Friday, October 16, 2015

பரதேசியின் சமையல்: நளபாகமும் நழுவுற பாகமும்.


ஹலோ சேகரு ?,
 சொல்லுடா மகேந்திரா,
எப்படிரா இருக்க?
ஏதோ இருக்கேன்,
என்னடா சுரத்தில்லாம பேசுற, என்ன விஷயம் சொல்றா.
இல்லடா என் மனைவி?
மனைவி.. என்ன சொல்லுது ?.
 அவ வேலை?
 அவங்க வேலைக்கு என்ன? வேலை போயிருச்சா?
இல்லடா வேலை இருக்கு, ஆனா அவ வேலை பாக்கறது பிடிக்கல.     
பிடிக்கலைன்னா நிறுத்திரு,
டேய் நீ வேற, அப்புறம் கதை கந்தலாயிறும்,
பிறகு என்னடா?
இந்த வேலை வேணாம்னு நினைக்கிறேன்.
ஏண்டா பாவம் வேலைபளு அதிகமா?
அதெல்லாம் இல்லடா, சும்மா தூங்கி தூங்கி எழுந்து வர்றா,
 அதென்னடா அப்படி ஒரு வேலை.
 அதாண்டா பேபி சிட்டிங்?
அப்படின்னா? கொஞ்சம் விளக்கமா சொல்லு.
அதாண்டா குழந்தை பிறந்ததுல இருந்து, பெரியவளாகும் வரை வளர்த்துக் கொடுக்கிறது. ஸ்கூல்ல சேர்த்து, கொண்டுபோய் விட்டு, பிறகு மீண்டும் பிக்கப் பண்ணி, ஹோம் வொர்க் சொல்லிக்கொடுத்து, நல்ல பழக்கவழக்கங்கள் சொல்லிக் கொடுத்து இந்த மாதிரி.
அப்புறம் என்ன உன் மனைவிதான் ஊரில டீச்சரா இருந்தவங்கதான, சம்பளம் கிம்பளம் பத்தலையா?
அதெல்லாம் இல்ல நல்ல சம்பளம்டா, கிட்டத்தட்ட எனக்கு சரிசமம். அதோட போனஸ், லீவு, மாசத்தில் சனி ஞாயிறு தவிர இன்னொரு 5 நாளாவது லீவு வந்துருது. ஆனா முழுசம்பளம்,
அப்ப சம்பளம் பிடிக்க மாட்டாங்களா?
இல்ல, இவளா லீவு எடுத்தாதான் பிடிப்பாங்க, அவங்களா லீவு கொடுத்தா பிடிக்க மாட்டாங்க.
அப்ப உன் மனைவிக்கு வெக்கேஷன்?
அவங்க அடிக்கடி வெகேஷன் போறதால, அத முன்னாடியே எங்களுக்கு சொல்லிருவாங்க அதனால எங்க வெகேஷன் அதே தேதியில ஃபிக்ஸ் பண்ணி போயிருவோம்.
அட சூப்பர் வேலயா இருக்குதே.
ஆமாடா இது வரைக்கும் லீவு எடுத்ததே கிடையாது.
சரி பிள்ளைகள் உன் மனைவிக்கு அடங்கறது இல்லையோ?
நோநோ ரெண்டும் என் மனைவி மேல உயிரை வச்சுருக்குதுங்க. ஒரு பொண்ணு, ஒரு பையன். பையனை அஞ்சு மாதக் குழந்தையாயிருக்கும் போதிருந்து பாக்கிறா. பொண்ணு மூணு வயசுலயிருந்து.  பொண்ணுதான் முதல்ல கொஞ்சம் தகறாரு பண்ணுச்சு. அப்புறம் அதுவும் வழிக்கு வந்துருச்சு. இப்ப பையனுக்கு மூணுவயசு, பொண்ணுக்கு ஆறு வயசு ஆகிறது.
ஆமா இந்த வேலையில உன் மனைவி தூங்கித்தூங்கி எழுறதா சொன்ன?.
ஆமாடா, பிள்ளைகளை  மதியம் டெய்லி தூங்க வைக்கற நேரத்துல இவளும் கூட சேர்ந்து தூங்கிருவா.
என்னடா இது சூப்பர் வேலையா இருக்கு, சம்பளமும் அதிகம்னு சொல்ற. வேற என்னடா குறை. எதுக்கு உனக்குப் பிடிக்கல ?.
அதுவா, இந்தப்பிள்ளைகளின் பெற்றோர் இருவரும் டாக்டர்கள். அப்பா கர்நாடகா அம்மா குஜராத்தி ரெண்டும் ABCD.
அதென்னடா ABCD ?
 டேய் உனக்கு எத்தனைமுறை சொல்றது. இந்த நாட்டிலே பிறந்து வளர்ந்தவங்களை நாங்க ABCD னு சொல்வோம். அதாவது American Born Confused Desi என்று. இருவரும் தம்பிள்ளைகளை இந்தியக் கலாச்சாரத்தில வளர்க்கனும்னுதான் என் மனைவியை தேர்ந்தெடுத்தாங்க. அவ டீச்சரா இருந்து சைல்ட் சைக்காலஜி தெரிஞ்சதனால, பிள்ளைகள் பெற்றோரை விட இவள்ட்டதான் ரொம்ப குளோஸ். அதனாலதான் அவங்க பிள்ளைகளோட டைம் ஸ்பென்ட் பண்றதுக்காக அடிக்கடி வெக்கேஷன் போவாங்க. அவங்க தாத்தா பாட்டி வந்தாலும் இவளுக்கு லீவு கொடுத்துடுவாங்க. ஏன்னா பிள்ளைக  இவ இருந்தா அவங்கள்ட்ட  போகமாட்டாங்க.
என்னடா இவ்வளவு சொல்ற, அப்புறம் என்னடா பிரச்சனை.
பிரச்சனை என்னன்னா, அந்த டாக்டர் மனைவிக்கு சமைக்கத்தெரியாது
 ஓ அதான் பிரச்சனையா, உன் மனைவி நல்லா சமைக்கிறதால சமைக்கச் சொல்லிறாங்களா?
அதுவும் இல்லடா, அப்படியெல்லாம் சொல்லமாட்டாங்க.
பின்ன என்ன? பின்ன எப்படி சாப்பிடுறாங்க?.
அந்த டாக்டர் பெங்களூர்காரர் அவர்தான் சமைக்கிறார்.
 அதுல உனக்கென்ன பிரச்சனை, உன் மனைவியால அதைச் சாப்பிட முடியலயா? டேய் நீ வேற, இவ சாப்பாடு வீட்டில இருந்து எடுத்துட்டு போயிருவா.
என்னடா ஒரே மர்மக்கதை போல இருக்கு,
என் மனைவி பிள்ளைகள்ட்ட சாயந்திரம் ஆனா, சீக்கிரம் ஹோம்வொர்க்கை செய்து முடிங்க, நான் போய் சமைக்கனும்னு சொல்லியிருக்கா. அந்தப்பையன் ஒண்ணும் சொல்லல ஆனா அந்தப்பொண்ணு சொல்லியிருக்கு ஆண்ட்டி நீ ஏன் சமைக்கணும் ஒன்னோட ஹஸ்பென்ட் தானே சமைக்கணும்னு.
அது ஏன்டா ?
அது ஏன்னா,  சின்ன வயசுலயிருந்து, அவங்க அப்பாதான் காலையில காஃபி போடுறதிலிருந்து பிள்ளைகளுக்கு பிரேக்ஃபாஸ்ட் செஞ்சு கொடுக்கிறது. சாயந்திரம் டூட்டி முடிஞ்சு வந்தவுடனே சமையல் செய்யறதுன்னு கிச்சன் வேலையெல்லாம் அவர்தான் செய்வாராம்.
அது சரி அதுல என்ன தப்பு?
 தப்பில்லடா, அதனால அந்த பொண்ணு, எல்லா வீட்டிலயும் அப்பாதான் சமைப்பாங்க அம்மா ரெஸ்ட் எடுப்பாங்கன்னு நினைச்சுருச்சு.
ஓ அப்படியா?
ஆமாடா, அதனாலதான் என் மனைவிட்ட அப்படிகேட்டிருக்குது.
 ஐயையோ அப்புறம்?
இத வந்து என்மனைவி என்ட்ட சொன்னா, எப்பவும் இல்லாட்டியும் எப்பவாவது சமைக்கலாம்லேன்னு என்ட்ட சொல்லிருச்சு .
ஓ இப்பதாண்டா புரியுது, ஏன் உனக்கு உன் மனைவியோட இந்த வேலை புடிக்கலைன்னு. டேய் நீ என்ன அந்தக் காலத்திலயே இருக்க, இப்பல்லாம் பொண்ணுக எங்க சமைக்குத . பொண்ணுக பெற்றோரும், எங்க மகளை செல்லமாக வளர்த்துட்டோம், அவ சமையல் கட்டுப்பக்கமே போனதில்லை, அதனால நீங்களும் அவள சமையல் பண்ண விட்டுறாதீங்க. மாப்ளனு சொல்லிதான் கல்யாணம் பண்ணாங்க. நம்ம பையன்களும் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிட்டு, எங்கேஜ்மென்ட் முடிஞ்சவுடனே, சமையல் செய்வது எப்படின்னு புத்தகம் வாங்கி பரீட்சைக்கு படிக்கிறமாதிரி படிக்க ஆரம்பிச்சிர்ராங்க. ஏன் என்னோட வீட்டிலயே இப்பெல்லாம் நான்தான் அடிக்கடி சமைக்கிறேன். ஆமா நீயும் கத்துக்கிட்டு பண்ண வேண்டியதுதானே.  
இல்லடா எனக்குப் பயமா இருக்கு?
 எதுக்குடா பயமா இருக்கு அத எப்படி உன்னால சாப்பிடமுடியும்னா ?.
அதில்லடா,
பின்ன எதுக்குபயமாயிருக்கு, சீக்கிரம் சொல்லு கிச்சன்வேல வேலை போட்டது போட்டபடி இருக்கு.
Chef Todd Mohr

அதாவது, நான் சமையல் பண்ண ஆரம்பிக்கிறதுல பிரச்சனை இல்லை, அது அமிர்தம் மாதிரி இருக்கும்கிறதுல சந்தேகமில்லை. அது நளபாகமா இருக்கும்கிறதுல நம்பிக்கை இருக்கு. ஆனா அதனால என் மனைவி நல்லா சமைப்பாங்கிற  பேரு அவளுக்குப் போயிருமேன்னுதான் ரொம்பக் கவலையாயிருக்கு. அவ மனசு ஒடைஞ்சி போயிருவாளேன்னுதான் வருத்தமா இருக்கு.
டேய் பரதேசி நாயே, வைடா போனை.
பரதேசி: ???????

ஒரு முக்கிய அறிவிப்பு:

வருகின்ற அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் இலங்கைத்தமிழர் நடத்தும் ஆனந்தம் நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்குபெறும் பட்டிமன்றம் நடக்க விருக்கிறது என்னுடன் தோழர்கள் மோகன் , பிரபு சின்னத்தம்பி, தோழிகள் வான்மதி மற்றும் சுபா பங்கு கொள்கிறார்கள். நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிக்கட் பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பங்கு கொள்ளலாம்.
தலைப்பு :வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?
இடம் : PS 131 அபிகைல் ஆடம்  பள்ளி
170-45 84th அவன்யூ
ஜமைக்கா, குயின்ஸ் , நியூயார்க் -11432
நேரம் : மாலை ஆறு மணி 


No comments:

Post a Comment