Showing posts with label சீனாவில் பரதேசி. Show all posts
Showing posts with label சீனாவில் பரதேசி. Show all posts

Tuesday, January 24, 2017

திபெத்தை விழுங்கிய சீனாவும் ,தேளை விழுங்கும் சீனர்களும் !!!!!


சீனாவில் பரதேசி-31

Photo
Dalai Lama
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/01/blog-post_17.html

"திபெத் உணவகம் ரொம்ப தூரம் என்றால் வேண்டாம். இங்கே பக்கத்தில் எங்காவது சாப்பிட்டுப் போகலாம். நினைவிருக்கிறதா இன்று இரவு எனக்கு இலங்கைக்கு விமானம் அதற்குள் முடிக்க வேண்டியவற்றை முடித்துவிடவேண்டும்”.
"இல்லை நடந்து போகும் தொலைவுதான், வா போகலாம்"
திபெத் உணவகம் மிக அருகில் இருந்தது. உள்ளே நுழைந்தோம். அங்கு ஒருவருமில்லை. நான் கொஞ்சம் கலவரத்துடன் லீயைப் பார்த்தேன். அவன் அதனைப் புரிந்து கொண்டு "உணவுக்கு நான் கேரண்டி என்னை நம்பு", என்றான்.
திபெத் உணவு சீன உணவு போலவேதான் எனக்குத் தெரிந்தது. திரும்பவும் எனக்குத் தெரிந்த “வெஜிடபிள் சூப் நூடுல்ஸ் ஆர்டர்”, செய்தேன். நல்லவேளை அங்கே முள் கரண்டி இருந்தது. உணவு சுவையாகவே இருந்தது. சம்மர் பேலசின் அருகில் சாப்பிட்ட நூடுல்ஸ்க்கு சற்றும் குறையாத சுவை. சிறிதே காரமாய் இருந்ததால் எனக்கு ரொம்பப் பிடித்தது.
Image result for tibet restaurant beijing
Tibet Restaurant in Beijing
அந்த சமயத்தில் கலகலவென சிரித்துக் கொண்டு நான்கு இளம் சிட்டுகள் உள்ளே நுழைந்தன. அவ்வளவுதான் அந்த சின்ன உணவகம் களைகட்டியது. அவர்களைப் பார்த்தேன். பள்ளி அல்லது கல்லூரி மாணவிகள் போலத் தெரிந்தனர். சளசளவென்று பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு, ஒருவரை யொருவர் அடித்துக் கொண்டு கும்மாளமாய் இருந்தனர். அதே உற்சாகம் என்னையும் தொற்றிக் கொள்ள லீயிடம் கேட்டேன்.
"இந்தப் பெண்கள் யார்?"
"இவர்கள் திபெத்திய பெண்கள், பள்ளி மாணவிகள்"  
"என்ன மொழி பேசுகிறார்கள்".
இவர்கள் திபெத்து மொழி பேசுகிறார்கள்.
நான் உடனே அந்தப் பெண்களை நோக்கி.
";ஹலோ பெண்களே, நான் இந்தியாவிலிருந்து வருகிறேன், நாங்கள் தான் உங்கள் தலைவரான தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறோம்"
அவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டு என்னை ஆச்சரியமாக பார்த்தனர். அப்போது லீ பேச வேண்டாம் என சைகை செய்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் தப்பாக ஒன்றும் சொல்லவில்லையே.
அதன்பின் அமைதியுடனேயே சாப்பிட்டு முடித்து வெளியே வந்தோம். நாங்கள் வெளியே வரும்போது அந்தப் பெண்கள் என்னைப் பார்த்து, 'ஹேவ் எ நைஸ் டே" என்று சொன்னார்கள். நன்றி சொல்லி வெளியே வந்ததும் லீயைக் கேட்டேன்.
“லீ ஏன் என்னைப் பேச வேண்டாம் என்று சொன்னாய் ?, அவர்கள் திபெத்தியர்கள் என்றுதானே சொன்னாய். பாவம் சீனாவில் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்”. "அப்படியெல்லாம் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக  இருக்கிறார்கள்".
"புரியவில்லை சுதந்திர நாடாக இருந்த திபெத்தை ஆக்கிரமித்தது சைனாதானே".
“ஆமாம்”.
“அவர்களின் தலைவர் தலாய் லாமா அதனால்தானே தன் தொண்டர்களோடு வெளியேறினார் ?”.
“ஆமாம் நீ சொல்வது உண்மைதான்”.
“பின்னர் ஏன் என்னைத் தடுத்தாய்?”.
“நீ சொல்வது உண்மைதான். ஆனால் சைனாவின் பகுதியாக திபெத் மாறிவிட்டபின், அது நன்றாக முன்னேறிவிட்டது”.
“பழமையில் ஊறியிருந்த அவர்கள் இப்போது வெகுவாக நாகரிக மடைந்துவிட்டனர். அதோடு அவர்கள் சீனாவில் எந்த இடத்துக்கும் வரலாம் போகலாம். எனவே அவர்கள் முன்பைக் காட்டிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்”.
Image result for karmapa
Karmappa
"ஆனால் அவர்களின் தலைவர் தலாய் லாமா அகதியாய் இந்தியாவில் வாழ்கிறாரே ?"
“தலாய் லாமா அவர்கள் தலைவரில்லை. இப்போது வேறு ஒரு தலைவர் இருக்கிறார். அவரின் கீழ் திபெத் மக்கள் நிம்மதியையும் மகிழ்ச்சியாயும் இருக்கிறார்கள்”.
           “புதிய தலைவர் ?”.
“சொல்கிறேன் கேள் ஒன்றுக்கு 2, ஒருவர் கர்மப்பா”
 “அது என்ன கர்மமோப்பா?”
“அடுத்து இன்னொரு தலைவரும் இருக்கிறார். அவர் பெயர் பஞ்சன் லாமா. இவரை சீன அரசு அங்கீகரித்துள்ளது”
 “ஏன் அங்கீகரிக்காது?, இவர்கள் சீன அரசை அண்டிப்பிழைத்து நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சாமியார்கள் ஆக இருப்பார்கள்”.
”ஷ் மெல்லப் பேசு. அவர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்”
“என்ன இழவோ, சரி ரூட்டை மாத்து இப்போது எங்கே போகிறோம்?”.
“மியூசியம் போகனும்னு  சொன்னியே?”.
“ஆமா லீ ஒரு மியூசியம் கூட போகலியே?”.

Image result for capital museum in beijing
Capitol Museum
அங்கிருந்து ஒரு டேக்சி எடுத்து ஒரு பிரமாண்ட கட்டிடத்துக்கு போனோம். அதற்குப் பெயர் "கேப்பிடல் மியூசியம்" என்றான் லீ.
“புத்தம் புதிதாக இருக்கிறதே”, என்று கேட்டேன்.
“2006ல் கட்டப்பட்டது இந்தப்புதிய கட்டிடம். ஆனால் 1981ல் இந்த மியூசியம் அமைக்கப்பட்டது”, என்றான்.
நன்கு சோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டோம். ஒரு தேர்ந்த அமெரிக்க மியூசியம் போலவே உள்ளமைப்பு இருந்தது. பல மாடிக்கட்டிடம், எஸ்கலேட்டர்கள், திரையரங்குகள், அதில் சீன வரலாறு ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஏரியாயும், மாடியிலும் வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. அதில் சீனாவின் மிகப் பழமையான போர்சலின், பிரான்ஸ்( Bronz), ஓவியங்கள், ஜேட், சிலைகள், புத்தர் அமைப்புகள் என்று பல இருந்தன. கிட்டத்தட்ட 2 லட்சம் பொருள்கள் இருக்கின்றன. 2 கோடிப் பேர் ஒரு ஆண்டுக்கு வருகிறார்கள். மிகச் சுத்தமாக பராமரிக்கப் பட்டிருந்தன.
Related image
Capitol Museum
     சீனா எங்கேயோ போய்விட்டது. பல பரம்பரைகளின்  பல பேரரசர்கள் காலத்துப் பொருட்கள் அங்கு இருந்தன. சீனா போகிறவர்கள் கன்டிப்பாகப் போக வேண்டிய இடம்.
அதனைப் பார்த்து முடித்து அடுத்து "டர்ட் மார்க்கெட்"( Dirt Market) என்ற இடத்துக்குப் போனோம். அமெரிக்காவில் இருக்கும் ஃபிளீ  மார்க்கட் போல (Flea Market) இருந்தது. நம்மூர் சந்தை  போல வைத்துக் கொள்ளுங்களேன். இங்கு பழைய புதிய கலைப் பொருட்கள் ஏராளமாக இருந்தன. விலைதான் அதிகமாக இருந்தது. நம்பி வாங்குவதற்கு பயமாக இருந்தது. பழைய பொருட்களை அப்படியே பிரதி எடுப்பதில் சீனர்கள் வல்லவர்கள் ஆயிற்றே.
Weird food at a night market in Beijing, China via Foodie International:

அதையும் பார்த்து முடித்து லீயிடம் விடைபெற்று ரூமுக்கு வந்தேன். பக்கத்தில் ஒரு உணவு மார்க்கட்டையும் பார்த்துவிடச் சொன்னாள் ஜோஹன்னா. அதன் பெயர் வாங்பியூஜிங் ( Wangfuging) மார்க்கெட்  .கடைசியாக சீன உணவை ஒரு கை பார்த்துவிடலாம் என்று போனால் அங்கே பாம்பு, தவளை மற்றும் தேள் வகைகள் பொறித்து வைக்கப்பட்டதைப் பார்த்து தெறித்து ஓடி வந்துவிட்டேன். 
Wangfujing Night Market 
சீனர்கள் அதனை காராசேவு போல கரக் மொறுக்கென்று சாப்பிடுவதைப்பார்க்கும்போது எனக்கு வயிற்றில் தேள் ஊறியது போல இருந்தது. நமக்கு சான்டவிச் தான் லாயக்கு என்று சாப்பிட்டுவிட்டு கிளம்பி ஏர்போர்ட் வந்து ஏர்லன்கா விமானத்தில் உட்கார, சேலை கட்டிய பணிப்பெண் வந்து வணக்கம் என்று சொல்லியது காதில் தேனாய்ப்  பாய்ந்தது. விமானம் மேலேறிப் பறக்க பீஜிங்கிற்கு குட்பை சொன்னேன்.

Related image
-முற்றும்.

பின்குறிப்பு :

அடுத்த வாரம் முதல் இலங்கையில் பரதேசி தொடர் ஆரம்பம், உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

Tuesday, January 17, 2017

சீனாவில், நான்கு முறை அழிந்து எழும்பிய நானூறு வருட கத்தோலிக்க ஆலயம் !!!!!!


சீனாவில் பரதேசி 30

Cathedral of the Immaculate Conception

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/01/blog-post_5.html

"ஆரம்ப காலம் போல அல்லாது இப்போதெல்லாம் கம்யூனிச அரசாங்கம் மத விஷயங்களில் தலையிடுவதில்லை. எனவே இங்கு எல்லா மதத்தினரும் அவரவர் மதங்களை கடைப்பிடிப்பதற்கும் விழாக்கள் கொண்டாடுவதற்கு அனுமதியிருக்கிறது”.

"மதமென்று பார்த்தால் இங்கு எந்த மதத்தினர் அதிகமாக வாழ்ந்திருக்கிறார்கள் ?”. “புத்தமதம் அதிகம் என்று சொல்லலாம். டாவோயிசமும் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் மிகவும் குறைவு. எந்த மதத்தையும் சாராதவர்களும் அதிகமாக இருக்கிறார்கள்”.

"சரி இந்த ஆலயத்திப் பற்றி மேலும் விவரங்களைச் சொல்லு"

“முதலில் சேப்பல் என்று அழைக்கப்படும் சிற்றாலயமாக அமைக்கப்பட்டு பின்னர் விரிவு படுத்தப்பட்டு பேராலயமாக ஆக்கப்பட்டது. 1650ல் சிங் வம்சத்தைச் சேர்ந்த ஷின்ஜி பேரரசர், அவர் ஆட்சிக்கு வந்த ஏழாவது வருடத்தில் ஜெர்மனியிலிருந்து வந்த ஜேஸுட் பாதிரியாரான ஜோகன் ஆடம் ஷ்கால் வான்பெல் (Johann Adam Schall Von Bell) என்பவருக்கு விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கினான்.அப்போது ஆரம்பித்து இரண்டு வருடங்களில் இந்தப் பேராலயம் கட்டி முடிக்கப்பட்டது.
From outside( I am standing in the front)

ஷுன்ஜி பேரரசர் பாதிரியாரோடு  மிகவும் நட்பு பாராட்டியதோடு 24 முறை இந்த பேராலயத்துக்கு வந்து சென்றாராம்.

கி.பி.1690ல் பீஜிங் தனது முதல் ரோமன் கத்தோலிக்க பிஷப்பான ஃபிரான்சிஸ்கன் பெர்னட்டின் டெலா சிசியா வை பெற்றது. அது முதல் இதற்கு ஒரு பேராலய( கதீட்ரல்) அந்தஸ்து கிடைத்தது. அதுமட்டுமல்ல பலமுறை அழிந்தாலும் மறுபடியும் மறுபடியும் இந்த ஆலயம் மீண்டு வந்தது என்பதைக் கேள்விப்பட்ட போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து சொல்கிறேன்.


கி.பி. 1703ல் காங்லி பேரரசரின் 24 ஆவது ஆண்டு ஆட்சியில் அவரின் உதவியோடு இது மராமத்து செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது ஐரோப்பிய கட்டிடக்கலை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் 1720-ல் பீஜிங்கில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இந்த ஆலயம் முற்றிலும் அழிந்து போனது. மீண்டும் சிலுவை வடிவத்தில் எழும்பிய ஆலயம் 1730ல் மீண்டும் வந்த நில நடுக்கத்தால் சிதிலமடைந்து போனதாம்.

ஆனால் அப்போதிருந்த யாங் செங் (Yang zhang) பேரரசர் 1000 வெள்ளிக்காசுகளை அளித்து அதனை மறுபடியும் கட்ட உதவியிருக்கிறார்.

1775ல் அந்தோ இது தீ விபத்தில் முற்றிலும் எரிந்து போனது. அப்போது தன்னுடைய 40 ஆவது ஆண்டுஆட்சியில் இருந்த சிங்லாங் பேரரசர் இதனை மறுபடியும் கட்ட 10 ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் கொடுத்திருக்கிறார்.  

இப்படி கத்தோலிக்க ஆலயம் சீன நாட்டில் சீரோடு வளர்ந்து வரும் வேளையில், ஒரு பெரும் பிரச்சனை வந்தது. கி.பி.1838ல் தனது 14 ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த டாவோ குவாங் பேரரசர் ,பல குழப்பங்கள் நிலவிய சூழ் நிலையில், சீனாவில் கத்தோலிக்க ஆலயங்களைத் தடை செய்தார். அதனால் இந்த ஆலயம் அரசால் கைப்பற்றப்பட்டு அதில் நடந்து வந்த ஆராதனைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் இரண்டாவது ஓப்பியம் யுத்தமெல்லாம் முடிந்தபின் கி.பி. 1860ல் தான் இது மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது அதன் பிஷப்பாக வந்தவர் ஜோசப் மார்ஷியல் மெளலி ( Joseph Martial Mouli) என்பவர்.

அதன் பின்னர் 1900ல் பாக்சர் புரட்சி நடைபெற்றபோது சீனா முழுவதிலும் இருந்த எல்லா கத்தோலிக்க ஆலயங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அவ்வமயம் இந்தப் பேராலயம் தீக்கிரையாக்கப்பட்டு முற்றிலும் தூர்ந்து போனது.
[IMG]http://i265.photobucket.com/albums/ii232/TERESA7_album/FORUM-1%20TO%20041408/LI-SHAN.jpg[/IMG]
Arch Bishop Joseph Li Shan
நான்கு ஆண்டுகள் கழித்து நான்காவது முறையாக மீண்டும் இந்தப் பேராலயம் எழுப்பப்பட்டது. அதுதான் இன்று வரை நிலைத்திருக்கிறது.

இப்போது தினமும் அதி காலையில் சீன மொழியிலும், ஞாயிறுகளில் ஆங்கில மற்றும் இத்தாலிய ஆராதனைகளும் இங்கு நடக்கின்றன. இந்த வளாகத்தில் தான் சீனக் கத்தோலிக்க தலைமை குருவான ஆர்ச் பிஷப் ஜோசப் லி ஷான்  என்பவர் இருக்கிறார்.

சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்ததென் அடையாளங்கள் இருந்தன. ஐரோப்பியக் கட்டிடக்கலையில் உள்புறம் அற்புதமாக இருந்தது. உள்ளே அமைதியாக சில நிமிடங்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்தேன்.  புதுவருடமும் அதுவுமாக ஆலயத்தில் அந்த நாளை ஆரம்பித்தது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

வெளியே வந்து  லீக்கு நன்றி சொல்லி “அடுத்து எங்கே?” என்றேன்.
“அடுத்து ஒரு டாவோ ஆலயம்” என்றான்.
"ஏன் நீ போக வேண்டுமா புது வருடத்திற்கு?
“இல்லை உன்னைத்தான் கூப்பிட்டுப் போகிறேன். மற்ற நம்பிக்கைகளை பற்றியும் உனக்குத் தெரிய வேண்டுமல்லவா”.
“நல்ல ஐடியாதான் போகலாம்”.
அங்கிருந்து ஒரு கேப்பை பிடித்து அரைமணிநேரத்தில் ஒரு ஆலயத்திற்குச் சென்றோம்.
“இதன் பெயர் என்ன லீ?”.
“இதன் பெயர் வெள்ளை மேக ஆலயம் (White Cloud Temple) டாவோயிஸக் கோவில்களின் முக்கிய மூன்று இடங்களில் இதுவும் ஒன்று ஆகும். இது சொர்க்கத்தின் கீழுள்ள முதல் ஆலயம் (The First Temple Under Heaven) என்றும் சொல்கிறார்கள்”.
White cloud Temple

இப்போதுள்ள ஆலயம் 14 ஆம் நூற்றாண்டில் மிங் வம்சத்தால்  கட்டப்பட்டது. ஆனால் இதே இடத்தில் 8 ஆம் நூற்றாண்டு முதலே ஆலயமிருக்கிறது. 1215ல் மங்கோலியரின் ஆக்கிரமிப்புக்கு முன்னால் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கும் இடமாக இது செயல்பட்டிருக்கிறது.

1222ல் டாவோயிஸ குரு குயு (Qiu) என்பவர் ஜெங்கிஸ்கானைச் சந்தித்து டாவோயிஸத்தின் விளக்கத்தைக் கொடுத்தார். அவருடைய நினைவகமும் இதன் உள்ளே இருக்கிறது. அதன் மேல்தான் இந்தக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது.


நாட்டில் பலவித மாறுபாடுகள் ஏற்பட்டாலும்  ஆலயம் அதனால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது.
Forgot to remove the mask for pollution 

1949ல் நடந்த கம்யூனிஸ் புரட்சியின் போது  மூடப்பட்டது. ஆனால் திரும்பவும் திறக்கப்பட்டு இப்போது முழுவதும் செயல்படும் ஆலயமாக இருக்கிறது.

உள்ளே சில படங்கள் எடுத்தோம். அதன்பின் சாப்பிடப் போகலாம் என்றேன் லீயிடம்.
“பக்கத்தில் நல்ல திபெத் உணவகம் இருக்கிறது, அங்கே போகலாம்”, என்றான்.
தொடரும். 

பின்குறிப்பு :

"சீனாவில் பரதேசி" அடுத்த பகுதியில் முடியும் .விரைவில் எதிர்பாருங்கள் “இலங்கையில்  பரதேசி”.உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி

Thursday, January 5, 2017

சாமுராய் வாளும், திருப்பாச்சேத்தி அரிவாளும் !!!!!!!!!

Related image
Samurai Soldier


சீனாவில் பரதேசி -29

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

டிக்கட்டுகளில் 500 யுவான் போட்டிருந்தது. எவ்வளவு என்று சைகையில் கேட்க 1000 யுவான் என்று எழுதிக்காண்பித்தான். அட நம்மூரில் பிளாக்ல டிக்கட் விக்கி மாதிரியில்ல இங்க இருக்கு என்று நினைத்துக் கொண்டு வேண்டாம் என்றேன். 200 யுவான் டிக்கட்டைக்காட்டி 500 என்றான். ஏற்கனவே பலமுறை ஏமாந்திருக்கிறேன் என்பதால் தயக்கமாக இருந்தது. ஓபரா ஷோவைப் பார்க்க ஆசையாயும் இருந்தது. வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்தால் ஒருவேளை நம்மூர் போல பின்னால் வந்து குறைத்துக் கொடுப்பான் என்று நினைத்து நடையைக் கட்டினேன். பின்னால் உடனே திரும்பிப்பார்க்காமல் வேகமாக நடந்தேன். சிறிது நேரம் கழித்து  யாரும் வருவது போல் தெரியாததால் திரும்பிப் பார்த்தேன். அவன் கூட்டத்தில் தெரியவில்லை. அந்தப் பக்கம் இன்னொருவன் நின்றிருந்தான். அவன் வந்து டிக்கட்டுகளைக் காண்பித்தான். 500 யுவான் டிக்கட்டைக் காண்பித்தான். எவ்வளவு என்று கேட்க 2000 என்று சொன்னான். ஐயையோ இதற்கு அவனே தேவலையே என்று திரும்ப விரைவாக நடந்து அவனைத் தேடிப்பார்த்தேன். ம்ஹூம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது இன்னொருவன் வந்தான். ஆனால் 500 யுவானை 2500 என்று சொன்னான். இது கட்டுப்படியாகாது என்று நினைத்து நடையைக் கட்டினேன். மணியைப் பார்த்தால் பத்து மணிதான் ஆகியிருந்தது. ஃபயர் வொர்க்ஸுக்கு  இன்னும் இரண்டுமணி நேரம் இருந்தது. குளிர் வேறு கூடிக் கொண்டே போனது.

காதடைப்பானை சிறிது சரிசெய்ய படக்கென்று உடைந்து போனது. என்ன கொடுமை இது என்று நினைத்துக் கொண்டு ம்ஹும்  இனிமேலும் வெளியே நின்று கொண்டிருந்தால் பரதேசி பரலோகம் செல்வதற்குத்தான் அதிக வாய்ப்பு என்றெண்ணி நம்முடைய வாசக நண்பர்களின் நன்மைக்காக பொடிநடையாய் விடுதிக்குத் திரும்பினேன்.

ஒரு மணல் சூனியக்காரியை வாங்கி மகிழ்ந்து உண்டேன். புரியவில்லையா புரோ' சான்டவிச்'சைத்தான் தமிழில் அப்படிச்சொன்னேன். அன்று நடந்த நடைக்கு தூக்கமும் கண்களைத் தழுவ ஆனந்த சயனம் அடைந்தேன்.

இரவு திடீரென்று விழித்துக் கொண்டேன். நல்ல கனவு, 500 யுவான் டிக்கட்டை ஒரு பெண் இலவசமாகக் கொடுக்க நன்றி சொல்லி உள்ளேபோய் அமர்ந்தால் பக்கத்தில் அந்தப்பெண். மேடையில் நடக்கும் ஓபராவைப் பார்ப்பதா பக்கத்திலிருக்கும் பார்பராவைப் பார்ப்பதா என்று திகைத்து ஒரு சந்தர்ப்பத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவள் கைகளைக் கோர்த்துக் கொள்ள அவளின் அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சாமுராய் வீரன் தன்  வாளை  உருவ, நான் வேர்த்து விறுவிறுத்து எழுந்து விட்டேன்.

திரும்ப தூங்குவதற்கு சிறிது நேரமானது. திரும்ப கனவு வந்தால் அந்த சாமுராய் வீரனை பாண்டிய திருப்பாச்சேத்தி அரிவாளால் ஒரு போடு போட்டிருப்பேன். என்னசெய்வது நம் வீரத்தைக் காண்பிக்க கனவில் கூட ஒரு  சான்ஸ் கிடைக்க மாட்டேங்குது.
New Year Eve In Beijing New-Years-Eve-in-Beijing-2975998
New Year in the Great Wall of China

ஏலேய் பரதேசி”
(என்ன ரொம்ப நாளைக்குப்புறம் மகேந்திரன் குரல் கேக்குது)
யார்ரா அவன் ஏக வசனத்தில் கூப்பிடுகிறது.
தெரிஞ்சிக்கிட்டே தெரியாத மாதிரி நடிக்கிறதுல உன்னை மிஞ்ச ஆளில்லடா பரதேசி.
சரிசரி சொல்றா மகேந்திரா என்னாச்சு ரொம்ப நாளாச்சு.
நீ இந்த தரித்திரம் பிடிச்ச சரித்திரத்தை கட்டிக்கிட்டு  இருக்கிறதால தான் நான் இந்தப் பக்கமே வரதில்ல.
அடப்பாவி மதுரைத் தமிழன் மாதிரியே பேசறியே .சரிசரி இப்ப மட்டும்  எதுக்கு வந்த?”.
அதுவா எதோ கனவு காண்றதப் பத்தி சொன்னேல்ல, அதான் வந்தேன்.
சரி அதுக்கு என்ன?”
இல்ல அந்தக் கனவுக்கு நல்ல தலைப்பு ஒண்ணு தோணுச்சு. அதான் சொல்லிறலாம்னு வந்தேன்.
கனவுக்கு தலைப்பா சரிசரி சொல்லு சொல்லு (ஐயையோ என்ன சொல்லப் போறானோ புது வருஷமும் அதுவுமா).
இல்ல சாமுராய் வீரனோட சண்டை போட்ட மாதிரி கனவு வந்துச்சுல அதுக்குத்தான் ஒரு தலைப்பு தோணுது.
சரி சீக்கிரம்  சொல்லுறது. நான் இன்னும் ஒரு பக்கம் எழுதி முடிக்கணும்.
இப்படி தலைப்பு வச்சா என்ன? "யாம குச்சியும் ஓமகுச்சியும்" நல்லாத்தான் இருக்கு ஆமா அதில யாமகுச்சி யாரு?”
          அதாண்டா அந்த சாமுராய் வீரன் பார்பரா காதலன்.
அப்ப ஓமக்குச்சி?”
அத வேற கேட்கணுமா? அது நீ தான்.
அட நாதாரி இதுக்கா என்னை காலைல எழுப்பிவிட்ட. உன்னை ஊர்ல வந்து கவனிச்சுக்கிறேண்டா”.  
இந்த புல்தடுக்கிக்கு என்ன திமிர் பாருங்க. இனிமே அவன் போன் பண்ணா எடுக்கக் கூடாது.
பீஜிங்கில் புத்தாண்டு பிறந்தது. நான் எழுந்து ரெடியாகி வெளியே வர "ஹேப்பி நியூ இயர்"என்று சொல்லி எழுந்து கைகுலுக்கினான் லீ. ஹேப்பி நியூ இயர் என்று வாழ்த்திவிட்டு இருவரும் சிற்றுண்டி முடித்து வெளியே வந்தோம்.


என்ன லீ இன்னைக்கு எங்கே போகிறோம்.
நீ சொன்னபடி புது வருடமும் அதுவுமா உன்னை சில ஆலயங்களுக்கு கூப்பிட்டுப் போகிறேன். முதலில் கிறிஸ்தவ ஆலயம் அப்புறம் புத்தர் ஆலயம் அதற்கப்புறம் டாவோ ஆலயம் என்று.
சப்வேயில் இறங்கி பயணித்து பீஜிங்கின் பழமையான ஒரு கத்தோலிக்க ஆலயம் சென்றோம்.
Image result for Cathedral of the Immaculate Conception, Beijing
Cathedral of the Immaculate Conception
சுவானவுமென் ஆலயம் என்று (xuanwumen church) என்று சீன மொழியில் அழைக்கப்படும்  இந்த அழகான ஆலயத்தின் ஆங்கிலப் பெயர் "கதீட்ரல் ஆஃப் தி இம்மாக்குலேட் கான்செப்ஷன் (Cathedral of the Immaculate Conception) என்பது. இது பொதுவாக "தென்புறம் இருப்பதால் 'செளத் சர்ச்' என்றும் அழைக்கப்படும்.

பீஜிங்கின் மிகப்பழமையான இந்த ரோமன் கத்தோலிக்க ஆலயம் முதலில் கி.பி.1605-ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போதுள்ள கட்டிடம் 1904ல் கட்டி முடிக்கப்பட்டது. இது பரோக் ஸ்டைல் (Baroque style) கட்டிடக்கலையின் படி அமைந்துள்ளது.
Image result for Emperor Wanli
Emperor Wanli
"கி.பி.1605-ல் மிங் பரம்பரையைச் சேர்ந்த வான்ங்லி பேரரசர் தான் ஆட்சி செய்த 33 ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தைக் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கினார்"என்றான் லீ.

பரவாயில்லை சீனப் பேரரசர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருந்திருக்கிறார்கள். ஆனால் கம்யூனிச ஆட்சியில் இதை எப்படி இன்னும்விட்டு வைத்திருக்கிறார்கள் என்று லீயைக் கேட்டேன்.

-தொடரும்.