Monday, July 8, 2013

நியூயார்க்கில் பிச்சைக்காரர்கள் Part 2 : அலைகள் ஓய்வதில்லை


      தலைப்பைப் பார்த்ததும் நான் என்னைப்பற்றியே எழுதப்போகிறேனோ என்று கெக்கலி கொட்டி சிரிக்கும் நண்பர்கள் போன்ற எதிரிகளுக்கும், எதிரிகள் போன்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால், இது என்னைப்பற்றியதல்ல (டேய் நீயே ஒரு பரதேசி, நீ பிச்சைக்காரர்களைப் பற்றி எழுதுவது தேவையா?)
         சரி கதைக்கு வருவோம் .அது பெண் என்று தெரிந்து மேலும் அதிர்ந்தேன். அப்போது என் வாக்மேனில் ," உன் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர் தாங்கி நானிருப்பேன் "என்று  அபத்தமாய் ஒலித்ததும் கடுப்பாகி  அதை ஆஃப் செய்தேன் . அந்த சமயத்தில்தான் அந்த உருவம் என்னை நோக்கி நகர்ந்தது . நான் கேரஜின் மறு ஒரத்திற்கு சென்று ஒண்டியபோது , நாற்றம்  தாங்கமுடியாமல் , காலையில் சாப்பிட்டது ஓங்கரித்து கலர் கலராய் வெளியே வந்தது.
        அதை பார்த்ததாலோ என்னவோ,அந்த உருவம் மீண்டும் உட்கார்ந்து விட்டது. (நாற்றத்தை நாற்றத்தால் வென்ற நாயகன்னு ஒரு பட்டம் கொடுத்திரலாமா சேகர் ? மகேந்திரா  வேணாம் சொல்லிட்டேன் ஆமா) .எழுந்து உட்கார்ந்ததில் மீண்டும் அலை அலையாய், வேறென்ன நாற்ற அலைகள்தான் வந்து நாட்டியமாடின. இதிலே இப்ப என்னோட வாந்தி நாத்தம் வேற சேர்ந்திரிச்சு. இயேசு நாதர் சொன்ன “நல்ல சமாரியன்” கதை ஞாபகம் வந்தது. ஐயையோ ஆளவிடுசாமி. அதற்குள், அடுத்த ஸ்டாப் வர, தெறித்து ஓடி இறங்கி, இருமி வாயைத்திறந்து ஆசுவாசப்படுத்த முயல்கையில், என்னைப்போல் இன்னும் ரெண்டு அப்பாவிகள், நான் தடுக்குமுன் ஏற, தானியங்கி கதவுகள் மூடப்பட்டு வண்டி நகர ஆரம்பித்தது. ஐயோ பாவமே என்று நினைத்து மரபெஞ்சில் உட்கார்ந்தேன்.
அந்தப்பெஞ்சில் உட்கார்ந்திருந்த இருவர், நான் உட்கார்ந்ததும் சட்டென எழுந்து நகர்ந்தனர். ஏன் என்று யோசித்து, என்னை நானே பார்க்கையில் தான் தெரிந்தது. ஐயையையையையே என்மேலும் அந்த நாற்றம் ஒட்டிக் கொண்டிருந்தது.
        அதன் பின்னர் ஆபீஸ் போவதை  கைவிட்டு நடந்தே வீட்டுக்குச் சென்று, அந்த உடைகளை ஜாக்கிரதையாய்க் கழற்றி மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஒரு மணி நேரம் குளித்து துவட்டி துடைத்த பின்னரும், நாசியினடியில் அந்த ஓசி நாத்தம் மறையவில்லை. ம்க்கும்  ம்க்கும்  என்று அந்த நாள் முழுதும் மூக்கைச் செருமிக் கொண்டு மேலும் ரெண்டு தடவை வாந்தி வேறு எடுத்ததால் ஒன்றும் சாப்பிடவில்லை. சட்டென்று, அந்த துணி மூட்டையை ஒரு குச்சியில் எடுத்து வீட்டுக்கு வெளியே தூரம் சென்று அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்தபிறகுதான் கொஞ்சம் நிம்மதியாயிருந்தது.
         நியூயார்க்கைப் பற்றிய என்னுடைய பல கனவுகளிலும், எதிர்பார்ப்புகளிலிருந்தும் மேலும் ஒன்று கடுமையாக தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
        அதற்கப்புறம் கேரேஜ் காலியாக இருந்தால் ஒன்று A/c வேலை செய்யவில்லை மற்றொன்று நாத்தம் புடிச்ச ஹோம்லெஸ் ஒன்று அங்கே எழுந்தருளியிருக்கும் என்று தெரியுமாதலால், சீபோ என்று விட்டுவிடுவேன்.
       இவர்கள் யார்? ஏன் இப்படி தெருவில் அலைகிறார்கள்? அரசாங்கம் கவனிப்பதில்லையா? தன்னார்வ நிறுவனங்கள் இல்லையா? என்று பல கேள்விகள் என்  உள்ளத்தில் அலைபாய, இவற்றிற்கு விடைகண்டுபிடிக்க முனைந்ததில், சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.



4 comments:

  1. என்ன உண்மையோ!?

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்வதெல்லாம் உண்மை , உண்மையைத்தவிர வேறில்லை

      Delete
  2. அண்ணே என்னால நம்பவே முடியல .... எல்லா நாட்டிலும் பிச்சைகாரர்கள் இருப்பாங்கனு தெரியும் ஆனா இவ்ளோ கேவலமா இருப்பாங்கனு தெரியாது

    ReplyDelete
    Replies
    1. பெருமையை மட்டுமல்ல , சிறுமையையும் சொல்லனும்ல , தம்பி ஆனந்த் .

      Delete