Monday, September 26, 2016

மாவீரன் மாவோ சேதுங்!!!!!!!!!


சீனாவில்  பரதேசி 24
Image result
Mao 
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க   இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2016/09/blog-post_19.html

மாவோ சேதுங்கின் மசூலியத்தில் நுழையும் முன் அவரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வது நல்லது என்பதால் இந்தப்பதிவில் அவற்றைத் தர முயல்கின்றேன்.

மாவோ சேதுங் சீனாவில் ராணுவப்புரட்சியை மட்டுமல்ல ,பண்பாட்டுப் புரட்சியையும்  ஏற்படுத்திய ஒருவர். 1893 டிசம்பர் 26-ல் ஹியூனன் மாவட்டத்தில் (Hunan Province) உள்ள, ஷாவோஷான் (SHAOSHAN) என்ற ஊரில் பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் இருந்தது.  ல  தலைமுறைகளாக அந்த நிலம் மட்டும்தான் தான் இருந்தது. பல சீனக் குடிமக்கள் அப்போது வறுமையில் வாடிய சமயம் அது.  மாவோவின் குடும்பம் எவ்வளவோ பரவாயில்லை. விவசாயம் தவிர மாவோவின் அப்பா தானிய விற்பனையிலும்  ஈடுபட்டிருந்தார். அவர் பெயர் மாவோ ஜெதுங்  (Mao Zedong) மாவோவின் அம்மா வென் சிமெய் (Wen Qimei) மிகவும் அன்பானவர்.
Image result for mao zedong with his parents
Mao with his brothers and mother and father is in the next photo 
மாவோ எட்டு வயதில் அவர் ஊரிலுள்ள ஒரு சிறு பள்ளியில் சேர்ந்து கொஞ்சம் கல்வி கற்றார். அவருக்கு 13 வயது ஆனபோது அப்பாவின் வயலில் முழுநேர விவசாயப் பணி புரிந்தார். ஆனாலும் எப்போதும் துறுதுறுவென்று ஏதாவது இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்ற எண்ண ஓட்டம் இருந்தது.
அவருக்கு 14 வயதான போது, அவருடைய அப்பா அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். ஆனால் மாவோ அதை ஒத்துக் கொள்ளவில்லை. அவருக்கு 17 வயதான போது வீட்டைவிட்டு வெளியேறி ஹியூனன் மாவட்டத்தின் தலைநகரான சாங்ஷா (Changsha) என்ற இடத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில்  சேர்ந்தார்.
Mao at young age
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனாவை ஆண்ட சிங் (Qing Dynasty) பரம்பரையின் மேல் மக்களுக்கு வெறுப்பு இருந்தது. எனவே ஆங்காங்கே புரட்சிச் சிந்தனைகள் வெளிப்பட்டன. முடியாட்சிக்கு எதிரான சின்ஹுவா புரட்சி  (Xinhuva) வெடித்தது. மாவோ, குவோமின்டாங் (Kuomintang) என்ற தேசியக் கட்சியில் சேர்ந்ததோடு, அதன் புரட்சிப் படையிலும் சேர்ந்தார். Dr.சான் யாட் சென்  (Dr.Sun Yat Sen) தலைமையில் குவோமின்டாங், 1912ல் முடியாட்சியைத் தகர்த்து சீனக்குடியரசை உருவாக்கியது. மாவோவும் சீனாவின் புதிய எதிர்காலத்தை மனதில் வைத்து தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்.

Image result for dr.sun yat sen
Dr.Sun Yat Sen
மாவோ 1918ல் பீகிங் பல்கலைக்கழகத்தின் ஹுயூனன்  பள்ளியில் ஆசிரியராக பட்டம் பெற்றார் . அதே ஆண்டில் அவருடைய அன்பு அம்மா இறந்து போனதால், வீட்டுக்குத் திரும்பும் விருப்பம் குறைந்து  போனது. அங்கிருந்து பீஜிங் வந்து சிறிது காலம் வேலை தேடியலைந்து எதுவும் கிடைக்காதலால், பீஜிங் பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் உதவியாளராக சேர்ந்தார். அந்தச் சமயத்தில்தான் வெற்றிகரமாக நடந்த ரஷ்யப் புரட்சியைப் பற்றியும், கம்யூனிஸ்ட் சோவியத் யூனியன் அமைந்ததைப் பற்றியும் அறிந்து கொண்டார். அதன்பின் 1921ல் உதயமான சீனக்கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய வர்களில் இவரும் ஒருவர்.

சீனக்கம்யூனிஸ்ட் கட்சி வெகுவாக  வளர்ந்ததால் சன் யாட் சென், அவர்களோடு ஒத்துழைப்புடன் செயல்பட்டார்.  மாவோ இரு கட்சிகளுக்கும் ஆதரவாளராக முதலில் இருந்தாலும், லெனினின் கருத்துக்களில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். சீனக்கம்யூனிஸ்ட் கட்சியில் சிறிது சிறிதாக வளர்ந்து  ஷங்காய்  பகுதியின் தலைவராக உருவெடுத்தார்.  

மார்ச் 1925ல் சீன அதிபராக இருந்த சான் யாட்சென் இறந்து போனதால் அவருடைய சீடர், சியங் கைஷேக் குவோமின்டங்கின் தலைவரானார். 
Chiang Kai-shek(蔣中正).jpg
Chiyang Kai-shek
இவர் சன் யாட்சென்னைப் போலன்றி, மிகவும் பழைய வழக்கங்களில் ஊறியிருந்தார். எனவே ஏப்ரல் 1927ல் கம்யூனிஸ்ட்டுகளிடம் செய்த ஒப்பந்தத்தை முறித்து கம்யூனிஸ்ட்களை ஒழிக்க முனைந்து பல பேரைக்  கொன்றார். அதே ஆண்டு செப்டம்பரில் மாவோ, விவசாயிகளை ஒன்றிணைத்து ஒரு படையை உருவாக்கி அரசாங்கத்தைத்  தாக்கினார். ஆனால் குவோமின்டங் அரசுப்படைகள் அதை முறியடித்து அவர்களை விரட்டியடித்தனர். மாவோ எஞ்சிய மக்களுடன் ஜியாங்ஸி பகுதிக்கு (Jiangxi).  தப்பியோடினார் . அங்கே அந்த மலைப்பகுதியில் சோவியத் சீனக்குடியரசை நிறுவி அவரே அதன் சேர்மன் ஆனார். அதன்பின் சிறிய ஆனால் வலிமையான ஒரு கொரில்லாப்படையை உருவாக்கி, கம்யூனிஸ சட்டத்தை எதிர்ப்பவர் மற்றும் மீறுபவர்களை சித்தரவதை செய்து கொல்ல உத்தரவிட்டார்.

1934ல் பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்கள் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இணைக்கப்பட்டன. இதனால் ஆத்திரப்பட்ட சியங்  காய்ஷேக் சிறுசிறு தாக்குதல்களை நடத்தினார். ஆனால் அது உதவாதலால் 1934 அக்டோபர் மாதம் கம்யூனிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்க 10 லட்சம் பேர் கொண்ட அரசுப்படைகளை அனுப்பினார். மற்ற தலைவர்கள் ராணுவத்தை எதிர்க்க வேண்டும் என்று ஆத்திரப்பட்டாலும், மாவோ அது ஞானமற்ற செயல் என்று மறுத்து, பின்வாங்குவதே  நல்லது என்று  முடிவெடுத்தார். எனவே மலைப்பகுதிகளில் சுமார் 1 லட்சம் கம்யூனிஸ்ட்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரோடு, ஒரு வருடம் மலைக்காடுகளில் சுமார் 8000 மைல்கள் கடந்து வந்தனர். கடினமான அந்தப்பயணத்தை 'லாங் மார்ச்' என்று அழைக்கிறார்கள். கடும் குளிருக்கும், பஞ்சத்துக்கும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்கள் இறந்து போனார்கள்.

அதன் பின் மாவோ சென்ற அந்தப் பகுதிகளில் தன்னுடைய பேச்சுத்திறமையால் பல இளைஞர்களை கட்சியுடன் இணைத்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் தன்னிகரற்ற தலைவராக வளர்ந்தார்.  

இதற்கிடையில் 1937ல் ஜப்பானின் படைகள் சீனாவில் நுழைந்து அதகளம் செய்து பல பகுதிகளைப் பிடித்துக் கொண்டனர். சீன அதிபர் சியங் கைஷேக்  தலைநகர் நான்கிங்கை விட்டு தப்பியோட நேர்ந்தது. கடற்கரை நகரங்கள் மற்றும் பல பெரிய நகரங்கள் ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. சியங் இருபுறமும் நெருக்கிய சண்டையைச் சமாளிக்க முடியாமல் கம்யூனிஸ்ட்களிடம் சமாதானம் பேசி ஜப்பானுடன் சண்டையிட அவர்களின் உதவியை நாடினார். கூட்டு ராணுவத்தின் தலைவராக மாவோ இருந்தார். 1945ல் ஜப்பானியர் தோற்கடிக்கப்பட்டனர்.

அமெரிக்க அரசின் மத்தியஸ்தத்துடன் இருபெரும் கட்சிகளும் இணைந்து ஒரு அரசை ஏற்படுத்தினர். ஆனால் அது உள்நாட்டுப் போரில் முடிந்தது. அக்டோபர்   1, 1949-ல் மாவோ இதே டியன்மனன்  சதுக்கத்தில் சீனமக்கள் குடியரசை நிறுவினார். சியங் கைஷேக்கும் அவரைப் பின்பற்றியவர்களும் தைவானுக்குத் தப்பிச்சென்று அங்கு சீனக் குடியரசை உருவாக்கினார்.
Image result for Mao in military uniform
Mao in Military Uniform
மாவோவின் சில திட்டங்கள் சீனாவின் முன்னேற்றத்திற்கு உதவியது. பல உதவவில்லை. அவருடைய ஆட்சியில் வந்த பஞ்சத்தில் 40 மில்லியன் சீன மக்கள் அழிந்தனர். எனவே அவர் ஓரம் கட்டப்பட்டார். 1960 முதல் 1966 வரை தலைமையை இழந்த அவர் தன் 73-ஆவது வயதில் தலைமைக்குத் திரும்பினார். சீனாவின் வளர்ச்சிக்கு பல முயற்சிகளை எடுத்தார். 1972ல் அமெரிக்க அதிபர் நிக்சனைச் சந்தித்தார். உலக நாடுகளுடன் உறவைப் புதுப்பிக்க முயற்சித்தார். ஆனாலும் ஒரு வெற்றிகரமான ராணுவத்தலைவராக உருவெடுத்த அவருக்கு, நாட்டை வளர்ச்சியின் பாதையில்  நடத்த முடியவில்லை. இறுதியில் மாவோ1976ல் தன் 82-ஆவது வயதில் பீஜிங்கில் இறந்தார்.

இப்போது நிம்மதியாக உறங்கும் சேர்மன் மாவோ சேதுங்கைப் பார்க்க வாருங்கள் உள்ளே போவோம்.
-தொடரும்.


No comments:

Post a Comment