Thursday, December 17, 2015

சென்னையில் வெள்ளம் : வாட்ஸ் அப்பில் ரசித்தவை !!!!!!!!!!!!!!


Velacheri

தமிழகத்திற்கு காவிரியில் இருந்த நீர் திறக்க முடியாது - கர்நாடகா பதில் மனு தாக்கல்.
வேளச்சேரியில நிக்கிற தண்ணிய வச்சு வேல்டுக்கே சப்ளை பண்ணுவோம், போவியா !!!



மழைத் தண்ணி ரொம்ப தேங்கி இருப்பதால நான் ஆபிசுக்கு வர முடியாது, லீவு வேணும்.
பாஸ்:- உன்னோட பயோடேட்டால உன் ஹாபி ஸ்விம்மிங்னு  போட்டிருந்தேல்ல, ஆபிஸ் வந்து சேரு சீக்கிரமா.



ஜெயலலிதா மைன்ட் வாய்ஸ்:- தண்ணில சம்பாதிச்ச பணம் தண்ணியிலேயே போயிரும் போல இருக்கு.

மக்கள் மைன்ட் வாய்ஸ்:- இன்னிக்காவது பனியன் ஜட்டி காயுமா?



வாடிக்கையாளர் : என்னப்பா இது ரெண்டு இட்லி , ஒரு வடை கொண்டு வர ரெண்டு மணி நேரமா?
சர்வர் : இட்லியும் வடையும் ரெடியா இருக்கு , அம்மா பட ஸ்டிக்கர் வரத்தான் நேரமாகுது.


வருணன் : நான் இது வரை 350 சென்டிமீட்டர் மழை பெஞ்சிருக்கேன்
ரமணன் :இல்லை 340 தான்
வருணன் :பொய் சொல்ற , பெஞ்ச எனக்குத்தெரியாதா ?
ரமணன் :அளந்த நான் பொய் சொல்றேனா ? 340 சென்டிமீட்டர் தான்.
வருணன் : மறுபடியும் சொல்ற , சரி எல்லாத்தையும் அழி, நான் முதல்ல இருந்து பெய்யுறேன்.
 ரமணன் : ????????????????










  முற்றும் 



1 comment:

  1. ரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete