Thursday, January 15, 2015

தைபிறந்தால் வலி பிறக்கும் !!!!!!!!!!!!!!!!! (ஒரு மீள் பதிவு)


GaneshTemple, Queens New York
            
"என்ன ஒரு மாதிரியா இருக்கீங்க", என்றாள் என் மனைவி.
       "நம்ம ஊரை ரொம்ப மிஸ் பண்றேன்"
       "என்ன இது திடிர்னு"
       "இல்லபொங்கல் பண்டிகை வந்துருச்சுஎன்னமோ தெரியல,இந்த வருஷம் ரொம்ப மிஸ் பண்ற மாதிரி இருக்கு"
       "சரிசரி வேலையைப் பாருங்க"
       ஜனவரி 11, சனிக்கிழமை சேப்பல் சர்வீசுக்கு காரைஎடுக்கும்போதுஎதிரே கண்ணே தெரியாத அளவுக்கு ஃபாகி (Fog)யாக இருந்தது. ஆஹா ஃபாகியுடன் போகி பண்டிகை களை கட்டிருச்சு என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் மனைவிபோன் செய்து, “சர்வீஸ் முடித்து சீக்கிரமாக வீடுவந்து சேரு, ரொம்ப ஹெவி மழை வருது”, என்றாள். 11 மணிக்கெல்லாம் வீடு திரும்பி எங்கும் வெளியே  முடியாமல் அடை காத்தேன். பேய் மழை நாள் முழுவதும் தொடர்ந்தது.
       ஜனவரி-12 ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்குச் சென்று விட்டு, “ஹிண்டு டெம்பிள்  போகலாமா”, என்றேன். ஒரு மாதிரியாய் பார்த்த என் மனைவியிடம், “இல்லல்ல, கேன்டீன் போனாபொங்கல் சிறப்பு சாப்பாடு கிடைக்கும்ல,” என்றேன். “அதெல்லாம் வேணா. பட்ஜெட்  இல்ல .வீட்டுல  எல்லாம் இருக்கு, காரை வீட்டுக்கு விடு”, என்றாள். ஒரு சர்க்கரைப்பொங்கல் செய்து தர முடியுமா”, என்றேன். “சுகரை வெச்சுட்டு சும்மாறு”, என்று சொல்லி வாயை அடைத்து விட்டாள். சோகம் நெஞ்சைப்பிழிந்தது.
       வீட்டில சாப்பிடுற மாதிரி கொறித்து விட்டு, என் மனைவிதூங்குவதற்குபெட்ரூமுக்குள் முடங்க, பிள்ளைகள் தங்கள் ரூமுக்குள் அடங்க, மெதுவாக காரை எடுத்தேன். ஃபிளஷிங்கில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, மிகச் சிரமப்பட்டு அரைமணி நேரம் அலைந்தபின் பார்க்கிங் செய்துவிட்டு கேன்டீனுக்குப் போனேன்.
The Hindu Temple's Popular Canteen
Ganesh Temple, Canteen.
       நீண்ட வரிசையில் காத்திருந்து என் முறை வந்ததும், “ஒரு சர்க்கரைப் பொங்கலும், ஒரு ஸ்பெஷல் மீல்ஸ்சும் வேணும்”, என்றேன் எச்சிலை முழுங்கிக்கொண்டே.
       “இன்னிக்கு மீல்ஸ் இல்லையே” என்றாள்  ஒரு கத்துக்குட்டி வாலன்டியர்.
       “சரி ஒரு சர்க்கரைப் பொங்கல் தாங்க”,
       “அதும் இல்லையே”.
       “உள்ளே கேட்டுப்பாருங்க ப்ளீஸ்”
“சர்க்கரைப்பொங்கல் இன்னிக்கு இல்லையே, சாரி”.
 அடச்சே இவ்வுளவு நேரம் லைனில் நின்னது இந்தப் பதிலுக்குத்தானா ? என்னது இந்த ஊரில எல்லாப் பண்டிகையையும், பிறந்த நாளையும் வீக்கென்டில தானே கொண்டாடுவாய்ங்க என்று யோசித்தபடி வெளியே வந்தேன்.
Dosa Hutt in Queens, New York.
       “தோசா ஹட்” கோயிலின் வெளியே இருந்தது. அங்கு போய், “ஒரு சர்க்கரைப் பொங்கல் கொடுங்க”, என்றேன்.
       “இன்னிக்கு இல்லையே, நேத்து இருந்துச்சு” என்றார்கள்.
       என்னடா இது ஒரு சர்க்கரைப்பொங்கலுக்கு இந்தப்பாடா. ஊரில எந்த ரெஸ்டாரன்ட்டுக்குப் போனாலும் கிடைக்குமே என்று ஏங்கினேன்.
       அங்க நம்ம நண்பர் ராஜாவைப் பார்த்தேன். NRI Today யில  மார்க்கெட்டிங் டைரக்டர். டிரவிடியன் டி வி  மூலம் பழக்கம்.
       “பொங்கல் வாழ்த்துக்கள் ராஜா “
       “உங்களுக்கும் உரித்தாகுக”
       “என்ன இந்தப்பக்கம்” 
       “சர்க்கரைப் பொங்கலும் ஸ்பெஷல் மீல்ஸ்சும் சாப்பிடலாம்னு வந்தேன். ஒன்னும் இல்லைங்கிறாங்க”
       ”கோயில்ல சங்கராந்தி பண்டிகையும், சிறப்புப் பூஜையும் புதன் கிழமை தான். ஆனா  ஸ்பெஷல் மீல்ஸ்  இருக்கான்னு தெரியல”
       புதன் கிழமை லீவைப்போட்டு, பொங்கலை கொண்டாடிரனும்னு என்று நினைத்த போதுதான் ஞாபகம் வந்தது அன்று ஒரு முக்கியமான கிளைண்ட் மீட்டிங் என்று. அட ராஜா வீட்டில  பொங்கல் இருக்குமே என்று நினைத்துக்கொண்டு, “அப்புறம் பொங்கலுக்கு உங்க வீட்டுல என்ன விசேஷம்”, என்றேன்.
       “இந்த வருஷம் எங்க வீட்ல எங்கம்மா தவறிட்டதால பொங்கல் இல்லை”, என்றார். ம்ஹூம் ஒரு இடத்திலயும் பேராது போலருக்கு.
“பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலும் இல்ல. ஒரு  கரும்பு கூட சாப்பிடாம ஊரை ரொம்ப மிஸ் பண்றேன் ராஜா”.
“கரும்பு இங்க கிடைக்குதே”
“அந்த வெள்ளை கரும்பு வேணாம். பல் டைஞ்சு போகும்”
“இல்ல இல்ல கருப்புக் கரும்பு தான்”
“எங்க எங்க எங்க”
Add caption
“ பக்கத்தில் கோல்டு சிட்டி என்ற கொரியன் கடையில் கிடைக்கும்”, என்று சொல்லி வழி சொன்னார்.  அங்கே போனேன். அட என்ன அதிசயம், அழகாய்த் துண்டுகள் போட்டு ஒரு பவுண்ட் 1.49  டாலர். மூன்று பெரிய துண்டுகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.

       அதற்குள் முழித்துவிட்ட என் மனைவி, “எங்க போன”, என்றவள் அப்படியே கரும்பையும்  பார்த்து விட்டு, “கரும்பெல்லாம் வேணாம். சுகர் கூடிவிடும்”, என்றாள்.
       வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, “சரி வடையாவது செஞ்சு கொடு” என்றேன்.
       மனது இறங்கியதோ என்னவோ, மெதுவடைகளை மொறு மொறுவென்று சுட்டுக்கொடுத்தாள். சூப்பராக இருந்தது. பசியும் அடங்கியது.

       இரவில் அவள் தூங்கப்போனபின், கரும்பைச் சாப்பிடலாம் என்று காத்திருந்தேன். அவள் சிரிப்பு டிவியில் உட்கார்ந்து சிரிப்பே வராத மொக்க ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.கொட்டாவி கொட்டாவியாய் வந்து நான் முதலில் தூங்கப்போனேன்.  கொட்டாவி விடும்போது தாடையில் லேசாக வலித்தது. ரெண்டு நாளாகவே வலிக்கிறது என்னவென்று தெரியவில்லை.
       ஜனவரி 13, திங்கள் காலை, என் மனைவியை பஸ் ஸ்டாப்பில் நானே விடறேன்னு சொன்னேன். “என்ன புதுசா அக்கறைன்னு”,கேட்டாள். விட்டு விட்டு தங்கமணி என்ஜாய்ன்னுட்டு வேகமாக வந்து கரும்பை எடுத்துக்கடித்தால் பல்வலி உயிரே போய் விட்டது. பார்த்தால் ஏதோ விஸ்டம் டூத் போலத் தெரிந்தது. மறுபடியும் லேசாக முயன்று பார்த்தேன். வாயைத்திறக்கவே முடியல. கைக்கெட்டியது வாய்க்கு எட்டலைன்னு சொல்வாங்க. வாய்க்கும்எட்டியது. ஆனால் கடிக்க முடியலயேயேயேயே.... வீட்டுக்கு வந்து யாராவது இந்த கரும்பை எடுத்திட்டுப்போங்க.

“தை பிறந்தா வழி பிறக்கும்”னு சொல்வாங்க எனக்கு தைபிறந்தா வலி பிறக்கும்னு ஆயிப்போச்சு.


pongal greetings in tamil

அன்பு நண்பர்கள் யாவருக்கும் என் இனிய பொங்கல் நல் 

வாழ்த்துக்கள் .

அன்பும் அமைதியும் , அருளும்  பொருளும் , பொங்கல் 

பொங்குவது போல் உங்கள் இல்லங்களில் பொங்கி 

வழியட்டும் .வாழ்க வளமுடன் . 
                  
      

18 comments:

  1. நல்ல நகைச்சுவை..
    வாழ்த்துக்கள்க்கு நன்றி நண்பரே..
    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் இளங்கோ , உங்களுக்கும் உரித்தாகுக .

      Delete
  3. அப்பப்பா பொங்கலுக்காக நீங்க பட்ட கஷ்டம் கண்ணில் கண்ணிரை வர வைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை எனக்காக கண்ணீர் விட ஒரு ஜீவன் இருப்பது மகிழ்ச்சி .

      Delete
  4. சர்க்கரை வேறு இருக்கிறதா...?

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நான் ரொம்ப ஸ்வீட்டான பையன் .

      Delete
  5. அடடா..... பல் வலி போன பின் கரும்பு சாப்பிட வழி பிறக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. பல் வலி போனாக்கூட போயிரும் , அமெரிக்காவில் இந்த பில்(bill) வலி போகவே போகாது.

      Delete
  6. அண்ணே ஏதாவது மாற்றம் செய்தீர்களா,, உங்க ப்ளாக் மொபைல் ஸ்கிரினுக்கு பிட் ஆக மாட்டிது. படிக்க முடியல

    ReplyDelete
  7. இல்லையே தம்பி ஆனந்த்

    ReplyDelete
  8. பொங்கலுக்கு.... ச்சே.... உங்களுக்கு வந்த சோதனை யாருக்கும் வரக்கூடாது....

    ReplyDelete
    Replies
    1. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி .
      வருகைக்கு நன்றி அருணா செல்வம்.

      Delete
  9. ஹ்ஹ்ஹஹ் செம பொங்கல்...பொங்கல் இல்லாமலேயே "பொங்கல்" ஆட்யிடுச்சு போல.....பொங்கலுக்காக நீங்கள் அலைந்த கஷ்டம்..."பொங்கலோ பொங்கல்" ஹஹ்

    ReplyDelete
    Replies
    1. என்னோட கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா ?
      வருகைக்கு நன்றி துளசிதரன் .

      Delete
  10. சார்

    நீங்க ரொம்பவும் பொங்கி எழுதியிருப்பது புரிகிறது . பொங்கலைக் கொண்டாட நீங்கள் பட்ட அவஸ்தையை நகைச் சுவையோடு சொல்லியிருக்கிறீர்கள் . நம்ம ஊரை நினைச்சு ஏங்குற உங்க ஆதங்கமும் பொங்கித் தெரியுது . சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போலாகுமா?

    ReplyDelete
  11. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வராது சார்லஸ்.
    ஆனால் இங்கு பிடித்திருப்பது புலிவாலை அல்லவா ?

    ReplyDelete