Friday, January 18, 2013

’மெக்சிகோ நாட்டு சுஜாதாவின் சலவைக்காரிகளைத் தேடி,..





ப்ளாக்எழுதியே தீருவது என்று தடாலடியாய் இறங்கிவிட்டேனே ஒழிய, அதை பெருவாரியான மக்களைப் படிக்கவைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. சரி, ஏற்கனவே எழுதிக்கொண்டிருக்கும் நண்பர்களை அணுகி ஆலோசனை பெறலாம் என்று பார்த்தால், அதில் அநேகரும், அநேக சமயங்களிலும், தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருக்கிறார்கள்.
 இன்னும் சிலரோஉனக்கு என்னாத்துக்கு இந்த வெட்டி வேலைஎன்பதுபோலவே எளக்காரமாகப் பார்க்கிறார்கள்.
சரி, இப்போதைக்கு, நமது ஃபேஸ்புக்கில் மட்டும் நிலைத்தகவலில் போட்டு வைப்போமே என்று முடிவுசெய்து, அதையே செய்தபோது, நேற்றுவரை என்பால் இரக்கம் கொண்டு சுமார் 200 பேர் வரை விஜயம் செய்திருந்தார்கள்.’என்னடா கமெண்டுகள் எதையும் காணோமேஎன்று ஒரு நண்பனிடம் கதறி அழுதபோது, ‘உன்னைப் பத்தி ஒரு பத்து பதிவாவது படிச்ச பிறகுதான், கமெண்ட் எழுதுறது பத்தியே கன்சிடர் பண்ணுவாங்க. அதுவரைக்கும் அநாவசியத்துக்கு அலட்டிக்காம, சின்சியரா கண்டினியூ பண்ணுஎன்றார்.
இருநூத்திச்சொச்சம் பேர் என்பது யானைப்பரதேசிக்கு இது சோளப்பொறிதான் என்றாலும், வருங்காலத்தில் லட்சக்கணக்கில் படிக்கவருவீர்கள் என்ற நம்பிக்கையில் எனது லட்சியத்தைத் தொடருகிறேன்.
இதற்குமுன் எழுதவேண்டியவை ஆயிரக்கணக்கில் இருந்தாலும், எனது மெக்சிகோ பயணத்திலிருந்து ப்ளாக்பயணத்தை தொடங்கவே நான் விரும்புகிறேன்.
காரணங்கள் மூன்று.
70-களில் முத்து காமிக்ஸ்-ல் படித்து இன்னும் தலையிலிருந்து அகலாததலைகேட்ட தங்கப்புதையல்உட்பட்ட சில நாவல்கள் தூண்டிய ஆவல்கள்.
அடுத்ததாக எனதுநீண்டநாள் நண்பேண்டா ஜேம்ஸ் போத்திராஜுலு, 2010-ல்,மெக்சிகோ பயணம் மேற்கொண்டு அளந்த, அளப்பரிய கதைகள்.
மூன்றாவதாக, கடைசி வரை புதிரை அவிழ்க்காமலே தத்தளித்து விட்டுப்போன நம்ம சுஜாதாவின் மெக்சிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்ஸ்.அந்நாட்டின், ஒரு சலவைக்காரியையாவது நேரில் சந்தித்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வது என்று மனைவிக்குக் கேட்க்காதவாறு மனதுக்குள் சபதம் மேற்கொண்டேன்.
பயணத்திட்டங்கள் வகுத்து, விமான டிக்கட் எடுத்து, ’மெக்சிகோ போனாலும் மச்சினன் துணை வேணும்என்ற பழமொழிக்காக, வஞ்சகமில்லாமல் வளர்ந்திருந்த மைத்துனன்  பெஞ்சமின் சாமுவேலை வரவழைத்து, நவம்பர் 29[2012] ஒருவழியாக விமானதளத்தையும் அடைந்துவிட்டோம்.
நியூயார்க்கின் ஜான்.எஃப்.கென்னடி விமான நிலையத்திலிருந்து மியாமி சென்று, அங்கிருந்து கன்னெக்டிங் ஃப்ளைட்டில் மெக்சிகோ செல்லவேண்டும்.
என்னை இறக்கிவிட்டுவிட்டு, பெஞ்சி சில அடிகள் கூட சென்றிருக்கமாட்டான். செல்போனில் அலறி அடித்து அவனை அழைத்தேன். ’என்னுடைய பயண டிக்கட் உட்பட்ட கோப்பைக் காணவில்லைஎன்றதும்என்ன கலர்னு சொல்லுங்க, வீட்ல தேடிப்பாத்து எடுத்துட்டு வர்றேன்என்றான் கொஞ்சமும் சலிப்பின்றி. எனக்கோ 38 டிகிரியிலும்  ஒரு கணம் வேர்த்து, சலவைக்காரிகளுடனான சந்திப்புக்கு இப்படி ஒரு அல்ப்ப ஆயுசா? என்ற எண்ணம் மின்னலாய் வந்து மறைந்தது.
அவனுடன் பேசியபடியே, இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து தேடியபோது, பேக்கின் எதிர்பாராத ஒரு ஏரியாவில், அந்த கோப்பு தென்பட, ஒரு பெருங்கோப்பை அளவுக்கு அசடு வழிந்தபடி, பெஞ்சியை அனுப்பி வைத்தேன்.
ஒருவழியாய் பயணத்துக்கு தயாரானேன். எல்லாம் நமது சேஃப்டிக்குத்தான் என்றாலும், விட்டால் ஆஃப்-பாயில் போடலாம் என்கிற அளவுக்கு, மண்டையை சூடாக்கும் செக்யூரிட்டி செக்-அப்கள்.
மூன்றுமணிநேர பயணத்துக்குத்தயாராகி, அந்த சின்ன ஃப்ளைட்டில் அமர்ந்தபோது, கடந்த இருபது வருட கால ஏமாற்றத்தின் தொடர்ச்சியாய், என்னை அப்செட் ஆக்குவதற்கென்றே அவதாரம் எடுத்து வந்த முதிர்கன்னிகள்தான் ஏர்ஹோஸ்டஸ்களாய், அந்த ஃப்ளைட்டிலும் ஏறியிருந்தார்கள்.
சுஜாதாவின் மெக்சிகோ நாட்டு சலவைக்காரிகளுக்கு இப்படி ஒருபோதும் வயதாகியிருக்காது என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு, அவரது நண்பர் ரா.கி.ரங்கராஜனின்நான் கிருஷ்ணதேவராயன்புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டேன். [ரா.கி..வை நியூயார்க்கில் வைத்துதிராவிடியன் டி.வி.க்காக பேட்டி எடுத்தது, திடீரென்று நினைவுக்கு வந்து போனது.அது குறித்து அப்புறம் பேசலாம்.]
விமானத்தில் தண்ணீர், கடலைக்கொட்டை போன்ற சின்ன சமாச்சாரங்களைக் கூட யானை, குதிரை விலைக்கு விற்றார்கள். நான் ஒரு சுமாரான கஞ்சன் என்பதால், எதையாவது வாங்கிச் சாப்பிடலாமா என்று தோன்றும் போதெல்லாம், ‘அட கொஞ்சம் முந்திதான வீட்ல மனைவி கையால ஓட்ஸ் சாப்பிட்டோம்என்று வயிற்றுக்கு மெஸேஜ் அனுப்பி, மனசுக்கு கடிவாளம் போட்டுக்கொண்டேன். போதாக்குறைக்குகும்கியானை சாப்பிடவேண்டிய சைஸில் ரெண்டு நேந்திரம் வாழப்பழங்களும் என்வசம் இருந்தன.
சரியாய் ஒன்பது மணிக்கு விமானம், மியாமியை நோக்கி சிறகை விரிக்க ஆரம்பிக்க, என் மனசு படபடக்க ஆரம்பித்தது. வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் நடுவில் ஏதோ உருண்டு ஓட ஆரம்பித்தது,..
என்ன நட்டநடு வானத்துல நிறுத்திட்டுப்போறானேன்னு நெனக்காதீங்க,.. இன்னும் நாலே நாள்ல பயணத்தைத் தொடருவேன்,..

6 comments:

  1. மதுரக்காரங்க எழுத வரும்போது வாங்கன்னு சொல்றது தானே மருவாதி.

    வாங்க .. வளர்க ..

    இந்த டபுள் டக்கர் word verification கட்டாயம் வேணுமா? கடவுளே ...

    ReplyDelete
  2. MEXICO NAATTU SALAVAIKKAARI JOKE....SOLLITTAARE....THERIYAADHAA...UNGALUKKU. BALU

    ReplyDelete
    Replies
    1. தெரிந்தால் சொல்லுங்களேன்

      Delete