Tuesday, May 31, 2016

மு.க ஸ்டாலின் செய்ய வேண்டியது என்ன?

தமிழக தேர்தல் 2016 :பகுதி 3


தெரிந்தோ தெரியாமலோ அரசியலுக்கு வந்தாகிவிட்டது. முழு நேர அரசியல்வாதியாகவும்   ஆகியாகிவிட்டது. கட்சிப் பதவிகளில் இளைஞர் அணியில் ஆரம்பித்து, எம்ஜியார், சாதிக் பாட்ஷா, ஆற்காடு வீராசாமி ஆகியோர் அலங்கரித்த பொருளாளர் பதவி வரை வந்தாகிவிட்டது.

அரசியல் பதவிகளில், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், மேயர், மற்றும் துணை முதலமைச்சர் போன்ற பதவிகளையும் அடைந்தாகிவிட்டது. ஆனால் உங்கள் எதிர்காலம் என்ன? என்ன செய்ய வேண்டும்?

பலம்:

1.   திராவிட இயக்கத் தூண்களில்  முக்கியமான ஒருவரும்,ஐந்துமுறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்தவருமான, கலைஞர் மு.கருணாநிதியின் மகன் மற்றும் அரசியல் வாரிசு.
2.   பலமான கட்டமைப்புக் கொண்ட ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதோடு, அடுத்த தலைவராக வருவதற்கு பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
3.   அதிகமான ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகாதவர்.
4.   கடுமையான உழைப்பாளி.
5.   அரசியலில், கருணாநிதி மகன் என்றாலும் கட்சியில் படிப்படியாக உயர்ந்தவர்.
6.   திமுகவின் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களாலும், தொண்டர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
7.   2016- தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியை உயர்த்திக் காட்டியவர்.

பலவீனம்:


1.   கருணாநிதியின் மகன் என்பதால் அவருக்கு வருகிற, அவர்மேல் சுமத்தப்படுகிற குற்றச் சாட்டுகளையும், விமர்சனங்களையும் சேர்த்து சுமக்க வேண்டிய நிலை.
2.   உலக மற்றும் இந்திய அரசியலை ஆழ்ந்து கற்றுத் தேறவில்லை
3.   வெறும் மாநில  அரசியலை மட்டும் முன்னெடுத்து, இந்திய அளவில் எதிலும் பங்கு பெறாத நிலை.
4.   இந்திய அளவிலோ, மாநில அளவிலோ பிற தலைவர்களுடன் ஒட்டாத நிலை.
5.   சகஜமாக பழகாமல் எப்போதும் தள்ளியிருந்து தனியாகவே இருப்பது.
6.   சொந்த அண்ணன் முக அழகிரியே இவருக்கு எதிராக இருப்பது.
7.   குடும்ப உறுப்பினர்களான கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் மேலுள்ள ஊழல்  குற்றச்சாட்டு.
8.   கருணாநிதி குடும்பத்தின் மீதுள்ள குடும்ப அரசியல், வாரிசு அரசியல் போன்ற குற்றச்சாட்டுகள்.

என்ன செய்யவேண்டும்?


1.   தோல்வியை ஒப்புக் கொண்டு, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட உறுதியெடுத்தல்.
2.   எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் நல்ல திட்டங்களுக்கு ஆதரவையும் மற்றவற்றிற்கு எதிர்ப்பையும் தெரிவித்தல்.  
3.   சட்டசபையில் மாற்றுக்கட்சியினரும் மதிக்கும் வகையில் ஒரு தேர்ந்த தலைவராக பரிணமித்தல்.
4.   நாடு முழுதும் மீண்டும் ஒரு சுற்றுப்பயணம் செய்து, ஓட்டுப்போட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தல்.
5.   ஜெயித்த MLA -க்களை நன்கு  ஒருங்கிணைந்து, அவரவர் தொகுதிகளில் மக்களோடு இணைந்து நலத்திட்டங்களைச் செய்தல்.
6.   ஜெயலலிதாவை சந்திப்பது, வேண்டுகோள் விடுப்பது என்று எந்த ஈகோ பார்க்காது நடந்து கொள்ளுதல்.
7.   திமுகவில் படித்த இளைஞர்களுக்கு பதவியைக் கொடுத்தல்.
8.   அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசியல் பாடம் எடுத்து ஒவ்வொரு தெருவுக்கும், வார்டுக்கும், கிராம நகர அளவில் மக்களோடு ஒன்றிணைந்து பணியாற்ற பயிற்சி கொடுத்தல்.
9.   எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் MLA -க்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்காமல் முடிந்தவரை நட்பு பாராட்டுதல்.
10.               தன் கட்சிக்காரர்களாக இருந்தாலும் தவறைத் தட்டிக் கேட்டு தண்டனை கொடுத்தல்.
இதெல்லாம் செய்தால் கருணாநிதி போல், ராஜதந்திரி, ஆளுமை நிறைந்தவர், சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுப்பதைக் காட்டிலும், நல்ல  மனிதர், மக்கள் தலைவர், மக்கள் நலனை தன் நலனாகக் கருதுபவர், கறைபடியாதவர், நேர்மையானவர் என்று பெயரை எடுக்க முடியும்.
திமுக மிகக் குறைவான ஓட்டு சதவிகிதத்தால் தோற்றாலும் ஓட்டு வங்கியை அதிகப்படுத்தியதும், சட்டசபையில் எப்போதுமல்லாத அதிக அளவு MLA -க்களை பெற்றதும், சென்னையை மீட்டெடுத்ததும், மக்கள் நம்பிக்கையைப் பெற்றதும் ஸ்டாலினே உங்களால் தான்.  
பலவீனங்களைக் களைந்து, பலங்களை அதிகரித்து தொடர்ந்து மக்களோடு நெருங்கி உழைத்தால் நீங்கள் உங்கள் அப்பாவை விட ஒப்பற்ற தலைவராக விளங்கும் நாள் வெகு தூரத்திலில்லை.


Thursday, May 26, 2016

ஜெயலலிதா இப்போது என்ன செய்ய வேண்டும் ?

தமிழக தேர்தல் 2016 :பகுதி 2 
Supreme Court on Friday extended the bail granted to former Tamil Nadu Chief Minister Jayalalithaa and four other accused till the Karnataka High Court disposes off their appeals against conviction in a disproportionate assets case.

கடந்த  நான்கு முறைக்கு மேலாக, ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி, "ஆட்சி செய்யும் அரசுக்கு " எதிரான மனநிலையில் வாக்களிக்கும் மக்கள் (Ant incumbency) , டாஸ்மாக்கால் சீரழிந்த குடும்பங்களின் சாபங்கள், சென்னையை மூழ்கடித்த வெள்ளத்தின் போது அரசின் கையறு நிலை, மக்கள் நலப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் உரிமைக் குரல்களை கண்டுகொள்ளாத அலட்சிய மனோபாவம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தீர்ப்பு, ஜெயில் வாசம், குமாரசுவாமியின் கணக்குக் குளறுபடி, செயல்படாத அடிமை அமைச்சர்கள், சரிந்து வரும் உடல் நிலை என ஜெயலலிதாவுக்கு எதிரான எத்தனையோ காரணிகள் இருந்தும் மயிரிழையில் தப்பித்து தனிப் பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்த தென்பது ஒரு ஆச்சரியப்படவைக்கும் இமாலய சாதனைதான். வாழ்த்துக்கள்.

பலம்:

1.   திரைத்துறை மூலம் அவருக்கு வந்த தனிப்பட்ட புகழ், வசதி வாய்ப்புகள்.
2.   எம்ஜியார் அவர்களின் அரசியல்வாரிசாக ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
3.   எம்ஜியாரின் புகழ், அவர் கொடுத்த இரட்டை இலைச் சின்னம் ஆகியவை இன்னும் மங்காத நிலையில் இருப்பது.
4.   அதிமுகவை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்ற திறமை.
5.   தனியே தன்னந்தனியே நின்று நிலைத்து சமாளிக்கும் மன உறுதி.
6.   யாருக்கும் தலைவணங்காத இரும்பு உள்ளம்.
7.   சட்டென அதிரடி முடிவுகள் எடுத்து  உடனே செயல்படுத்தக் கூடிய தைரியம்.
8.   முழுக்கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சாதனை.
9.   கருணாநிதி போன்ற பெரிய சக்தியை எதிர்த்து பலமுறை வென்ற பராக்கிரமம். 
10.               தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற பன்மொழித் திறமை. 
பலவீனங்கள் :
1.   சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு.
2.   ஆலோசனை கூற யாருமில்லா நிலமை
3.   தவறான முடிவுகளை சடுதியில் எடுத்துப் பின் மாற்றுவது.
4.   யாரும் எளிதில் நெருங்க முடியா வண்ணம் இரும்புக் கோட்டைக்குள் காணாமல் போவது.
5.   யாரையும் தன்னிச்சையாக செயல்படவிடாத, தன்மேல் உள்ள அதிகாரகுவிப்பு.
6.   அதிமுகவில் அடுத்த நிலைத் தலைவர்கள் இல்லாத நிலைமை, யாரையும் நம்பமுடியாத நிலை.
7.   எந்தத் தலைவருடனோ மத்திய அரசுடனோ ஒத்துழைக்காத விரோத மனப்போக்கு.
8.   திமுக என்ன செய்தாலும் எதிர்க்கும் மனநிலை. உதாரணம் சட்டமன்றக் கட்டிடம், அண்ணா நூலகம் ஆகியவை.
9.   தளர்ந்து வரும் உடல்நிலை.
10.               கூடவே இருக்கும் சசிகலா குடும்பம்.
என்ன செய்ய வேண்டும்?


1.   எந்த முடிவானாலும் நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். எடுத்துவிட்டு அடிக்கடி மாற்றுவது நல்ல நிர்வாகத்தின் அடையாளம் அல்ல.
2.   வெறும் துதிபாடிகளை ஒதுக்கி, இரண்டாம் கட்ட தலைவர்களை தேர்ந்தெடுத்து வளர்த்தெடுத்தல்.
3.   ஏராளமாகச் சேர்ந்திருக்கும் தமிழ்நாட்டுக் கடனை அடைக்க முயற்சி எடுத்தல்.
4.   நாட்டு மக்களோ, தலைவர்களோ தொழிலதிபர்களோ யாராக இருந்தாலும் எளிதில் சந்திக்கக் கூடிய தலைவராக உருவெடுத்தல்.
5.   எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சியாக பார்க்காமலிருத்தல்.
6.   சட்டசபையில் ஆரோக்கியமான விவாதத்திற்கு இடம் கொடுத்து, மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துதல்.
7.   அதிமுக ஜெயித்த தொகுதிகள் மட்டுமின்றி மற்ற எல்லாத் தொகுதிகளிலும் முன்னேற்றப் பணிகளை முடுக்கிவிடுதல்.
8.   நாட்டுக்கு இக்கட்டு வரும் சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளை  அழைத்து ஆலோசித்து முடிவெடுத்தல்.
9.   நதிநீர் இணைப்புத் திட்டத்தை முதலில் மாநில அளவில் செயல்படுத்தி தமிழகத்தில்  மீண்டும் விவசாய ,பயிர்வளர்ச்சியை உறுதிப்படுத்தல்.
10.               மத்திய அரசோடும், அண்டை மாநிலங்களோடும் நட்பு பாராட்டி, தமிழகத்திற்கு நன்மை பயத்தல்.
ஜெயலலிதாவிடம் நல்ல மாற்றம் தெரிகிறது. கட்-அவுட்டுகள், இல்லாமல், காலில் விழுதல் இல்லாமல், புரட்சித் தலைவி முழக்கம் இல்லாமல் பதவியேற்றது மிகவும் வரவேற்கத்தக்கது.
முதல் நாளிலேயே, 500 டாஸ்மாக் கடைகளை அடைத்தது, திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்தது, சிறுகுறு விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து ஆகியவை நல்ல ஆரம்ப அறிகுறிகள்.
இந்த ஐந்துவருடங்கள் உங்கள் கையில். மீண்டுமொருமுறை  வருவீர்களா என்று தெரியாது. மக்களுக்கு நன்மைகள் செய்து மனதில் மறக்கமுடியாத இடம்பிடிக்க நல்லதொரு வாய்ப்பு, செய்வீர்களா, செய்வீர்களா.


முற்றும்.

Monday, May 23, 2016

கருணாநிதி என்ன செய்ய வேண்டும்?

தமிழக தேர்தல் 2016 : பகுதி 1

கருணாநிதி தன் வாழ்நாளில் செய்த பெருந்தவறு, தன் உற்ற நண்பனாக இருந்த எம்ஜியாரைப் பகைத்துக் கொண்டது. அண்ணாவுக்குப் பின், அன்பழகன், நெடுஞ்செழியன், சம்பத் போன்ற மூத்த அரசியல் வாதிகள் பலர் இருந்த போதும் கருணாநிதி முன்னிலை பெறவும், மாபெரும் இயக்கத்தை வழிநடத்த அவருக்குத்தளம் அமைத்துக் கொடுத்தவரும் எம்ஜியார்தான்.

எம்ஜியாரின் மக்கள் பலத்தை, முன்கூட்டியே கணிக்கத்தவறிய கருணாநிதியை, அது இன்றுவரை பாதித்து வருகிறது. எம்ஜியாரின் வாழ்நாளில் கருணாநிதி தலையெடுக்கவே முடியவில்லை. ஜெயலலிதாவை  இந்தமுறையும் குறைவாகவே மதிப்பிட்டது  மேலும் செய்த தவறு . இப்போது ஜெயலலிதாவும் எம்ஜியார் செய்த அதே சாதனையைச் செய்திருக்கிறார்.
MGR பிரிந்து சென்றபோது, திமுகவின் இளைஞர் படை அவரோடு சென்றுவிட்டது. அதிமுக மற்றும் இரட்டை இலையின் வாக்கு வங்கி, காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் மாறாத ஒன்று. ஜெயலலிதாவின் அராஜகம், ஆணவம், செயல்படாத தன்மை, ஊழல், தன் அமைச்சர்களைக் கூட அடிமைகளாக நடத்துவது, சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், இவையெல்லாவற்றையும் மீறி அந்த வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது. அதுவும் தமிழகத்தின் வாக்குவங்கிகளில் 30 முதல் 35 வரை பெற்று முதலிடம் வகிக்கிறது. தற்போது நாற்பதுக்கு மேல் எகிறியிருக்கிறது.

கருணாநிதியும், MGR  என்ற மாபெரும் சக்தியை எதிர்த்து பலமுறை தோற்றாலும், கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்து மாறி மாறி ஜெயித்து, இன்றுவரை காப்பாற்றி வருகிறார். இதற்கு மிகுந்த திறமையும் பொறுமையும் வேண்டும். திமுக-வின்   வாக்கு வங்கி அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் இருந்தாலும், இரட்டை இலையின் வாக்கு வங்கியை விட, உதய சூரியனின் வாக்கு வங்கி குறைவானதுதான் ,25 முதல் 30 வரை தான்.
எனவே தனித்தனியே நின்றால், எப்பொழுதும் அதிமுகதான் ஜெயிக்கும். இது கலைஞருக்கு நன்கு தெரியும். முற்காலத்தில் கூட அதிமுகவை இருமுறை வென்றது சொந்த பலத்தால் அல்ல, கூட்டணி பலத்தால்தான்.
எனவே 'பழம் நழுவி பாலில் விழும்' என்று தன் வெட்கத்தை விட்டு விஜய்காந்துக்கு காத்திருந்து ஏமாந்தார்.
திமுகவிடம் நெருங்கி வந்த விஜயகாந்த், வைகோ, திமுகவிடம் ஏற்கனவே இருந்த திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஏன் வாசனின் தாமாகாவையும் சேர்த்து ஓர் மெகா கூட்டணியை  அமைத்திருந்தால் வெற்றிக்கனி நழுவியிருக்காது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்ததால் வாசன் எப்படி சேர முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். அப்படி சேர்ந்திருந்தால் வாசனின் கூட்டணி திமுகவிடம் தான் தவிர காங்கிரசோடு அல்ல என்று நினைத்துக் கொள்ளலாம். ஏன் காங்கிரசில் இருந்து பிரிந்த, ஷரத் பவார், மம்தா பானர்ஜி போன்றோர் அதன்பின் காங்கிரசோடு கூட்டணி வைத்ததோடு அமைச்சரவையிலும் பங்கு கொண்டனரே. இதைவிட முன் உதாரணம் வேறொன்று வேண்டுமா?
இதையெல்லாம் விட்டுவிட்டு, மு.க.ஸ்டாலினின் பேச்சைக்கேட்டு பலத்தை பெருமளவு இழந்துபோன காங்கிரசை மட்டும் பிடித்துக் கொண்டு களம் கண்டதால்தான் தி.மு.க. தோற்றுப்போனது. குறைந்தபட்சம் இதில் ஒன்று இரண்டு கட்சிகளாவது, திமுகவின் பக்கம் வந்திருந்தால், நிச்சயம் வெற்றி பெற்று இருப்பார்கள் .ஏனென்றால் விகித வித்யாசம் வெறும் 1:1 சதவிகதம்தானே .கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும் .
இதில் ஜெயலலிதாவின் சாதுர்யமும் வியூகமும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அவர் தன்னம்பிக்கை என்பது இந்தச் சமயம் ஓவர்கான்ஃபிடன்ஸ் இல்லை.
வைகோ கூட்டணியில் விஜய்காந்த் சேருவதாக அறிவித்தபோதே, அதிமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். அப்போதே அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
தேர்ந்த அரசியல்வாதியான வைகோ, இப்படி ஒரு தற்கொலை முடிவு எடுத்தது எதனால்? என்ற கேள்வி எழும்போது, இதுவும் ஜெயலலிதாவின் வியூகமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று.
கருணாநிதி பெரிதும் எதிரிபார்த்த இந்தத் தேர்தல் தோல்வியில் முடிந்ததோடு கருணாநிதியின் அரசியல் வாழ்வும் இத்தோடு முடிந்ததாகத்தான் கருத வேண்டும். ஏனென்றால் இன்னும் ஐந்து வருடங்களில் கருணாநிதியின் வயது 98 ஆகிவிடும். அவர் உயிரோடு இருந்தால் கூட தேர்தலில் நிற்பது, பரப்புரைக்குச் செல்வது என்பதெல்லாம் உடல் பூர்வமாக முடியாத ஒன்று .
ஆனாலும் கட்சியைக் காக்கவும் அடுத்த தலைமுறைக்கு முழுதாகக் கொடுக்கவும் அவர் செய்ய வேண்டியது என்ன?

1.   தோல்வியின் காரணங்கள் எதுவாக இருந்தாலும், தோல்வியை ஒப்புக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லவேண்டும்.
2.   உடனடியாக அமைப்பு ரீதியில் தேர்தல்  நடத்தி, கட்சியின் தலைவரையும்,பொதுச் செயலாளரையும் தேர்ந்தெடுக்கவேண்டும்.  
3.   இதில் முக ஸ்டாலின் ஜெயித்தால் , அவர் தலைமை ஏற்கலாம்.
4.   குடும்பத்தகராறுகளை உடனடியாக பேச்சுவார்த்தை அல்லது சொத்துப் பிரித்தல் மூலமாக தீர்க்க வேண்டும்.
5.   மு.க. அழகிரி மட்டுமல்ல, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோரை அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கச் செய்ய  வேண்டும்.
6.   எதிர்காலத்திலும் குடும்ப  உறுப்பினர்கள் அரசியலில் வரவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
7.   எதிர்க்கட்சித்தலைவராக செயல்பட விரும்பாவிட்டாலோ, சட்டசபைக்குச் செல்வதை தவிர்த்தாலோ, தன் MLA  பதவியை ராஜினாமா செய்து, வேறொருவருக்கு வழிவிட வேண்டும்.
8.   ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட, ஸ்டாலினுக்கும் கட்சியினருக்கும் உதவ வேண்டும்.
9.   தான் மட்டுமன்றி தன்னுடன் இருக்கும் பல மூத்த வயதுகடந்த  அரசியல் வாதிகளையும் ஓய்வு பெற வைக்க வேண்டும்.
10.               அதன்பிறகு அரசியலை விட்டு ஒதுங்கி, நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்
11.               ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டால் மட்டுமே சொல்ல முனைய வேண்டும்.
12.               அறிவாலயத்தில் திராவிட இயக்கத்தின் நிரந்தர பொருட்காட்சியை அமைத்து உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் திறந்து விடலாம்.
13.               பேரப்பிள்ளைகளோடு அதிக நேரத்தை செலவழிக்கலாம்.
14.               முரசொலியில் மட்டுமல்லாது பிற பத்திரிகைகளிலும் அவ்வப்போது கட்டுரைகள் எழுதலாம் .
15.               நெஞ்சுக்கு நீதி கடைசி அத்தியாயத்தை எழுதி முடிக்கலாம்.

தன்  மீதியுள்ள காலத்திலாவது கருணாநிதி அவர்கள் அமைதியாகவும் , நிம்மதியாகவும் அரசியலை விட்டு ஒதுங்கி மகிழ்ச்சியுடன்   காலத்தை  கழிக்க வேண்டும் .

Thursday, May 12, 2016

தி பட்லர்: உண்மைக்கதை

பார்த்ததில் பிடித்தது


ஒரு அமைதியான ஞாயிற்றுக்கிழமை மதியம். வீடு முழுதும் நிசப்தமாக இருந்தது. ஏனென்றால் என் மனைவி தூங்கப் போய்விட்டாள். என் இரு மகள்களும் தங்கள் தங்கள் ரூமில் அடைந்து போக, அப்பாடா என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் கொறிக்கும் பொருட்களை காலடியில் நகர்த்திவிட்டு, நெட்ஃபிலிக்சில் தேடியதில் கிடைத்த ரத்தினம் தான் "தி பட்லர்"  என்ற திரைப்படம்.
ஏற்கனவே இதனைப்பற்றி கேள்விப் பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 2013ல் வெளிவந்த அமெரிக்க வரலாற்று நாடகம். அதாவது நீங்கள் நினைக்கும் நாடகம் அல்ல, 'டிராமா' என்று சொல்வார்கள்.

கதைக்கரு: 2009 ஆம் வருடம், வெள்ளை மாளிகையில் வேலை பார்க்கும் முதிய கறுப்பின ‘சிசில்’, புதியதாக பதவியேற்ற அமெரிக்க அதிபரை வரவேற்கக் காத்திருக்கையில், தன் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் ஃப்ளாஸ் பேக்குடன் படம் ஆரம்பிக்கிறது.

1926ஆம் வருடம் சிசில் ஏழு வயதாக இருக்கும் போது, அவன் பெற்றோர்கள் ஜார்ஜியாவில் இருக்கும் ஒரு பருத்திக் காட்டில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.அப்போது அங்கு வந்த பண்ணையின் வெள்ளை முதலாளி, சிசிலின் அம்மாவை அழைத்துக் கொண்டு போய் கற்பழித்து விடுகிறான். அதனைத் தட்டிக்கேட்ட சிசிலின் அப்பாவை முதலாளி சுட்டுக் கொன்றுவிட, அவனுடைய அம்மாவுக்கு சித்தப்பிரம்மை பிடிக்கிறது. இந்தச் சூழலில், முதலாளியின் அம்மா சிசிலை அழைத்துக் கொண்டு தன் வீட்டில் வைத்து 'ஹவுஸ் செர்வன்ட்' ஆக்குகிறாள். அங்கு பலவித பழக்கவழக்கங்களையும், சம்பிரதாயங்க்களையும் அறிந்து கொள்கிறான் சிசில்.

1937ல் அவனுக்கு 18 வயதாகும்போது சிசில், அந்தப் பண்ணையையும் ஊமையாகிபோன தன் தாயையும் விட்டுப் பிரிந்து ஓடிவிடுகிறான். ஒரு இரவிலே பசி தாங்க முடியாமல் ஒரு கேக் கடையை உடைத்துத் திறந்து கேக்குகளை எடுத்து ஆவலாய்ச் சாப்பிட ஆரம்பிக்கிறான். அப்போது வரும் கடையின் உரிமையாளர், முதலில் கோபப்பட்டாலும், பின்னர் பரிதாபப்பட்டு அவனை அந்தக் கடையிலேயே வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறார். அங்கிருந்து வாஷிங்டன் DC யில் உள்ள பெரிய ஓட்டலில் வேலைக்குச் சேருகிறான். அங்கு அவனுக்குத் திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகளும் பிறக்கின்றனர். அப்போது தான் அவனுக்கு வெள்ளை மாளிகையில் பட்லராக வேலை கிடைக்கிறது. அச்சமயம் ஐசன்ஹோவர் அமெரிக்க அதிபராக இருக்கிறார். அதற்கப்புறம் வந்த ஜான் F. கென்னடி, லிண்டன் B.ஜான்சன், ரிச்சர்ட் நிக்ஸன், ரொனால்ட் ரீகன் ஆகிய பலருக்கும் நெருங்கிய பட்லராக இருக்கும்போது நடக்கும் பலவித அரசியல் சமூக மாற்றங்களை திரைப்படம் அழகாக படம் பிடிக்கிறது.


‘கறுப்புச்  சிறுத்தைகள்' அமைப்பில் சிசிலின் மகன் சேருவது, வெள்ளை அதி சமூக KKK க்கு எதிராக போராடுவது, அதில் சிசிலின் வெறுப்பு, பின்னர் ஈடுபாடு, வெள்ளை மாளிகையில் ஒரே வேலை செய்யும் கறுப்பருக்கும் வெள்ளையருக்கும் வேறுவேறு சம்பளம் இருந்ததை சிசில் எதிர்த்தது, மார்டின் லூதர் கிங் ஜூனியர்  சுட்டுக் கொல்லப்படுவது என்று ஆரம்பித்து கறுப்பினத் தலைவர் ஒபாமா அதிபராக  வருவது வரை அமெரிக்க வரலாறை அள்ளித்தரும் படம் இது.

சிசிலாக நடித்தது ஃபாரஸ்ட் விட்டேகர், அவர் மனைவி குளோரியாக மிகப்பிரபலமான டிவி ஸ்டார் ஒபரா வின்ஃபரே. இருவரும் தம் பண்பட்ட நடிப்பால் அப்படியே கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். இன்னும் இதில் நடித்த அனைவரும் தங்கள் தங்கள் பாத்திரங்களை மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.

Lee Daniel
திரைக் கதையை டேனி ஸ்டிராஸ் எழுத, தயாரித்து இயக்கியவர் லீ டேனியல். வெய்ன்ஸ்டின் கம்பெனி மூலம், ஆகஸ்ட் 2013ல் வெளியிடப்பட்ட இந்தப்படம் $30 மில்லியன் டாலரில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுதும் திரையிடப்பட்டு மொத்தம் 176 மில்லியன் சம்பாதித்தது.

இந்தப்படம் ஆஸ்கார் போன்ற பல விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டாலும் வாங்கிய விருதுகளை மட்டும் கீழே தருகிறேன்.

1.   ஆப்ரா வின்ஃபிரேவுக்கு “பெஸ்ட் சப்போர்டிங் நடிகை என்ற விருது: AARP - Annual Movies for Grownups Awards.
2.   ஹாலிவுட் ஃபிலிம் அவார்ட், லீ டேனியலுக்கு 'சிறந்த இயக்குநர்' விருது கொடுத்தது.
3.   அதே நிறுவனம் டேவிட் ஓயிலோவுக்கு 'ஸ்பாட்லைட்' விருது கொடுத்தது.

அமெரிக்க கறுப்பின வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும், 20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த அரசியல், சமூக மாற்றங்கள், பலவித சம்பவங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களும் இந்தப் படத்தை பார்த்து ரசிக்கலாம்.

 முற்றும்.

Monday, May 9, 2016

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்?


கலைஞர் மு.கருணாநிதி:

என்னால் நடக்க முடியாது. இப்போதெல்லாம் என்னால் அதிகநேரம் பேசமுடியவில்லை. அதிக நேரம் என்னுடைய வேனில் உட்காரமுடிவதில்லை. உடல் நலம் அவ்வளவு சரியில்லை. ஆனால் உங்களுக்காக ஓடி ஆடி உழைப்பேன் என உறுதி கூறுகிறேன். எனக்கு 93 வயதாகிறது, 103 ஆனாலும் உங்களுக்காக உழைப்பேன் யாரப்பா அங்கே பரப்புரை இடங்களை கொஞ்சம் குறைங்கப்பா, என்னால முடியல. எங்களாலும் தாங்க முடியல.
புரட்சித்தலைவி ஜெயலலிதா:
Add caption
“சசி, அடுத்த இடம் எங்க?”
“மதுரை அக்கா”
“சரிசரி பூமிபூஜை போட்டாச்சா?”
“போட்டாச்சு அக்கா”
“இந்தத்தடவை களப்பலி ஆகாம இருக்கணும். ஆமா ஹெலிகாப்டர் ரெடியா?”
ரெடி அக்கா”.
“சசி, ஹெலிகாப்டர் நம்ம மொட்டைமாடிக்கு வருமா?”
ஏற்கனவே கேட்டாச்சு, வராதாம்”
இல்ல நடக்க முடியல”
ஒரு வீல்சேர் ரெடி பண்ணலாம்னு அதுக்குத்தான் சொன்னேன்”
“ நோ நோ, அந்தாளும் வீல்சேர்ல வந்து நானும் வந்தா நல்லாருக்காது, ஆமா சொன்னேனே வேனில சீட்டை கொஞ்சம் பெரிசாகச் சொல்லி”,
இதுக்கு மேலே சீட்டை பெருசாக்க முடியாதாம்”.
“சரிசரி வேனை நேராக மேடைக்கு விடச் சொல்லு. மேடையில் லிப்ஃட் ரெடியா?” ரொம்ப மூச்சு வாங்குது, யாரையும் என் கிட்ட வரவிடாதே, இன்ஃபெக்ஷன் ஆயிறப்போவுது.
          “மேடையில எவ்வளவு AC இருக்கு ?”,
“ 20 டன் இருக்கு அக்கா”
“ பத்தலை 30 டன்னா ஆக்கிரு”. “நான் பேசும் போதே மக்கள் கிளம்பிராங்களே ஏன் அப்படி விடுறீங்க? வந்து உட்கார்ந்தவுடனே சுற்றிலும் உயரமா இரும்பு வேலி போட்டிருங்க”. பேச்சு ரெடியா?
அதெல்லாம் ரெடி அக்கா”.
“எழுத்தை இன்னும் கொஞ்சம் பெரிசா எழுத முடியுமா? சரியாத் தெரியல”
இதுக்கு மேல பெரிசாக்கினா, ஒரு பக்கத்துக்கு 2வரி கூட எழுத முடியாது அக்கா”,
 பேசத்துவங்குகிறார்.
மக்களுக்காக நான் மக்களால் நான்
புரட்சிக் கலைஞர் விஜய்காந்த்:
Add caption
“டேய் தள்ளிப் போங்கடா”,
“கீழே விழுந்துறக் கூடாதுன்னதான் நெருக்கமா வர்றோம்.
“என்னடா ஆச்சு எனக்கு ஏறினாலும் தடுமாறுது, இறங்குனாலும் தடுமாறுது, நடந்தாலும் தடுமாறுதுபேசினாலும் தடுமாறுது,ஒரு பக்கம் கோவம் கோவமா வருது, இன்னொரு பக்கம் அழுகை அழுகையா வருது”
“ஹேங் ஓவரா இருக்கும் கேப்டன்”
“இல்லடா அதெல்லாம் விட்டாச்சே”
“அப்ப பழக்கதோஷமா இருக்கும்”.
“இதுக்குத்தான சொன்னேன் , இதெல்லாம் விடக்கூடாதுன்னு”
பேசத்துவங்குகிறார்.
“நான் கிங்காதான் இருப்பேன்னு சொன்னேன். அவிங்க சரின்னு சொல்லிட்டாய்ங்க மக்களே மறக்காம ஓட்டுபோடுங்க. எவண்டா குறுக்கே குறுக்கே பேசறது, வந்தேன்னா தூக்கிபோட்டு மிதிச்சிறுவேன்”.
சீமான் என்ற சைமன்:

“நான் பெரியாரின் வழியில் வந்தவன், ஆனா எனக்கு பெரியாரைப் பிடிக்காது, ஏன்னா அவர் தமிழன் இல்லை.
மதிப்பிற்குரிய அண்ணன் வைக்கோவைப் பிடிக்கும் ஆனா பிடிக்காது.
சினிமாக்காரர்கள் அரசியலைக் கெடுத்துவிட்டார்கள்.
(அப்ப நீங்க?)
எனக்கு ஹிட்லரைப் பிடிக்கும்.
தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும்.
என் முப்பாட்டன் முருகன், பாட்டன் சோழன், தாத்தன் பாண்டியன். தமிழன் தமிழனாக வாழ வேண்டும். ஆனா நான் ஜீன்ஸ்தான் போடுவேன்.
இளநீரை தேசிய பானமாக்க வேண்டும்.
திருமலை நாயக்கர் மஹாலை இடிக்க வேண்டும்.
அடிரா கையைத் தூக்கி சல்யூட்,
 (பாதி வேட்பாளர்களுக்கு கையில் சுளுக்கு)
அன்புமணி:

“எங்கப்பா மரம்வெட்டி, என் தளபதி காடுவெட்டி,
என் தொண்டர்கள் ஆள்வெட்டி
டாக்டருக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்க.( எதுக்கு போஸ்ட்மார்டம் பண்ணவா ?)
வன்னியர் தவிர மத்தவர் எங்களுக்கு அந்நியர், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்.  ஆனால்  எங்கள் கட்சி சாதிக் கட்சி இல்லை,



 இதுல யாருக்கு உங்கள் ஒட்டு.
நம்ம நெலமையைப் பாருங்க மக்களே.