Monday, March 17, 2014

சிவகங்கை பயணம் பகுதி 2: சிவகங்கைச் சீமை


சிவகங்கைச்சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் கதையை முன்னரே பார்த்தோம். ஆனால் சிவகங்கை சமஸ்தானம் உருவானது ஒரு சுவாரஸ்யமான வரலாறு இதோ உங்களுக்காக.

சேதுநாடு அல்லது ராமநாதபுரம் சமஸ்தானம், ரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதியின் நீண்ட ஆட்சிக் காலத்தில் (1674-1710) பரந்து விரிந்த நாடாக இருந்தது. ராமநாதபுரத்தின் ஏழாவது ராஜாவான இவர் காலத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகள் ஒரே நாடாக இருந்தன. சேதுபதி எப்படி புதுக்கோட்டைப் பகுதியை தொண்டைமானுக்கு தாரை வார்த்தாரோ, அதேபோல் சேதுபதிதான் சிவகங்கையையும் கொடுத்தது. 

கிழவன் சேதுபதி மன்னராக இருக்கும்போது, நாலுகோட்டை பெரிய உடையாத்தேவரின் வீரதீர சாகசங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுப் பாராட்டி ஆயிரம் போர்வீரர்களுக்குத் தலைவன் ஆக்கினார். அவர்களைப் பராமரிக்க சில ஊர்களையும் தானமாகக் கொடுத்தார். போர் நடக்கும் சமயங்களில் அவர்கள் வந்து உதவ வேண்டும். அதன் பின்னர் கிழவன் சேதுபதி இறந்துவிட, அவர் மகன் விஜய ரகுநாத சேதுபதி 1710-ல் 8-ஆவது அரசராக முடிசூட்டிக் கொண்டார். அதோடு அவரின் மகளான அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரிய உடையத்தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவரையும் ஆயிரம் போர்வீரர்களுக்கு தளபதியாக நியமித்ததோடு பிரான்மலை, திருப்பத்தூர், சோழபுரம் மற்றும் திருப்புவனம் ஆகிய கோட்டைகளையும் தொண்டி துறைமுகத்தையும் பாதுகாக்க உத்தரவிட்டார்.
அவனுக்குப்பின் அவன் மகன் சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி 9ஆவது மன்னராக முடிசூட்டிக்கொண்டான். ஆனால் கிழவன் சேதுபதியின் இரண்டாவது மகன் பவானி சங்கரன், ராம நாதபுரத்தின் மேல் படையெடுத்து வந்து சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதியை சிறைப்பிடித்து அடைத்துவிட்டு, ராமநாதபுரத்தின் 10ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொண்டான் (1726-1729). சுந்தரேஸ்வரின் தம்பி கட்டையத்தேவன் தப்பித்து ஓடி தஞ்சாவூரின் மராட்டிய மன்னர் துலாஜியிடம் அடைக்கலம் புகுந்தான்.  

இதனை சசிவர்னதேவர் எதிர்த்ததால் அவரையும் விரட்டியடித்தான். சசிவர்ண தேவர் தஞ்சாவூர் சென்று தஞ்சைமன்னன், போர்வீரர்களின் வீரத்தைச் சோதிக்க அரண்மனையில் வைத்திருந்த புலியினைக் கொன்று, தன் வீரத்தை நிரூபிக்கிறான். காட்டில் அலையும்போது ஒரு ஞானி அவனுக்கு இதனைப்பற்றி உபதேசம் செய்ததாகக் கேள்வி.

அங்கு ஏற்கனவே அடைக்கலம் புகுந்த கட்டையத்தேவனுடன் நெருக்கமானான். பின்னர் தஞ்சை மராட்டிய மன்னனின் உதவியுடன், பெரும் படையுடன் சென்று 1730-ல் உரையூரில் நடந்த உக்கிரமான போரில் ராமநாதபுரத்தைக் கைப்பற்றி அதன் 11ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொள்கிறான்.
அதன்பின் கட்டையத்தேவர் ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்து, மூன்று பகுதிகளைத்தனக்கும், 2 பகுதிகளை நாலு கோட்டை சசிவர்ணத் தேவருக்கும் பிரித்துக் கொடுத்தான். அதோடு சிவகங்கையைத் தலைநகராக்கிசசிவர்ணத்தேவருக்கு "ராஜா முத்து விஜய ரகுநாத பெரிய உடைத்தேவர்" என்ற பட்டம் கொடுத்து சுயமாக ஆட்சி செய்யும்படி செய்தான். அப்போது பிறந்ததுதான் சிவகங்கைச் சீமை. இவருடைய மகன்தான் முத்துவடுநாத தேவர் என்ற பெயரில் இரண்டாவது ராஜாவாக முடிசூட்டி 1750 முதல் 1772 வரை அரசாண்டார். இவரது மனைவிதான் ராணி வேலு நாச்சியார். அதன்பின் நடத்தவற்றை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
பிரிட்டிஷ் காலத்தில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை இரண்டுமே ஜமீனாக சுருக்கப்பட்டது. D சண்முகராஜா இதன் பரம்பரை பொறுப்பாளராக இருந்து இதனைச் சேர்ந்த 108 கோயில்கள், 22 கட்டணைகள் மற்றும் 20 சத்திரங்களை நிர்வகித்து வந்தார். இவருக்குப்பின் இவர் மகன் D.S.கார்த்திகேய வெங்கடாசலபதி  ராஜா பொறுப்போற்றார். இவர் 1986-ல் இறந்து போகும் போது அவர் மகளான திருமதி.மதுராந்தகி நாச்சியாரை வாரிசாக நியமித்து, இப்போது இவர்தான் நிர்வகித்து வருகிறார்.

இதுதான் அரண்மனை வாசல் என்றார் வனராஜ். எங்கே எங்கே என்று பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. ஒரே கடைகளும் விளம்பரப் பலகைகளும்தான் இருந்தன. வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் சிலை மட்டும் முன்னால் இருந்தது. அதில் சிவகங்கையின் வீர வரலாறு சுருக்கமாக இருந்தது. அரண்மனையின் முன்பகுதி வாசலின் இருபுறங்களும் கடைகள் சூழ்ந்து முகப்பின் அழகை மறைத்தன. வனாவின் நண்பர் ஒருவரின் உதவியால் திட்டிவாசலைத் திறந்து பார்த்தேன். உள்ளே சிறிது தொலைவில் பழைய கட்டடம் ஒன்று இருந்தது. வாரிசுகள் இன்னும் அங்கே வசித்து வருவதாகச் சொன்னார்கள். வரலாற்று முக்கிய இடங்களை நாம் பராமரிப்பதும் இல்லை, பாதுகாப்பதும் இல்லை. வனாவின் நண்பர் சொன்னார், "நீங்க முதலிலேயே வருவது தெரிந்திருந்தால் உள்ளே போக அனுமதி வாங்கி வைத்திருப்பேன்" என்று.  “பரவாயில்லை திடீரென்று தான் கிளம்பி வந்தோம்”, என்றேன்.

சற்றுத் தொலைவில் மியூசியம் ஒன்று இருப்பதாகச் சொன்னார்கள். வழி கேட்டுப்போய்ச் சேர்ந்தோம். பலருக்கும் தெரியவில்லை. சென்று பார்த்தால் எந்தப் பராமரிப்பும் இல்லாமல் பழுதுபட்ட ஒரு கட்டடத்தில் அந்த மியூசியம் இயங்கி வருகிறது. ஒரே ஒரு சிறிய கூடம், அவ்வளவுதான். கட்டணம் ரூ.5 என்று நினைக்கிறேன். செலுத்தி உள்ளே சென்றால் ஒரே தூசியும் குப்பையுமாக இருந்தது. அதிலே சிவகங்கை அரசவாரிசுகள் பயன்படுத்திய பல பொருட்கள் இருந்தன. ஒன்றும்  சரியில்லை, வெளியே வந்துவிட்டோம்.


"ஆல்ஃபி அடுத்து காளையர்கோவில் போகலாம்" என்றார், வனா. காளையர்கோவில் ரதம் என்று கோவி.மணிசேகரன் எழுதிய சிறுகதை ஒன்றை சின்ன வயதில் படித்ததிலிருந்து, அதனைப்பார்க்க வேண்டும் என்று வெகு நாள் ஆசை. இதோ சில நிமிடங்களில் அந்தக் கனவு நிறைவேறவிருக்கிறது.

தொடரும் >>>>>>>>>>>>>>

7 comments:

  1. //வரலாற்று முக்கிய இடங்களை நாம் பராமரிப்பதும் இல்லை, பாதுகாப்பதும் இல்லை.//

    அதே ஆதங்கம் எனக்குள்ளும்......

    தொடர்ந்து பயணிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. Thank you வெங்கட் நாகராஜ்.

      Delete
  2. சிவகங்கைச்சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் கதையை முன்னரே பார்த்தோம். ஆனால் சிவகங்கை சமஸ்தானம் உருவானது ஒரு சுவாரஸ்யமான வரலாறு இதோ உங்களுக்காக.




    சேதுநாடு அல்லது ராமநாதபுரம் சமஸ்தானம், ரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதியின் நீண்ட ஆட்சிக் காலத்தில் (1674-1710) பரந்து விரிந்த நாடாக இருந்தது. ராமநாதபுரத்தின் ஏழாவது ராஜாவான இவர் காலத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகள் ஒரே நாடாக இருந்தன. சேதுபதி எப்படி புதுக்கோட்டைப் பகுதியை தொண்டைமானுக்கு தாரை வார்த்தாரோ, அதேபோல் சேதுபதிதான் சிவகங்கையையும் கொடுத்தது.




    கிழவன் சேதுபதி மன்னராக இருக்கும்போது, நாலுகோட்டை பெரிய உடையாத்தேவரின் வீரதீர சாகசங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுப் பாராட்டி ஆயிரம் போர்வீரர்களுக்குத் தலைவன் ஆக்கினார். அவர்களைப் பராமரிக்க சில ஊர்களையும் தானமாகக் கொடுத்தார். போர் நடக்கும் சமயங்களில் அவர்கள் வந்து உதவ வேண்டும். அதன் பின்னர் கிழவன் சேதுபதி இறந்துவிட, அவர் மகன் விஜய ரகுநாத சேதுபதி 1710-ல் 8-ஆவது அரசராக முடிசூட்டிக் கொண்டார். அதோடு அவரின் மகளான அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரிய உடையத்தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவரையும் ஆயிரம் போர்வீரர்களுக்கு தளபதியாக நியமித்ததோடு பிரான்மலை, திருப்பத்தூர், சோழபுரம் மற்றும் திருப்புவனம் ஆகிய கோட்டைகளையும் தொண்டி துறைமுகத்தையும் பாதுகாக்க உத்தரவிட்டார்.

    ReplyDelete
  3. வரலாற்று ஆசிரியருக்கு தமா 3 போட்டுவிட்டு மீ எஸ்கேப்

    ReplyDelete
    Replies
    1. மதுரைத்தமிழன் ஐயா அவர்களுக்கு ,
      நலம், நலமறிய ஆவல்.
      இப்பவும் தங்கள் விருப்பத்தின் படி , வரலாற்றுப்பாடம் எடுக்க , தங்கள் வீட்டுக்கு வர எனக்கு முழு சம்மதம்.ஒரு நல்ல பிரம்பை மட்டும் தயார் செய்து வைக்கவும்.

      Delete
  4. சமஸ்தான வரலாறு சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  5. Thanks a lot திண்டுக்கல் தனபாலன்.

    ReplyDelete