Thursday, May 7, 2015

வாட்ஸ் அப்பில் ரசித்த தத்துப்பித்து தத்துவங்கள் !!!!!!!!!!!!!!!

வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -2

3560782-indian-business-man-screaming-with-frustration


தத்துவம்-1:என்னதான் கருணாநிதி திமுக தலைவராய் இருந்தாலும், அவர் வீட்டுப் பசுமாடு "அம்மா" னு தானே கத்தும்.
தத்துவம்-2:என்னதான் ஏரோபிளேன் மேலே பறந்தாலும் பெட்ரோல் போட கீழேதான வரனும்.
தத்துவம்-3:உள்ளே போற வரைக்கும்தான் பிராந்தி, அது வெளியில வந்தா அதுக்குப்பேர் வாந்தி.
தத்துவம்-4: என்னதான் நாய் நன்றி உள்ளதுதான் என்றாலும் அதால "தேங்க் யூ" னு சொல்ல முடியாது.
தத்துவம்-5: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒன்றுதான் பெரிசு.
தத்துவம்-6: லஞ்ச் பாக்ஸ்ல லஞ்ச் எடுத்துப் போகலாம் ஆனால் ஸ்கூல் பாக்ஸ்ல ஸ்கூல் எடுத்துட்டுப் போகமுடியுமா?
தத்துவம்-7: நீ எவ்வளவு பெரிய பருப்பா இருந்தாலும் உங்க வீட்டு சமையலுக்கு பருப்பு கடையிலதான் வாங்கனும்.
தத்துவம்-8: பஸ் போய்ட்டாலும் பஸ் ஸ்டாண்ட் அங்கேயேதான் இருக்கும், ஆனா சைக்கிள் போய்ட்டா சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே வரும்.
தத்துவம்-9: டிக்கட் வாங்கிட்டு உள்ளே போறது சினிமா தியேட்டர். ஆனா உள்ள போய்ட்டு டிக்கட் வாங்கிறது ஆப்பரேஷன் தியேட்டர்.
தத்துவம்-10: க்ரீம் பிஸ்கட்ல கிரீம் இருக்கும் ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்காது.
தத்துவம்-11: பஸ்ல நீ ஏறினாலும் பஸ் உன் மேல ஏறினாலும் டிக்கட் வாங்கப் போறது நீதான்.
தத்துவம்-12: செல்போனில் பேலன்ஸ் இல்லேனா கால் பண்ண முடியாது, ஆனா மனுசனுக்கு கால் இல்லேனா, பேலன்ஸ் பண்ண முடியாது.
தத்துவம்-13: ஏர்டெல் மொபைல் வச்சிருந்தாலும் ஏர்செல் மொபைல் வச்சிருந்தாலும் தும்மும்போது  HUTCH-னு தான் சத்தம் வரும்.
தத்துவம்-14: ஊருக்கே கேட்கற மாதிரி சத்தமா குறட்டை விட்டாலும், உன் குறட்டையை உன்னால கேட்க முடியாது.
தத்துவம்-15: கோல்டு வச்சு கோல்டு செய்ன் செய்யலாம் ஆனா சைக்கிள் வச்சு சைக்கிள் செய்ன் பண்ண முடியுமா?
தத்துவம்-16: அயர்ன் பாக்ஸ் வச்சு அயர்ன் பண்ணலாம் ஆனா பென்சில் பாக்ஸ் வச்சு பென்சில் பண்ணமுடியுமா ?
தத்துவம்-17: ஷாம்ப்புக்கும் பாம்புக்கும் என்ன வித்தியாசம்? ஷாம்ப்பு போட்டா தலையில் நுரை வரும், பாம்பு போட்டா வாயில நுரை வரும்.
தத்துவம்-18: நீ எவ்வளவு பெரிய டான்ஸ் மாஸ்டரா இருந்தாலும் உன் சாவுக்கு நீ டான்ஸ் ஆடமுடியாது.
தத்துவம்-19: என்னதான் நாய்க்கு நாலுகால் இருந்தாலும், அதால கால் மேல கால் போட்டு உட்கார முடியாது.
தத்துவம்-20: போலிசுக்கும் பொறுக்கிக்கும் என்ன வித்தியாசம் அடி-தடி செஞ்சா பொறுக்கி, 'தடி-அடி' செஞ்சா போலிஸ்.

யார் ஆண்?
Nagarani, right, and her husband Kathirvel, had their son stolen in 1999 [Shaikh Azizur Rahman /Al Jazeera]

1.    ஆண் அழத்தெரியாதவன் அல்ல, கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்.
2.    அன்பில்லாதவன் அல்ல, அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்.
3.    வேலை தேடுபவன் அல்ல தன் திறமைக்கான அங்கீகாரத்தைத் தேடுபவன்.
4.    பணம் தேடுபவன் அல்ல, தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்.
5.    சிரிக்கத் தெரியாதவன் அல்ல நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்.
6.    காதலைத் தேடுபவன் அல்ல ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்.
7.    கரடுமுரடானவன் அல்ல நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன்..


தொடரும்

6 comments:

  1. ஷாம்ப்பு vs பாம்பு. அனுபவி... :)

    ReplyDelete
    Replies
    1. ஆரூர் கவிஞருக்கு குசும்புதான்.

      Delete
  2. ரசித்தேன் ....ஆனாலும் உங்க வீட்லகூட பருப்பு கடைக்கு போய்தான் வாங்கறீங்கலா அண்ணே !

    ReplyDelete
    Replies
    1. நானோ சிறியவன் , நான் மட்டும் என்ன விதி விலக்கா?

      Delete
  3. பலதும் கலகல...

    யார் ஆண்....? - சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.திண்டுக்கல் தனபாலன்.

      Delete