Wednesday, October 14, 2015

பரதேசியின் முட்டாள்தனம் ?????????????

Edwin Rajkumar
Face book ல்  மெசேஜைப் பார்த்ததும்  அப்படியே ஷாக் ஆயிட்டேன். அருமை மனைவிக்கு 2-ஆவது  ஆண்டு நினைவுநாள் கண்ணீர் அஞ்சலி என்ற எட்வின் அவர்களின் ஸ்டேட்டஸ். எப்படி எனக்கு இது தெரியாமப் போச்சு. யாருமே சொல்லலியே. ஐயோ இது பெரிய சோகமாச்சே, எட்வின் எப்படித்தாங்கினார். மனுஷன், மனைவி பிள்ளைகளுக்காக உயிரை விட்றவர் ஆச்சே. அதோட ரெண்டு வருஷம் ஓடிப்போச்சே எனக்குத் தெரியாமலேயே.
இந்தப்பிரபா கூட என்ட்ட சொல்லவேயில்லையேனு கோபம் வந்து மதுரையிலிருக்கும் பிரபாகர்க்கு போனைப் போட்டேன்.
பிரபா ?,
“ஏய் என்னடா ஆல்ஃபி, ரொம்ப நாளாச்சு கூப்பிட்டு, எப்படி இருக்க? மனைவி பிள்ளைகள் நலமா?”.
“பிரபா, அதெல்லாம் இருக்கட்டும், எட்வின் விஷயம் தெரியுமா?”
“என்ன விஷயம்டா ?
 விளக்கிச் சொன்னேன்.
“அடப்பாவமே, எனக்குத் தெரியாதுரா, எப்படி ஆச்சாம்”?
“எனக்கும் தெரியாது பிரபா, ஒரு வேளை உங்களுக்குத் தெரிஞ்சு, எனக்கு சொல்லாம விட்டுட்டீங்களோன்னு நெனச்சேன்”.  
“டே எட்வின் உனக்குத்தான் சீனியர், எனக்கு அவ்வளவு நெருக்கம் இல்லை. இருந்தாலும் உள்ளூர்னா எனக்கு எப்படியும் தெரிஞ்சிருக்குமே, ஆனா எனக்கு எப்படி தெரியாமல் போச்சுன்னு தெரியல, நான் விசாரிக்கிறேன்”.
“சரி பிரபா அவர் நம்பர் கிடைக்குமா? அவருடைய பழைய நம்பர் வேலை செய்யவில்லை”.
“இல்லடா என்ட்ட இல்லையே”
“சரி பிரபா உங்கள்ட்ட பிகு பேசறேன்”
எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல, எட்வின் ராஜ்குமார் மதுரை சமூகப்பணிக்கல்லூரியில எனக்கு ஒரு வருஷம் சீனியர். சீனியரில் பலபேர் எங்களோட நெருங்கிப் பழகுவாங்க. அதில எட்வின் ரொம்ப ஸ்பெஷல். எட்வின் இருக்கின்ற இடம் சிரிப்பும் களிப்புமாக இருக்கும். மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர் மட்டுமல்ல, பாசிட்டிவ்  எனர்ஜி மிகுந்தவர். எப்பொழுதும் டீக்காய் உடை அணிபவர்.  முகத்தில் எப்பொழுதும் தவளும் புன்சிரிப்பு. சமூகப்பணியில் முதுகலை முடித்து, பின்னர் MPhil-ஐயும் முடித்து மதுரை CSI நர்சிங் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்.
சென்னையில் நடந்த என்னுடைய திருமணத்திற்கு  வந்திருந்தார். அதோடு மதுரையில்  நடந்த அவர் திருமணத்திற்கு நான் போனதோடு வரவேற்பு நிகழ்ச்சியில் சிற்றுரையும் ஆற்றினேன். அவருடைய மனைவி எனக்கு நல்ல அறிமுகம், பிள்ளைகளையும் தெரியும்.
With Edwin at Thirumayam Fort.
மதுரைக்கு நான் வரும்போதெல்லாம் , தம்முடைய மாணவிகளுக்கு ஒரு கெஸ்ட் லெக்சர் கொடுக்க என்னை அழைத்துச் செல்வார்.
அதுமட்டுமல்லாமல், காரைக்குடி பயணத்திற்கு ஏற்பாடு செய்து என்னோடு வந்த பயணக்கட்டுரையை ஏற்கனவே படித்திருப்பீர்கள். இல்லையென்றால் இங்கே சுட்டவும்.http://paradesiatnewyork.blogspot.com/2014/02/3.html
அப்படி நெருங்கியவர் மனைவி? சேச்சே எப்படி? தாய் நாட்டை விட்டு வெகு வெகு தூரத்தில் இருப்பதன் காரணத்தால் இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்குமோ? நல்லது கெட்டதுக்கும் சட்டென போக முடிவதில்லை, ஹீம்.
அதன்பின் அவருடைய கல்லூரிக்கே போன் செய்து எப்படியோ நம்பரைக் கண்டுபிடித்துவிட்டேன்.
2 வருடம் கழித்துக் கேட்பதற்கு மிகவும் தயக்கமாயிருந்தாலும், பெட்டர் லேட் தென் நெவர். இல்லாவிட்டால் அவருடைய முகத்தில் எப்படி முழிப்பது என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, எண்களை அழுத்தினேன்.
‘ஹலோ’
 ‘ஹலோ’
“எட்வின் அண்ணா, நான் ஆஃல்பி பேசறேன்”.
“ஓ என்னப்பா ஆல்ஃபி எங்கருந்து பேசற?”
“இங்க தான் நியூயார்க்கில இருந்து பேசறேன்”.
“உன்ட்ட பேசி எத்தனை நாளாச்சு, ஒரு மூணு வருஷம் இருக்குமா”?
“ஆமாண்ணா, கரெக்ட்”
“ நீ போனதடவை மதுரை வந்தபோது பேசினது, எப்படி இருக்க, மனைவி பிள்ளைகள் நல்லாயிருக்காங்களா “?
“எல்லாம் இருக்காங்க, நீங்க எப்படி இருக்கீங்க?”
“நான் எப்பவும் போல சூப்பரா இருக்கேன்?” (என்ன சூப்பரா இருக்காரா? என்ன சொல்றார்?)
 “சாரிண்ணே எனக்கு முதல்லயே தெரியாது, மன்னிச்சிக்கிங்க”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல, இதெல்லாம் பெரிய விஷயமா? இதுக்குப்போய் சாரியெல்லாம் கேட்கிற (இதுக்கு சாரி கேட்காம எதுக்கு சாரி கேக்கிறது ?)
“ஆமாண்ணே இது எப்படி நடந்துச்சு?”
“என்னப்பா ஒரே சோகமா கேக்கற?” (பின்ன இதை என்ன சந்தோஷமாவா கேட்க முடியும் ?)
“சரி அதுக்கப்புறம் எப்படி இருக்கீங்க?”
“சூப்பரா இருக்கிறேன், ரொம்ப சந்தோஷமா இருக்கேன்”. (என்னடா இது, ரொம்ப மோசமானவரா இருக்காரு. ஒரு வேளை ரொம்ப டார்ச்சரோ, இல்லையே அவங்க ரொம்ப நல்ல டைப் ஆச்சே)
“சரி அதவிடு அதெல்லாம் ஒண்ணும் பெரிசில்ல, அந்த காரைக்குடி பயணக்கட்டுரை சூப்பர்டா, அதுவும் அம்மா மெஸ்ஸீம் அக்கா மெஸ்ஸீம்னு எழுதியிருந்தியே, ஹிலேரியஸ் போ”.(என்ன இது இந்த சந்தர்ப்பத்தில இதைப்பத்தி பேசறாரு)
“அண்ணா, பிள்ளைகளை எப்படி சமாளிக்கிறீங்க ?”.
“அதெல்லாம் பிரச்சனையேயில்ல, இப்பெல்லாம் ரொம்ப ஜாலியா இருக்காங்க”.
(என்ன பிள்ளைகள் ஜாலியா இருக்காங்களா?)
“ஆமா சமையல்லாம் எப்படின்ணே?”.
“அது வழக்கம்போல நான் தான். இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னால  கத்துவச்சிக்கிட்டது எவ்வளவு நல்லது பாரு”.
“ஆமாண்ணே, நான் கூட கத்துக்கனும். ஏண்ணே ஒரு சம்பளத்தில எப்படின்னே மேனேஜ் பண்ணீங்க ?”.
“அட ஆமாப்பா, எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கமுடியும் ஒண்ணு செலவுக்கு ஒண்ணு சேமிப்புக்கு”.
(எதைச் சொல்றாரு ஒண்ணும் புரியலயே மனைவியோட பென்ஷனை சொல்றாரோ ?).
“இருந்தாலும் உங்க மனைவி எவ்வளவு நல்லவங்க, உங்களுக்கு எவ்வளவு பொருத்தமானவங்க”.
“என்னப்பா திடீர்னு அவளைப்பத்திப் பேசுற?”.
“ஆமான்னே, நேத்துதான் கல்யாணம் நடந்தாப்ல இருக்கு கண்ணுக்குள்ள இருக்காங்க”.
“என்னப்பா இவ்வளவு உருகற, இந்தா நீயே பேசு”.
“ஏம்மா இந்தா, ஆல்ஃபி பேசறான்”.( அய்யய்யோ அதுக்குள்ள மறு கல்யாணம் பண்ணிட்டாரா ?)
மறுமுனையில் பெண்குரல்:
“என்ன ஆல்ஃபி எப்படி இருக்கீங்க?”
ந நா.. நல்லா இருக்கேன், நீ நீ நீங்க எப்படி? (இது எப்படி அதே குரல் ?)
“என்னங்க பேச்சு குழறுது, சிக்னல் சரியில்லை போல, நீங்களே பேசுங்க”.
“சொல்லுப்பா ஆல்ஃபி அப்புறம் வேறென்ன விசேஷம்?. நானே உனக்குச் சொல்லனும்னு தான் நெனைச்சேன். சரி டிக்கெட் புக்பண்ணவுடனே சொல்லலாம்னு. விட்டுட்டேன். நியூயார்க்ல நடக்குற சுற்றுச்சுழல் கான்ஃபிரஸீக்கு, என்னை செலக்ட் பண்ணது ஒரு அதிர்ஷ்டம்தான். உன்னையும் உன் குடும்பத்தையும் சந்திக்கலாம்ல”.
“எட்வின் அண்ணா என்னை மன்னிச்சிருங்க”  
“என்னப்பா, என்னாச்சு, நான் வரும் போது இருக்கமாட்டியா?”
“நோ நோ, அதில்லைன்னா, நீங்க தாராளமா வாங்க, என் கூட வந்து தங்குங்க, சரி நான் அப்புறம் பேசறேன்”
 உடனே ஃபேஸ்புக்ல போய்ப்பார்த்தா, மனைவி பேர் அதேதான். ஆனா அது எட்வின் ராஜ்குமார் இல்ல எட்வின் ராஜ்சுந்தர் . இவரும் என்னோட   கான்டக்ட்ல   இருக்கும் 5000 பேரில் ஒருவர்தான் .ஆனால் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர் அல்ல. எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்.
எட்வினும் அவர் மனைவியும் இன்னும் நூறு வருஷம் வாழட்டும்.
முற்றும்.



ஒரு முக்கிய அறிவிப்பு:

வருகின்ற அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் இலங்கைத்தமிழர் நடத்தும் ஆனந்தம் நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்குபெறும் பட்டிமன்றம் நடக்க விருக்கிறது என்னுடன் தோழர்கள் மோகன் , பிரபு சின்னத்தம்பி, தோழிகள் வான்மதி மற்றும் சுபா பங்கு கொள்கிறார்கள். நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிக்கட் பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பங்கு கொள்ளலாம்.

தலைப்பு :வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?
இடம் : PS 131 அபிகைல் ஆடம்  பள்ளி
170-45 84th அவன்யூ
ஜமைக்கா, குயின்ஸ் , நியூயார்க் -11432
நேரம் : மாலை ஆறு மணி 



10 comments:

  1. பெயர்க்குலப்பம் எப்படி எல்லாம் ஜோசிக்க வைக்குது.

    ReplyDelete
    Replies
    1. குழப்பத்திலும் ஒரு குலப்பமா ?

      Delete
  2. @தனி மரம் அண்ணே அது "குழப்பம்"

    ReplyDelete
  3. பெயர்க்குழப்பம்.... எப்படி யோசிக்க வைத்து விட்டது...

    ReplyDelete
    Replies
    1. இந்த முட்டாள்த்தனத்தை இனிமேல் செய்யமாட்டேன் வெங்கட் நாகராஜ்.

      Delete
  4. வணக்கம் அய்யா
    தொலைபேசி உரையாடல், படிக்கும் போது கூட உயிரோட்டமாய் இருந்தது, அழகிய சித்தரிப்பு. அடிப்புக்குரோகள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அபாரமாய் இருந்திருக்கும், வாழ்க வளர்க

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிஅன்புதாசன் .அடைப்புக்குள் இருப்பது என் மைண்ட் வாய்ஸ்

      Delete
  5. அவர்கள் வாழட்டும் பல்லாண்டுகள்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வாழட்டும் பல்லாண்டுகள்!!!மாஷா அல்லா .

      Delete
  6. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பாரதி .

    ReplyDelete