Showing posts with label இலங்கையில் பரதேசி. Show all posts
Showing posts with label இலங்கையில் பரதேசி. Show all posts

Tuesday, January 2, 2018

இலங்கையில் தாய்லாந்து மசாஜ்!

இலங்கையில்  பரதேசி -32
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post_18.html
Image result for colombo galle face beach
Galle Face 

          “அம்ரி அடுத்து எங்கே?”
          “சார் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம், கால் (Galle)பகுதி மட்டும் பாக்கியிருக்கிறது”.
          “சரி போவோம், ஆனால் எங்கே போவதென்றாலும் சாப்பிட்டு விட்டுச் செல்வோம்”.
          “சரி சார் ஷண்முகாஸ் போவோமா? அங்கு மதியம் நல்ல தாலி (எந்த லி, ளி,ழி என்று தெரிய வில்லை) மீல்ஸ் கிடைக்கும்”.
          ஒரு பாயே சைவ உணவைச் சொல்லுகிறான் நானும் சைவப் பிரியன் என்பதால் பலமாகத்தலையாட்டினேன்.
          ஷண்முகாஸ் தாலி மீல்சில் எனக்குப் பிடித்த வெண்டைக்காய் பொறியல், அவரைக்காய் சாம்பார், புடலங்காய் கூட்டு போன்ற காய்கறிகளுடன் மெலிதான சப்பாத்தி, வத்தல் குழம்பு, ரசம் மற்றும் வடை பாயாசம் என்று நல்ல சைவ விருந்து உண்டு களித்து வெளியே வந்தோம். கால் (Galle) பகுதிக்கு வந்து சேர்ந்தோம். காலே கோட்டையும் ஊரும் இருக்குமிடம் வேறு. இது கொழும்பின் மையப்பகுதியில் இருக்கிறது “கால் ஃபேஸ் கிரீன்” என்று இதற்குப் பெயர். 
          கொழும்பின் அழகிய கடற்கரை யொட்டி அமைந்துள்ள பார்க் இது. மெரினா கடற்கரையை ஒட்டி  இருப்பதைப் போலவே இருக்கிறது. கடல் இன்னும் நீளமாக, கடற்கரை இன்னும் சுத்தமாக, பார்க் இன்னும் பச்சையாக இருப்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
          5 ஹெக்டர் அளவில் இந்த பார்க் அமைந்துள்ளதாம். அதாவது சுமார் 1/2 கி.மீ நீளத்திற்கு இந்த பார்க் அமைந்துள்ளது. இது கொழும்பின் ஃபைனான்சியல் டிஸ்ட்ரிக்ட் இருக்கும் முக்கியப் பகுதியில் இருப்பதால் இன்னும் சிறப்புப் பெறுகிறது. 1856ல் இலங்கையின் கவர்னர் சர் ஹென்ரி ஜார்ஜ் வார்டு என்பவர்தான் இதனை அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். 1859ல் இது கட்டி முடிக்கப்பட்டது. அப்போது இதைவிட நீளமாக  இருந்ததாம். ஆரம்பத்தில் இங்கு குதிரைப் பந்தயம், கால்ஃப், கிரிக்கெட், போலோ, கால்பந்து, டென்னிஸ், ரக்பி போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்பட்டன.
          இந்தப் பகுதியில்தான் போர்த்துக்கீசியரை முறியடிக்கவும், உள்ளே நுழைய விடாமல் செய்யவும் டச்சு பீரங்கிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனவாம்.
          கிரிக்கெட் ஸ்டேடியம் இருந்த  இடத்தில் இப்போது "தாஜ் சமுத்திரா" என்ற
 ஐந்து நட்சத்திர விடுதி இருக்கிறது. குதிரைப்பந்தயம் இருந்த இடத்தில் இருந்த பங்களா தாஜ் ஹோட்டலின் பால் ரூமாக (Ball Room) இருக்கிறது.
Image result for taj samudra colombo
Taj Samudra 
          கால் சாலையிலிருந்து இந்தப் பெருங்கடலுக்கு இடைப்பட்ட இந்த இடம்தான் கொழும்பிலேயே இருக்கும் பெரிய வெட்டவெளி. நமது மெரினா போலவே இங்கு மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் கூட்டம் அள்ளுமாம். சிறு கடைகளும் ஆங்காங்கு முளைக்குமாம்.
          “அப்ப தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் கிடைக்குமா?” என்று நினைத்துக் கொண்டேன். 
          “சார் அதெல்லாம் கிடைக்காது”, என்றான் அம்ரி. என்னது இது, என் மைண்ட் வாய்ஸ் வெளியே சத்தமாகக் கெட்டுவிட்டது போல் தெரிகிறது.
சாலையின் மறுபகுதியில் நிறைய விடுதிகள் இருந்தன.
          “சார் மசாஜ் போறீங்களா?”
 “என்ன மஜா? என்ன மசாஜ்?”
“தாய் மசாஜ் சார்”
“தாய் மசாஜ் டெக்னிக் போல இங்கு இருப்பவர்கள் பண்ணுவார்களா?”.
          “இல்லை சார் தாய்லாந்து பெண்களே இங்கு இருக்கிறார்கள் அங்கிருந்து இங்கு வந்து சிலகாலம் தங்கி வேலை செய்துவிட்டு திரும்பிவிடுவார்கள்”.
          “அப்படியா?”
 “ஆமா சார், உள்ளூர் மசாஜ் 1500 ரூபாய். தாய் மசாஜ் 2500 ரூபாய்”.
          “அம்ரி தாய்நாடு போகும்போது தாய் மசாஜ் என்ற விபரீத ஆசை வேண்டாம் விட்டுவிடு”.
கொழும்பு போகிறவர்களுக்கு இது நல்ல செய்தியா அல்லது கெட்ட செய்தியா என்று தெரியவில்லை.
Image result for Galle face hotel
Galle Face  Hotel in 1890 
          கால் ஃபேஸ் கிரீனின் இருபுறமும் இரு பெரிய பழைய ஹோட்டல்கள் இருக்கின்றன.  ஒன்று சிலோன் இன்ட்டர் கான்டினென்டல் ஹோட்டல். இன்னொன்று கால் ஃபேஸ் ஹோட்டல். இதில் இரண்டாவது மிகப்பழையது.
          இந்தப்பகுதியிலிருந்துதான் சிலோன் ரேடியோவும் ஒலி பரப்பப்பட்டு இருந்ததாம். K.S. ராஜா, அப்துல் ஹமீது ஆகியோரெல்லாம் ஞாபகம் வந்தது.
Image result for Galle face hotel
Galle Face Hotel today
          அங்கிருந்து கால்ஃபேஸ் ஹோட்டலுக்குப் போனோம். இது மிகப்பழமையான முக்கியமான ஹோட்டல். அதோடு உலகில் சாகும் முன் பார்க்க வேண்டிய ஆயிரம் இடங்கள் என்ற லிஸ்ட்டில் உள்ள ஒன்று என்பதால்  ஆவலைத்தூண்டியது. பல விருதுகளைப்   பெற்ற இது செலக்ட் ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் இன்ட்டர் நேஷனல் குரூப்பில் ஒரு மெம்பர் ஆகும். இதன் சேர்மன் சிரில் கார்டினர் 1997ல் இறந்தபின் இதன் தற்போதைய சேர்மனாக இருப்பவர் அவர் மகன் சஞ்சீவ் கார்டினர். இலங்கை அரசு ஸ்டாம்ப் வெளியிட்டு பெருமைப்படுத்திய முதல் ஹோட்டலும் இதுதான்.
          இது1864ல் பிரிட்டிஸ்காரர்களால் கட்டப்பட்டது. 1894ல் ஆர்க்கிடெக்ட் தாமஸ் ஸ்கின்னரால் தற்போதைய கட்டிடம் முடிக்கப்பட்டது. பிரிட்டிஸ் கலோனியல் ஸ்டைலில் கட்டப்பட்டது.
          இங்கு பல தலைவர்களும் பிரபலமானவர்களும் தங்கியிருந்திருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவர், நம் பாரதப்பிதா மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ஜான்.டி.ராக்கேஃபெல்லர், டென்மார்க் இளவரசி அலெக்சான்ரா  இளவரசர் பிலிப், ஜப்பானிய மன்னர்  ஹிரோஹிட்டோ, அமெரிக்க அதிபர் நிக்சன், மெளன்ட்பேட்டன்  பிரபு, எனப்பெரிய தலைகள் பலரும் இங்கு தங்கியிருக்கின்றனர். பார்க்க வேண்டிய இடம்தான். ஒரு நாளாவது தங்கியிருந்தால் இந்த பிரபலங்களின் வரிசையில் இணைந்திருக்கலாம். என்ன செய்வது இன்று மாலை எனக்கு சென்னைக்கு ஃபிளைட்.
          அம்ரி சொன்னான், “சார் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுத்தான் போக வேண்டும்”. நேரமிருந்ததால் தட்டாமல் அவன் வீட்டுக்குச் சென்றேன். அவனுக்கு இரு ஆண் குழந்தைகள். சின்னவன் படு சுட்டி. நான் வாங்கிக் கொடுத்த சிறிய நீச்சல் குள டப்பில் நீரில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அந்த  வீட்டுக்குப் போனது எனது சொந்த ஊரில் உள்ள முஸ்லீம் உறவினர் வீட்டுக்குப் போன உணர்வையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
          அங்கிருந்து ரூமுக்குப் போய், பெட்டிகளை எடுத்துக் கொண்டு நேராக கொழும்பு ஏர்ப்போர்ட் சென்றோம். அங்கே அம்ரிக்கு நன்றி சொல்லி விடைபெற்று ஸ்ரீலங்கன் ஸ்ரிலங்கன் ஏர்வேய்சில்  பயணம், கிட்டத்தட்ட என்னைத்தவிர மற்ற அனைவரும் ஐயப்ப பக்தர்கள். இருமுடி தாங்கி, காவியணிந்து தாடி வளர்த்து, காலணிகள் இல்லாமல் பயணம் செய்தனர். K. வீரமணியின் “இருமுடிதாங்கி ஒரு மனதாகி, குருவெனவே வந்தோம்”  என்ற பாடல் மனதில் ஒலிக்க, விமானம் மேலேறிப் பறந்தது.

Image result for srilankan airlines
- முற்றும்.



 Image result for ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் 2018


பின் குறிப்பு : அடுத்த வாரம் முதல் "வேர்களைத்தேடி" என்ற புதிய தொடர் ஆரம்பிக்கிறது .இது நான் வளர்ந்த ஊருக்கு சென்று வந்த மலரும் நினைவுகள்.இதற்கும் உங்களின் ஆதரவைக்கோரி  நிற்கிறேன்.
அன்புள்ள
பரதேசி




Monday, December 18, 2017

இந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை !!!!!!!


இலங்கையில் பரதேசி -31

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post_12.html

Fried Ice cream shop in Colombo

            இருக்கும் சுகரை நினைத்து என் ஃபிகர் உதறினாலும், அதனால் டிஸ்ஃபிகர் ஆனால் அதனைப் பின்னால் கான்ஃபிகர் பண்ணிக்கொள்ளலாம் என்றெண்ணிக் கொண்டு "சரி சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்றேன்.
கொழும்பின் மறுபுறம் போனோம் இங்கு அதிகமாக தமிழ் முஸ்லிம்கள் வாழ்வதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு முன்னால் காரை நிறுத்தினான் பொறித்த ஐஸ்கிரீம் என்றால் சூடாக இருக்குமே என்று நினைத்த எனக்கு அதெப்படி ஐஸ்கிரீம் சூடாக இருக்க முடியும் என்று வியப்பாக இருந்தது.

உள்ளே போய், “அம்ரி முழுதாக என்னால் சாப்பிடமுடியாது. அப்படியே சாப்பிட்டால் உன்பாடு திண்டாட்டமாகி விடும் எனவே "நீ பாதி நான் பாதி கண்ணே” என்று பாடினேன். அம்ரி கலவராகி என்ன சார் என்றான். “இல்லப்பா பாட்டு அதிரடியா வந்துருச்சு”, என்று ஜகா வாங்க, அம்ரி ஆர்டர் செய்தான்.
அதன் ஓனரும் தமிழ் முஸ்லீம்தான் பல தலைமுறைகளாக அங்கிருப்பதாகச் சொன்னார். கொஞ்ச நேரத்தில் ஆவி பறக்க (?) ஐஸ்கிரீம் வந்தது. வெளியே சிறிதே சூடாக ஆனால் உள்ளே கூலாக மிகவும் வித்தியாசமாகவும் கிரிஸ்ப்பாக மொறுமொறுவென்று இருந்தது. சுவையாகவே இருந்தது. கொழும்பு சென்றால் நீங்களும் சாப்பிட்டுப் பாருங்கள்.
“சார் டின்னருக்கு எங்கே போகலாம்?”
"இல்லப்பா ஐஸ்கிரீமே போதும். ரூமில் கொஞ்சம் பழங்கள் இருகின்றன".
ரூமில் போய் இறங்கும் போது இரவு மணி 10. அன்று பார்த்த அனைத்தையும் அலசிக் கொண்டே அப்படியே உறங்கிப் போனேன்.
அடுத்த நாள்தான் சுற்றிப்பார்க்கும் கடைசி நாள் என்பதால் காலையிலேயே ரெடியாகி உட்கார அம்ரி வந்தான். நல்ல பையன் கிடைத்தான் எனக்கு.
“அம்ரி கடைசி நாள் என்பதால் எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும்”
 “சரி சார் வாங்க போகலாம்?”
“முதலில் எங்கே?
மியூசியத்துக்குப் போகனும்னு சொல்லிங்கல்ல, முதலில் அங்கே போவோம்.”
“வெரிகுட், அதன் பெயர் என்ன?”
"நேஷனல் மியூசியம் ஆஃப் கொழும்பு" .
பேசிக் கொண்டே மியூசியமும் வந்து சேர்ந்தது. பார்ப்பதற்கு ஏதோ ஒரு ஐரோப்பிய அரண்மனை போல் தோற்றம் தந்தது. அதனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு உள்ளே போகலாம் என்று நினைக்கிறேன்.
Image result for national museum of colombo
National Museum 
புல்லட் பாயிண்ட்களில் சுருக்கமாகத் தந்து விடுகிறேன். என்ன மக்கா?
1.   கொழும்பில் உள்ள இரண்டு மியூசியங்களில் இது மிகவும் பெரிது. கொழும்பில் மட்டுமல்ல, இலங்கையிலேயே மிகப்பெரிய மியூசியமும் இதுதான்.
2.   இலங்கையில் மத்திய அரசின் தேசிய மியூசியங்களின் துறையால் (Department of National Museum of Central Government) இது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
3.   சர். வில்லியம் ஹென்ரி கிரிகரி என்பவர் இலங்கையின் பிரிட்டிஷ் கவர்னராக இருந்தபோது, ஜனவரி 2ஆம் தேதி 1877-ஆம் வருடத்தில் இது நிறுவப்பட்டது.
4.   இத்தாலிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தின் ஆர்க்கிடெக்ட் J.G.ஸ்மிதர் என்பவர்.
Related image

5.   1872ல் கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டு 1876ல் கட்டிமுடிக்கப்பட்டது.
6.   இதன் கட்டிடப்பணியை மேற்கொண்டவர் அரசி மரிக்கார் வாப்ச்சி மரிக்கார் என்பவர். இவர்கள் குடும்பம் 9ஆம் நூற்ராண்டில் இடம் பெயர்ந்த ஷேக்  ஃபரீத் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தான் கொழும்பிலுள்ள மிகவும் முக்கியமான   கட்டிடங்களான ஜெனரல் போஸ்ட் ஆபிஸ், கொழும்பு கஸ்டம்ஸ், பழைய டவுன் ஹால், காலே ஃபேஸ் ஹோட்டல், விக்டோரியா ஆர்க்கேட், கிளாக் டவர், போன்ற இன்னும் இருக்கும் பல கட்டிடங்களைக் கட்டியவர்.
Related image
Crown of Kandy king
7.   இது தேசிய மியூசியம் ஆனபிறகுதான் இதன் கிளை மியூசியங்களாக யாழ்ப்பாணம், கண்டி,ரத்னபுரி ஆகிய இடங்களில் (1942ல்) ஆரம்பிக்கப்பட்டன. அதன்பிறகு ஒன்பது புதிய கிளைகளும் திறக்கப்பட்டதோடு ஒரு மொபைல் மியூசியமும் உருவாக்கப்பட்டது.
Kandy Kings throne
8.   1885ல் உருவாக்கப்பட்ட ஒரு அரிய நூலகமும் இங்கு இருக்கிறது. 1 கோடியே 20 லட்சம் புத்தகங்கள் பல தலைப்புகளில் இங்கு இருக்கின்றன.
9.   இங்கு பல ஓலைச்சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை சிங்கள, பாலி, சமஸ்கிருதம், பர்மா, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் அமைந்தவை. இவை புத்தமதம், சிங்கள இலக்கியம், வரலாறு, மருத்துவம், ஜோதிடம், கால்நடை மருத்துவம், வரைவுக்கலை, கட்டிடக்கலை போன்றவையும் அடங்கும்.
உள்ளே இருந்தவற்றுடன் என்னைப் பெரிதும் கவர்ந்தவை கண்டி அரசர்களின் சிம்மாசனம் மற்றும் கண்டி அரச குடும்பங்கள் பயன்படுத்திய தங்க, வைர, முத்து ரத்தின ஆபரணங்கள்.
இவைகளைக் கவர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் லண்டன் கொண்டு சென்று அங்கே அரச வமிசத்தினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் இலங்கை அரசு இதனைக் கேட்டுப் பெற்று இந்த மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள்.
பாருங்கள் சுண்டைக்காய் நாடான இலங்கை, இங்கிலாந்துடன் பேசி இவற்றை வாங்கியுள்ளது. நாமும் தான் இருக்கிறோம். நம்முடைய விலைமதிப்பற்ற கோஹிநூர்  வைரம் இன்னும் பிரிட்டிஷ் வசம் இருப்பது வெட்கக்கேடு. இந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை. அது தவிர மாலத்திவிலிருந்து கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புத்தர் சிலை மற்றும் ஒரு பட்டத்து யானையின் எலும்புக் கூடும் அப்படியே இருந்தது. கொழும்பு செல்லும் மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய மியூசியம் இது.
-தொடரும்.
 பின் குறிப்பு : அடுத்த வாரம் "இலங்கையில் பரதேசி முடியும்"..அதன்பின் "வேர்களைத்தேடி" என்ற புதிய தொடர் ஆரம்பிக்கிறது .இது நான் வளர்ந்த ஊருக்கு சென்று வந்த மலரும் நினைவுகள்.இதற்கும் உங்களின் ஆதரவைக்கோரி  நிற்கிறேன்.
அன்புள்ள

பரதேசி

Tuesday, December 12, 2017

கடற்கன்னியும் வண்ண மீன்களும் !!!!!!!!!!!

இலங்கையில் பரதேசி -30


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post.html

கீழே வந்தது என்னவென்று பார்ப்பதற்கு முன் இந்த பவளப்பாறைகள், பாசிகளைப்பற்றி சிறிது பார்க்கலாம். இலங்கையின் பெரும்பாலான கடற்கரைகளில் இந்த அதிசயப் பவளப்பாறைகள் பாசிகள் இருக்கின்றன. காலே கடற்கரை அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. கிட்டத்தட்ட 180 வகைகள் இருக்கின்றனவாம்.நான் எங்கு சென்றாலும் அதன் சிறப்பு கூடுகிறது(?). இந்த ஆழ்கடலில் வீழ் உடலாக உள்ளே சென்றால் அவற்றை அருகில் பார்க்கலாம்.
“சார் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள், மெலிதான உடல் உள்ள உங்களைப் போன்றவர்களுக்கு நீச்சல்  செய்வது மிகவும் ஈஸி. நீச்சல் உங்களுக்குப் புத்துணர்ச்சி  ஆரோக்கியத்தைக் கூட்டும். அதுதவிர உங்கள் மூளை அதிவிரைவில் சிந்திக்கவும் தூண்டும்”.
“அம்ரி நீச்சலைக் குறித்த உன் விரிவுரை நன்றாக  இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அது எனக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. அதோடு தண்ணீரில் எனக்கு முண்டம் சாரி தண்டம் சாரி சாரி கண்டம் இருக்கிறது. பார்த்தாயா கண்டம் இருக்கிறது என்று சொல்வதற்கே எவ்வளவு தடுமாறுகிறது பார்”.
“என்ன கண்டம் சார்?”
“அதாவது எனக்கு சனி உச்சியில் இருக்கும்போது உக்கிரதிசை வழியில் செல்லும்போது, சுக்கில பட்சத்தில்  ராகுவும் கேதுவும் உறவாடும்போது நீரில் கண்டம் என்று குருஜி சொல்லியிருக்கிறார்”.   அம்ரிக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாதலால் கொஞ்சம் அள்ளிவிட்டேன்.
“யார் சார் அந்த குருஜி?”.
"அவரா அவர் பெயர் ஸ்ரீலஸ்ரீ மகா உபாத்யாய குருபீட குருப்பிரம்ம, குரு  விஷ்ணு குருதேவோ குருஆச்சாரிய".
“சரி பரவாயில்லை சார் விடுங்க. ஏதோ  இளையராஜா பாட்டில வர மாறி இருக்கு .
“ஏன் மீன் சாப்பிடமாட்டீங்கறீங்கன்னு கேட்டியே இதுதான் காரணம். கடல் பண்டம் எதுவும் சாப்பிடக் கூடாது. கடல் பண்டத்திலும் உடல் கண்டம் எனக்கு இருக்கிறது. (ஆஹா மீன் சாப்பிடாததற்கு ஒரு மீன் (mean) காரணம் கண்டுபிடித்தாகிவிட்டது)
“சரிசார் விடுங்க, விடுங்க”.
ஆழ்கடலில் ஸ்நார்க்லிங் செய்பவர்களுக்கு  பலவித வண்ணங்களில் இருக்கும் கோரல்களைப் பார்ப்பதும், ஆய்வதும் மிகுந்த ஆச்சர்யங்களை அளிக்க வல்லது. அதோடு பலவித ரகமான வண்ணமய மீன்களும் கூட்டம் கூட்டமாக அலைந்து வண்ணத்துக்கு வண்ணம் சேர்க்கிறது.






கோரல்கள் விதவிதமான அளவுகளில், வண்ணங்களில் வடிவங்களில் இருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சில இடங்களில் அவ்வளவு ஆளமில்லை. தொட்டுவிடும் தூரத்தில் நிறைய இருந்தன.  ஆனால் கண்ணாடி தடுத்தது. அப்படியே கை எட்டினாலும் எடுக்க முடியாது. இதெல்லாம் இலங்கை அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட இடங்கள். ஆண்டவனின் அதிசய படைப்புகள் தான் எத்தனை எத்தனை, அனைத்தையும் பார்த்து மகிழ ஒரு ஜென்மம் போதாது .
அப்போதுதான் கீழே அந்தப்பெரிய  மீன் தெரிந்தது . அது மீன் என்று உற்றுப்பார்த்தால் இல்லை இல்லை ஓ அது மெர்மைட் என்று சொல்லப்படும் கடற்கன்னி போலத்தெரிந்தது. அம்ரியும் குனிந்து சுவாரஸ்யமாகப் பார்த்து கையாட்ட அது கண்டுக்காமல் போனது.
“என்ன அம்ரி கடற்கன்னியா ?”      
"கன்னியா என்று தெரியவில்லை, சார் சும்மா விளையாடாதீங்க அது ஏதோ வெள்ளைக்காரப் பெண் ஸ்நார்க்லிங் செய்து கொண்டு இருக்கிறது".


Image result for snorkeling in galle

“எனக்கும் தெரியும் நீதான் உத்து உத்துப்பாத்தியே, அதனால் கேட்டேன்”.
அந்தப் பெண்ணை போட்டோ எடுத்துக் காண்பித்தால் கடற்கன்னி சொன்னால் யாரும் நம்பிவிடுவார்கள். 2 பீஸ் உடை இரு கால்களிலும் மீன் வாலைப் போன்ற ஒரு அமைப்பை மாட்டியிருந்தாள். கண்களில் ஒரு காகில்ஸ் முகமூடி. முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர். அவள் நீந்துவது மீன் கூட போட்டிபோடுவது போல் தெரிந்தது. இவ்வளவும் நடப்பது ஆழ்கடலில் நாங்கள் படகில் மேலே, அதற்குள் கடற்கண்ணன் வந்துவிட  முத்தமிட்டுக்கொண்டே இருவரும் நீந்திக்  கடந்தனர்.ஒரு சிங்கிள் கூட இல்லை இங்கே மிங்கிள் ஆக. எல்லோரும் ஜோடிதான் ஹீம் கடலின் ஆழத்திலும் சரி, கடற்கரையிலும் சரி, வான ஊர்தியிலும் சரி, நகர்ப்புறத்தில் சரி. தனியாக இருந்தது நான் மட்டும்தான் நல்லவேளை அம்ரியாவது இருக்கிறானே துணைக்கு.


படகு நகர்ந்து அடுத்த புறம் செல்ல அடியில் ஆயிரக்கணக்கில் ஒரு வண்ணமய மீன் கூட்டம் கடந்து சென்றது. சிறிது நேரம் சென்று இன்னொரு வண்ண மீன் கூட்டம் சென்றது,கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
Related image
Glass bottom 
இதென்ன இங்கு மீன் வளர்க்கிறார்களா? என்று  கேட்டால், படகுக்காரர் சொன்னார் எல்லாம் இங்கே இயற்கையாக வளர்வது என்று. என் மனைவி இப்போது மட்டும் இருந்திருந்தால் துள்ளிக் குதித்திருப்பாள். எங்கள் வீட்டில் வண்ணமீன்கள் தொட்டி வைத்து சில மீன்களை வளர்த்து வருகிறாள். ஒவ்வொன்றும்  நல்ல விலை. அதே சமயத்தில் மீன் உணவு என்றால் அவளுக்கு கொள்ளைப்பிரியம். அதெப்படி ஒரே சமயத்தில் ஒருபுறம் மீனைச் சாப்பிட்டுக் கொண்டு மறுபுறம் மீனையும் வளர்க்கவும் முடியும் என்பது எனக்கு எப்பவுமே ஆச்சரியம்தான். அதோடு எனக்கு மீன் என்றால் ஆகாது. அவளுக்கு மீன் என்றால் உயிர். இந்தக் கடவுள் எப்படியெல்லாம் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பாருங்கள்.
Image result for Glass boat in Galle

படகுக்காரர் எங்கெல்லாம் கோரல் இருக்கிறதோ  அங்கு சிலநிமிடம் நிறுத்துவார். அதே மாதிரி மீன் கூட்டம் வந்தாலும் நிறுத்துவார். இப்படி ஒரு வாய்ப்பு இதுவரை  எனக்கு கிடைத்ததில்லை. வண்ணமீன்களில் விதவித டிசைன்களைப் பார்க்கும்போது சொர்க்கத்தில் கடவுள் இதற்கென தனி டிபார்ட்மென்ட் வைத்து சில ஆர்ட்டிஸ்ட்டுகளை வேலைக்கு வைத்து வரைந்து, பெயிண்ட் செய்து, அனுப்புவார் போலத் தெரிந்தது.
 காலே பயணம் இனிமையாகக்கழிய, நானும் அம்ரியும் கிளம்பி கொழும்பு வந்து சேர்ந்தோம். அப்போது அம்ரி கேட்டான், “உங்களுக்கு பிரைட் ஐஸ்கிரீம் வேணுமா? வேணும் என்றேன். அதென்ன பொறித்த ஐஸ்கிரீம் என்று வியப்பாக இருந்தது.

தொடரும்>>>>>>>>

Monday, December 4, 2017

பரதேசிக்கு நீச்சல் தெரியுமா தெரியாதா ?

இலங்கையில் பரதேசி -29
Gale Beach

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2017/11/blog-post_27.html
          
அங்கிருந்து சிறிது தூரம் பயணித்து காலே பஸ் நிலையம் அருகில் இருந்த ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். சாலட் தவிர எதுவும் சொல்லிக் கொள்ளும் போல இல்லை. இந்திய உணவை மட்டுமே தேடிப்போகாமல் வெவ்வேறு உணவுகளைச் சாப்பிட்டுப் பார்க்கும்படி மனது சொல்கிறது. ஆனால் நாக்கும் வயிறும் கேட்க மாட்டேன்கின்றன. எத்தனை முறை ஏமாந்தாலும் இதுவே தொடர்கிறது. நான் என்ன செய்வது. அம்ரி நன்றாகவே சாப்பிட்டான்.  அவனுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை போலிருக்கிறது. வயிறு நிரம்பினால் போதும்போல தெரிகிறது. ஆள் நல்ல வாட்டசாட்டமாகவே இருந்தான். நல்லதுதான் டூர் கைட், டிரைவர் மட்டுமல்லாது என்னோட பாடிகார்டும் அவன்தானே. எனக்குத்தான் பிரச்சனை சுடர்மிகும் அறிவுடன் ஆண்டவன் படைத்தானோ இல்லையோ 'ருசிமிகும் நாவினைப் படைத்துவிட்டான் என்ன செய்வது.


          “சார் நீங்கள் ஸ்விம்மிங் போறீர்களா? இல்லை சர்பிங்கா இல்லை ஸ்நார்க்லிங்கா?
          “எங்கே எதில்?”
          "என்ன இப்படிக் கேட்கறீங்க, கடலில்தான்"
          (அடடே அம்ரிக்கு என்னைப்பற்றித் தெரியாது போலிருக்கு)
          “என்ன சார் சீக்கிரம் சொல்லுங்க”.
          “அந்தப் பொருட்களோ உடையோ எடுத்து வரவில்லையே”
          “சார் அதனால்தான் கேட்கிறேன் இங்கே அவையெல்லாம் வாடகைக்குக் கிடைக்கும்”.
          “அப்படியா இருக்கட்டும் பரவாயில்லை. இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்”.
          “சார் இங்கு திருப்பி வரமாட்டோம். இதுதான் கடைசி சான்ஸ். ஆமா உங்களுக்கு நீச்சல் தெரியுமா? தெரியாதா”?
          “தெரியும்ம்ம்ம் ஆனா தெரியாது?”
          “சார் கரெக்டா சொல்லுங்க, தெரியுமா? தெரியாதா?”
          “அட நீச்சல் கூடவா தெரியாது, ஏன் அழுத்தி அழுத்தி கேட்கற”,
 “அப்ப சரி வாங்க ரெண்டு ஸ்நார்க்ளிங் கிட் வாடகைக்கு எடுக்கலாம்”.
          “அது என்ன வென்று 5 வரிகளுக்கு மிகாமல் விளக்க முடியுமா?”
          “சார் ஸ்நார்க்ளிங் என்பது ஆழ்கடல் டைவிங், ஆக்சிகன் உதவியோடு கண்ணில் கண்ணாடி உரையை மாட்டிக் கொண்டு ஆழ்கடல் அதிசயங்களைப் பார்க்கலாம்”.
          “ஐயையோ அம்ரி நிச்சல் தெரியும் ஆனால் தண்ணீரில் தெரியாது”.
          “என்னாது, தண்ணீரில்லாமல் எப்படி நீச்சல் அடிக்க முடியும்?”
இல்லை தப்பாச் சொல்லிட்டேன். கடலில் அடிக்கத்தெரியாது. ஆறு, ஏறி, குளம் கிணறுஆகியவற்றில் அடிப்பேன்”.
“சார் இந்தக் கடல் ஆழமில்லை, ஆறு கிணறைவிட இது ரொம்ப சேஃப் சார்”.
          “அம்ரி உண்மையைச் சொல்லாறேன் எனக்கு  நீச்சல் தெரியாது?
நீச்சலும் தெரியாது பாய்ச்சலும் தெரியாது. கூச்சலும் தெரியாது என்னை இப்படி வளர்த்துவிட்ட என் அம்மா அப்பாவின் மேல் கோபங்கோபமாய்  வந்தது.
          "சரி விடுங்க சார், அப்ப போட்டில் போகலாம்
“அட அம்ரி போட் இருக்கா?, இதை முதல்லயே சொல்ல வேண்டியதுதானே?"
          எங்கள் வண்டி சந்துபொந்துகளில் நுழைந்து சென்றது.
          “என்னப்பா பீச்சுக்குப் போறேன்னு சொல்லிட்டு சந்து பொந்துக்குள்ள போற”.
          “சார் இது தான் வழி மத்ததெல்லாம் பிரைவேட்”.
Image result for Sun bath galle beach sri lanka

 வழியெங்கும் சிறுசிறு கடைகள் இருந்தன. அவற்றுக்குள் நீச்சல் உபகரணங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. அதுதவிர கடல்  பொருட்களை வைத்து செய்யப்பட அழகுப் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன. அதனையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றோம். வீடுகளுக்கு முன்னால் ஆட்கள் உட்கார்ந்து கொண்டு சில பண்டங்களை விற்றுக்கொண்டு இருந்தனர். அதுதவிர அவர்கள் வீட்டின் முன்னால் கார்களை விட கட்டணம் வசூலித்துக் கொண்டும் இருந்தனர். பீச்சுக்கு மிக அருகில் இருந்த ஒரு வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடக்க, பீச் வந்தது.
          மதிய வெய்யில் சுள்ளென்று அடித்தாலும்  கடற்காற்று அதனைத்தடவித்தடவி சாந்தப்படுத்தியதால் இ தமாகவே இருந்தது. வழியெங்கும் வெள்ளைக் காரர்கள் வெறும் ஷார்ட்ஸில் கையில் நீச்சல் சாதனங்களோடு வந்து கொண்டிருந்தார். வாயைப் பிளக்க வேண்டாம் ஆண்கள்தான். பெண்கள் டூபீசில் இருந்தார்கள். வழி சந்து பொந்தாக இருந்தாலும் உள்ளே நீண்ட கடற்கரை அழகாகவும் சுத்தமாகவும் இருந்தது. கடற்கரை முழுவதும் பலதரப்பட்ட மக்களைப் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் வெள்ளைக்கார வெளிநாட்டினர். சர்ஃபிங் செய்பவர்கள். ஸ்நார்க்லிங் செய்பவர்கள், வெறுமனே கடலில்           நீந்துபவர்கள், சன்பாத் எடுப்பவர்கள் என்று பலரும் இருந்தனர். ஸ்னார்க்லிங் செய்பவர்கள்  கிட்டத்தட்ட மீன் போன்றே மாறியிருந்தனர். சன்பாத் செய்பவர்கள் பெரும்பாலும் அரை நிர்வாணமாக இருந்தார்கள். ஆம் பெண்களும்தான். உடனே திரும்பவும் வாயைப் பிளக்க வேண்டாம். அவர்கள் குப்புறப் படுத்திருந்தார்கள்.
          அம்ரி ஒரு போட்காரரிடம் பேரம் பேசினான். பேரம்முடிந்து நானும் அம்ரியும் மட்டும் படகில் ஏறினோம். அது ஒரு மோட்டார் படகு.  அடடே நீச்சல் தெரிந்திருந்தால் கடலில் டைவ் செய்து ஆழ்கடல் அதிசயங்களை ஆத்மார்த்தமாக அனுபவித்திருக்கலாமே என்று ஆதங்கப்பட்டேன். (ஆஹா அ, ஆ ஐந்து தடவை வந்துவிட்டதே,இந்தப் பழைய புதுக்கவிஞன் அவ்வப்போது எட்டிப்பார்த்து அடம் பிடிக்கிறான், விட்டுவிடுங்கள் பாவம்)
          போர்ட்டில் இன்னொரு துடுப்பு போல இருந்தது. அந்தப் படகோட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு ஒருபுறம் உட்கார, அம்ரி அநாயசமாக ஏறி அடுத்தப்புறம் அமர்ந்தான் (மறுபடியும் அ நான்கு முறை அஹ்ஹா)
          கடல் பளிச்சிடும் நீல நிறங்களில் ஜொலித்தது. போட்டின் மேல் கூரை இருந்ததால் வெயில் தெரியாமல் அட்டகாசமாக இருந்தது அந்த மதிய நேரம். அப்போது போட் ஓட்டுபவர் கீழே இருந்த பலகையை உருவி விலக்க என்ன ஆச்சரியம் கடல் ஆழம்வரை தெரிந்தது. ஆம் படகின் கீழ்ப்புறம் நல்ல கெட்டியான ஃபைபர் கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தது. கீழே பவளப்பாறைகள், கலர் கலராய் சிறுசிறு அழகு மீன்கள் ,பவளப்பாசிகள்  என்று வேறு ஒரு உலகம் விரிந்தது. இவ்வளவு பாதுகாப்பாக இத்தனை அருகில் கடலின்  ஆழத்தைப் பார்ப்பது பிரமிப்பாக இருந்தது. அப்போதுதான் என் காலுக்குக் கீழே அந்த பெரிய மிகப்பெரிய மீனைப் பார்த்தேன்.
-தொடரும்.  

Monday, November 27, 2017

கடல் ஆமைகள் கடத்தப்படுவது ஏன் !!!!!!!!

Image result for sea turtles

இலங்கையில் பரதேசி-28

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/11/blog-post_20.html

            100 மில்லியன் வருடங்களுக்கு முந்தியது ஆமை என்று சொன்னபோது வாயைப் பிளக்காதவர்களே இல்லை. மில்லியன் வேணாம்ப்பா கோடியில சொல்லு அப்பத்தான் எனக்குப்புரியும்னு சொல்றவங்களுக்கு இதோ கோடியில். ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம், பத்து மில்லியன் என்பது 10 கோடி ஆண்டுகள், அடேங்கப்பா இது கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் வாளோடு ( அல்லது வாலோடு என்றும் வைத்துக்கொள்ளலாம் ) முன் தோன்றிய தமிழ் இனத்திற்கும்  இது முந்திய இனம் போல் தெரிகிறதே . ஆமைகள் தற்போது மொத்தம் எட்டு வகைகள் மட்டுமே இருக்கின்றன. பல வகைகள் அழிந்துவிட்டன. ஆனால் ஆமைகள் வேட்டையாடப்படுவதால் இந்த 8 இனமும் அழியும் சூழ்நிலையில் இருக்கிறதாம். ஆமைகளை வேட்டையாடுகிறார்களா, எனக்குப் புதிராக இருந்தது.
          ஆமைகள்  தாங்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக ஆண்டிற்கு ஒரு முறை சில குறிப்பிட்ட இடங்களில் சேருமாம். இனப்பெருக்கம் முடிந்து, பெண் ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிடுமாம். ஆமைகள் முட்டையிடும் வயது 30 வயதுக்கு மேல் இவைகள் இரவில்தான் முட்டைகளையிடுமாம். ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிடுமாம். ஆமைகள் தாங்கள் எந்த கடற்கரையில் பிறந்தனவோ, அதே கடற்கரையில்தான் தன் முட்டைகளை இடும் என்று சொல்கிறார்கள்.  ஆச்சரியமாக  இருந்தது. ஒரு தடவையில் அவைகள் 120 முட்டைகள் வரை இடுமாம். நல்லவேளை மனிதர்களுக்கு இப்படி ஒரு இனப்பெருக்கம் இல்லை. இல்லையென்றால் ஒருவர் தலைமீது ஒருவர். நடக்குமளவுக்கு நெருக்கம் அதிகரித்துவிடும். இந்த முட்டைகள் டேபிள் டென்னிஸ் (பிங்பாங்)பந்துகளின் சைசில் வெள்ளைக் கலரில் இருக்குமாம்.
          தன்னிடமிருந்து உருவாகும் ஒருவித திரவத்தால் இந்த முட்டைகளை பெண் ஆமைகள் ஈரப்பதத்தில் வைத்திருக்குமாம். அப்படி வைத்துவிட்டு திரும்பவும் கடலுக்குத் திரும்பி விடுமாம். அதன்பின் முட்டைகளுடனோ அல்லது அவைகளின் குஞ்சுகளுடனோ அவைகளுக்குத் தொடர்பு இருக்காது.
Image result for sea turtle eggs hatching

          கடற்கரை மணலில் சூரிய வெப்பத்தில் இருக்கும் இவைகள் சுமார் 60 நாட்கள் கழித்து தாமாகவே குஞ்சு பொரிந்து ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்து தாமாகவே கடலை நோக்கிச் சென்று கலந்து விடுமாம். பிறந்த ஆமைக்குஞ்சுகளின் அளவு வெறும் 5 சென்ட்டி  மீட்டர் தான்.
          ஆமைகளும் அவைகளின் முட்டைகளும் வேட்டையாடப் படுகின்றன அல்லது அழிகின்றன என்று சொன்னேனே அது எப்படி என்று பார்ப்போம்.
          ஆமை ஓடுகள் அல்லது அதன் முட்டை ஓடுகளால் அழகுப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. ஆமைகளின் முட்டைகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. ஆமைகள் கறிக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. மீன் வலைகளில் மாட்டிக் கொண்டு இறந்து போகின்றன. மோட்டார் படகுகள் அதிவேகத்தில் செல்லும்போது ஆமைகள் அடிபட்டு இறந்துவிடுகின்றன.   மாசுபட்ட கடற்கரைகள், கடல் நீர், கடற்கரைகளில் இருக்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவை ஆமைகளின் இனப்பெருக்கத்திற்குத் தடையாக இருக்கின்றன. பாலித்தீன் மற்றும் பிற கழிவுகள் கடலில் வீசப்படுவதாலும் அது ஆமைகளால் சாப்பிடப்பட்டு அழிவு ஏற்படுகிறது.
          ஆனால் இதனை எப்படித்தடுக்கலாம் என்பதற்கும்  உள்ள பல வழிகளை விளக்க ஆரம்பித்தார்.
          மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வந்து அழிந்து போய்க் கொண்டிருக்கும் இனத்தை மீட்டு அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்கலாம்.
          ஆமைகள் இனப்பெருக்கம் நடக்கும் கடற்கரைப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டு செயற்கை விளக்குகள் அகற்றப்படவேண்டும். பவளப்பாறைகள் கடற்பாசிகள் போன்ற ஆமைக்கு உணவாக இருக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
          ஆமை உட்பட கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மீன் பிடித்தொழில் நடத்தப்படவேண்டும். கடல் மாசுபடுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். ஆமை ஓடுகளை வைத்து செய்யும் பொருட்களுக்குத்தடை செய்ய வேண்டும் .மக்கள் ஆமை முட்டைகள் மற்றும் ஆமை இறைச்சியைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
          "அதெல்லாம் சரி இதில் உங்களின் பங்கை எப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்குக் கிடைத்த பதிலைக் கீழே தருகிறேன்.


          "எங்களுடைய முக்கிய நோக்கம் இந்த ஆமை இனத்தை முடிந்த வரையில் பாதுகாத்து  அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுதான். அதற்கு நாங்கள் ஆமை முட்டைகளை எடுத்து பாதுகாப்புடன் எங்களிடத்தில்  இருக்கும் இன்குபேட்டர்களைப் பயன்படுத்தி குஞ்சு பொரிக்கிறோம். அதன்பின் அவற்றை மிக கவனத்துடன் கடலில் கொண்டு போய்ச் சேர்க்கிறோம். அது தவிர உடல்நலம் பாதிக்கப்பட்ட ஏராளமான ஆமைகள், மீனவர்களின் வலைகளினால் சேதப்படுத்தப்பட்டவைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டுவந்து, பராமரித்து சுகப்படுத்தி மீண்டும் கடலில் கொண்டு போய் விடுகிறோம்”.
          “அது தவிர வெவ்வேறு ஆமை இனங்களை கொண்டு வந்து வளர்த்து நான்கு அல்லது 5 வருடங்கள் கழித்து கடலில் கொண்டுபோய் விடுகிறோம். இதன் மூலம் பல ஆமை இனங்களும் காப்பாற்றப்படும். அது தவிர அந்த இனங்களை  இங்கே பொதுமக்கள் பார்ப்பதற்காக வைத்திருக்கிறோம். உங்களைப் போல பல மக்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து பார்த்து எங்களை ஆதரிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க வருகை தருபவர்கள் நன்கொடையால்தான் நடக்கிறது தவிர பலர் நினைப்பது போல் அரசாங்க உதவி என்று ஒன்றுமில்லை”.
          “ஆமை முட்டைகளை மீனவர்களிடமிருந்தும் கடற்கரையின் அருகில் வாழும் மக்களிடமிருந்து நாங்கள் விலை கொடுத்து வாங்கித்தான் குஞ்சு பொரிக்கிறோம். மொத்தம் 4000 முட்டைகள் இதில் வைத்திருக்கிறோம். அவற்றுள் சுமார் 3000 வரை குஞ்சு பொரிக்கும். இது ஒரு மாதக் கணக்கு. ஒரு சில நாட்களில் இவற்றை கடலில் விட்டுவிடுவோம். நாங்கள் விலை கொடுத்து வாங்குவதால் பலர் முட்டைகளை சாப்பிடுவதை நிறுத்தி எங்களிடம் விற்றுவிடுகிறார்கள். அதனால் பல ஆமைகள்  எங்களால் காப்பாற்றப்படுகின்றன என்கிறார். சமீபத்தில் மட்டும் லட்சக் கணக்கான ஆமைகள் காப்பாற்றப்பட்டிருக்கிறதாகச் சொன்னார்கள்.
            நாமும் நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதைப்பற்றி செய்திகளில் அடிக்கடி பார்த்திருப்போம் .ஆமை வகைகளிலேயே மிக அழகானவை என அறியப்படுவது நட்சத்திர ஆமைகள்.உணவு, மருந்து தயாரிப்புக்காக கடத்தப்படும் இந்த ஆமைகள், வீட்டில் செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் இவை நல்ல விலை போவதால், இந்தியாவில் இவற்றின் கடத்தல் வணிகம் அதிகரித்துள்ளது.


                    அம்மாடி இந்த ஆமைகள் வரலாற்றில் இவ்வளவு இருக்கிறதா என்றபடி தொட்டிகளில் உள்ள ஆமைகளைப் பார்த்தேன்.  எல்லாம் நல்ல ஆரோக்யத்துடன் இருந்தன. இந்த இல்லம் கடற்கரை  ஓரத்தில் இருக்கிறது. பின்னால் வங்காள விரிகுடா ஆர்ப்பரித்து எழுந்து கொண்டிருந்தது. ஆமைகளுக்காக இவர்கள் தங்கள் வாழ்க்கையை குடும்பமாக அர்ப்பணித்து வாழ்வது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது. வாருங்கள் கடலுக்குள் பயணித்து அதன் மற்ற ஆச்சரியங்களைப் பார்ப்போம்.

தொடரும்