Tuesday, August 6, 2019

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு !!!!!!!!!!!!

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு !!!!!!!!!!!! (மீள் பதிவு )

எச்சரிக்கை: சைவ உணவு சாப்பிடுபவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.
  1. Goat
வேர்களைத்தேடி பகுதி 46
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

"தம்பி சேகப்பாபோடா சீக்கிரம் போய் மட்டன் வாங்கிட்டு வந்துரு"என்றார் அப்பா ஒரு சனிக்கிழமை காலை வேளையில். நான் ஆறாவது படிக்கும் சமயம் அது. கடைக்குத் தனியாகச் சென்று மட்டன் வாங்கும் அளவுக்கு என்னைப் பெரிய பையனாக மதிக்கிறார் என் அப்பா என்று சிறிது மகிழ்ச்சியாக இருந்தாலும்காலையில் எழுப்பி விடுகிறார்களே என்ற சிறிது எரிச்சலும் வந்தது.
கீழத்தெருவுக்கு போகும் வழியில் கறிக்கடைகள் இருந்தன. அதில் முதல்கடை ரஹீம் கடை. எப்போதும் என் அப்பா அங்குதான் வாங்குவார். தேவதானப்பட்டி முழுவதற்கும் அது ஒன்றுதான் கறிக்கடைகள் இருக்கும் இடம். ஒரு நாலைந்து கடைகள் தான் இருக்கும். அப்போதெல்லாம் கோழிக்கறி கடைகள் கிடையாது. வீட்டுக்கு வீடு கோழி வளர்க்கும் போதுயாரு கடையில் போய் வாங்குவார்கள். முழுக் கோழியை வாங்கி அதனை அடித்து என் அம்மாவுக்கு சமைக்கத் தெரியாது. எங்கள் வீட்டில் 'லெகான்கோழிக்கறி வாங்குவதென்றால்பக்கத்து டவுணான பெரியகுளத்திற்குத் தான் போக வேண்டும்.  எனவே எங்கள் வீட்டில் வாரமிருமுறை,  சமயங்களில் மூன்று முறை (புதன்,சனி,ஞாயிறு) எப்போதும் ஆட்டுக்கறிதான்.  
மாட்டுக்கறிமூச்அது தெற்குத் தெருவில்தான் விற்கும் என்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோஅதைச் சாப்பிட்டும் பழக்கமில்லை. அது இன்றுவரை தொடர்கிறது.
ஒரு மஞ்சள் பையையும் பணத்தையும் வாங்கிக் கொண்டு  கிளம்பும் போது, "சேகப்பா பார்த்து வெள்ளாடுதான் வாங்கனும், வாலை இழுத்துப்பார்"என்றார். சரிப்பா என்று சொல்லிவிட்டு வெளியே சென்றேன்.
என் அப்பாவும் அம்மாவும் பாசமாக கூப்பிடும் போது 'சேகப்பாஎன்பார்கள். ராஜசேகர் என்னும் என் பெயரை (மாறிப்போன என் பெயரின் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்http://paradesiatnewyork.blogspot.com/2013/05/blog-post_17.html ) சுருக்கமாக 'சேகர் என்பதோடு'அப்பன்என்று விகுதி சேர்வதுதான் 'சேகப்பன்'. கோவம் வந்தால் என் அப்பா 'படவா ராஸ்கல்'என்றும் என் அம்மா "நீசப்பய"என்றும் செல்லமாகவும் (?) கூப்பிடுவார்கள். அய்யய்யோ கதை டிராக்  மாறுது.
நான் ரஹீம் கடைக்குச் சென்றபோதுஅப்போது தான் 'அஜரத்வந்து பிஸ்மில்லா சொல்லி,ட்டை கழுத்தில் அறுத்துஒரு அலுமினியக் கோப்பையில் அதன் ரத்தத்தை பிடித்துக் கொண்டிருந்தனர். ரத்தப் பொரியல் இருமலுக்கு நல்லது என்று என் ஆயா எப்போதாவது செய்வார்கள். இட்லியில் தொட்டுச் சாப்பிடுவோம். அப்ப சாப்பிட்டதோடு   சரி . அதன் பிறகு சாப்பிடவே இல்லை.
        ஏற்கனவே அறுக்கப்பட்டு, தோலுரிக்கப்பட்டுதொங்கிக் கொண்டிருந்த சற்றே பெரிய சைஸ் ஆட்டில்ஒரு சிறுவன் கறுப்புக் கலர் வாலை வைத்து தைத்துக் கொண்டிருந்தான். இதைத்தான் சொல்லிஎங்கப்பா எச்சரித்திருந்தார்.
என்னைப்பார்த்துவிட்டு ரஹீம் பாய், "வாங்க தம்பிவாத்தியாரு இன்னிக்கு வரலியா என்றார்". "இல்லை பாய்அதான் நான் வந்திருக்கேன்ல," என்றேன். “ ஒரு அஞ்சு நிமிஷம் பொறு இதோ ஆயிருச்சு”, என்று சொல்லிஆட்டைத் தொங்க விட்டுகை முஷ்டியால் தோலை அப்படியே உரித்தெடுத்தார். ஆட்டை இரண்டாக வகுந்து, “சார் வீட்டுக்கு தொடைக்கறிதான் தரனும்”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.  
  1. Sheep
“பாய், வெள்ளைதானே”என்றேன். வெள்ளை என்றால் வெள்ளாடு. "என்ன தம்பி உன் கண் முன்னாலதான வெட்டினேன்”, என்றார். தோலை உரித்தபின் வெள்ளாட்டுக்கும்செம்மறியாட்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது. ஆனால் சாப்பிடும் போது எனக்கு இன்னும் வித்தியாசம் தெரிந்துவிடும். வெள்ளாட்டைவிட செம்மறியாடு சற்றே விலை குறைவு.  பெரும்பாலானோர் வெள்ளாடுதான் கேட்பார்கள் என்பதால் தான்இந்த வாலை வெட்டி தைக்கும் வேலை.   
வெட்டிய கறியை வாங்கிக் கொண்டுவீடு திரும்பினேன் . எதற்காக வெள்ளாடுதான் (Goat)தான் சாப்பிடனும்னு சொல்றார்னு யோசித்துக் கொண்டே நின்ற போதுஅப்பா  தம்பிகளுக்கும் கோமனம் கட்டிவிட்டுமணப்பலகையில் உட்கார வைத்துநல்லெண்ணெயை தலையிலும் உடம்பிலும் நல்ல அரக்கப் பறக்க தேய்த்துவிட்டார். 'நல்லெண்ணெய்கண்ணில் வழிந்து எரிச்சலைக் கூட்டி 'கெட்டெண்ணெய்ஆனது. தலைக்குப் போடப்போகும் சீயக்காய் பொடியை (எங்கம்மா அரைத்தது) நினைத்தால் பகீரென்றது. கண்கள் விஜயகாந்த் போல ஆகிவிடும்.
ஒரு வழியாகக் குளித்து முடித்துபள்ளிக்குக் கிளம்பும் முன் (அப்போதெல்லாம் சனிக்கிழமையும் பள்ளி இருக்கும்) கொஞ்சம் தயக்கமாய் இருந்தாலும் என் அப்பாவிடம் கேட்டேன், "அப்பா எதுக்கு வெள்ளாடுதான் சாப்பிடனும் ? ", எனக்கேட்டபோதுஅருமையாக விளக்கினார் ஆசிரியர் அல்லவா.
"சேகர்வெள்ளாடு என்பது மிகவும் புத்திசாலியான மிருகம்காட்டில் எவ்வளவு தூரம் சென்றாலும்தனியாகவே வீடு வந்து சேர்ந்துடும். அதோடு எதை சாப்பிடனும் எதை சாப்பிடக் கூடாதுன்னு அதுக்கு நல்லாவே தெரியும். அதனால கண்டதைச் சாப்பிட்டு Sick  ஆவாது. ஆனா செம்மறியாடு (Sheep) அப்படியில்லை. அதுக்கு அவ்வளவு அறிவில்லை. தனியாப்போனா அவ்வளவுதான், காணாமப்போயிடும். தனியா வீட்டுக்கு வரவும் தெரியாது. அதுமட்டுமில்லைஎதை சாப்பிடனும் எதை சாப்பிடக்கூடாதுன்னும் தெரியாது. கண்டதைச் சாப்பிட்டுஉடம்பும்வயிறும் சரியில்லாமப்போய் செத்துப் போயிறும். Sheepக்குத் தான் Shepherd தேவை.  Goatherd ன்னு சொல்றதிலையே", என்று சொன்னார்.  ஐந்து அறிவுக்குள்ள இத்தனை வித்யாசம் இருக்கான்னு நினைச்சேன். அது சரி ஆறு அறிவுக்குள்ளும் எத்தனை வித்யாசம் பார்க்கிறோம் .
அடிக்கடி காணாப் போற நம்மள மாதிரி ஆட்கள்  இருக்கிறதாலதான், இயேசுநாதர் எப்பவும் ஒரு Lamb -ஐ துக்கி வச்சிருக்கார்னு நெனைக்கிறேன்.

 “அதோடு செம்மறியாடு அடிக்கடி செத்துப் போயிரதால சிலசமயம் கறிக்கடைக் காரர்கள் அதை யாருக்கும் தெரியாமல் விற்பதுமுண்டுஅது நோயால் செத்திருக்கும் என்பதால்  பிரச்சனை வரும்"என்றும் சொன்னார்.  
ஓ இதில இவ்வளவு பிரச்சனை இருக்கா என்று நினைத்துக் கொண்டு அன்றிலிருந்து இன்று வரை வெள்ளாட்டுக்கறிதான் சாப்பிடுவது. ஆனால் மட்டன் (Mutton) என்பது  பொதுவான பெயர்.செம்மறி ஆட்டோட இளம் குட்டிக்கு Lamb என்று பெயர். Goat ஓட இளம் குட்டிக்கு Baby Goat -ன்னு  பேர் . அதிலும் பெண் ஆட்டைவிட ஆண் ஆடுதான் நல்லா இருக்கும் - கெடாக்குட்டினு சொல்வாங்க. மாட்டோட இளம் குட்டிக்கு veal என்று பெயர். ஆனால் வீலென்று கத்திக் கொண்டு நான் விலகி விடுவேன்...
ஆமா எனக்கு ஒரு சந்தேகம் செம்மறியாடு தான் வெள்ளையாக இருக்கும். வெள்ளாடு  பெரும்பாலும் கறுப்பாகத்தான் இருக்கும். கறுப்பாக இருக்கும் ஆடை எதுக்கு வெள்ளாடுன்னு சொல்றாங்கன்னு புரியலயேதலையே  சுத்துது.

தொடரும் 

Thursday, August 1, 2019

பரதேசி ஒரு தெருப்பொறுக்கி


Image may contain: one or more people and outdoor
"சேகர் என் இரத்தம் கொதிக்குதுடா"
"அய்யய்யோ மகேந்திரா, என்னாச்சுடா, BP  செக் பண்ணியா?"
"டேய் கிண்டலா உனக்காகத்தான் என் மனசு கொதிக்குதுடா"
"ஏண்டா மகேந்திரா? எதுக்கு?"
"யார்றா சொன்னா உன்னை தெருப்பொறுக்கின்னு?, பரதேசின்னு சொன்னதையே என்னால தாங்க முடியல"
"பரதேசின்னு எனக்கு நானேதானடா பேர் வச்சேன் , நான்  பரதேசி தானடா,  சொந்த தேசம்விட்டு, வந்த தேசத்திலும் நொந்து, ஊர் ஊராகக்  சுத்தும் என்னை  பரதேசின்னு சொல்றதுதான் சரி"
"சரி, பரதேசிய விடு, தெருப்பொறுக்கின்னு சொல்றது?"
"ஆமாடா நான் தெருப்பொறுக்கிதான்"
"என்னடா உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா, பைத்தியக்கார ஆஸ்பத்திரியில வேலை கிடைச்சதுன்னு நீ சொல்லும்போதே நான் பயப்பட்டேன்"
"இல்லடா சுய நினைவோடதான் சொல்றேன்"
"யார்ரா உன்னை அப்படிக் கூப்பிட்டது"
'வேற யார் என் பார்யாள் தான்"
"அதுக்கு நீ ஒன்னும் எதிர்த்துக் கேக்கலயா"
"எதுக்குடா எதிர்க்கணும்?"
"என்னடா சொல்ற?”
"அவ  சொல்றது உண்மைதான அதனால சரிதான்னு ஒத்துக்கிட்டேன்.
அப்ப நீ நெசமாவே  தெருப்பொறுக்கிதானா ?"
"ஆமடா ஆமா"
"அய்யோ ஒரே குழப்பமா இருக்கே, டே சேகரு என்னடா அமெரிக்கா போய் இப்படி தெருப்பொறுக்கியா ஆயிட்டியே"
"இருடா விளக்கமா  சொல்றேன். கொஞ்சம் பொறுமையாக்கேளு"
"சீக்கிரம் சொல்றா, தூக்கம் வேற வருது"
          "நான் தெருவுல போகும்போது பல பொருட்கள் கிடைச்சிருக்கு. வாலட் கிடைச்சிருக்கு. அதப்பத்தி ஏற்கனவே என்னுடைய வலைப்பதிவில சொல்லிருக்கேன்"
"அதை என்னடா செஞ்ச"
          "அதை அவங்கவங்கட்ட  சேத்திட்டேன். சில சமயம் முக்கிய டாக்குமென்ட்ஸ் கிடைச்சிருக்கு . அதனையும் அவரவர்ட்ட கொடுத்திட்டேன். ஆனா சிறு சிறு பொருள் கிடைக்கும் அதை யாருக்குச் சொந்தம்னு தெரியாது. அதனால நானே வச்சுக்குவேன். இல்லைனா சர்ச்சுக்கு கொடுத்துருவேன்."
"வேற என்னென்ன கிடைச்சிருக்கு"
"பென்னி, நிக்கல், டைம், குவார்ட்டர், டாலர் பில் இப்படி நிறையக் கிடச்சிருக்கு"
          "அடேய் பரதேசி அங்கபோய் குவார்ட்டர் அடிச்சிப் பழகிட்டயா. அதுவும் தெருவில இருந்தா எடுத்துக் குடிக்கிற, நீ உண்மையிலயே தெருப்பொறுக்கிதாண்டா".
          "டேய் நான் குவார்ட்டர்ன்னு சொன்னது, அந்தக்குவார்ட்டர் இல்லடா, இங்க 25 பைசாவ குவார்ட்டர்னு சொல்லுவாங்க"
"அப்படி விளக்கமாச் சொல்லு,  அப்ப மத்ததத்தைப் பத்தியும் சொல்லு"
          "நிக்கல்னு (Nickel) சொன்னா அஞ்சு பைசா, டைம் (Dime) னு சொன்னா 10 பைசா, பென்னின்னு (Penny) சொன்னா ஒரு பைசா"
"சரி சில்லறையை விடு டாலர் நோட்டுக்கள் ஏதாவது கிடைச்சிருக்கா" 
"ஒரு டாலர் பில்லிருந்து 50 டாலர் பில் வரை கிடைச்சிருக்கு"
"அடேய் யாருக்கு வேணும் பில் டாலர் நோட்டைப்பத்திச் சொல்றா"
          "அடலூசு மகேந்திரா, டாலர் பில்னா டாலர் நோட்டுன்னு அர்த்தம். அத இங்க பில்னு (Bill) தான் சொல்வாய்ங்க"
"கைல நிக்காம செலவு ஆயிரதனால பில்னு சொல்றாய்ங்களோ"
“பரவாயில்லை மகேந்திரா நல்லா யோசிக்கிற"
          “50 டாலர் பில் வரை கிடைச்சுதா பரவாயில்லரா பரதேசி, பொறுக்கியே காலத்தை ஓட்டிரலாம் போல"
          "நீ சொல்றது உண்மைதாண்டா,  பொறுக்கியே காலத்தை ஓட்டுறவங்களும் இருக்காய்ங்க".
"என்னடா சொல்ற அங்கேயுமா?"
          "நிச்சயமா உதாரணத்திற்கு இங்கல்லாம் புதுப்பொருள் வாங்குனா பழைய பொருளை வெளியே வச்சுருவாய்ங்க, அது வேலை செய்ற  தரத்துல இருந்துச்சுனா, அது ஒரு ஸ்லிப் எழுதி வச்சிருவாய்ங்க. தேவைப்பட்டவங்க எடுத்துக் கொள்ளலாம்". சில பொருள்களை வெளியே வச்சுட்டு ஃப்ரீன்னு எழுதி வெளியே வச்சுருவாங்க".
          "அப்படியா என்ன மாதிரி பொருள் அப்படி வெளியே கிடைக்கும்?”
“ கட்டில், மெத்தை, கப்போர்டு, டிவி, மைக்ரோவேவ், மேசை, நாற்காலிகள், அலமாரி போன்ற பல பொருட்கள் கிடைக்கும். இதுல சில மெத்தை செய்யும் கம்பெனிகள் அவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு போய், உள்ளே இருக்கிறதை எடுத்து ரீசைக்கிளிங்  செய்து புது மெத்தை தைச்சு வித்துருவாய்ங்க. அது மட்டுமல்லாமல் இரும்பு காயலான் கடைக்காரங்க ஒரு டிரக்கில் நாலு தெரு சுத்துனா போதும் நிறைய கிடைச்சுரும். வீட்டுக்கழிவுகள் மற்றும் ரீசைக்கிளிங் தினங்களில் இப்படிப்பட்ட ட்ரக்குகளைப் பார்க்கலாம்.       
          “அது தவிர பிளாஸ்டிக் பாட்டில்கள், மற்ற பிளாஸ்டிக் கழிவுகள் வைக்கிற நாட்களில் பலபேர் தள்ளு வண்டிகளில் வந்து பிளாஸ்ட்டிக்  பாட்டில்களை மட்டும் பிரித்து எடுத்துட்டு போயிருவாங்க . ஏன்னா கடைகள்ள சில மெஷின்  வச்சிருப்பாங்க. அதுல போய் ஒவ்வொண்ணா போட்டா, ஒரு பாட்டிலுக்கு 5 சென்ட் கிடைக்கும். ஒரு வாரத்துல நூத்துக்கணக்கில் இவங்க சம்பாரிச்சுருவாங்க.
          "அப்படியா பரவாயில்லையே. ஆமா பரதேசி, டாலர் பணம் கிடந்தா கீழ எடுக்கிறது ஓக்கே. ஏண்டா ஒரு பைசா கிடைச்சாக்கூட  எடுக்கிற?"
          என்னடா அப்படி சர்வசாதாரணமா சொல்லிட்ட, 1982க்கு முன்ன அடிச்ச பென்னின்னா முழுசா காப்பர். அதோட மதிப்பு இப்ப 3 லிருந்து 4 பென்னி. தங்கம், வெள்ளிக்கு அப்புறம் காப்பர்தான் இப்ப விலை கூடிட்டிருக்கு. 1960-க்கு மேலே பென்னி கிடைச்சா அதோட விலை எகிறும். சில பென்னி ஆயிரம் டாலர் வரை போகும் தெரியுமா?
          "என்னடா சொல்ற இதுல இவ்வளவு விஷயம் இருக்கா" அப்படின்னா வொர்த் இல்லைனா தூக்கிப் போட்டிருவியா"
          “நோ நோ, அப்படிச் செய்ய மாட்டேன். ஏன்னா மோடி புண்ணியத்தில் நம்ம பொருளாதாரம் நல்லா இருக்கு”.
"என்னது பொருளாதாரம் நல்லா இருக்கா ? சொல்லவே இல்லை ,இங்க பெரிய பெரிய கோடீஸ்வரனெல்லாம்  தற்கொலை பண்ணிட்டு செத்துட்டு இருக்காய்ங்க உனக்குத்தெரியாதா ? "
          "அடே ரூபாய் மதிப்பு குறைய குறைய டாலர் மதிப்பு கூட்டிட்டுத்தான் இருக்கு, அதனால எங்க NRI  பொருளாதாரத்தைச் சொன்னேன்"
"ஓ அப்படி ஒரு ஆங்கிள் இருக்கா?
          அதனால கீழே பென்னி கிடைச்சாலும் அதோட இந்திய மதிப்பு 70 காசுடா, விடுவேனா? –
“ ஹலோ, ஹலோ எங்கடா போன? பயபுள்ள தூங்கிட்டான் போல இருக்கு”
முற்றும்

அறிவிப்பு .
வரும் 
சனிக்கிழமை ஆகஸ்ட் 3ஆம் தேதி நியூ ஜெர்சியில் நடக்கும் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் அடியேன் கலந்து கொண்டு கவிதையொன்று வாசிக்கிறேன் ..அருகில் வசிக்கும் நண்பர்கள் உங்களுக்கு விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம். 


Image may contain: 1 person
Add caption