Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, October 18, 2018

ஈரான் தீவிரவாதக்குழுவுடன் போராடிய லண்டன் போலீஸ் !


Six days ver6.jpg
அந்த ஆறு நாட்கள்
பார்த்ததில் பிடித்தது.
Six days
1980ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி ஈரானைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய ஆறு பேர் லண்டனில் உள்ள ஈரானின் எம்பஸியை ஆக்ரமித்து அதிலிருந்த 26 பேரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். சலீம் என்பவரின் தலைமையில் இயங்கிய இந்தக்குழு ஈரானில் அடைபட்டிருக்கும் 91 அரேபிய கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் பிணைக் கைதிகளை ஒவ்வொருவராகக் கொல்வோம் என்று எச்சரித்தான். இந்த உண்மை நிகழ்வின் அடிப்படையில்  எடுக்கப்பட்ட படம்தான் 6 Days.
சீஃப் இன்ஸ்பெக்டர் மேக்ஸ் வெர்னன்  தலைமையில் பக்கத்துக் கட்டிடத்தில் ஒரு குழு இயங்கி சலீமிடம் தொலைபேசியில் பேச்சு வார்த்தையைத் தொடங்கினார்கள். உள்ளே இருந்த பிணைக்கைதிகளோடு அங்கிருந்த தீவிரவாதிகளுக்கும் சேர்த்து உணவினை அனுப்புகிறார் மேக்ஸ். இங்கிலாந்தின் அதிகாரிகளோடு ஒத்துழைக்க மறுத்த ஈரான் அரசாங்கம் திவீரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்மதிக்கவில்லை. இதற்கிடையில் அவர்களுடைய கோரிக்கை BBC -யில் ஒலி பரப்பப்பட வேண்டும் என்றும் ஒரு கோரிக்கையை வைத்தான் சலீம்.
இறுதியாக சலீம் இரண்டு பஸ்களைக் கேட்டு, அவர்களை பத்திரமாக விமானமேற்றி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். இப்படியே நாட்கள் கடந்துபோக சுகமில்லாதிருந்த ஒரு பிணைக்கைதியை விடுதலை செய்தார்கள். ஆனால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கு மேலும் பொறுக்காத அதிரடிப்படை பின்புறமாக உள்ள கட்டிடத்திலிருந்து உள்ளே நுழைந்தார்கள். எப்படிச் சண்டையிட்டார்கள்?  பிணைக் கைதிகள் எல்லோரும் காப்பாற்றப்பட்டனரா? தீவிரவாதிகளுக்கு என்ன ஆயிற்று என்பவற்றை வெள்ளித்திரையில் அல்லது சின்னத்திரையில் காண்க.
Image result for Kate Adie
Kate Adie
இந்த நிகழ்வு முழுவதையும் தொடர்ந்து ஒலிபரப்பிய BBC ரிப்போர்ட்டர் கேட் ஆடி (Kate Adie) இதன்பின் மிகவும் பிரபலமானார்.
இந்தப் படத்தை  பிரிட்டிஷ் - நியூசிலாந்து கூட்டுத் தலைமையில் ஜெனரல் ஃபிலிம் கார்ப்பரேஷன், xyz  ஃபிலிம்ஸ், மற்றும் நியூசிலாந்து   ஃபிலிம் கமிஷன் ஆகிய நிறுவனங்கள்  இணைந்து தயாரித்தன. நியூசிலாந்தில் நவம்பர் 2017ம் இது வெளியிடப்பட்டது. இதற்கு திரைக்கதை அமைத்தவர் கிளன் ஸ்டாண்ட்ரிங் (Glen Standring) இயக்கியவர் டோவா ஃபிரேசர் (Toa Fraser)

Mark Strong (Berlin Film Festival 2011).jpg
Mark Strong
மேக்ஸ் வெர்னன் ஆக மார்க் ஸ்ட்ராங்கும், கேட் ஆடியாக ஆபி கார்னிஷ் -ம் (Abbie Cornish) சலீமாக பென் டர்னரும் ( Ben Turner) நடித்திருக்கிறார்கள்.
இந்த மாதிரி வரலாற்று நிகழ்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து மகிழலாம்.
-முற்றும்.
 

Thursday, June 28, 2018

பகத்சிங்கை கொன்ற காந்தி ?

Image result for the legend of bhagat singh

தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் 
பார்த்ததில் பிடித்தது 
          இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பகத் சிங் ஒரு முக்கிய இடத்தைப்பிடித்தவர். அவருடைய புரட்சி வரலாறு ரத்தத்தில் சூடேற்றி தேசிய உணர்வூட்டும் ஒன்று. அவரின் வரலாற்றைப் படித்திருந்தாலும் தி.லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற  இந்தத் திரைப்படம் அதனை அப்படியே நேரில் பார்ப்பது போல கண்முன்  கொண்டுவந்தது. நெட்ஃபிலிக்சில் காணக்கிடைக்கிறது. நல்ல வசதியான விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர் பகத்திங். அவர் தந்தையின் கூட்டுக் குடும்பத்தில் ஒரு பெரிய பால் பண்ணையும் இருந்தது.
          சின்னவயதில் அவர் கண்முன்னே வெள்ளைக் காரர்களால் நடத்தப்பட்ட அக்கிரமங்கள் அவர் மனதை மிகவும் பாதித்தது. அதன்பின் ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவரால் ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட படுகொலை அவர் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி புரட்சி விதையை விதைத்தது.

          சிறு வயதிலிருந்தே மகாத்மா காந்தியால் கவரப்பட்டிருந்த பகத்சிங்  அவர் அறிவித்த "ஒத்துழையாமை இயக்கத்தில்"  பெரிதும் ஈர்க்கப்பட்டு தீவிரமாக பங்கு கொண்டார். மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்த அந்தப்புரட்சி மகாத்மா காந்தியால் பாதியில் கைவிடப்பட்டதால் பகத்சிங்  மிகவும் நொந்துபோனதோடு அதுவே அவர் காந்தியை விட்டு விலகிச் செல்வதற்கும் வழிவகுத்தது.  
          மனதில் எழுந்த புரட்சித்தீயால் "ஹிந்துஸ்தான் குடியரசு இயக்க”த்தில் உறுப்பினராகச் சேர்ந்து தீவிரமாக செயல் பட ஆரம்பித்தார்.  
          அந்த சமயத்தில் பஞ்சாபின் சிங்கம் “லாலா லஜபதிராவ்” பிரிட்டிஷ் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பகத்சிங்கை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. எனவே பகத்சிங் தன் நண்பர்களான சிவராம், ராஜகுரு, சுக்தேவ் மற்றும் சந்திர சேகர் ஆசாத் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து சான்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.
          பின்னர் போலீசாரிடம் பிடிபட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அங்கிருந்தபடியே புரட்சியை வளர்த்தார். ஆங்கிலேயர் இந்தியருக்கு எதிரான ஒரு சட்டத்தை பார்லிமென்ட் பில்டிங்கில் நிறைவேற்ற முயன்ற போது இந்தியரின் எதிர்ப்பைக் காட்ட, தன் நண்பன் பட்டுகேஸ்வர் தத் என்பவரின் மூலம் குண்டுகளை வீசினார்.     ஆனால் மக்களுக்கும் கூடியிருந்த அதிகாரிகளுக்கும் எந்தச் சேதமும் இல்லாமல் காலியாக இருந்த பெஞ்சுகளை நோக்கியே குண்டுகள் எறியப்பட்டது. அவரும் கைதுசெய்யப்பட்டார்.  இந்த நிகழ்வு பகத்சிங்கை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. குறிப்பாக இளைஞர்கள்  தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பகத்சிங்கை மிகவும் கொண்டாடினார்கள். ஒரு கட்டத்தில் காந்தியின் புகழுக்கு இணையாகப் பேசுமளவுக்கு பகத்சிங்கின் பிரபலம் உயர்ந்தது.
          லாகூர் ஜெயிலில் இருந்தபோதும் சுதந்திர போராட்ட வீரர்களை ஜெயிலில் ஒழுங்காக நடத்த வேண்டும் என்று அவர் தன் நண்பர்களோடு 63 நாட்கள் உண்ணாவிரம் இருந்தார்.      சாண்டர்ஸ் கேசில் பகத், சிவராம் & சுக்தேவ் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
          இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னால் காந்தி நினைத்திருந்தால் இவர்களின் விடுதலையை நிபந்தனையாக வைத்து விடுதலை செய்திருக்கலாம். முழு இந்தியாவும் இதனை எதிர்பார்த்தது. ஆனால் வன்முறையில் ஈடுபட்டவர் தவிர மற்றவர்களை விடுதலை செய்யக்கோரினார் காந்தி. இதற்கு இந்தியா முழுவதும் எதிர் ப்பு கிளம்பியது. பொதுமக்கள் சிறையை உடைத்து உள்ளே புகுந்துவிடுவார்கள் என்ற நிலைமை ஏற்பட்டதால் விதித்த நாளுக்கு முன்னதாகவே மார்ச் 23 1931ல் அதிகாலை நேரத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
Image result for bhagat singh

          நாடே சோகத்தில் மூழ்கியது. “தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை  கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?” என்று பாடிய பாரதியின் பாடல் எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.
          2002ல் வெளிவந்த இந்தப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இசை.
என்று தேசிய திரைப்பட விருது, பிலிம் ஃபேர் விருது, ஜீ சினி விருது போன்ற பல விருதுகளை வென்றது.          பகத்சிங்காக இளவயது அஜய் தேவ்கன் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
இதற்கு அருமையாக இசையமைத்தவர் நம் இசைப்புயல் A.R.ரகுமான் அவர்கள். பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார். அதோடு இதற்கு ஒளிப்பதிவு செய்தவர் தமிழரான K.V.ஆனந்த் அவர்கள். இப்போது பிரபல இயக்குனராகவும் மிளிர்கிறார்.
          இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஆழமாக அறிந்து கொள்ள நினைப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.   
முற்றும்


முக்கிய அறிவிப்பு :
நண்பர்களே டல்லாஸ் , டெக்சாஸ் மாநகரத்தில் நடக்கும் பெட்னா  நிகழ்வில்  ஐயா சுபவீரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடக்கும் கருத்துக்களத்தில் 
பங்கு கொள்கிறேன்  .ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை அங்குதான் இருப்பேன்.அதனால் அடுத்த வாரம் பதிவுகள் எதுவும் வராது மின்னஞ்சல் ( alfred_rajsek@yahoo.com) மற்றும் அலைபேசியில் (212-363-0524)தொடர்பு கொள்ளுங்கள்  சந்திக்கலாம் . 


Image result for fetna convention
Add caption

Thursday, December 21, 2017

வைகோ என்ன செய்யவேண்டும்?

Image result for Vaiko

          வைகோ எனக்கு மிகவும் பிடித்த தலைவர் என்று இருந்து அதன்பின் பிடிக்காத தலைவர்களுள் ஒருவர் என்று ஆகி சில வருடங்கள் ஆகிறது.
          பேச்சுத்திறமை, எழுத்துத்திறமை, தலைமை ஆளுமை, தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் நல்ல புலமை, தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய நாடு ஏன் இலங்கை மலேசியா போன்ற உலகின் சில பகுதிகளிலும் மதிக்கப்பட்ட தலைவர்.
          கலைஞர் கருணாநிதி அவருக்கு பலமுறை MP பதவி கொடுத்து அழகு பார்த்தார். வைகோவுக்கும் கலைஞர் மேல் அதீத பாசம் இருந்தது. ஆனால் ஸ்டாலினுக்கும் இவருக்கும் ஒத்துப்போகவில்லை .ஒரு கட்டத்தில் தன் மகன் ஸ்டாலினுக்கு  மேல் போய்விடுவாரோ என்பதால் சிறிதே ஓரம் கட்டப்பட்டு இறுதியில் ஒதுக்கப்பட்ட வைகோ வெளியே சென்று வேறு கட்சி ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இலங்கை சென்று பிரபாகரைப்பார்த்தது என்ற காரணம் ஒரு சாக்குதான்  .
Image result for Vaiko with karunanidhi

          ஆனால் திமுகவில் இருந்த பலருக்கும் வைகோவின் மேல் பற்று இருந்தாலும்  கருணாநிதியை விட்டுவிட்டு அவரை ஆதரிக்கும் அளவுக்கு இல்லை என்பதால் வைகோ வளர முடியவில்லை.
          தேர்தல்களிலும் தனித்து நிற்குமளவுக்கு பலமில்லை என்பதால் அதிமுக மட்டுமல்ல, வெட்கத்தை விட்டு மனஸ்தாபத்தில் பிரிந்து வந்த திமுக கூடவும் மாறி மாறி கூட்டணி வைக்க வேண்டிய நிலை.
          ஆனாலும் திமுகவை விட அதிமுகவில் அதிக மூக்குடைப்புகள் நடந்தன. அதுவும் போன தேர்தலில் நடந்தது மிக அநியாயம். தோற்கும் பக்கம் நின்று விஜய்காந்தைப் பிடித்துக் கொண்டு வீரவசனம் பேசி அசிங்கப்பட்டதோடு, தான் ஜெயிப்பதல்ல திமுகவை தோற்கடிப்பதே என் இலட்சிய திட்டம் என்று சொல்லி தரம்  தாழ்ந்தார்.
Related image

வைகோ செய்த தவறுகள்:
1.   என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும் தன்னை வளர்த்த தலைவரை அனுசரிக்காமல் வெளியே வந்தது. இவருக்கு இணையான ஒருவர் திமுகவில் இப்போது இல்லை .
2.   தமிழகப் பிரச்சனைகளை அதிகமாக முன்னெடுக்காமல், நீண்ட நெடிய காலமாக இலங்கைப் பிரச்னையையே பேசி தமிழக மக்களிடமிருந்து அந்நியப்பட்டது. வளர்த்து விட்ட தலைவரான கருணாநிதியை பலசமயம் மிகவும் கீழத்தரமாக திட்டியது.
3.   கொள்கைப் பிடிப்பின்றி மாறி மாறி கூட்டணிகள் அமைத்து ஏன் பிஜேபி கூடவும் கூட்டணி சேர்ந்தது.
4.   கூட்டணி சேர்ந்தும் ஜெயிக்க முடியாமல் சட்டசபையில் பங்கெடுக்க முடியாமலே போனது.
5.   தனிப்பட்ட செல்வாக்கால் ஒருமுறை கூட ஜெயிக்க முடியாதது.
6.   உணர்ச்சி வசப்பட்டு எடுத்த கடைசி நேர முடிவுகளால் சுயமரியாதையை இழந்து போனது.
7.   தன் கூட இருந்த இரண்டாம் கட்ட தலைவர்களை வளர்க்க முடியாமல் போனதால் இழந்து போனது.
8.   கடைசி நேர குளறு படிகளால் காசு வாங்கி விட்டார் என்ற கெட்ட பெயரும் வந்தது
         இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

வைகோவின் தற்போதைய நிலை:
1.   தான் கூட்டுச் சேர்ந்த மக்கள் கூட்டணி இப்போது ஒன்றுமில்லாமல் போனது. குறிப்பாக விஜய் காந்தின் கட்சி.
2.   தனித்து நிற்கும் பலம் இப்போது மதிமுக, தேதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட்டு காட்சிகள், பாமகா, சீமான் என்று யாருக்கும் கிடையாது.
3.   ஜெயலலிதாவுக்குப் பின்னைய அதிமுக என்பது அழியும் திராவிட முன்னேற்றக் கழகமாக ஆகிப்போனது.
4.   ஊழலில் ஊறிய, குண்டர்கள் மற்றும் கோமாளிகள் கூட்டமான அதிமுகவுக்கு அவரால் இனி ஆதரவு அளிக்க முடியாது.
5.   சசிகலா, தினகரன், கும்பலிடமும் போகமுடியாது. கொள்கையை விட்டு வெறும் பணத்திற்காக நாஞ்சில் சம்பத் அங்குதான் இருக்கிறார்.
6.   எந்த ஒரு நபருக்காக திமுகவை விட்டு வெளியேறினாரோ அதே நபரான மு.க.ஸ்டாலினிடம் போக வேண்டிய நிலை.
7.   அவருக்குப்பின் கட்சியை வழி நடத்தும் வலிமை யாரிடமுமில்லை.
வைகோ என்ன செய்ய வேண்டும்?:
Image result for Vaiko with stalin

1.   மு.க. ஸ்டாலினிடம் முழுவதாக ஒப்புரவாகி, தன் கட்சியை திரும்பவும் தாய்க் கட்சியான திமுகவுடன் இணைக்க வேண்டும். ஏனென்றால் அவருக்குப் பின் இதுதான் நடக்கும் என்பதால் இப்போதே செய்ய வேண்டியது அவசியம். எம்ஜியாரே இதைச் செய்ய நினைத்தபோது வைகோ ஏன் செய்யக்கூடாது? ஏனென்றால் அவருக்குப்பின் நிச்சயமாக மதிமுக சுவடில்லாமல் அழிந்துவிடும்.
2.   முடிந்தால் அன்பழகனுக்கு ஓய்வு கொடுத்து பொதுச் செயலாளர் பதவியைக் கோரிப் பெறலாம்.
3.   முதலமைச்சர் பதவி ஸ்டாலினுக்குத்தான் என்றும் எக்காலத்திலும் அதற்கு முயற்சி பண்ண மாட்டேன் என்றும் வாக்குக் கொடுத்துவிட வேண்டும். வீண் பிரச்சனைகளை இது தவிர்க்கும்.
4.   மீண்டும் பாராளுமன்றம் புகலாம். இல்லையென்றால் ஏதாவது தமிழ்ப்பணி எடுத்துக் கொண்டு வாக்கு அரசியலிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கிக் கொள்ளலாம்.
5.   திமுகவின் உள்கட்ட பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பித்து அதற்கு துணை வேந்தர் ஆகலாம்.
6.  உலகமெங்கும் சுற்றி தமிழ்ப்பணி செய்யலாம், இதற்கு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டியது அவசியம். இல்லையென்றால் அவரது திறமைகளும் உழைப்பும் யாருக்கும் பயன்படாமலே போய்விடும்.
Merry Christmas SMS in Tamil



 நன்பர்கள்  அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.இறைமகன் இயேசு உங்களுக்கு மகிழ்ச்சியையும் நிறைவான மன அமைதியையும் தருவாராக.

Thursday, September 28, 2017

கமல்ஹாசன் அரசியலுக்கு வரலாமா?


கமல்ஹாசனுக்கு அரசியலுக்கு வர உள்ள தகுதிகள்.

Image result for kamal haasan

1.   அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா போலவே திரைத்துறையைச் சேர்ந்தவர். (இது மிக முக்கியம் !)
2.   எம்ஜியார், ஜெயலலிதா வரிசையில் இன்னுமொரு நடிகர். 229க்கும் மேல் படங்கள் நடித்தவர்.
3.   ஜெயலலிதா மறைவுக்குப்பின் முதலமைச்சர் ஆசையில் இருக்கும் ஆயிரத்தில் ஒருவர்.
4.   காமராசர், கருணாநிதி, எம்ஜியார், வரிசையில் பள்ளிப்படிப்பு கூட முடிக்காதவர் .
5.   கருணாநிதி, எம்ஜியார் போலவே பல திருமணங்கள் செய்தவர்.
6.   கருணாநிதி, எம்ஜியார் போலவே நாத்திகர்.
7.   எம்ஜியார், ஜெயலலிதா போல சிவப்பு நிறமாக இருப்பது.
8.    எம்ஜியார், ஜெயலலிதா போல ரசிகர் மன்றங்களை  கட்டுக்கோப்பாக நடத்தி வருவது.
9.   ஜெயலலிதா போல கொள்கை என்று ஒன்று இல்லாமல் இருப்பது.
10.                காதல் இளவரசன் , உலக நாயகன் போன்ற பட்டங்கள் பெற்றவர் (அதென்னங்க உலக நாயகன் ?)
11.                முத்தக் காட்சிகள் உட்பட எதையும் வெளிப்படையாகச் செய்பவர்.
12.                ரஜியினின் நீண்டநாள் நண்பர் (இது ஒரு நல்ல தகுதி!)
13.                ஆண் வாரிசு இல்லாதவர். (இது மிக மிக அவசியம்)
14.                இத்தனை சினிமாவில் கிடைக்காது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்திருக்கும் மக்களுடன் உள்ள நெருக்கம்.
15.                சமூக எதிர்பார்ப்புகளுக்கோ, கட்டுக்கோப்புகளுக்கோ, சம்பிரதாயங்களுக்கோ அடங்காதவர்.

Image result for kamal haasan


கமல்ஹாசனுக்கு அரசியலுக்கு வர தடையாக இருக்கும் தகுதிகள்:
1.   தமிழை நன்றாக உச்சரித்துப் பேசுவது.
2.   நேர்மையாக நடக்க முயல்வது.
3.   எதையும் வெளிப்படையாகப் பேசுவது.
4.   உள்ளூர்க்காரர் மற்றும் பச்சைத் தமிழன்.
5.   மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர். (என்றுதான் நினைக்கிறேன்)
6.   திராவிட இயக்க ஈடுபாடு உள்ளபவர்.
7.   எல்லா மதத்தினரையும் சகோதரராய் நினைப்பது.
8.   ரஜினியின் நண்பராய் இருப்பது.
9.   தன்மானத் தமிழனாய் இருப்பது.
10.                சாதி சார்ந்த இயங்காத தன்மை.
11.                பிராமண குலத்தில் பிறந்தும் அப்படி கொஞ்சம் கூட காட்டிக் கொள்ளாத தன்மை.
12.                கம்யூனிஸ்ட்களிடம் இருக்கும் நெருக்கம்.
13.                நல்ல ஆரோக்கியமான உடல் நலம்.
14.                பெரிதாக குடும்பச்சிக்கல் இல்லாமல் இன்னும் சிங்கிளாகவே இருப்பது.
15.                பெரிதாக எந்தக் குற்றச் சாட்டும் இல்லாதவர்.
16.                மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசை.

வெளியே பார்ப்பதற்கு இதெல்லாம் இப்படியாக தெரிந்தாலும் , ஏதாவது உள்குத்து ( Hidden Agenda) இருக்குமோ என்ற சந்தேகமும் அவ்வப்போது தோன்றுகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.

Image result for kamal haasan
Add caption


Thursday, August 31, 2017

ஜெயலலிதாவின் சோக முடிவு !!!!!!!!!!!

Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
படித்ததில் பிடித்தது
மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
மு.நியாஸ் அகமது - விகடன் பிரசுரம்.

ஜெயலலிதா என்ற மாபெரும் ஆளுமை மறைந்தபின் அ.தி.மு.க பல அணிகளாக உடைந்து பிரிந்து, சரிந்து காணப்படுகிறது. இப்படி இருப்பதற்கும் அவரே காரணம்.
எம்ஜியார் என்ற ஒற்றை ஆளுமை, கருணாநிதி என்ற பெரும் சக்தியை எதிர்த்து வெளியே வந்து அதிமுக கட்சியை கட்டமைத்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக இருந்தது எம்ஜியாரின் ரசிகர்கள் என்ற பெரும் தொண்டர் பலத்தால்தான். நெடுஞ்செழியன், ஆர் எம் வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் இருந்தாலும் கட்சியின் வாரிசு என்று ஒருவரை சுட்டிக் காட்டாமலேயே எம்ஜியார் மறைந்தார். அதே தவறைத்தான் ஜெயலலிதாவும் செய்திருக்கிறார். எம்ஜியாருக்குப்பின் கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல ஜெயலலிதா இருந்தார். ஆனால் அதிமுகவில் ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் முதலில் செய்தது எம்.ஜியார் காலத்து இரண்டாம் கட்டத் தலைவர்களை ஒழித்துக் கட்டியதுதான். அதே சமயத்தில் அடுத்த தலைவராக ஜெயலலிதா கைகாட்டும்  அளவுக்கு அதிமுகவில் யாரும் இல்லை என்பதும் உண்மை. இரண்டாம் கட்டம் மட்டுமில்லாமல் மூன்றாம் நான்காம் நிலைத்தலைவர்களும் இல்லை.
Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
Jaya with his brother with their mother Sandhya
பெரியார், அண்ணாவின் திராவிட சமத்துவ கொள்கைகள் எம்ஜியார் இருக்கும்போது பெருமளவிற்கு பின்பற்றப்பட்டது கூட ஜெயலலிதா காலத்தில் முற்றிலுமாக கைவிடப்பட்டது. கொள்கைப்பிடிப்பு எதுவுமில்லாத சுயநலமிக்க ஒரு பெருங் கூட்டமாகவே அதிமுகவின் கூடாரம் காணப்பட்டது. தன் தனிப்பட்ட ஆளுமையின் மூலம் எம்ஜியாரின் தொண்டர்களையும்,  ஒரு பெண் என்பதால் தாய்மார்களையும் கவர்ந்த ஜெயலலிதா ஒரு தனிப்பெரும் சர்வாதிகாரியாக இருந்தார். ஆனால் மக்கள் அவர் மீது வைத்திருந்த பாசத்திற்கும் நேசத்திற்கும் ஜெயலலிதா மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர் நினைத்திருந்தால் தமிழ்நாட்டை தன்னிகரற்ற நாடாக ஆகியிருக்க முடியும். எதுவும் செய்யாமல் பெரும்பாலும் வீட்டில் முடங்கி, சசிகலாவின் கூடாரத்திற்கு நாட்டையும் கட்சியினையும் தாரை வார்த்துக் கொடுத்து மாபெரும் அழிவைத் தேடிக்கொண்டார்.
Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
Jaya in her young age
இருந்தாலும் அவர் இறந்தது கட்சி வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. தமிழ்நாடே கலங்கிப் போய் இலட்சக் கணக்கான மக்கள் தலை நகரில் குவிந்து தங்கள் இறுதி மரியாதையினைச் செலுத்தினர். அதன் பின்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர்.
இந்தத் தொடர் விகடனில் வெளிவந்த போது படிக்க ஆரம்பித்தேன். தொடர் முடிவதற்குள் அவரே மடிந்து போனது ஒரு அசம்பாவிதம். அவர் இறப்பைச் சுற்றி உள்ள மர்மம் இன்னும்விடுபடாத சூழ்நிலையிலும், அவருடைய கட்சியினர் பல துண்டுகளாய்ப் பிரிந்து ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தப் புத்தகம் ஜெயலலிதாவின் ஆரம்பத்தையும், வளர்ச்சியினையும், முடிவையும் தெரிவிக்கும் ஆவணமாக இருக்கிறது. தமிழக அரசியலில் நீண்ட காலம் கொடியுயர்த்தி இந்த ஆளுமை ஆரம்பத்தில் இருந்த நிலைமைக்கு முற்றிலும் மாறாக எப்படி எல்லாம் மாறிப்போனார்  என்பதை படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
Jaya with MGR
1.   ஜெயாவின் பூர்வீகம் ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்து இடம்  பெயர்ந்து மைசூருக்கும், அவரின் தந்தை ஜெயராமன் இறந்த போது பெங்களூருக்கும் அதன் பின் சென்னைக்கும் வந்து குடியேறியது. இவர்களின் தாய்மொழி தமிழ் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
2.   ஜெயாவின் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் ஆலோசகராய் இருந்தவர்.
3.   ஜெயாவின் அம்மா சந்தியா, அவருடைய அப்பா ஜெயராமுக்கு இரண்டாம் மனைவி.
4.   ஜெயா சர்ச் பார்க்கில் தன் வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். அதோடு நடனப் பயிற்சியும் பெற்றார்.
5.   அம்மா சந்தியா இரவும் பகலும் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் அம்மாவின் பாசத்திற்கும் அரவணைப்பிற்கும் அதிகமாக ஏங்கினார்.
6.   அம்மா நடிகை என்பதால் பள்ளியில் பல கிண்டல்களுக்கும் பழிச்சொற்களுக்கும் ஆளாகினார். எனவே எப்பொழுதும் தனிமையையே நாடினார். நண்பர்கள் யாருமில்லை. கிடைத்த ஒரே தோழியிடம் துரோகம்தான் கிடைத்தது என்பதால் கசப்புணர்ச்சியுடனே வளர்ந்தார்.  ( தோழிஎன்றாலே  இவருக்கு துரோகம்தான் போலும் பாவம்)
7.   ஜெயாவின் நடன அரங்கேற்றத்திற்கும் தலைமை தங்கவந்த சிவாஜி கணேசன் பெரிய நடிகையாவாள் என்று ஆருடம் கூறியிருக்கிறார்.
8.   ஒருமுறை படப்பிடிப்பில் தாயோடு போயிருக்கும் போது எம்ஜியார் பார்த்து சிலாகித்தார்.
9.   ஜெயாவின் ஆசை ஒரு மருத்துவர் அல்லது டாக்டர் ஆக வேண்டும் என்பது. நடிகையாக இருக்கும் போது அளித்த ஒரு பேட்டியில் நடிகையாக ஆகியிருக்கவிட்டால் அரசியலுக்கு வந்திருப்பேன் என்கிறார், அதுபோலவே ஆனது.
10.                Y.G. பார்த்தசாரதி இயக்கிய ஒரு ஆங்கில நாடகத்தில் பிரெஞ்சு நாட்டுப் பெண்ணாக நடித்ததுதான் ஜெயாவின் முதல் நடிப்பு அனுபவம் இந்த நாடகத்தில் வில்லனாக நடித்தவர் சோ.அப்போதிருந்தே அவர்களுக்குள் நெருக்கம் ஆரம்பித்தது.
11.                ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரியின் மகன், சங்கர் கிரி எடுத்த ஒரு ஆங்கில ஆவணப்படத்தில் நடித்ததுதான் முதல் திரை அனுபவம்.
12.                "இந்த உலகத்தின் கடினமான வேலை எனக்குப் பணிக்கப்பட்டாலும் நான் அதற்கு என்னைத் தயார் செய்து கொள்வேன்" என்பது ஜெயா ஒரு பேட்டியில் சொன்னது.
13.                கர்ணன் வெற்றிவிழாவில் ஜெயாவைப் பார்த்த BR பந்துலு "சின்னப கோம்பே" என்ற படத்தில் அவரை நடிக்க வைத்தார். மிகுந்த தயக்கத்திற்குப்பின் இப்படத்தில் நடித்தார். ஆனால் அதற்கு முன்னால் “நன்ன கர்த்தவ்யா” வெளிவந்தது.
14.                டைரக்டர் ஸ்ரீதர் வெண்ணிற ஆடையில் கொடுத்த வாய்ப்பின் மூலம் ஜெ திரையுலகில் ஒரு இடம் பிடித்தார். பிறகு ஸ்ரீதருக்கும் அவருக்கும் பிரச்சனை வந்தது.
15.                பள்ளிப்படிப்பு முடிந்து ஸ்டெல்லா மாரீஸில் சேர்ந்த போது ஆசிரியை "பொம்மை மாதிரி உடை உடுத்தினால் போதுமா?" என்று கேட்டதால் நடிப்பையும் படிப்பையும் ஒன்று சேர செய்யமுடியாதென்று எண்ணி படிப்பைக் கை கழுவினார்.
16.                23 வயதில் சந்தியா இறந்தபின் எம்ஜியாரின் கண்காணிப்பும் பாதுகாப்பும் கிடைத்தது.
17.                எம்ஜியாரின் தீவிர ரசிகையாக இருந்த ஜெயா, அவருக்கே நாயகியானதோடு அவருடைய கட்சியிலும் அடுத்த தலைமையைப் பிடித்தது ஆச்சரியம்தான். ஆனால் அவருடன் அவர் ஒத்துப்போக முடியவில்லை. அவருக்கு எதிராகக் திரைமறைவில் களமிறங்கினார்.
18.                நடிகையாக இருக்கும்போது ஊடகங்களோடு மிகுந்த நட்பில் இருந்தவர் பதவிக்கு வந்ததும் அவர்களைப் பகைத்து 2000 கேஸ்களைப் போட்டார்.
19.                மிகவும் தாராள மனப்பான்மை உள்ள அவர் பிற்காலத்தில் வெற்று  மரியாதை, காலில் விழுவதை ரசிப்பது என பிற்போக்காக நடக்க ஆரம்பித்தார்.
20.                அவருடைய மொழி ஆளுமை, தமிழ் தவிர, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என வியக்க வைக்கும் ஒன்று.
21.                இந்திரா காந்தி அவருக்கு மிகவும் பிடித்த தலைவர்.
22.                இறுதியில் நட்புக்காக மானம் மரியாதை இழந்து சிறை சென்று அழிந்து போனது பெருந்துயரம்.

முற்றும்