Monday, August 19, 2013

ராக்கஃபெல்லர் மாளிகை Part 2 : கலை மாளிகையா? கனவு மாளிகையா ?


       வீட்டுக்குள் ஒரு அமானுஷ்ய அமைதி இருந்தது. உலகெங்கிலும் இருந்து, பலவிதமான கலைப்பொருள்களை கண்ணை மூடிக்கொண்டு , கரன்சிகளைக்கொட்டி வாங்கி ,வீட்டின் பல இடங்களில் வைத்திருந்ததனர். அவற்றில் குறிப்பாக சீனாவின் "டங் டைனாஸ்டி" (13 ம் நூற்றாண்டு ) யைச் சேர்ந்த கலைப்பொருட்கள். உலகின் தலை சிறந்த ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் ,சிலைகள் ,சிற்பங்கள், 2000 வருட பழைய கலைப்பொருட்கள்அழகாக வைக்கப்பட்டிருந்தன . 
Rockefeller Junior

வீட்டைக்கட்டுவதற்கே ஜான் டி ராக்கஃபெல்லர் கொஞ்சமே செலவு செய்திருந்தாலும், அவர் மகன், வீட்டை அழகுபடுத்துவதற்கு அதைவிட பலமடங்கு அதிகம் செலவு செய்தாராம் .
       அவர்கள் குடும்பத்தினர் பயன்படுத்திய வெள்ளி, பீங்கான் தட்டுகள் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பீங்கான் பாத்திரங்கள், இங்கிலாந்திலிருந்தும், மேற்கு ஜெர்மனியில் இருந்தும் பிரத்யேக ஆர்டராக செய்யப்பட்டு அவற்றில் JDR என்ற இனிஷியல்கள் பொறிக்கப்பட்டு இருந்தன .
       ராக்கஃபெல்லரின் அழகான அலுவலக அறையைப் பார்த்தோம் . அவர் ஓய்வு பெற்ற பிறகு, சுமார் 40 வருடங்கள் பல்வேறு சாரிட்டிகளுக்கு உதவுவதில் நேரத்தை செலவிட்டிருக்கிறார். அலங்காரமான கூடத்தில் ஒரு மிகப்பெரிய பிக்காசோ ஓவியம் இருந்தது .வீட்டுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் ஒன்றையும் படம் எடுக்க முடியவில்லை. தரையை மெத்து மெத்தென்ற பெர்சியன் கார்ப்பட்டுகள் அலங்கரித்தன. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய அறைஇருந்தது ."என்ன கிச்சன் இவ்வளவு சிறிதாக இருக்கிறதே "என்று நினைத்த போது, நினைவை அறிந்தவர் போல ரான் சொன்னார், “இது கிச்சன்  இல்லை, இது பட்லர்களின் ஓய்வு அறை”, என்று.வேலையில்லாத சமயத்தில் அங்குமிங்கும் நடமாட அனுமதியில்லை என்பதால், இந்த காத்திருப்பு அறையில் இருப்பார்களாம். அங்கே ஒரு சிறிய கேபினட்டில் பல எண்கள் இருந்தன .ஒவ்வொரு எண்ணும் வீட்டின் பல பகுதிகளை மற்றும் ரூம்களைக்குறிக்கும். அதில் லைட் எரியும் போது, உதவி தேவைப்படுவதை அறிந்து பட்லர்கள் அங்கு செல்லவேண்டும். அந்த அறையில் ஏகப்பட்ட கப் சாஸர்களும் தொங்கவிடப்பட்டிருந்தன.  பெரிய விருந்துகள் நடக்கும்போது பயன்படுத்தப்படுமாம். அதோடு நிறைய அவன்கள் இருந்தன. உணவுப்பண்டங்கள் சிறிய லிப்ட் மூலம், டைனிங் ஹாலுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். குடும்ப டைனிங் ஹாலை கடந்து வந்தால் ,

 பின்புறமுள்ள பகுதி, கூரை முதற்கொண்டு கண்ணாடியில் செய்யப்பட்டு லெளஞ் போல இருந்தது . அதன் பின்னால் மாபெரும் ஹட்சன் ஆறு ஓடிக்கொண்டிருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது .
Nelson Rockefeller

     ஜுனியரின் மகன் நெல்சன் ராக்கஃபெல்லர், மூன்றாவது பிள்ளையாக இருந்தாலும், மிகுந்த சூட்டிகையாக இருந்ததால், அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தார். அவர் பல பேரின் கோரிக்கைக்கு இணங்க அரசியலில் இறங்கி, மாபெரும் நியூயார்க் மாநிலத்தின் கவர்னராக இருமுறையும், அமெரிக்க நாட்டின் துணை அதிபர் (Vice President) ஆக ஒருமுறையும் இருந்தபடியால், இந்த வீடு அவருக்கு தன்னுடைய சகோதர சகோதரிகளால் ஒருமனதாக அளிக்கப்பட்டது. அவர் தன்  பங்குக்கு, தன் அம்மா போல் மாடர்ன் ஆர்ட் ஓவியங்களில் கவரப்பட்டு, வீட்டின் கீழ்ப்பகுதி முழுவதுமாக, ஓவியங்களாலும் பிகாசோ டேப்பஸ்டிரியாலும் அலங்காரம் பண்ணியுள்ளார்.
 அவருடைய அம்மாவைப்பற்றிச்சொல்ல வேண்டும், அவர் பெயர் ஆபி ஆல்ட்ரிச் ராக்கஃபெல்லர். 

ஜுனியரின் மனைவியான இவர் அவரைத் திருமணம் செய்யும் போது, அப்போதிருந்த ஒரு செனட்டராக இருந்த தந்தையின் ஒரே வாரிசாக இருந்ததால், ஜுனியரைக் காட்டிலும் அதிகமான சொத்தோடு, இக்குடும்பத்துக்கு வந்து சேர்ந்தார். இனம், இனத்தோடும், பணம் பணத்தோடும் தான் சேரும் என்பது எவ்வளவு உண்மை. ஜுனியர், பழம் கலைப்பொருட்களை (Antiques) சேகரித்துக் கொண்டிருக்கும்போது, அவரது மனைவி  ஆபி, மாடர்ன் ஆர்ட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார். நியூயார்க்கில் உள்ள MOMA என்று அழைக்கப்படுகிற (Museum of Modern Art) மிகப்பெரிய மியூசியத்தை நிறுவி தன்னுடைய விலையுயர்ந்த, மிகப்பிரபலமான ஓவியர்கள் வரைந்த பல ஓவியங்களை நன்கொடையாகவும் அளித்தார். தாயின் வழியில் தனயன் நெல்சனும் மாடர்ன் ஆர்ட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தார்.
    மேலே உள்ள பகுதிகளுக்கு அனுமதி இல்லாததால். கீழ்ப்பகுதியின் ஓவியங்களை பார்த்து முடித்து வெளியே தோட்டப்பகுதிக்கு வந்தோம். தோட்டமா அது?

தொடரும்>>>>>>>>>>>>>>


5 comments:



  1. மிகவும் பயனுள்ள தகவல்களை தமிழில் பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. அன்புள்ள ஆல்பி,

    ராக்பெல்லர் குறித்து பல தகவல்கள் அவ்வப்போது அறிந்திருக்கிறோம். அவர்களது மாளிகையை சுற்றிப் பார்த்துவிட்டு நீங்கள் அளித்த தகவல்கள் பொருள் செறிந்தவையாக இருந்தன. நன்று.

    ரங்கநாதன் புருஷோத்தமன்

    ReplyDelete
  3. அன்புள்ள ஆல்பி,

    ராக்பெல்லர் குறித்து பல தகவல்கள் அவ்வப்போது அறிந்திருக்கிறோம். அவர்களது மாளிகையை சுற்றிப் பார்த்துவிட்டு நீங்கள் அளித்த தகவல்கள் பொருள் செறிந்தவையாக இருந்தன. நன்று.

    ரங்கநாதன் புருஷோத்தமன்

    ReplyDelete