஒரு கட்டிடம் இருந்தது. தவறாக வந்துவிட்டோம் என்று சுற்றிச்சுற்றி வந்தும் ஒன்றும் புரியாமல் முதலில் ஒரு இடத்தில் பார்க் செய்துவிடலாம் என்று வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினேன்.
அங்கு சென்று கொண்டு இருந்தவர்களிடம், “கெளன்டி கிளர்க்கை எங்கே பார்க்கலாம்”, என்று கேட்டேன். அவர்கள் அதே பெரிய கட்டிடத்தைக் காண்பித்தார்கள். பலமாடிகளைக் கொண்ட அந்தக்கட்டிடம் ஒரு சிறிய ஐரோப்பிய அரண்மனைபோல் இருந்தது. அதற்கு முன்னால் நூற்றுக்கணக்கான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு வேலை பார்ப்பவருக்கு மட்டும் என்று எழுதப்பட்டிருந்தது. விசிட்டர் பார்க்கிங்கும் நிரம்பி வழிந்ததால் தெருவில் மீட்டர் பார்க்கிங்கில்தான் நான் என்னுடைய காரை நிறுத்தினேன்.
சரி அந்தக்கட்டிடம் பொதுவான கட்டிடமாக இருக்கும் அங்கே ஒரு அலுவலகத்தில் கிளர்க் இருப்பார் என்று நினைத்து கிட்ட நெருங்கினேன்.
எதற்கும் சந்தேகப்பட்டு கிளர்க் ஆபிஸ் எது மற்றொருவரிடம் கேட்டபோது அதே பில்டிங்கைத்தான் காட்டினார். சரி உள்ளே போய்க் கேட்டுக் கொள்வோம் என்று உள்ளே போனால், மெட்டல் டிடக்டர் வைத்து செக் செய்தார்கள். பேக், வாட்ச், செல்போன், வாலட் ஆகியவை அனைத்தையும் ஒரு டிரேயில் போட்டுவிட்டு மெட்டல் டிடக்டர் வழியே உள்ளே நுழைந்தேன். பெரிய ரிஷப் ஷனில் காத்திருந்த வரிசையில் நிற்கச் சொன்னார்கள். மேலும் எனக்கு ஆச்சரியம் அங்கு காத்திருந்தது. அதனை விளக்கமாக அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
தொடரும்


Thursday, September 27, 2018

போக்ரானில் நிரூபிக்கப்பட்ட இந்தியாவின் வலிமை !

Related image


பார்த்ததில் பிடித்தது
பர்மனு
“எனக்கும் இந்தநிகழ்வுகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான் பாயும்புலி பண்டாரக வன்னியன் படிக்கும்போது கலைஞர் இறந்துபோனார்”.
“அந்த பண்டாரத்துக்கும் கலைஞருக்கும் என்னடா சம்பந்தம்?”
“பண்டாரக வன்னியன் இலங்கையின் முல்லைத்தீவை ஆண்ட மன்னன். ஆங்கிலேயருக்கு எதிராக எழுந்த விடுதலைக்குரல்களில் அவனுடையதும் ஒன்று”
“சரி அதுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் “
“அடேய் முட்டாள் மகேந்திரா, அது அவர் எழுதிய புத்தகம்”
“ஓ இப்ப புரியுதுரா”.
“அதே மாதிரி எனக்கும்  போக்ரானுக்கும் எந்த சம்பந்தமுமில்லை”
“என்னடே சொல்ற, உனக்கும் போக்ரானுக்கும் தொடர்பிருந்தது என்று யாரோ சொன்ன மாதிரி பேசுற?”
"அடேய் மகேந்திரா அதைச் சொல்லலடா"
“நெட்பிலிக்சில் 'பர்மனு' என்ற திரைப்படத்தைப்  பார்த்தேன். அதே நாளில் வாஜ்பாய் இறந்து போனார்”.
“என்னடா சொல்ற பர்மனு படத்தை வாஜ்பாயா டைரக்ட் செஞ்சார்”.
“அடேய் நீ திரும்பத்திரும்ப முட்டாள்னு நீரூபிச்சிக்கிட்டே இருக்கியே” .  
“ஆமடே முட்டாளோடு நண்பன் பின்ன வேறெப்படி இருக்கமுடியும்?அதுசரி சொல்றா இந்தப்படத்துக்கும் வாஜ் பாய்க்கும் என்ன சம்பந்தம்?
"பர்மனு என்ற படம் போக்ரான் அணுகுண்டு எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை விளக்கும் படம்”.
Related image

“ஓ அப்படியா அப்படித் தெளிவாச் சொல்லு. சரிசரி மேலே சொல்லு”.
1995 வரை சீனா 43 தடவை அணு ஆயுத சோதனை நடத்தி  முடித்திருக்க, இந்தியா 1974ல் ஒரே ஒரு முறை அதுவும் சமாதானத்தின் அடிப்படையில் சோதனை செய்வதாக வெடித்திருந்தது. அதனால் மேலை  நாடுகள் மற்றும் பாகிஸ்தான் சீனாவிடமிருந்து மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் வாஜ்பாய் அரசு பதவியேற்றபின் இதனை எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்று திட்டமிட்டு முயற்சி செய்யும் போது இதே போக் ரானில் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் இரண்டாம் முறை முயன்று  அது முற்றிலும் வெற்றி பெற்றது. அந்த முயற்சியினை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.  
உலக நாடுகளுக்குத் தெரியக் கூடாது. ரகசியமாக நடத்தப்பட வேண்டும். உள்ளூரிலும் எதிர்க்கட்சி போன்ற யாருக்கும் தெரியக் கூடாது. ஏன் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளேயும் பலருக்குத் தெரியாத ஒரு பெரும் நிகழ்வு  இது.
முதல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் உலக நாடுகளின் கண்கள் குறிப்பாக அமெரிக்காவின் ரேடார் கண்கள் இந்தியாவின் மேல் அதிலும் பொக்ரானின் மேல் கண்காணித்துக் கொண்டிருக்கும்போது அதன் கண்களில் மண்ணைத்தூவி விட்டு செய்யவேண்டிய வேலை இது.
Image result for Parmanu
இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு உளவாளிகள், உள்ளூர் துரோகிகளுக்கு மறைத்து இதனைச்  செய்ய வேண்டும். ஏராளமான ஆட்களும், பொருட்களும் தளவாடங்களும் தேவை என்ற நிலையில் பொக்ரான் என்பது எத்தனை பெரிய சாதனை என்பதை இந்தப்படத்தின் மூலம் விளங்க வைத்திருக்கிறார்கள். இதனைப் போன்ற சாதனைகளை செய்வதற்கு மனஉறுதி கொண்ட வாஜ்பாயைப் போன்ற தலைவரும் நாட்டின் முன்னேற்றமே தலையானது என்று நினைத்துச் செயல்பட்ட அப்துல் கலாம் அவர்களின் முயற்சியும் போற்றத்தக்கவை. உலக அரங்கில் இந்திய நாட்டை தலை நிமிர்ந்து நிற்கச் செய்ததோடு யாருக்கும் நாங்கள் இளைத்தவர்களோ சளைத்தவர்களோ என்று நிரூபித்த நிகழ்வு இது. பார்த்து ரசியுங்கள்.
வரலாற்று நிகழ்வு என்றாலும் வாஜ்பாய்  போன்ற தலைவர்கள் தவிர  மற்ற எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. அப்துல் கலாம் முதற்கொண்டு பெரும் ஆளுமைகளை இதில் காண்பிக்க முயற்சி செய்யவில்லை.
Image result for abhishek sharma director
John Abraham with Abishek Sharma

இந்தப்படத்தை அபிஷேக் சர்மா அவர்கள் இயக்கியிருக்க, ஜி  ஸ்டூடியோஸ், ஜே.ஏ.எண்டர்டைன்மெண்ட் போன்ற பல கம்பெனிகள் இணைந்து தயாரித்துள்ளன. இயக்குனரோடு இணைந்து சைவான் குவாட்ரஸ் மற்றும்    சம்யுக்தா சாவ்லா ஷேக் என்பவர்கள் வசனம் எழுதியுள்ளனர். பாட்டுகளுக்கு இசையாக  சச்சின் ஜிகர், ஜீட் கங்குலி இசையமைக்க அருமையான பின்னணி இசையைக் கொடுத்தவர் சந்திப் செளட்பி
முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரகாமும் டயனா பென்ட்டியும்  திறமையான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
Related image
Diana Penty
மே, 2018ல் வெளிவந்தது இந்தப்படம். 44 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் 91.36 கோடி வரை சம்பாதித்தது.
இந்தப்படம் விருதுகள் வாங்குமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
-      முற்றும்.
மகேந்திரன்: “அது சரிடா இனிமே நீ எந்தப் புத்தகத்தை படிப்பதாக இருந்தாலோ அல்லது எந்தப் படத்தையும் பார்ப்பதாக இருந்தாலோ கொஞ்சம் சொல்லிவிட்டுச் செய்.

Thursday, August 23, 2018

சுப வீரபாண்டியனின் பேச்சும் ஞான சம்பந்தனின் வீச்சும் !!!!!


Fetna – 2018 பகுதி 4
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post.html
Image result for fetna 2018 dallas

வெள்ளியன்று நிகழ்ச்சிகள் முடிந்து சனிக்கிழமை காலை கிளம்பி ரெடியாகி அரங்குக்குச் சென்றோம். அருமையான காலை உணவு முடிந்து அரங்கில் அமர்ந்தோம். அரங்கு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. வட்ட மேஜைகள் அகற்றப்பட்டு வெறுமனே நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பேரவையின் ஆண்டு விழாவின் பொதுநாளான அன்று மிகத்திரளான தமிழ் மக்கள் வந்திருந்தனர். மொத்த எண்ணிக்கை 5500ஐத்  தாண்டி விட்டது என்று யாரோ சொன்னார்கள். அன்றைய நாளில் நடந்த நான் ரசித்த முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும் சொல்கிறேன் .
இந்தியாவிலிருந்து வந்திருந்த நாதஸ்வர தவில் குழு மங்களகரமான துவக்கத்தைக் கொடுத்தார்கள். அடுத்தது தமிழ்த்தாய் வாழ்த்தும் அமெரிக்க தேசிய கீதமும் பாடி  முடித்தனர்.
அது முடிந்தபின் திருக்குறள் ஓதும் நிகழ்ச்சி நடந்தது. ஓதப்படக் கூடிய ஓதப்படவேண்டிய  ஒன்றுக்கான எல்லாத்தகுதிகளும் திருக்குறளுக்கு நிச்சயமாக உள்ளது தானே.
Chair / Co-Chair person
செந்தாமரை பிரபாகர்
Fetna அமைப்பின் தலைவர், செந்தாமரை பிரபாகர் முகமலர்ச்சியுடன் வரவேற்புரை ஆற்றினார். செந்தாமரையல்லவா மலர்ச்சியில்லாமல் இருக்குமா? அவரைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள் நம்பியும் வரவேற்று மகிழ்ந்தார் நெகிழ்ந்தார். அடுத்து நர்த்தகி நடராஜ் அவர்களின் பயிற்சியில் ஏராளமான குழந்தைகளும், பெண்களும் திருக்குறள் நடனம் ஆடி அசத்தினர். இதுவரைக்கும் இப்படியொன்றை நான் பார்த்ததில்லை. அற்புதமாக இருந்தது. பிள்ளைகளின் திறமை மட்டுமல்லாமல் பயிற்சியாளரின் திறமையும் அங்கே ஒருங்கே வெளிப்பட்டது. அதோடு திருக்குறளுக்கு ஆடியது மேனியை சிலிர்க்க வைத்தது.
Chair / Co-Chair person
கால்டுவெல் வேள்நம்பி
சிறப்பாக வந்திருந்த விழா மலர் வெளியீடு முடிய, கன்னியாகுமரியிலிருந்து வந்திருந்த தம்பதியினர், முனைவர் அருள்செல்வி மற்றும் ஆனந்த் குழுவினர் வந்து மரபு சார்ந்த பறை, பம்பை சிலம்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி  அருமையான நிகழ்ச்சியொன்றை நடத்தினர். Fetna முடிந்த கையோடு பல ஊர்களுக்கும் இவர்கள் சென்று பறை பயிலும் பட்டறைகளை நடத்தினர். நியூயார்க்கிலும் நியூயார்க் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவர் பாலா சுவாமிநாதன் அவர்கள் முயற்சியாலும், நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன் ஆதரவிலும் ஒரு பயிற்சிப் பட்டறை இங்கும் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் என்னால் இதில் பங்கு கொள்ள முடியவில்லை. என்னவோ தெரியவில்லை. அமெரிக்காவெங்கும் பறை கற்றுக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் நிலவுகிறது. குறிப்பாக நியூயார்க், நியூஜெர்சி, கனக் டிக்கட், வாஷிங்டன் ஆகிய ஊர்களில் குழுக்களும் இருக்கின்றன. அருமையாக வாசித்து அசத்துகிறார்கள்.
பறை என்பது தாழ்த்தப்பட்டவர்களின் இசைக்கருவி என்ற தவறான எண்ணம் நீங்கி தமிழரின் பாரம்பரிய இசைக் கருவி என்று மாறி அதனைக் கற்றுக் கொள்ள ஆர்வம் கொள்வது அமெரிக்கத் தமிழர் மத்தியில் தான் அதிகம் காணப்படுவதாக தெரிகிறது.
Chair / Co-Chair person
பழனிச்சாமி
அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் சுப. வீரபாண்டியன் தலைமையில் கருத்துக்களம் நடந்தது. அடியேனும் இதில் கலந்து கொண்டேன். மகளில் மரபு  மற்றும் மழலையர்  மரபு அன்றும் இன்றும் என்ற தலைப்புகளில் இரண்டு அணிகளாக மொத்தம் 10 பேர் உரையாற்றினோம். உரையாற்றுபவர்களை  ஏற்கனவே தேர்ந்தெடுத்து அதற்கு வாட்ஸ்அப் குழு அமைத்து அதற்கு பழனிச்சாமி என்ற நல்ல ஒரு நெறியாளரை ஏற்பாடு செய்திருந்தனர். அவர் எங்களை எல்லாம் மிகவும் பொறுமையாக வழி நடத்தி, ஆலோசனைகளைச் சொல்லி நெறிப்படுத்தி வந்தார். ஒவ்வொரு  ஞாயிற்றுக் கிழமை இரவும் 9 மணிக்கு தொலைபேசியில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. பல ஊர்களிலிருந்தும்  ஏன் கனடாவிலிருந்தும் கூட இதில் மொத்த பத்துப்பேரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். நான் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல முறை கலந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒவ்வொரு முறையும் பழனி பரவாயில்லை என்று சொன்னது என்னை குற்றப்படுத்தி நெகிழவைத்து விட்டது. பேசிய பலரும் சங்க காலத்திலிருந்து இந்தக் காலம் வரை எடுத்துப்பேசி அசத்தினர். ஆனால் சுப வீரபாண்டியன் அவர்களின் தொகுப்புரை மிகவும் அருமை. ஒரு தேர்ந்த பேச்சாளிக்கு என்னென்ன குணங்கள் தேவை என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொருவர் பெயரையும் ஞாபகம் வைத்து அவர்களுடைய  கருத்துகளுக்கான மாற்றுக்  கருத்துகளை நாசூக்காக வைத்ததாகட்டும், பிற்போக்குச் சிந்தனைகளை விட்டு முற்போக்காக எப்படி வரவேண்டும் என்று சொன்னதாகட்டும், நேரத்துக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் சொல்ல வேண்டியவற்றை அருமையாக தொகுத்துச் சொல்லியும் அற்புதமாக இருந்தது. தாம் கொண்ட திராவிட சிந்தனைகளிலிருந்து வழுவாது ஆனால் வேறு எவரையும் புண்படுத்தாது இவர் பேசியபோது இவரை மாதிரியான ஒரு தலைவர் அல்லவா நமக்கு இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர் கூட சில நிமிடங்கள் பழகியதும் மேடையைப் பகிர்ந்து கொண்டதும் எனக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பென்று நினைக்கிறேன். 

பேசிய கடைசிப் பேர்களில் ஒருவனாக இருந்தாலும் பழனி சீக்கிரமாகப் பேசி முடிக்க வேண்டியதாலும், என் உரை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பது என் கருத்து. ஏற்கனவே தயாரித்திருந்த உரையில் நேரக் கட்டுப்பாடு கருதி எங்கே வெட்ட வேண்டும் எங்கே ஒட்ட வேண்டும் என்று உடனுக்குடன் முடிவு செய்வது ஒரு கலை தான்.

அதன்பின் வெவ்வேறு தமிழ்ச் சங்கங்களிலிருந்து சிறப்பு நிகச்சிகள் நடத்தப்பட்டன. மதிய நிகழ்வுகளில் முக்கியமாக  பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. தமிழன்பன் தலைமையில் நடக்க வேண்டிய ஒன்று அவர் வந்து சேர முடியாதலால் ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். தமிழன்பன் ஏற்கனவே சொல்லியிருந்த தலைப்புகளில் கவிதைகள் எழுதப்பட்டு தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் மட்டுமே அரங்கேறின.    

கவியரங்கத்தில் ஞானசம்பந்தன் பேசிக் கொண்டே இருந்தார். பல சமயங்களில் அவர் பேசியது சுவையாக இருந்தாலும் சிரிப்பை வரவழைத்தாலும், தொட்டுத்தொட்டு நான்ஸ் டாப்பாக போய்க் கொண்டிருந்தது எல்லோரையும் அயர வைத்துவிட்டது. கவியரங்கத்தில் பேசுவதும் காணாத ஒன்றுதான்.
நிறைய கவிதைகள் சிறப்பாக இருந்தன குறிப்பாக அல்லது வழக்கம்போல் மகேந்திரன் பெரியசாமி மற்றும் கனிமொழி ஆகியோரின் கவிதைகள் சுவையாக இருந்தன.
Image result for fetna 2018 dallas

-தொடரும்.