Monday, June 8, 2015

வாட்ஸ்அப்பில் விஜயகாந்த் !!!!!!!!!!!!!!!!!


வாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3



விஜயகாந்த் பதில்கள்:
ஆசிரியர்: ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்?
விஜயகாந்த்: ஆரஞ்சுபழக் கலர் ஆரஞ்சு ஆனா ஆப்பிள்பழக் கலர் ஆப்பிள் இல்ல.
********************************************************
ஆசிரியர்: இயேசு, கிருஷ்ணா, காந்தி, புத்தர் இவர்களுக்கு உள்ள பொதுவான அம்சம் என்ன?
விஜயகாந்த்: எல்லாருமே கவர்ன்மென்ட் ஹாலிடேய்ஸ்ல பிறந்தவங்க.
*******************************************************************
ஆசிரியர்: காந்தி ஜெயந்தியைப் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
விஜயகாந்த்: காந்தி ஒரு மாமனிதர் ஆனால் ஜெயந்தியைப்பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது.
****************************************************************
ஆசிரியர்: கிரிக்கெட் பற்றி ஒரு கட்டுரை வரைக.
விஜய்காந்த்: மழை காரணமாக கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது.

******************************************************
Watch WhatsApp status messages of Vijayakanth


விஜயகாந்த்: என்னோட மொபைல் பில் எவ்வளவு?
கால்சென்ட்டர் பெண்  : சார் 123-க்கு டயல் பண்ணா உங்களோட கரண்ட் பில் ஸ்டேட்டஸ் தெரியும்.
விஜயகாந்த்: ஸ்டுப்பிட், மொபைல் பில்லைப் பத்திக் கேட்டா கரண்ட் பில்லைப்பத்தி சொல்றியே.
**************************************************************************
விஜயகாந்த் லண்டன் பயணத்தை முடித்துவிட்டு வந்து மனைவியிடம் கேட்டார்.
விஜயகாந்த்: என்னைப் பாத்தா ஃபாரினர் மாதிரியா தெரியுது?
மனைவி: இல்லையே.
விஜய்காந்த்: பின்ன ஏன் லண்டன்ல ஒரு லேடி என்னை ஃபாரினரானு கேட்டுச்சு.
*****************************************************
விஜயகாந்தும் மனைவியும் காஃபி ஷாப்புக்கு போனார்கள். விஜயகாந்த் மனைவிக்கு சூடான காபி வாங்கிக் கொடுத்து சீக்கிரம் குடிக்கச் சொல்லி சொன்னாராம்.
மனைவி: ஏன் இப்படி அவசரப்படுத்துறீங்க?
விஜய்காந்த்: ஹாட் காஃபி $5, கோல்டு காஃபி $10 ன்னு போட்டுருக்கு

********************************************************************



ஜெராக்ஸ் காப்பி எடுத்தவுடன் விஜயகாந்த் என்ன செய்வார்?
ஒரிஜினலோட காப்பியை ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கான்னு சரி பார்ப்பார்.
**********************************************************************
யாரோ: சிக்கன் முதல்லவருமா முட்டை முதலா வருமா?
விஜய்காந்த்: எதை முதல்ல ஆர்டர் செய்யறியோ அதாண்டா முதல்ல வரும்.
*******************************************************************



விஜய்காந்த் SB அக்கவுண்ட் ஓபன் பண்ண பேங்குப் போனாராம். அந்த அப்ளிகேஷனைப் பார்த்துட்டு உடனே கிளம்பி டெல்லி போனாராம் ஏன் தெரியுமா? அப்ளிகேஷன்ல "Fill up in Capital"-னு போட்டிருஞ்சாம்.










14 comments:

  1. ஹாஹா..... அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  2. சிரித்து சிரித்து... ஹா.... ஹா.... செம...

    ReplyDelete
    Replies
    1. என்ன உங்களுக்கு அவ்வளவு சிரிப்பு , எங்க ஊருக்காரர்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா ?

      Delete
  3. Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி சென்னை பித்தன்.

      Delete
  4. அப்படி என்ன கோபம் உங்களுக்கு விஜயகாந்த் மீது ?

    ReplyDelete
    Replies
    1. ஐயையையோ , எழுதியவன் நானில்லை, அதை கொஞ்சம் ரசித்து விட்டேன் .ரசித்தவற்றை இங்கே போட்டுவிட்டேன், அவ்வளவுதான் .

      Delete
  5. எனக்கு ரெண்டு சந்தேகம் -
    (1) தன் இடத்தைப் பிடித்துக் கொண்டதாக சர்தார்ஜி கேப்டன் மேல கோபமா இருக்காராம்ல?
    (2) சர்தார்ஜி ஜோக்ஸ் தடைசெய்யப்பட்டது போல இனி கேப்டன் ஜோக்ஸ் தடைசெய்யப்படுமானு வாட்ஸப், முகநூலில் நிறையப்பேர் உடனடியா ஃபார்வேர்டு செய்றாங்களாமே?
    மொத்தத்தில் நல்ல நகைச்சுவைத் தொகுப்புக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. சர்தார்ஜி ஜோக்குகளையும் சரி கேப்டன்ஜி ஜோக்குகளையும் சரி இனிமேல் தடை பண்ண வழியில்லை .
      முதல் முறை வருகை தரும் கவிஞர் முத்து நிலவன் அவர்களுக்கு
      என் நன்றிகள் .

      Delete
    2. உங்கள் புதுகை வருகையை ஒட்டி, இரண்டாம் முறையும் படித்து உருண்டு சிரித்துவிட்டேன். (என் மனைவி வேற ஊர்ல இல்ல..ராததிரி ஒன்றரை மணிக்கு என்னங்க உங்க வீட்டுல யாரோ சிரிக்கிற சத்தம்?“னு அடுத்த வீடடுக்காரங்க கேட்டா நீங்கதான் வந்து சாட்சி சொல்லணும் இப்பவே சொல்லிட்டேன்..) நல்ல வெரைட்டி எழுத்தாளர்ங்க நீங்க..

      Delete