Tuesday, February 28, 2017

இலங்கை சுரண்டப்பட்ட 465 ஆண்டுகள் !!!!!!!!

இலங்கையில் பரதேசி - பகுதி -4

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/02/blog-post_21.html

Image result for portuguese in colombo
Portuguese in Colombo
பேரைக் கேள்விப்பட்டதில்லை என அம்ரி சொன்னதும் திடுக்கிட்டுப்போன நான், என்னுடைய டிராவல் ஃபைலைத் தேடி எடுத்து முகவரியைச் சொன்னேன் . “லவினியா தெரியும் அங்கு போய், சரி கண்டுபிடிக்கலாம்”, என்று சொன்னவுடன் தான் எனக்கு உயிர் வந்தது.
கார் லவினியாவுக்கு விரைந்து செல்ல, கொழும்பின் மீதி வரலாற்றைப் பார்ப்போம்.
போர்த்துக்கீசியர் கொழும்பு பகுதி, கோட்டே மற்றும் கடற்கரைப் பகுதிகள் அனைத்தையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அவர்கள் கிபி.1505 முதல் கிபி.1656 வரை, 150 வருடங்கள் கொழும்புவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
Related image
Colombo Fort during Portuguese time
ஆனால் மலைப்பிரதேசமான கண்டி ராஜ்யம் தனியாகவே இருந்தது. போர்த்துக்கீசியர் அதனைப் பிடிக்க முயன்று கைவிட்ட நிலையில், கிபி.1638ல் டச்சுக்காரர் உள்ளே நுழைந்தனர். போர்த்துக்கீசியர் கொழும்பில் ஆதிக்கம் செலுத்தியதால் அவர்கள் கண்டி சென்று அதனை ஆண்ட அரசர் இரண்டாவது ராஜசின்ஹாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி போர்த்துக்கீசியருக்கு எதிரான போரில் டச்சுக்காரர்கள் உதவ வேண்டும். அதற்கு பிரதிபலனாக தீவுகளின் வர்த்தகப் பொருட்களின் ஏகபோக உரிமை டச்சுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டது. டச்சுக்காரர்களோடு இணைந்த கண்டிப்படை போர்த்துக்கீசியரை தொடர்ந்து தாக்கத்துவங்கியது. முதலில் போர்த்துக்கீசியர் அவர்களைக் கடுமையாக எதிர்த்துப் போராடினாலும் 1639 முதல் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பகுதிகளை இழக்கத் தொடங்கினார்கள்.
Image result for Dutch in colombo
Dutch Hospital in Colombo
ஆனால் நீண்ட நெடிய முற்றுகைக்குப்பின் கிபி.1656ல் தான் கொழும்பின் கோட்டையை அவர்களால் பிடிக்க முடிந்தது. அதன் உள்ளேயிருந்த கடைசியாக உயிர் பிழைத்திருந்த வெறும் 93 போர்த்துக்கீசியர் கோட்டையைவிட்டு பத்திரமாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட பகுதிகளை டச்சுக்காரர் முதலில் சிங்கள அரசர்களுக்கு கொடுப்பது போல பாவனை செய்தாலும், இலங்கைத்தீவின் இலவங்கம் விளையும் நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதோடு கொழும்புவை தங்கள் தலைநகரமாக மாற்றிக் கொண்டார்கள். இதுவே டச்சுக்காரர்கள் ஆக்கிரமித்த எல்லா இடங்களுக்கும் உரிமை பெற்ற டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை யிடமாகவும் விளங்கியது.  
இந்த கிழக்கிந்திய கம்பெனின்னு கேட்டாலே எரிச்சல் தான் வருகிறது.  வணிகம் செய்ய வந்து நம்முடைய ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சியால் எத்தனை நாடுகளைப் பிரித்துக் கொண்டனர். ஆங்கிலேயரும் டச்சுக் காரர்களும் ஒரே பெயரை வைத்துக் கொண்டது தற்செயல் நிகழ்வாக இருந்தாலும் அவர்கள் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டது தற்செயல் நிகழ்வல்ல.
சுதந்திரம் வாங்கி 68 ஆவது குடியரசு நாளை இப்போது கொண்டாடினாலும் இந்த ஒற்றுமை உணர்வுதான் இன்னும் வரவில்லை. குறிப்பாக தமிழகத்தில். அப்படியே தப்பித்தவறி ஒற்றுமையுடன் ஜல்லிக்கட்டுப்புரட்சி போன்று ஒரு எழுச்சி நடந்தாலும் அதனை அடக்குமுறை கொண்டு லத்தியால் அடித்தே காலி பண்ணிவிடுகிறார்கள். அதற்கு மேல் பொய் வழக்குகள் வேறு.
Image result for Dutch rule in colombo
Admiral Joris van Spilbergen meeting King Vimala Dharma Suriya ~ 1602.
கி.பி.1633-ல் உள்ளே நுழைந்த டச்சுக்காரர்கள் இலங்கையை பிச்சுப்பிச்சு ஆக்ரமித்து, 1796 வரை ஏகபோக உரிமையுடன் 168 ஆண்டுகள் சுரண்டினார்கள் . வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு என்ற கூற்றுப்படி, கி.பி.1796-ல் டச்சுக் காரரை  ஆங்கிலேயர் தோற்கடித்து கொழும்புவை கைப்பற்றிக் கொண்டனர். ஆங்கிலேய அரசின் ராணுவத் தலைமையிடமாக அது இருந்தது.  
வெகுண்டெழுந்த கண்டி ராஜ்யம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி, நவீன ஆயுதங்கள் முன் ஒன்றும் செல்லுபடியாகாமல் கி.பி.1815ல் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆங்கிலேயருக்கு வழிவிட்டது.  கண்டி கொழும்புவினை இணைத்து கொழும்பைத் தலைநகரமாகக் கொண்டு அமைந்தது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம். இப்போதிருக்கிற பெரும்பாலான பழைய கட்டிடங்கள் ஆங்கிலேயர் கட்டியது. 1948-ல் சுதந்திரம் கொடுக்கும் வரை சுமார் 150 ஆண்டுகள் ஆங்கிலேயே ஆதிக்கம் நீடித்தது. போர்த்துக்கீசியர், டச்சுக்காரர் அதன்பின் ஆங்கிலேயர் என்று ஐரோப்பியர்களின் ஆதிக்கம் இலங்கைத் தீவில் கிட்டத்தட்ட 465 ஆண்டுகள் இருந்தது என்று நினைக்கும் போது அது எவ்வளவு பெரிய அவலம் என்று ஆச்சரியமாக இருந்தது.
Image result for British rule in colombo
British Victory in Colombo
சுதந்திரத்திற்குப்பின் இலங்கையில் தன்னாட்சி வந்தவுடன் மடமடவென்று நாட்டில் கலாச்சார புரட்சி ஏற்பட்டு நாடு திருத்தியமைக்கப்பட்டது. சட்டம், பாரம்பரியம், வழக்கம், உடை, மதம், பெயர்கள் என்று முற்றிலும் மாறிப்போன ஒரு சமுதாயம் மெதுவாக தன்னிலைக்கு திரும்பினாலும் அந்த மூன்று அந்நிய சக்திகளின் தாக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
இப்போது கொழும்பில் பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மக்கள் சதவீதம் என்று பார்த்தால் சிங்களர் 42 சதவீதமும், இலங்கை பூர்விகத் தமிழர் 29 சதவீதமும், மூர் சமுதாயம் 24 சதவீதமும் இருக்கின்றனர். அது தவிர இந்தியத் தமிழர், மலாய், இலங்கை செட்டி, பரதர்கள் ஆகியோரும் இங்கு வசிக்கின்றனர்.
          குறுகிய மலைப்பாதையில் மேடு பள்ளங்களைத் தாண்டி, பயணித்தது அம்ரியின் கார் அல்லது வேன். மிகவும் குறுகிய தெருக்களைத் தாண்டி அடிக்கடி நிறுத்தி கேட்டுக்கேட்டு அந்த அட்ரஸைக் கண்டு பிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம்.
அதில் உள்ள போன் நம்பரை எடுத்து அம்ரியின் செல்போனில் கூப்பிட்டுப் பார்த்தாலும் யாரும் எடுக்கவில்லை.
யாரிடம் கேட்டாலும் சமன்கா  கெஸ்ட் ஹவுஸ் கேள்விப்பட்டதில்லை என்றே சொன்னார்கள். ஒருவழியாக 7 மணியிலிருந்து 10 மணிவரை தேடி அந்த முகவரிக்கு வந்து சேர்ந்தோம்.
ஆனால் அந்த முகவரியில் எந்த கெஸ்ட் ஹவுசும் இல்லை. ஒரு வீடுதான் இருந்தது. வீட்டில் ஆட்கள் நடமாட்டமும் ஒன்றுமில்லை. காலிங் பெல் இருந்தாலும் அதுவும் வேலை செய்யவில்லை. பலமுறை உரத்துக் கூப்பிட்டபின் ஒரு வயதான அம்மா வெளியே வந்தார்கள். யார் வேனும் என்று கேட்டதற்கு “சமன்கா கெஸ்ட் ஹவுஸ் இதுதானே”, என்றேன்.  “நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை” என்றாள் மூதாட்டி.
தொடரும்>>>>>>>>


Thursday, February 23, 2017

'கலைஞரின் ரோமாபுரிப் பாண்டியன்'

Image result for Karunanidhi writing
படித்ததில் பிடித்தது

'ஆடி அடங்கும் வாழ்க்கை' இது என்பதற்கு சிறந்த உதாரணம் கருணாநிதி, அதிகமான படிப்பு இல்லை. திடகாத்திரமான உருவம் இல்லை, இள வயதில் வழுக்கை, பாரம்பர்யமில்லாத குடும்பம், தென் பகுதியில் ஒரு சிறிய ஊர், இவையெல்லாவற்றையும் மீறி அதீத திறமை. தமிழறிவும், இலக்கிய அறிவும், பேச்சுத்திறமையும், இலக்கியத்திறமையும் எங்கிருந்து வந்தது என்று நினைத்தால் ஆச்சரியம். தமிழ் மக்களை ஈர்த்த அவருடைய கனல் பறக்கும் வசனங்கள், திராவிட இயக்கத்தின் பகுத்தறிவுப் பாதையில் இறுதி வரை பிடிப்பு, அண்ணாவின் தளபதிகளில் ஒருவர் ஆகியவை இருந்தாலும் அண்ணாவின் காலத்தில் அவரை அண்ணாவின்  ஒரே வாரிசு அல்லது அண்ணாவுக்கடுத்து இரண்டாமிடம் என்று அவர் நினைக்கவில்லை, ஏன் அண்ணாவே நினைக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும் அண்ணாவின் மறைவுக்குப்பின் நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற பலர் இருந்தாலும் அவரே முன்னிலைப்படுத்தப்பட்டு முதல்வர் ஆனது வரலாறு. ஆனால் ஒத்துக்கொள்ள வேண்டிய பேருண்மை என்ன என்றால் திமுக வேறு யாரிடம் போயிருந்தாலும் இவ்வளவு நாள் நிலைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
Image result for ரோம் நகரத்தில்  கலைஞர் கருணாநிதி
Add caption
பொது நலம். சுயநலமாகி ஊழலில் சிக்கி, பதவியிழந்து, எம்ஜியாரையும் சமாளிக்க முடியாமல் ஏன் ஜெயலலிதாவையும் சமாளிக்க முடியாமல் திணறி, தன்னுடைய வாரிசாக தன் மகனையே கொண்டு வந்துஅறிக்கைகளால் மட்டும் வாழ்ந்து மூன்று தலைமுறையாக ஆதிக்கம் செய்த மாபெரும் சகாப்தம் இப்போது அமைதியாக அடங்கிவிட்டது. மு.க ஸ்டாலின் செயல் தலைவராக இயங்க, செயல்படாத தலைவராக வீட்டில் முடங்கிவிட்டார் கருணாநிதி.

இந்தச் சூழ்நிலையில் அவருடைய அரசியல் முகம் மறைந்து விட்டாலும் அவரின் இலக்கிய முகத்தைப்பற்றி கொஞ்சம் அறிந்து  கொள்ளும் ஆர்வத்தில் தொடர்ந்து அவருடைய படைப்புகளை வாங்கிப் படித்து வருகிறேன். அதில் ஒன்றுதான் "ரோமாபுரிப் பாண்டியன்.

1974-ல் முதன்முதலில் இந்தப் புத்தகம் வெளிவந்த போது  கலைஞர் முதல்வராய் அமர்ந்திருக்கிறார். அரசியல் அழுத்தங்கள் ஆயிரம் இருந்தாலும் எழுத்துப்பணியை எப்படித்தான் தொடர்ந்து செய்தாரோ என்ற  ஆச்சரியம் எழுகிறது. இப்போது 2014ல் ஆறாவது பதிப்பாக "பாரதி பதிப்பகத்தில்" வெளியிடப்பட்டிருக்கும் புத்தகத்தை கடந்த வருடம் சென்னை வந்திருக்கும்போது "புத்தகவிழாவில் வாங்கினேன்.

இது, முதலில் முரசொலியிலும் அதன்பின் குமுதம் இதழிலும் தொடராக வந்திருக்கிறது. புத்தகமாக வெளியிட்ட போது தலைமையேற்றவர் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். நூலை வெளியிட்டது தலைமை நீதிபதி அனந்த நாராயணன், முதற்படியைப் பெற்றுக் கொண்டது, கவிஞர் கண்ணதாசன். அவர்கள் ஆற்றிய உரைகளும் புத்தகத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன.
Image result for Karunadhi in suit
With Kannadasan 

இந்த நூலின் தலைப்புத்தான்  என்னை முதலில் படிக்கத் தூண்டியது. ரோமாபுரியில் ஒரு பாண்டியன் இருந்தானா ?  அல்லது சென்றானா? என்று. வரலாற்றுப் பின்னணியில் நாவலை எழுதும் போது வரலாற்று நிகழ்வுகளை மாற்றாமல் எழுத வேண்டும்.  அதில் சிறிது கற்பனையையும் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களோடு கற்பனைக் கதாப்பாத்திரங்களையும் இணைத்து எழுதப்படுவதுதான் ஹிஸ்டாரிக்கல்  ஃபிக்சன்  (Historical Fiction).
Image result for ரோமாபுரி பாண்டியன்

அந்த வகையில் எழுதப்பட்ட இந்த நெடிய நாவலின் கதையின் காலம் கிமு.30 லிருந்து கி.மு.20 வரை ஆகும். கி.மு.20ல்  பாண்டியப்பேரரசன் ஒருவன் தனது தூதுவனை ரோமாபுரிக்கு அனுப்பினான் என்ற வரலாற்றுக் குறிப்பினை எடுத்துக் கொண்டு அதனைச் சுற்றி இந்த நாவல் பின்னப்பட்டிருக்கிறது.  இதில் வரும் வரலாற்றுப் பாத்திரங்கள், சோழப்பேரரசன் கரிகால் பெருவளத்தான், பாண்டியப்பேரரசன் பெருவழுதி, வேளிர்குடி அரசன் இருங்கோவேள், ரோமப்பேரரசர் அகஸ்டஸ் சீசர், கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆகியோர் (பட்டினப் பாலை பொருநராற்றுப்படை)

கற்பனைப் பாத்திரங்கள் தாமரை, முத்துநகை, களிக்கண்ணனார் செழியன், நெடுமாறன் ஆகியோரும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிண்றனர்.

நாவல் முழுவதும் அந்தக்கால நாகரிகம், ஆடை அணி கலன்கள் சமூகப்பொருளாதார நிலை என்று பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது.கரிகால் பெருவளத்தான் காலத்தில் பூம்புகார் எவ்வளவு சீரும் சிறப்புமாக இருந்தது என்பதில் பெரிதும் ஆர்வம் கொண்ட கலைஞர் அங்கு ஒரு நினைவகம் அமைத்தது குறிப்பிடத்தக்கது. அதன் இப்போதைய நிலைமை என்னவென்று தெரியவில்லை. அதே மாதிரி மதுரை மற்றும் அதன் துறைமுகம் கொற்கையும் விளக்கப்பட்டிருக்கிறது. கொற்கையின் முத்துக்களின் உலகளாவிய புகழ் மற்றும் முத்து அணிகலன்களாக, முத்துக்கடுக்கண், முத்துக்கண்டி, முத்துச்சல்லி ஆகியவற்றை குறிப்பிடுவதோடு முத்துவால் செய்யப்பட்ட மருந்துகளான, முத்துக்கற்கம், முத்துச் சுண்ணம், மணப்பந்தலில் தூவக்கூடிய முத்து மணலையும் குறிப்பிடுகிறார்.

அதோடு அங்கு கிடைக்கும் சிப்பிகளான இடம்புரி, வலம்புரி, சலஞ்சலங் சங்கு, பாஞ்ச சண்ணியம் ஆகியவற்றையும் விளக்குகிறார். கொற்கையின் அங்காடியில் பலவித மொழிகள் பேசும் வணிகர்கள் வந்து சென்றதையும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ததையும் எழுதுகிறார்.

பாண்டியனின் இன்னொரு பெயர் 'பஞ்சவர்' என்றும் பாண்டிய நாட்டிலே, குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை போன்ற ஐவகை நிலப்பகுதிகளையும் ஆண்டவர் என்பதால் அந்தப் பெயர் என்று சொல்லியிருப்பது எனக்கு புதிய செய்தி.

அதைத்தவிர ஆங்காங்கே அரசியலும் வெளிப்பட்டது. குறிப்பாக, "மூதறிஞர், பெருந்தலைவர் என்று மரியாதை செய்வது வேறு, அவர்களின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வது வேறு", "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி", என்று அக்கால கட்டத்தில் சொல்வது போல் அமைத்திருக்கிறார்.

அதுபோல கரிகாலன் இமயத்தில் புலிச்சின்னம் பொறித்து தன் பெயரைச் சூட்டியதைச் சொல்லும் போது சிலைகள் வைப்பது எதிர்காலத்திற்கு வரலாற்றைச் சொல்லுவதற்குத்தான் என்று நியாயப்படுத்துகிறார்.
அவரின் வீரவசனங்களும் ஆங்காங்கே வெளிப்பட்டன. "நாங்கள் வாள் பிடித்துப் பழகியவர்கள் தவிர தாள் பிடித்துப் பழகவில்லை" போன்றவற்றைச் சொல்லலாம்.

அதோடு அவர் சொல்லும் ஒப்புவமைகள் ஆச்சர்யப்  படுத்துகின்றன. பனம் பழம் போன்ற கறுத்த மேனி, குன்றுகள் போன்ற மதில்கள், அத்திக்காய் நிறம், நட்டுவாக்காலி மீசை, களிற்றின் வயிறு போல் நிலைக்கதவுகள், கொன்றைக்காய் விரல்கள், வற்றிய பீர்க்கங்காய் போன்ற உடல் போன்றவை சில உதாரணம்.

ரோம் நகரின் அழகு, வரலாறு, அகஸ்டஸ் கால அறிஞர்கள் ஆகியவற்றைச் சொல்லும் போது அவர் நேரில் பார்த்த அனுபவம் வெளிப்படுகிறது. கிளேடியட்டர் சதுக்கத்தில் நம் பாண்டியன் காண்டாமிருகத்தை அடக்குவது கொஞ்சம் ஓவர்.


கல்கியின்  சிவகாமியின்  சபதம், பொன்னியின் செல்வன் போன்ற காவியங்களோடு  ஒப்பிட்டமுடியாதென்றாலும், கலைஞரின் நடைக்கென கண்டிப்பாய்படிக்கலாம்.
முற்றும்

Tuesday, February 21, 2017

போர்த்துக்கீசியரின் சதியில் சிக்கிய கொழும்பு !!!!!


இலங்கையில் பரதேசி பகுதி-3

Image result for Fort in Colombo
Colombo Fort Area
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/02/blog-post_6.html

"அம்ரி என்ற பெயரைப் பார்த்ததும் தமிழ் இல்லை என்றுதான் நினைத்தேன்". "இல்லை சார் நான் தமிழ்தான்", என்று சொன்னபடி அம்ரி என் பைகளை எடுத்துப்பின்னால் போட்டுவிட்டு, காரின் பின்னால் உள்ள கதவைத் திறக்க, "இல்லை அம்ரி நான் முன்னாலேயே உட்கார்ந்து கொள்கிறேன்" என்றேன். மெலிதான ஆச்சரியத்துடனும் சிறு புன்னகையுடன் அம்ரி காரில் ஏறிக்கொள்ள நானும் முன்னால் அமர்ந்து கொண்டு சீட் பெல்ட்டைப் போட்டவுடன் கார் வேகமெடுத்தது. ஒரு சில மணித்துளியில் அந்த சிறிய ஏர்போட்டிலிருந்து வெளியே வந்து அழகான சாலையில் விர்ரிட்டது. இருபுறமும் பச்சைப் பசேலென்று இருக்க சாலை மிகவும் நேர்த்தியாக இருந்தது.  

அம்ரி இளைஞன், திருமணமாகி இரு சிறு குழந்தைகள் இருக்கின்றன. கொழும்பில் பல தலைமுறைகள் வாழும் தமிழ் முஸ்லீம். ETA குழுமத்தின் சில வியாபாரங்களைக் கவனித்துக் கொள்ளும் அம்ரி, எனது நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க என்னை பிக்கப் செய்வதற்காக வந்திருந்தார்.

கொழும்பு நகரில் நுழைவதற்கு முன்னர் அதனைப் பற்றிச் சில விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.

இலங்கையின் தலைநகரமான கொழும்புதான் இலங்கையிலேயே பெரிய நகரம். சுமார் 6 மில்லியன் அதாவது அறுபது லட்சம் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். மைய நகரப்பகுதியில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் குடியுள்ளார்கள். இலங்கையின் மேற்குக் கடற்கரைப்பகுதியில் இந்த ஊர் அமைந்துள்ளது.

இங்கு நல்ல பெரிய துறைமுகம் இருப்பதாலும், கிழமேற்கு கடல் வழியின் முக்கிய இடத்தில் அமைந்திருப்பதால் கடல் வாணிபர்களுக்கு 2000 ஆண்டுகளாக நன்கு அறிமுகமான ஊர் இது.

கிபி.1815ல் ஆங்கிலேயரிடம் பிடிபட்ட நாள் முதல் கொழும்புதான் இலங்கையின் தலைநகராக இருக்கிறது. 1948-ஆம் ஆண்டு இதற்கு சுதந்திரம் கிடைத்தது. 1978ல் ஸ்ரீ ஜெயவர்த்தன் புரக்கோட்டே என்ற ஊர் தலைநகரமாக மாற்றப்பட்டது. ஆனால் அந்த ஊரும் இப்போது இலங்கை மெட்ரோவுக்குள் அடங்கியிருப்பதால் இரண்டையும் யாரும் பிரித்துப் பார்ப்பதில்லை.

அதுபோல லாவினியா, கொலனாவா, கருவெளா, கொடிக்காவட்டே முல்லெரியாவா ஆகிய சிறிய பல முனிசிபல் கவுன்சிலும் இதில் அடங்கியிருக்கின்றன.

நான் ஏற்கனவே சொன்னபடி கொழும்பு ஒரு இயற்கையாக அமைந்த துறைமுகம் என்பதால் இது 2000 வருடங்களுக்கு மேலாகவே, இந்தியர்கள், கிரேக்கர்கள், பெர்சியர், ரோமர், அரேபியர் மற்றும் சீனர்கள் ஆகியோர் வர்த்தகத்திற்காக வந்துபோகும் இடமாக இருந்திருக்கிறது.

Image result for Ibn Battuta)

யாத்திரைகள் இபுன் பட்டுடா (Ibn Batuta) என்பவர் 14 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்திருந்ததை எழுதுகையில் இதனை 'கலன்பு' என்று குறிப்பிடுகிறார். அரேபியர்களின் தொழில், வர்த்தகம் என்பதால் அவர்கள் 8-ஆவது நூற்றாண்டிலேயே  இங்கு வந்து தங்க ஆரம்பித்தனர். இவர்கள் தான் சிங்கள ராஜ்யங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வர்த்தகத் தொடர்ப்பைப் பார்த்துக் கொண்டார்கள். "மூர் சமூகம்" என்று அழைக்கப்படும்.  இவர்களின் பரம்பரையினர் இன்றும் கொழும்பில் வசிக்கிறார்கள்.

நமது தெற்காசிய பகுதிகளில், ஆங்கிலேயர் தவிர, போர்த்துக்கீசியர் மற்றும் டச்சுக்காரர்கள் அதற்கு முன்பே வந்து ஆக்ரமிக்கத் தொடங்கினர் என்று நமக்கெல்லாம் தெரியும்.
Related image
மன்னர் முதலாம் பராக்கிரமபாகு
அதுபோலவே போர்த்துக்கீசியர் கிபி.1505 -ல் இலங்கையை வந்தடைந்தனர். இந்தக் குழுவுக்கு தலைவராய் வந்தவரின் பெயர் டாம் லொரென்கோ டி அல்மெய்டா (Dom Lourenco de Almeida) என்பது. அப்போது இந்தப் பகுதியான 'கோட்டே' யை ஆண்ட மன்னர் எட்டாவது பராக்கிரமபாகு (1484-1528). அவரைச் சந்தித்து அங்கு விளையும் இலவங்கத்தை (Cinnamon ) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தை செய்து கொண்டு கடற்கரைப் பகுதியை தம் கைக்குள் கொண்டுவந்தனர். கடல் வழிவரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மன்னர் பராக்கிரமபாகுவும் இதனை அனுமதித்தார்.கொழும்பிலே சுங்கச்சாவடியை அமைத்த இவர்கள் வெகுவிரைவிலேயே அங்கிருந்த முஸ்லீம் மக்களை வெளியேற்றிவிட்டு தங்களுக்கென ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டனர். இது நடந்தது கிபி.1517-ல்.

கடல் பகுதியில் தங்கள் வாணிபம் சிறக்க வேண்டுமென்றால், இலங்கையின் முழுக்கடல் பகுதியும் தங்கள் கட்டுப் பாட்டில் வரவேண்டுமென நினைத்த போர்த்துக்கீசியர் மெதுவாக தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்தனர். கோட்டே ராஜ குடும்பத்தில் பதவிக்கு நிலவிய போட்டி பொறாமைகளை பயன்படுத்தி விரைவிலேயே கோட்டே நாட்டை இரண்டாகப் பிரிந்துவிட்டனர். கோட்டேவின் ஒரு பகுதியாக இருந்த சித்தவாகா என்பதனை தனியாகப் பிரித்து சிங்கள மன்னனான மாயாதுன்னே ஆள ஆரம்பித்தான். போர்த்துக்கீசியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை நன்கு அறிந்து கொண்ட அவன் அவர்களை தன் நாட்டைவிட்டு வெளியேற்றி கொழும்புவுக்கு ஓட வைத்தான்.

அதோடு கோட்டே நாட்டின் பெரும்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டான். கொழும்பிலும் அவர்களை நிம்மதியாக வாழவிடாது அடிக்கடி அவர்கள் கோட்டையை முற்றுகை இட்டான். அவன் வழி வந்த மற்ற மன்னர்களும் இதையே செய்ததால், போர்த்துக்கீசியர் கோவாவிலிருந்து அதிக படையினரை வரவழைக்க வேண்டியிருந்தது. ஆனால் சித்தவாகா நாடு 1593ல் விழுந்துபோக, போர்த்துக்கீசியர் முழுவதுமாக ஆக்கிரமித்து கொழும்புவை தங்கள் தலைநகராக ஆக்கிக் கொண்டனர். இந்தப் பகுதிதான் ஃபோர்ட் (FORT) என்று அழைக்கப்படுகிறது.

Image result for The president's house in Colombo
President's house 
அந்த வழியாக நாங்கள் செல்லும் போது   அதனைப் பற்றிச் சொன்ன அம்ரி அங்கிருந்த பெரிய மாளிகையைக் காண்பித்தார். அதுதான் இப்போது இலங்கையின் குடியரசுத் தலைவர் தங்கும் மாளிகை. அந்த இடமும் சுற்றுப்புறமும் திடீரென்று ஐரோப்பிய நகருக்கு வந்தது போல இருந்தது. முற்றிலுமாக மரங்கள் சூழ்ந்து மிக அழகாக இருந்தது. சாலைகளும் புத்தம்புதியதாக இருந்தன. ஆங்காங்கு ராணுவப் பாதுகாப்பும் இருந்தன. இங்குதான் அதிகபட்ச ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்  இருக்கின்றன என்ற அம்ரியுடன், "அம்ரி ஏற்கனவே நான் ஹோட்டல் புக் செய்துவிட்டேன்". அது லலீனியாவில் இருக்கிறது அதன் பெயர் 'சமன்க்கா கெஸ்ட் ஹவுஸ்' என்றேன். அப்படி ஒரு இடத்தை நான் கேள்விப்பட்டதில்லையே  என்று அம்ரி சொன்னதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது.


-தொடரும்.

Thursday, February 16, 2017

மயிலே மயிலே உன் தோகை எங்கே ?


எழுபதுகளில் இளையராஜா, பாடல் எண்: 32

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
          http://paradesiatnewyork.blogspot.com/2016/05/blog-post_5.html

Image result for கடவுள் அமைத்து வைத்த மேடை திரைப்படம்

1979ல் வெளிவந்த "கடவுள் அமைத்த மேடை' என்ற திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த அருமையான பாடல். பாடலை முதலில் கேளுங்கள்.

இசையமைப்பு:
Image result for கடவுள் அமைத்த மேடை'

          இளையராஜாவின் இசையில் வழக்கமாக பயன்படுத்தும் லீட் கிட்டார், ரிதம் கிட்டார், பேஸ் கிட்டார், கீபோர்டு, புல்லாங்குழல், வயலின் குழுமம், டிரம்ஸ், கட சிங்காரி, எஃபக்ட்ஸ், மிருதங்கம் ஆகிய அனைத்து இசைக்கருவிகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.       ஒரு ரயில் பயணம் போல் கிட்டாரின் ஸ்டிரம்மிங்கில் ஆரம்பிக்கிறது முன்னணி இசை (Prelude), அதோடு சீப்பு இசை சேர்கிறது.   அதன்பின் புல்லாங்குழல் இதமாக வருடி, வயலின் குழுமம் அப்படியே மனநிலையை உயர்த்துகிறது. ஒற்றை வயலினின் முத்தாய்ப்போடு ஆண்குரல் சேர்ந்து மிருதங்கத்துடன் போட்டிபோட்டு "மயிலே மயிலே உன் தோகை எங்கே ?" என்று ஆரம்பித்து முழு பல்லவியையும் பாடி முடிக்க அதற்கு பதில் சொல்லும் விதத்தில் பெண்குரல் சிறிதே மாற்றம் செய்த பல்லவியைப் பாடி முடிக்கிறது. அதுவரை அமைதியாக இருந்த லீட் கிடார் தன் இடையிசைய (Interlude) ஆரம்பிக்க அதற்கு உற்ற தோழனாய் பேஸ் கிட்டார் அதனைத்  தடவித்தழுவி ஒலிக்கிறது. அதன்பின்னர் மீண்டும் வயலின்  குழுமம் உயிர் பெற்று உச்சஸ்தாயிற்குப்போக, ஒற்றை வயலின் எழுந்து அதை  அடக்குகிறது. பின்னர் அவ்வளவு இசையையும் பாராட்டுவது போல், சரணம் ஆண் குரலில் ஆரம்பிக்க மறுபடியும் மிருதங்கம் சேருகிறது. முதலிரண்டு வரியை ஆண்பாட அடுத்த இரண்டு வரியை பெண்பாட கடைசி இரு வரியை ஆண் பாட முதல் சரணம் முடிகிறது.  

          இரண்டாவது இடையிசை முற்றிலும் வேறாக ஒலிக்கிறது. அதுவரை பின்னணி இசையில் இருந்த கீபோர்டு இப்போது முன்னணி பெற்று தன்  கடமையை சிறப்பாகச் செய்ய, இளையராஜாவின் ஆத்மார்த்த ரிதம் டீம் இணைந்து பட்டையைக் கிளப்புகிறது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்த இசை சங்கமத்துடன் புல்லாங்குழல் சேர அத்தனை வயலின் இசையையும் மீறி மேலேறி ஒற்றை வயலின் சாந்தப்படுத்த இரண்டாவது சரணம் ஆரம்பிக்கிறது. பெண் குரலில், "மஞ்சள் மாங்கல்யம்" என்று ஆரம்பித்துப்பாட அடுத்த 2 வரிகளை ஆண்பாட பின் பெண் குரல் பாடி முடிக்கிறது. அதன் பின்னர் பல்லவியை ஆண் குரலும் பெண் குரலும் மாறி மாறிப்பாட பாடல் முற்றுப் பெறுகிறது.

பாடலின் வரிகள்:

மயிலே மயிலே உன் தோகை இங்கே 
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
 
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
 
தளிர் உடல் தொடலாமோ
 
மயிலே மயிலே...மயிலே மயிலே
 

மயிலே மயிலே உன் தோகை இங்கே 
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
 
ஒரு சொந்தமல்லவோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ 
மயிலே மயிலே...மயிலே மயிலே
 

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க 
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
 
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
 
கனி வாய் மலரே பல நாள் நினைவே
 
வரவா தரவா பெறவா...நான் தொடவா
 

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழலி தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி 
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
 
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்
 

மயிலே மயிலே உன் தோகை இங்கே
 
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
 
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
 
தளிர் உடல் தொடலாமோ
 
மயிலே மயிலே...மயிலே மயிலே

Image result for Vaali and ilayaraja

          பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இளையராஜா வாலியின் உறவு ராஜாவின் ஆரம்பத்திலேயே துவங்கிவிட்டது, வைரமுத்துவை உதறித் தள்ளிய பின் அது மிகவும் பலப்பட்டது. இந்தப்பாடலைப் பொறுத்த மட்டில் கவிஞர் அலட்டிக் கொள்ளாமல் எழுதியது போலத் தெரிகிறது. பாடலிலே சிறப்பம்சம் என்று சுட்டிக் காட்டுவதற்கு ஒன்றும் இல்லையென்றாலும், பாடல் வரிகள் பெரும்பாலும் எதுகை மோனையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மயில், ஒயில், குளிர், தளிர், வாராதோ, மலராதோ என்று பாடல் முழுதும் பார்க்கலாம். ஒருவேளை அது தான் சிறப்பு என்று நினைக்கிறேன் மற்றபடி கவிஞரின் கவித்துவ பஞ்ச் இங்கு இல்லை.

பாடலின் குரல்கள்:
Image result for SPB with Jency
Ilayaraja with Jency
          SPB-யின் இளமைக் காலக்குரல் மிக இனிமையாக இருக்கிறது. நீட் சிங்கிங் என்று சொல்லலாம். ஜென்சியின் குரலில் தேன் ஒழுக்கிறது. மழலைக் குரலில் விடலைப் பெண்ணின் காதலை வெளிப்படுத்தும் குரல். "உன் சொந்த மல்லவோ என்று பாடும்போது உன் என்பது உன்னு என்று ஒலிக்கிறது. அதுவும் அழகாகவே இருக்கிறது.
ஹம்சத்துவனி ராகத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல். சோர்ந்திருக்கும் போது இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். இந்தப் பாடல் சூழலை மாற்றிவிடும்.மீண்டும் இன்னொரு பாடலில் சந்திப்போம்.

தொடரும்.

          

Tuesday, February 14, 2017

பேரரசி சசிகலா வாழ்க !!!!!!!!!!!!!!!!

Image result for Queen Sasikla

பெரும்பான்மையான எம் எல் ஏக்கள், எம்பிக்கள், கையில் இருந்தும், பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றியிருந்தும் நினைத்தது போல் உடனடியாக சசிகலா முதலமைச்சர் பதவியை அடைய முடியவில்லை.
ஜெயலலிதா இறந்து போனதைத் தொடர்ந்து துக்கம் அடங்குவதற்குள், வர்தாப்புயல் மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரம் வந்து தாமதப்படுத்தியது. ஒரு புறம் தீபா குடைச்சலைக் கொடுக்க இப்போது பன்னீர் என்ற ருசி கண்ட பூனை புயலாக எழுந்துள்ளது. அது தவிர சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பும் வந்து இருந்த கொஞ்ச  நஞ்சம் நம்பிக்கையையும்  தகர்த்துவிட்டது
 இப்போது  சசிகலா என்னதான் செய்யமுடியும் ?.

பரதேசியின் பகிரங்க ஆலோசனைகள் :

1.   உடனடியாக ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை துல்லியமாகக் கணக்கிட்டு அதனை எம்.எல்.ஏ. எம்பிக்களிடம் தெரிவித்து அதனை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதாக உறுதி அளிக்கலாம். இதன் மூலம் அவர்கள் திட்டுக்கு அடங்காவிட்டாலும் துட்டுக்கு அடங்கிப்போக வழியுண்டு. உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் ஆட்சியை தொடர்ந்து நடத்தலாம்.
2.   தீபாவிடம் பேசி அவர் ஏன் தனியாக ஃபிளாட்டில் தங்க வேண்டும் போயஸ் கார்டனுக்கு  வந்துவிடலாம் என்று சொல்லி அழைத்து வந்துவிட்டால் போதும். பிறகு தானாக மற்றவை( ?) நடந்துவிடும்.
3.   பன்னீர் செல்வத்திற்கு ரகசியமாக மிடாஸ் ஆலையை எழுதி வைத்துவிட்டு, கண்ணீர் செல்வம், வெந்நீர் செல்வம் ஆனதின் பின் இப்போது மிடாஸ் ஆலையின் அதிபராக தண்ணீர் செல்வமாக ஆகிவிட்டார் என்று சொல்லி அவரை ஓய்த்துவிடலாம்.
4.   எம்.எல்.ஏக்கள் அனைவரிடமும் பத்தாண்டுக்கு பாண்டு எழுதி வாங்கி கட்சி மாற்றத்திற்கு தடை செய்யலாம்.
5.   முடிந்தால் மு.க.அழகிரிக்கு ஒரு ஆயிரத்தைக் கொடுத்து ( அட கோடிதான் பாஸ்)  அதிமுக முதலமைச்சர் ஆக நிறுத்தி கருணாநிதியின் ஆதரவைப் பெறலாம். அவர் படியவில்லையென்றால் மு.க.ஸ்டாலினை அதிமுக முதலமைச்சர் ஆக்கிவிட்டால் எல்லாம் சரியாகி முடிந்து விடும்.
6.   நடராஜன் அவர்கள் பொங்கல் விழாவில் ஏற்கனவே தான் மாடு பிடித்த கதையைச் சொல்லியதால், தஞ்சாவூரில் சிறப்பு ஜல்லிக்கட்டு ஒன்றை ஏற்பாடு செய்து  ஒத்த மாடோ இல்லை ஒரு தொத்த மாடையோ அடக்குவதற்கு ஏற்பாடு செய்து, மாவீரன் நடராஜனை முதலமைச்சராக ஆக்கலாம்.
7.   பேசாமல் திமுகவுடன் அதிமுகவை இணைத்துவிட்டால், தீபா பன்னீர் இருவரையும் ஒரே சமயத்தில் கவிழ்த்து விடலாம். 
8.   கொடநாடு, சிறுதாவூர், பையனுர் ஆகிய இடங்களை ஆக்ரமித்து அனுபவிக்கும் அனுபவத்தை வைத்து, ஆளுநர் இருப்பிடமான ராஜ்பவனை ஆக்ரமித்து, சொந்தமாக்கி ஆளுநரின் பேரிலேயே எழுதிக் கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லி முதலமைச்சர் ஆக அனுமதி வாங்கலாம்.
9.   தேர்தல் சமயத்தில் இருந்த டிரக்கில் பணத்தை நிரப்பி டெல்லிக்குச் சென்று சூப்ரீம் கோர்ட்டை அதன் நீதிபதிகள் உள்பட  விலை பேசலாம்.  
Image result for Sasikala with crown
Add caption
10.                இதெல்லாம் ஒத்து வரவில்லையென்றால்,அருமையான யோசனை ஒன்று. கட்சியைக் கலைத்து விட்டு தமிழ்நாட்டை தனியாகப்பிரித்து ,தமிழகத்தின் பேரரசியாக முடிசூட்டிக் கொள்ளலாம். தனிநாடாகி விட்டால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு செல்லாமல் போய் விடுமே. என்ன புனித ஜார்ஜ் கோட்டையின் டம்மி பீரங்கிகளைக் களைந்துவிட்டு நிஜ பீரங்கிகளை நிறுவிவிட்டால் போதும். கமிஷனர் ஜார்ஜை படைத்தளபதியாக நியமித்தால் விசுவாசமாக இருப்பார்.
11.                மூன்றாவது வரை மட்டுமே படித்திருக்கிறார் என்பதனை மாற்றி ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்தை வாங்கிவிட்டால் முடிந்தது பிரச்சனை டாக்டர் சசிகலா என்று மாற்றிக் கொள்ளலாம். ஏனென்றால் மறுபடியும் ஆரம்பப் பள்ளியிலிருந்து ஆரம்பித்தால் நன்றாக இருக்காது.
12.                ஒற்றர் படைத்தலைவராக சுப்ரமணிய சுவாமியை  நியமித்து விடலாம். தா. பாண்டியனை அரண்மனை பேச்சாளர் ஆக்கலாம்.
Image result for sasikala with jayalalitha

13.                அகழியை வெட்டி ஆழப்படுத்தி கூவத்தைவிட்டுவிட்டால் ஒரு பயகிட்ட வருவானா?
14.                அந்தப்புரத்தை விரிவுபடுத்திவிட்டால் நடராஜன் ஏன் கனடா பக்கம் போகப்போகிறார்?
15.                இளவரசி ஏற்கனவே இருப்பதால் வேறுயாருக்கும் தனியாக இளவரசிப்பட்டம் சூட்டத் தேவையில்லை.
16.                சுதாகரனை இன்னும் கொஞ்சம் பின்னால் முடிவளர்க்கச் செய்து பட்டத்து இளவரசனாக்கிவிடலாம்.
17.                வெளிநாட்டு பொறுப்புகளை நமது பிரதமரிடமே கூடுதலாகக் கவனிக்கச் சொன்னால் அவர் உவகையுறுவார்.
18.                ஒத்துவரும் எம்.எல்.ஏக்களை அந்தந்த பகுதியின் சிற்றரசர்களாக்கி விடலாம். தன் குடும்ப வாரிசுகளான திவாகரன், தினகரன் , பாஸ்கரன், வெங்கடேஷ் ஆகியோரை, பல்லவ, சோழ, பாண்டிய, சேர மண்டலங்களின் மன்னர்களாக நியமித்துவிடலாம்.
19.                சிரிப்பதற்கு தடை: தமிழ்நாடு சசிநாடு என்று மாற்றப்பட்டு உடனடியாக யாரும் யாரையும் பார்த்து சிரிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. யார்ட்ட? மீறி சிரித்தால் அவர்கள் தலைகள் கொய்யப்பட்டு கோட்டை வாசலில்  தொங்கவிடப்படும்.
20.                விரைவில் முல்லைப் பெரியார் மற்றும் காவிரி நீர்ப்பிரச்சனைக்கு கேரளா மற்றும் கர்நாடகா மீது படையெடுக்கப்படும், இலங்கையில் நடராஜன் தலைமையில் தமிழீழம் அமைக்கப்படும் எனவும் தெரிகிறது.