Thursday, March 1, 2018

ரஜினிகாந்தின் துள்ளல் பாடல் !


எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 38
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/01/blog-post_11.html#comment-form

Image result for நான் வாழவைப்பேன்
'         'நான் வாழவைப்பேன்' என்ற திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்து ஹிட்டான ஒரு பாடல் இது. 1979ல் இந்தப்படம் வெளியானது. பாடலைக் கேளுங்கள் மற்றவற்றை பிறகு பேசுவோம்.




நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கதா நாயகனாக நடித்த இந்தப் படத்தை நான் பார்த்த ஞாபகம் இருக்கிறது. படத்தின் நடுவில் ரஜினிகாந்த் வருவார். இந்தப் பாடல் மூலம் அவரது கதா பாத்திரம் அறிமுகப்படுத்தப்படும். புயல் மாதிரி ரஜினி வரும்போதே இவன் பெரிய ஆளாக வருவான் என்று தோன்றியதும் ஞாபகத்துக்கு வருகிறது. துள்ளலும் துடிப்புமாக ரஜினி வரும்போது மக்களின் கவனம் முழுவதுமாக ரஜினியிடம் சென்றதும் இயல்பாக நடந்தது.
Image result for Ilayaraja with Rajini

பாடல் ஒருவகை 'கிளப் பாடல்' எனலாம். இப்போது குத்துப்பாடல் ஒன்று அவசியம் எல்லாப் படத்திலும் இருப்பது போல அப்போது கிளப் பாடல் (CLUB DANCE SONG) இருக்கும். கிளப் டான்ஸ் பாடல்களுக்கெனவே ஆட்டக்கார நடிகைகள் இருந்தனர். இப்போது கதாநாயகிகளே  அந்த வேலையைச் செய்துவிடுவதால் ஆட்ட நடிகைகளுக்கான தேவைகள் இல்லாமல்  போனது.
ஒயின் ஷாப் பார் போன்ற ஒரு இடத்தில் இந்தப் பாடல் ஒரு ஆட்டமும் கூத்துமாக இருக்கும். அதற்கென இசையமைக்கப்பட்டிருக்கும் பாடல்களில் கிடார், டிரம்ஸ், டிரம்பெட் போன்ற இசைக்கருவிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அதே மாதிரியான இந்த துள்ளலான கிளப் பாடலுக்குத் தேவையான எல்லாவற்றையும் இளையராஜா  பயன்படுத்திருப்பார்.  

பாடலின் வரிகள்:
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே

ஆகா நான் தான் மைக்கேல்
அடி நீதான் மை கேர்ள்


நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கைப் பாடங்களை
நடிப்பேன் உந்தன் மன்றத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே
நாடகமா இன்னும் சாகசமா
இந்த ஊடல்கள் எனக்கு ஆகாதம்மா!


பொன்னாக மின்னும் நான் தொட்டது
உன் மீது எந்தன் கை பட்டது
இனிமேல் உன்னை யார் விட்டது
இளமை சுகங்கள் வேர்விட்டது
பெண்ணே எந்தன் எண்ணப்படி - அடி
கண்ணே என்னைக் கட்டிப்பிடி
பூங்கொடியே சிறுமாங்கனியே
உன் கண்களில் ஆயிரம் காதல் கதை


எல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்
திறமை இருந்தால் மாலையிடு
இல்லை என்றால் ஆளை விடு
ராணி என்றும் என்னோடுதான் இந்த
ராஜா உந்தன் பின்னோடுதான்
காவலில்லை ஒரு கேள்வியில்லை
இது ராத்திரி நேர ராஜாங்கமே

Image result for vaali with Ilayaraja


பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இந்த மாதிரி பாடல்கள் எழுதுவது தமக்கு கை  வந்த கலை என்பதை நிரூபித்து இருக்கிறார்  ஆனால் குடிக்கும்போது தத்துவங்கள் வெளிப்படுமென்பதை பாடலில் அமைத்திருக்கிறார். முதலாவது சரணத்தில் “நில்லாமல் சுழலும் பூமி இது, எல்லோரும் நடிக்கும் மேடையிது, போட்டேன் நானும் வேஷங்களை, படித்தேன் வாழ்க்கைப் பாடங்களை” என்பவை அருமையான வரிகள். அதோடு 2-ஆவது சரணத்தில், “எல்லாமே புதுமை என் பாணியில் சொல்லாமல் புரியும் என் பார்வையில்”, என்பது ரஜினியைப் பற்றிய வாலியின் புரிதல் போலவே ஒலிக்கிறது.
பாடலின் குரல்:

Image result for ilayaraja with yesudas old picture

பாடலின் குரல் ஜேசுதாஸ் அவர்கள். இந்த மாதிரிப் பாடல்களுக்கு ஜேசுதாசின் குரல் பொருந்தும் என நிரூபித்தவர் இளையராஜா. சிவாஜியின் குரலிலிருந்து ரஜினிக்கு கொஞ்சம் வித்தியாசம் கொடுக்க வேண்டும் என நினைத்தும் இந்தப் பாடலைக் கொடுத்திருக்கலாம். ஆனால் ஜேசுதாஸ் இந்தப் பாடலை நன்றாகவே பாடியிருக்கிறார். அதோடு அவரின் குரலில் இயற்கையாக அமைந்திருக்கும் சோகம் இந்த மாதிரி தத்துவம் கலந்த பாடல்களுக்கு பொருத்தமாகவே இருக்கிறது.    
ஏனோ தெரிவியவில்லை குடிப்பதுபோல் , அல்லது குடித்துவிட்டுப் பாடுவது போல் அமைந்த பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்து விடுவது மக்களின் பொதுவான மனநிலையை குறிக்கவில்லை என்றே நம்புகிறேன். உதாரணத்திற்கு கீழே சில பாடல்களைக் கொடுக்கிறேன்.
1.   சொர்க்கம் மதுவிலே
2.   தண்ணித்  தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்
3.   வா மச்சான் வா வண்ணாரப் பேட்டை
4.    ஒய்  திஸ் கொலவெறி
இப்படி குடியை கொண்டாட்டமாக நினைத்து அதில் அழிந்து போய் வாழ்க்கையே திண்டாட்டமாக அமைந்த பல கதைகளை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. இப்படி பார்ட்டி கெட்டுகெதர் திருவிழா என்றால் குடிப்பது என்பது வழக்கமாகிவிட்டது. உண்மையான மகிழ்ச்சி இதுவல்ல என்பதை மக்கள் எப்போது தான் உணர்வார்களோ.
தொடரும்


2 comments:

  1. குடித்துவிட்டு பாடுவது போல இருக்கும் பாடல்களுக்கு இன்னும் சில உதாரணங்கள் கொடுக்கலாம். நான் வாழ வைப்பேன் ஹிந்தி அமிதாப்பின் மஜ்பூர் திரைப்படத்தின் தழுவல்.

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி ஸ்ரீராம் .

    ReplyDelete