Showing posts with label ராஜீவ் காந்தி. Show all posts
Showing posts with label ராஜீவ் காந்தி. Show all posts

Tuesday, December 17, 2019

ராஜீவ் படுகொலை - சிவராசன் டாப் சீக்ரட்


ராஜீவ் படுகொலை - சிவராசன் டாப் சீக்ரட்
படித்ததில் பிடித்தது
சிறைவாசி இரா. பொ. இரவிச்சந்திரன்.
தொகுப்பாசிரியர்: பா. ஏகலைவன்.
ஜனவரி 2018 யாழ் பதிப்பகம் - சென்னை விலை: 500.00 ரூபாய்.

      உலகத்தில் நடந்த பல படுகொலைகளுக்கான உண்மைக் காரணங்களும், உண்மைக் குற்றவாளிகளும் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன. மகாத்மா காந்தியடிகள், ஜான். F. கென்னடி போன்ற சில கொலைகள் ஞாபகம் வந்தாலும், நம் மண்ணிலே நடந்த ராஜீவ் காந்தி படுகொலையை நினைத்து வருந்திய தமிழர்கள் என்னையும் சேர்த்து ஏராளமானவர். குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஏழுபேர் கடந்த 28 ஆண்டுகளாக இன்னும் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இரவிச்சந்திரன் எழுதிய புத்தகம்தான் இது.

பழ. நெடுமாறன் முன்னுரை எழுத, தொல் திருமாவளவன், நீதியரசர் து அரிபரந்தாமன், சீமான், திருச்சி வேலுச்சாமி, KS. ராதா கிருஷ்ணன், தியாகு,  புகழேந்தி, தங்கராஜ், சுப. உதய குமரான், தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் ஜி.தியாகராஜன் ஆகியோர் அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். இவ்வளவு பேர் அணிந்துரை எழுதிய புத்தகம் எனக்குத் தெரிந்து இதுதான் முதல் முறை. இனி நான் படித்து, அயர்ந்து போன, ஆச்சரியப்பட்ட, திகிலடைந்த, சினமுற்ற, சந்தேகப்பட்ட, துயரமடைந்த விடயங்களை வழக்கம்போல் கீழ் வரும் புல்லட் பாயிண்ட்டுகளில் (அய்யய்யோ இங்கேயும் புல்லட்டா?) தருகிறேன்.

1)   பழ. நெடுமாறன் எழுதிய முன்னுரையில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேர்களில் 13 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 13 பேர் இலங்கைத் தமிழர் என்ற சரிசமமான கணக்கிலேயே உள்நோக்கம் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.
2)   இரவிச்சந்திரன் தமிழகத்தில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்தவர். 10 ஆம் வகுப்பு படித்த பின் விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு இலங்கை சென்று இயக்கத்தில் சேர்ந்தவர்.
3)   அதன்பின் திரும்ப தமிழகம் வந்து "தமிழ் தேசிய மீட்பு முன்னணி" என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார்.
4)   குற்றம் சுமத்தப்பட்ட 26 தமிழர்களும் அரசியல் சதுரங்கத்தில் பலியிடப்பட்ட வெட்டுக்காய்கள் என்று குறிப்பிடுகிறார்.
5)   நக்கீரன், ஜுவி, தராசு, நெற்றிக்கண், இந்தியா டுடே, சண்டே,
ஃபிரன்ட்லைன், வீக், இல்லஸ்ட்டிரேட் வீக்லி, ஆகியவை CBI விசாரணையைக் கேள்விக்குள்ளாக்கின. கேள்விகளை எழுப்பிய இராஜீந்தர் குமார் ஜெயின் என்ற பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டார்.
6)   கார்த்திகேயன் உண்மைகளை மறைத்து குற்றவாளிகளைத்தப்பவிட்டார்.
7)   சிவராசன் பொட்டம்மனுக்கு அனுப்பிய வயர்லஸ் செய்தி, சிவராசன், தணு மற்றும் சுபா தவிர வேறு யாருக்கும் தெரியாது.
8)   புலிகள் இயக்கத்தில் சேர விரும்பிய ரவிச்சந்திரன் மண்டபம் வந்து, இலங்கைத் தமிழன் சிவபாலனின் நட்பைப் பெற்று அவரின் உதவியுடன் PLOT அமைப்பின் படகில் ஏறி மன்னார் வளைகுடா செல்கிறார்.
9)   அங்கிருந்து பாவற்குளம், வவலியாவின் புறநகர் வழியாக யாழ்குடா சென்று சேர்கிறார்.
10)               அந்தச்சமயத்தில் பிளாட் இயக்கத்தில் 10000 பேரும் ஈரோஸ் மற்றும் TELO-ல் தலா 1000 பேரும் இருந்தனர்.
11)               எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தங்களுடைய அதிரடி நடவடிக்கைகளால் புலிகள் இயக்கம் மக்களிடம் மரியாதையும் மதிப்பும் பெறத்துவங்கியிருந்தது.
12)               விடுதலைப்புலிகள் முகாம் சென்றடைந்தும் சுமார் 1 1/2 மாதம் வெறும் நேர்காணலே நீடித்தது. அதன் பின்னர் யாழ்குடாவில் ஆரம்பித்த பயிற்சியின் தலைவராக பாரதி மாஸ்டர் இருந்தார். அவர் கீழ் 200 பேர் பயிற்சி பெற்றனர்.
13)               பெரும் வெற்றிகளைக்குறித்து, இலங்கையையும் ஆண்ட, இராசேந்திர சோழரின் புலிச்சின்னம், விடுதலைப்புலிகளின் சின்னமானது. மேலும் புலி போன்று வேகம், விசை, பாய்ச்சல், உறுதி, உருமறைவு, இலக்கு மற்றும் மூர்க்கம், ஆகியவற்றுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
14)               யாழ் குடா நாடு என்பது, வலிகாமம், தென்மராட்சிப் பிரதேசம் என்ற சாவகச்சேரி, வடமராட்சிப் பிரதேசம் சார்ந்த வல் வெட்டித்துறை பகுதியில் புலிகள் கேலோச்சினர் இதில் வல்வெட்டித்துரை பிரபாகரன் சொந்த ஊர்.
15)               ரவிச்சந்திரனின் முதல் சமரில் RPG ஒன்றை மீட்டு வந்ததை நினைவு கூறுகிறார்.
16)               1989ல் வந்த .பி.கே.எல்.எஃப்  ஆகஸ்ட் 2,3,4 வல்வெட்டித்துறையில் நடத்திய தாக்குதலில், 63பேர் கொல்லப்பட்டனர், 2000பேர் படுகாயம், 150 வீடுகள் எரிந்து போயின, பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.
17)               தான் பெற்ற புலிப்படைப் பயிற்சியை முழுவதுமாக விளக்குகிறார் ரவி. பொலிகண்டி என்ற கடற்கரை கிராமத்தில் இருந்த இரண்டாவது பட்டாலியன் தலைமைப்பயிற்சிக்கு பொறுப்பேற்றிருந்த செல்வராஜ் மாஸ்டர் தளபதி சூசை (கடற்படைத்தளபதி கர்னல் சூசை) பாரதி மாஸ்டர் ஆகியோரைப் பற்றிச் சொல்லுகிறார்.
18)               ஜ.பி.கே. எல். எஃப்  -ன் படுகொலைத் தாக்குதலுக்குப் பின், தாயகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக தமிழ்நாடு திரும்பி தனியாக அரசியல் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க முயற்சி செய்கிறார்.
அதன்பின் ராஜீவ் காந்தி கொலையின் சந்தேகத்தின் அடிப்படையில் ரவி கைது செய்யப்படுகிறார்.  பின்னர் விடுதலைப்புலிகளுக்கும் ராஜீவ் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதற்கு பல வித ஆதாரங்களை அடுக்குகிறார்.
1)   பெல்ட் பாம் ஒரு இந்தியத்தயாரிப்பு.
2)   அமெரிக்காவுக்கும் நேரு குடும்பத்திற்கும் இருந்த பிரச்சனை, இதில் CIA உளவாளியாக சுப்ரமணிய சுவாமியின் செயல்பாடுகள்.
3)   1990 ஈராக் அமெரிக்கப்போரை, சீனா ரஷ்யாவோடு சேர்ந்து ராஜீவ் எதிர்த்ததால் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் வந்த கோபம்.
4)   அமெரிக்க போர்விமானங்கள் இந்தியாவில் எரிபொருள் நிரப்ப, அப்போதைய பிரதமர் சந்திரசேகர் அனுமதியளிக்க அதனை ராஜீவ் எதிர்த்து ஆட்சியைக் கவிழ்த்தது.
5)   1993ல் நாடாளுமன்றத்தில் SB  சவான். ராஜீவ் கொலையில்  உள்நாட்டு/வெளிநாட்டு சதி இருக்கிறது என்று சொன்னதோடு விடுதலைப்புலிகள் ஓர் அம்புதான் என்றும் CIA  மேல் சந்தேகம் இருப்பதாகவும் சொன்னது.
6)   பிரிட்டனில் இருந்த பஞ்சாப் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஜக்ஜித்சிங் செளகான், "ராஜீவ் காந்தியை ஒழித்தால் மட்டுமே காலிஸ்தான் பிரச்சனை தீரும். சந்திராசாமி அதற்கு நிதியுதவி செய்வார்" என்று சொன்னது.
7)   சந்திராசாமிக்கும்  சி.ஐ.எவுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பு, சிவராசனுக்கு இருந்த இன்டர்நேசனல் வங்கிக் கணக்கு.
8)   கார்த்திகேயன் மூடி மறைத்ததை ஜெயின் கமிஷன் கண்டித்தது.
9)   கொலைக்கு முன் TN சேஷன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் எச்சரித்தது.
10)               சுப்பிரமணியசாமி, சந்திரசேகர், சந்திராசாமி, நரசிம்மராவ் போன்ற பார்ப்பனர் வட்டத்தின் கூட்டு.
11)               மத்திய உளவுத்துறை, ராஜீவ் உயிருக்கு ஆபத்து என்று சந்திரசேகர் அரசிடம் சொன்னது.
12)               1995ல் சோனியா உண்மையான சாதியாளர்களை நரசிம்மராவ் பிடிக்க மாட்டார் என்று சொல்லி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஓரங்கட்டியது.
13)               வர்மா கமிஷனில் இருந்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் விலகுவது.
14)               சுப்பிரமணியசுவாமியின் 56 மணிநேர தலை மறைவு, ராஜீவ் காந்தி ஆவணங்கள் தொலைந்து போதல்.
15)               டி.ஐ.ஜி. ஸ்ரீகுமார், லண்டன், ஐரோப்பா என்ற சேகரித்த வெளிநாட்டு ஆவணங்கள் லண்டன் ஏர்போர்ட்டில் தொலைந்து போனது .
16)               ரா தலைவர் இது விடுதலைப்புலிகள் செய்ததல்ல என்று சொன்னது.
17)               நரசிம்மராவ், சுப்ரமணியசாமி , சந்திராசாமி, மரகதம் சந்திரசேகர், லதா, பிரியகுமார், வாழப்பாடி ராமமூர்த்தி, மார்கரெட் ஆல்வா, எம்.கே.நாராயணன் ஆகியோரை உள்ளடக்கிய கறுப்பு ரகசியங்கள்.
18)               ராஜீவ் விமானம் 6 மணிக்கு வந்து சேரவேண்டியது, 6 மணிக்குத்தான் விசாக பட்டிணத்தில் கிளம்பியது. தாமதத்தின் காரணம் என்ன? அந்தத்தாமதம் சிவராசனுக்கு எப்படி முன்னரே தெரிந்தது?
19)               மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகர் ஒரு சிங்களப் பெண்ணை மணந்தவர்.
20)               பாதுகாப்புக்குறைபாடுகளை விசாரித்த ஜெயின் கமிஷனுக்கு சிறப்பு புலனாய்வுக்குழு முழு ஒத்துழைப்பைத் தரவில்லை.
21)               1991 முதல் சி.பி.ஐ வர்மாகமிஷன்,ஜெயின்கமிஷன் என்று ஆயிரம் கோடிக்கு மேல் செலவாயிருக்கிறது.
22)               1987ல் ராஜீவ்வைத் தாக்கிக் கொல்ல முயன்ற விஜே முனி ரோகன டி சில்வா என்ற இலங்கை கடற்படை வீரர் மனநிலை சரியில்லாதவர் என்று 1989ல் பிரேமதாசாவால் விடுதலை செய்யப்படுகிறார். அனால் அடுத்த நடந்த தேர்தலில் தென்மண்டல சபை உறுப்பினராகத்  தேர்வு செய்யப்படுகிறார்.
ரவி இவ்வாறு எழுப்பும் சந்தேகங்களைப் படித்தால் தலை சுற்றுவதோடு, குழப்பம் மேலும் அதிகரிக்கிறது. எது எப்படியோ நீண்ட நாள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு தங்களது தண்டனைக்காலத்திற்கு  மேல் சிறையில் வாடும் இந்த ஏழுபேரும் விடுதலை செய்யப்படுவதுதான் எந்த ஒரு மனிதாபிமானமுள்ள  தமிழரும் நினைப்பது.
முற்றும்

Thursday, July 6, 2017

ஐபிஎஸ் அதிகாரி கேட்ட அதிரடிக்கேள்விகள் !!!!!!!


ராஜீவ் கொலை பகுதி -6
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post_29.html

Image result for Rahothaman IPS
Rohothaman IPS


           ராஜீவ் கொலையை விசாரித்த சிபிஐ சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவராக இருந்தவர் ரகோத்தமன் ஐ பி எஸ் . நளினி தன் புத்தகத்தில் அவரைப்பற்றி நல்ல விதமாகவே குறிப்பிட்டிருந்தார்.அவர் சமீபத்தில் ஆனந்தவிகடனுக்கு கொடுத்த பேட்டியில் சில கேள்விகளை கேட்டிருந்தார் .  அந்தக்கேள்விகளை நீங்களே படிச்சுப்  பாருங்க. எல்லாமே அதிர்ச்சி தரக்கூடியவை  
1.   தணு கட்டியிருந்த பெல்ட் வெடிகுண்டு எங்கே தயாரிக்கப்பட்டது? அங்கு வெடிக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-ஸை யார் சப்ளை செய்தார்கள்? 

2.   ராஜீவ் கொலை சம்பவத்தை முடித்த பிறகு, ஒரு ஆட்டோவில் சதிகாரன் சிவராசன், சுபா மற்றும் நளினி ஆகியோர் சென்னை நோக்கி பயணிக்கிறார்கள்.
 அப்போது அவர்களுடன் ஒரு தாடிக்காரன் இருந்திருக்கிறான். அவன் யார் ?

3.   பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரபத் 1991-ல் இந்தியத் தேர்தல் சமயத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படலாம் என்கிற ரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். அப்படியானால், அவருக்கு எங்கிருந்து தகவல் கிடைத்தது?

4.   அவர் சொன்னதைக் கேட்டு, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் விட்டது யார்?.

5.   1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் 'எம்.வி. அகத்' கப்பலை இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலிலிருந்த, விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு, தன்னைத் தானே அழித்துக் கொண்டதாகக் கூறப்பட்டது. அதில் ஏதோ சதியிருக்கிறது.

6.   அதே போல, கே.பி எனப்படும் கே. பத்மநாபன். விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கான ஆயுதங்கள், வெடிமருந்துகளை உலகளவில் வாங்கிக் கொடுத்துவந்த ஏஜென்ட். இவரை, இதுவரை இந்திய விசாரணை அமைப்புகள் விசாரிக்கவில்லை. இப்போதும் கூட, இலங்கையில்தான் இருக்கிறார். அவரை விசாரித்தால், ராஜீவ்காந்தி கொலை பற்றிய பல விவரங்கள் கிடைக்கலாம். இதையெல்லாம் இருபது வருடங்களாகச் செய்யமால் ஏன் விட்டிருக்கிறார்கள்? 

7.   ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை நடந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ கேஸெட்டை அப்போதைய இந்திய உளவுத்துறையின் இயக்குநர் எம். கே. நாராயணன் பதுக்கிவிட்டார். இதை நான் கூறவில்லை... வர்மா கமிஷன் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன் அவர் கேஸேட்டை சி.பி.ஐ-யிடம் கூட தரவில்லை என்பது இன்னொரு புதிர். 

8.   ராஜீவ் காந்தி கொலை சம்பவம் நடந்த மறுநாள் டெல்லியில் நடந்த கேபினேட் கூட்டத்தில் உளவுப்பிரிவான ரா-வின் இயக்குனர், விடுதலைப்புலிகளுக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்மந்தமில்லை என்று பேசியிருக்கிறார். ஏன் அவர் அப்படி பேசினார்? அதன் பின்னணி என்ன

9.   ஜம்மு-காஷ்மீரிலிருந்து பயிற்சி பெற்ற என்.எஸ்.ஜி. படையினரைப் பெங்களூருக்கு அனுப்புவதில் ஏற்பட்ட காலதாமதம் அது! என்.எஸ்.ஜி-யை அனுப்ப காலதாமதத்தை ஏன் செய்தார்கள்

10.                என்னைப்பொறுத்தவரையில், இந்திய உளவு நிறுவனங்களுக்கு ராஜீவ் கொலை நடக்கத் தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்றே குற்றம்சாட்டுகிறேன். ( நன்றி : விகடன்.காம்)

கொடுமையை பாத்தீங்களா? அவர்ட்ட நான் கேட்கணும்னு நினைச்ச  கேள்விகளை அவரே கேட்டிருக்கார் .இப்படி எல்லாரும் கேள்விகளை மட்டுமே கேட்டால் பதில் சொல்றது யாருங்க பாஸ் ?. 
Image result for nalini murugan's family
Murugan and Nalini
திருமணமாகி 2 மாதம் மட்டுமே வாழ்ந்த வாழ்க்கைஅதில் உதித்த மகளுடன் கொஞ்ச காலம் கூட சேர்ந்து வளர்க்கவாழ முடியாத நிலைநீண்ட காலக் கொடுமைகள் ஆகியவற்றை அனுபவித்த இவர்கள் தங்கள் முதுமைக் காலத்திலாவது சேர்ந்து வாழ அரசு அனுமதிக்குமாஅரசியலை விலக்கி மனிதாபமான முடிவை எடுக்குமா அரசு?

முற்றும்

Thursday, June 29, 2017

நளினி மேல் நடந்த நிர்வாணத்தாக்குதலும் பேய்ச்சிறையும் !!!!!!!!!!!!!

ராஜீவ் கொலை பகுதி -5
படித்ததில் பிடித்தது.
ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும்,
பிரியா நளினி சந்திப்பும் - நளினி முருகன்.
யாழ் பதிப்பகம் - எழுத்தாக்கம். தொகுப்பு - பா.ஏகலைவன்
Image result for Nalini murugan in CBI custody
Add caption
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post_15.html

சிறையில் உள்ள பிள்ளைகளுடன் நளினிக்கும் முருகனுக்கும் நெருக்கம் அதிகரித்தது. பிள்ளைகளிடம் அதீத பாசம் காட்டியதால் பிள்ளைகளும் இவர்களுடன் ஒட்டிக் கொண்டன. பெரும்பாலான சமயத்தில் பிள்ளைகள் தங்கள் நேரத்தை இவர்களுடன் செலவழித்தனர்.
          இவர்களுடைய வழக்குகளுக்கு முதலில் இறங்கி வாதாட ஒருவரும் முன்வரவில்லை என்பதால், முருகன் நளினியின் உதவியுடன் இரவும் பகலும் நிறைய சட்டப் புத்தகங்களைப் படித்து, தனது வழக்கை தானே நடத்துமளவிற்கு தேர்ச்சி பெற்றார். கடுமையான உழைப்பினால் பல குறிப்புகளை  தயார் செய்து அவர் கேட்ட குறுக்குக் கேள்விகளால், சாட்சிகளும் ஏன் காவல்துறை அதிகாரிகளும் கூட  திணறிப் போயினர். பலவிதமான பொய்சாட்சிகள் முருகனால் உடைக்கப்பட்டது. அதன்பின்தான் மூத்த வழக்கறிஞர்  துரைசாமி, அவர்களுக்காக வாதாட முன் வந்தார். தடா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் பத்திரிக்கையாளர் யாரும் எப்போதும் அனுமதிக்கப்படுவதில்லை. துரைசாமி ஒரு இதய நோயாளி என்றும் பார்க்காமல் பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி அவருடைய காரை உள்ளே விடாமல் அவரை நீண்டதூரம் நடக்க வைத்தனர். மேல்மூச்சு கீழ்முச்சு  வாங்க அவர் நடந்து வந்து வாதம் செய்த கொடுமையைப்பார்த்து தடா நீதிபதியே கதறி அழுத சம்பவமும் நடந்தது. அதன்பின்பு CBI  தலைமை நீதிபதி இராஜமாணிக்கம் மாரடைப்பில் இறந்து போனார். புதிதாக வந்த நீதிபதி அவசரகதியாக  கேஸை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை அளித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Related image
Murugan
          அப்போது நளினியும் முருகனும் வெளியே நின்றபோது காவலுக்கு வந்திருந்த 300 போலீஸ்காரரும் கண்கலங்க அவர்களுக்கு ஆறுதல் சொன்னதை உருகிஉருகி எழுதியிருக்கிறார் நளினி.
          அதன்பின் வேலூர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் நளினி. அங்கே முதல் நாளில் நளினியை முற்றிலும் நிர்வாணமாக்கி மயக்கமாகும் வரை அடித்து உதைத்திருக்கிறார்கள். உள்ளே முதன்முதலில் வரும் அனைவருக்கும் அது நடக்குமாம். ஏனென்றால் உள்ளே வரும்போதே  அவர்களுடைய கொட்டத்தை அழித்துவிட்டால் அவர்கள் பிரச்சனை கொடுக்காமல் இருப்பார்கள் என்பதற்காக இப்படிச் செய்கிறார்களாம். இதற்குப் பெயர் “அட்மிஷன் அடி".
          தூக்குத் தண்டனை கைதிகளுக்கு சிறையின் உள்ளேயே ஒரு தனிமையான சிறைப்பகுதி இருக்கிறதாம். அங்கே அதற்கு முன் பல வருடகாலமாக யாரும் இருக்கவில்லை என்பதால், புதிதாக சுத்தம் செய்து ஒரு அறையை ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த முழுப்பகுதியிலும் நளினி ஒருவர் மட்டுமே இருந்தார். அதன் ஒரு பகுதியில் தூக்குப் போடும் இடமொன்றும் இருக்கிறது. 
          அங்கு காவலுக்குச் செல்ல பெண் போலீஸ்காரர்களே பயப்படுவார்களாம். ஏனென்றால் இரவில் பேய்கள் அங்கு நடமாடுமாம். பலபேரை தூக்குப் போட்ட இடமென்பதால் இரவு நேரத்தில் அழுகைக்குரல்களும் அமானுஷ்ய சத்தங்களும் கேட்கும்  என்பதால் அங்கு காவலுக்கு வரும் போலீசுக்கும் அது ஒரு தண்டணையாகவே கருதப்பட்டது. அது தவிர தூக்கு அறை ரொம்ப நாட்கள் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால் சுத்தம் செய்யப்போன போது அங்கு ஏழடி நாகம் ஒன்றை பார்த்த  ஊழியர்கள் அலறியடித்து ஓடி வந்திருக்கிறார்கள். ஆனால் நிறைய ஆட்களோடு  திரும்ப அங்கே போனபோது நாகம் காணப்படவில்லை. இதற்கு முன்னும் ஓரிருமுறை இப்படி நடத்திருக்கிறதாம்.        இது உயிர்காக்கும் நாகதேவதை என்றும் நிரபராதிகளை இது காக்கும் என்ற நம்பிக்கையும் அங்கு இருக்கிறதாம்.
          தூக்குத்தண்டனை நிறைவேற்ற ஓரிரு நாட்களே இருக்கும்போது பலபேர் எடுத்த முயற்சியில் கவர்னர், ஜனாதிபதி ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டது. சோனியா காந்தி அவர்களும் தூக்குத்தண்டனை வேண்டாம் என குடியரசுத்தலைவருக்கு எழுத, அவரின் உத்தரவுப்படி தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்தப் போராட்டங்களில் உயிர்த்தியாகம் செய்த செங்கொடியை நளினி நினைவு கூறுகிறார்.
Related image
Add caption
     முருகன் சிறையில் நாட்களை வீணாக்காத வண்ணம் பல புதிய விடயங்களைக் கற்றுக் கொண்டார். கம்ப்யூட்டரை திறம்பட பயன்படுத்தவும், ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும், இனிப்புகள் பலகாரங்கள் செய்யவும் கற்றுக் கொண்டார். அதோடு சிறைக்குள்ளேயே பூந்தோட்டம் அமைந்ததோடு சுமார் ஐம்பது மரங்களை நட்டு வளர்ந்து வருகிறார். +2-வில் ஆரம்பித்து BCA  படித்து அதன் பின் MCA யும் படித்து முடித்திருக்கிறார். அதோடு ஃபேஷன் டிசைன், DTP, ஆங்கில தட்டச்சு, ரேடியோ மெக்கானிசம் என்று கிடைத்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடாமல் படித்திருக்கிறார். ஓவியக்கலையைக் கற்று சுமார் 20 ஓவியங்களை வரைந்திருக்கிறார். 2011 லிருந்து முற்றிலுமாக எல்லாவற்றையும் துறந்து காவியுடுத்தி ஒரு  சாமியார் போலவே வாழ்கிறார் முருகன்.
          நளினியும் சும்மா இருக்கவில்லை. பியூட்டிசியன் கோர்ஸ், எம்பிராய்ட்டரி, தையல், தோட்டக்கலை மற்றும் யோகா ஆகியவற்றில் பயின்று தேறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது தான் ஏற்கனவே படித்த பட்டயப்படிப்போடு, முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்து அதன்பின் MCA யும் படித்து முடித்து இருக்கிறார். இருவரும் என்ன படித்து என்ன பயன் அதனை வெளியில் வந்து பயன்படுத்த முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி. தங்கள் இளமைக்காலங்கள் முழுவதையும் ஜெயிலில் கழித்திருக்கும் இவர்கள் கிட்டத்தட்ட 26 வருடங்கள் உள்ளே இருக்கிறார்கள்.
          உலகத்திலேயே அதிக நாட்கள் சிறையில் இருக்கும் பெண் என்ற பெருமை அல்லது சிறுமையையும் நளினி பெற்றிருக்கிறார்.
Related image
Book Release Function
        புத்தகத்தின் முன்னுரை அணிந்துரையாக சென்னை உயர்நிதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமல், வைகோ, திருமாவளவன், சீமான், திருச்சி வேலுச்சாமி,கொளத்தூர் மணி, இயக்குநர் புகழேந்தி, தங்கராஜ், வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். எழுதி என்ன பயன்?
          அவர் கோர்வையாக எழுதியிருக்கும் முழுப்புத்தகத்தையம் படிக்கும் எவரும் இவ்விருவரையும் நிரபராதிகள் என்றே நினைப்பார்கள். நானும் விதிவிலக்கல்ல. அப்படியே தெரிந்தோ தெரியாமலோ குற்றம் இழைத்திருந்தாலும் அதற்குரிய தண்டனைக்கும் மேலாக அவர்கள் அனுபவித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
          இதன் அடுத்த கடைசிப்பகுதியில் ராஜீவ் கொலையின் சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் ஒரு சமீபத்திய பேட்டியில் எழுப்பிய கேள்விகளைப் பார்க்கலாம் 
-தொடரும்

 பின்குறிப்பு :
Image result for spirit airlines
Flying to Chicago

அடியேன் குடும்பத்துடன் சிக்காகோவுக்கு சிற்றுலா செல்லவிருப்பதால் அடுத்த வாரம் பதிவுகள் வாராது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றும் நன்றிகள்.  


Thursday, June 15, 2017

நளினி சிறையில் பட்ட சித்ரவதைகள் !!!!!!


ராஜீவ் காந்தி கொலை - பகுதி -4
படித்ததில் பிடித்தது.
ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும்,
பிரியா நளினி சந்திப்பும் - நளினி முருகன்.
யாழ் பதிப்பகம் - எழுத்தாக்கம். தொகுப்பு - பா.ஏகலைவன்

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post.html

Image result for Malligai CBI office

            திருப்பதியில் வேண்டுதலுக்காக போட்ட மொட்டை, ஆள் அடையாளம் தெரியாமலிருக்கும்படி போட்ட மொட்டையாக போலீசாரால் எடுத்துக் கொள்ளப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால் பத்திரிக்கை செய்தி பார்த்தபின்தான் போலீஸ் தம்மேல் சந்தேகப்படுகிறது என்று இருவருக்கும் தெரிந்தது. உடனே எந்த முடிவெடுக்கவும் முடியாமல் திருப்பதியில் இருந்து மதுரை அங்கிருந்து பெங்களூர், வேலூர், விழுப்புரம் என்று முட்டாள் தனமாக ஓடித்திரிந்து இறுதியில் வெறுத்துப் போய் சென்னையில் சரணடைய வந்தவர்களை சைதாப் பேட்டையில் வைத்து போலீஸ் பிடித்தது.
          அப்போதிலிருந்து தொல்லைகள், கொடுமைகள் இருவருக்கும் நடக்க ஆரம்பிக்கின்றன. கோர்ட்டில் ஆஜர் படுத்த கூப்பிட்டுக் கொண்டு செல்லும்போது பக்கத்தில் நெருக்கி உட்கார்ந்த சப் இன்ஸ்பெக்டர் தன் பாலியல் தொந்தரவை ஆரம்பித்தான். தொடக்கூடாத இடங்களில் அவன் தொட்டுத்தடவ நளினி அழுது கொண்டே பல்லைக் கடித்துக் கொண்டே வந்திருக்கிறார். அந்த S.I.க்கு பதவி உயர்வு  கிடைத்தது  தனிக்கதை. சித்தரவதைகள் ஆரம்பித்தன.
Image result for Nalini murugan in CBI custody
Nalini  during CBI custody
          அதன்பின் CBI அவர்களுக்கு பொறுப்பேற்று, காவலில் எடுத்து 5க்கு 5 அடி இடத்தில் சங்கிலியால் கட்டிப் போட்டது.குளியலோ மாற்றுத்துணியோ தரப்படாமல், அவருடைய நாற்றம் அவருக்கே வாந்தியை வரவழைத்தது என எழுதுகிறார். கிட்டத்தட்ட 20 நாட்கள் தூங்கவிடாமல் இரவும் பகலும் மாறி மாறி விசாரணை நடத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து நடந்தவற்றை புல்லட் பாயின்டில் கொடுக்கிறேன்.
Image result for Rahothaman IPS
Rahothaman IPS
1.   இருவரையும் தனித்தனியாக அடைத்து வைத்து விசாரித்தார்கள். ஒரு நாள் இருவரையும் ஒன்றாக அழைத்து ஒரு அதிகாரி நீங்கள் உண்மையிலேயே கணவன் மனைவி என்று நிரூபிக்க என் முன்னால் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.
2.   அதற்கு சம்மதிக்கவில்லை என்பதால் நளினியை திருமணமாகாதவர் என்றும் செல்வி நளினி என்றே ரெக்கார்டுகளில் எழுதினர்.
3.   தலைமைப் புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் என்பவர் அதனால் நளினியின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து எறிகிறார். ஆனாலும் மற்றவர்களோடு ஒப்பிடும்போது இவர் நல்லவர் என்றே நளினி குறிப்பிடுகிறார்.   
4.   மற்ற அதிகாரியான கார்த்திகேயன், தியாகராஜன் ஆகியோர் மிகவும் மோசமானவர்கள் என்று சொல்லுகிறார். ஆனால் தியாகராஜன் சமீபத்தில் நீதிப்பிழை செய்துவிட்டேன் என்று அறிக்கை அளித்திருக்கிறார்.
5.   இந்தச் சூழ்நிலையில் தாய், தம்பி, மன வளர்ச்சி குன்றிய மாமா, உதவியாய் இருந்த பெண் என்று எல்லோரையும் போலீஸ் கைது செய்து சித்ரவதை செய்தது.  மனவளர்ச்சி குன்றியவரையும் விடவில்லை. அவர் நடிப்பதாகவே நினைக்கப்பட்டது.
6.   CBI தலைமையிடமான மல்லிகையில் தான் அவர்கள் அனைவரும் பலத்த காவலுடன் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
7.   சித்திரவதை தாங்கமுடியாது அம்மாவும், தம்பியும் நளினிக்கு எதிரான வாக்குமூலத்தில் கையெழுத்துப்போட வேண்டிய நிப்பந்தம் எழுந்தது.
8.   கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிகாரி தியாகராஜன், “ உன்னை அம்மணமாக்கி அடித்து போலீஸ்காரர்களுக்கு சுவைக்கக் கொடுப்பேன்”, என்று மிரட்டி பொய் வாக்குமூலத்தில் நளினியிடம் கையெழுத்து வாங்கினார். ஒரு கட்டத்தில் சேலையைப்பற்றி இழுத்திருக்கிறார்.
9.   அதன்பின் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முருகனுக்கு நளினியைப் பார்க்க அனுமதி கிடைக்காதலால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபின் தினமும் 15 நிமிடங்கள் பார்க்கலாம் என்று அனுமதிக்கிறார்கள்.
10.                நடந்த கொடுமைகளை விளக்கி நீதிபதிக்கு கடிதம் எழுதியும் எந்தப் பலனும் இல்லை.
11.                நளினி சிறையில் இருந்தபோது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரசவம் ஆனபின் ஒரு இரவு கூட அங்கு தங்க அனுமதிக்கவில்லை. அதோடு முருகனை குழந்தையைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை.
Image result for Rahothaman IPS
karthikeyan IPS

12.                மகளுக்கு தேவைப்படும் பாலுக்கு, பணத்துக்கு, பிறப்புச்சான்றிதழ் பெற, மகளுக்கு விசா பெற என்று ஒவ்வொரு காரியத்திற்கும் உண்ணாவிரதம் இருந்தே முருகன் சாதித்திருக்கிறார். ஒரு சில சமயங்களில் உண்ணாவிரதம் 23 நாட்கள் வரை தொடர்ந்திருக்கிறது . முருகன் மொத்தமாக தன்  சிறை வாழ்வில் 365 நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.
13.                மனவளர்ச்சி குன்றிய நளினியின் தாய் மாமா 40 நாட்கள் கழித்து வெளியே தெருவில் எறியப்பட அவர் பிச்சைக் காரன் போல தெருவில் அலைந்து உணவில்லாமல் அனாதைப்பிணமாய் செத்துப்போயிருக்கிறார்.
14.                தங்கை கல்யாணியும் அதேபோல் விரட்டப்பட்டு உறவினர் யாரும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு இறுதியில் இவர் நிலையைப் பார்த்து இரக்கப்பட்டு ஒருவர் திருமணம் செய்திருக்கிறார். ஏனென்றால் அவருடைய வீடு சீல் வைக்கப்பட்டு அவர்களுக்கு திரும்பவும் தரப்படவில்லை.
15.                ஒப்புதல் வாக்குமூலத்தை யார் படித்தாலும் அது முன்னுக்குப்பின் முரணாக எழுதப்பட்டதையும் அது வற்புறுத்தப்பட்டு பெறப்பட்டது என்பதையாரும் அறிந்து கொள்ள முடியும் என்கிறார் நளினி. அதோடு தீர்ப்புகளில் இருக்கும் முரண்களையும், தவறுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக சுட்டிக் காட்டுகிறார்.
16.                சிறையிலும் வெளியிலும் தன் மகள் பட்ட பாட்டை விவரிக்கும் போது மிகவும் பரிதாபமாக இருந்தது. இறுதியில் முருகனின் வெளிநாட்டு உறவினர்கள் தொடர்ந்து எடுத்த முயற்சியில் லண்டனில் மருத்துவர் ஆனது பெரிய சாதனைதான்.
17.                ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா 2008ல் வந்து தன்னைச் சந்தித்த தருணத்தை கதைபோல விவரிக்கிறார். ராஜீவ் கொல்லப்படும் போது பிரியங்காவிற்கு 17 வயது. ஏன் கொன்றீர்கள் என்று கேட்டு தேம்பித்தேம்பி அழுததையும் அவரோடு சேர்ந்து நளினியும் அழுததையும் குறிப்பிடுகிறார்.
18.                தனக்குக் கிடைத்த நேரத்தில் தானும் தன் கணவனும் நிராதிபதிகள் என்பதை நன்கு விளக்கினேன். பிரியங்காவும் அதனை ஏற்றுக் கொண்டார் என்பதையும் எழுதுகிறார்.
19.                ஆனாலும் பிரியங்காவின் விசிட் அரசியலாக்கப் பட்டதையும் அதன் மூலம் ஒரு வேளை இந்திய அரசாங்கம், இலங்கையின் மேல் ஒரு அட்வான்டேஜ் எடுத்ததையும்தான் சந்தேகப்படுவதாக எழுதுகிறார்.
          மேலும் முருகன் எடுத்த வழக்கறிஞர் முகத்தையும், அதன்பின் என்னவெல்லாம் நடந்தது என்பதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

- தொடரும்.