Showing posts with label காலே. Show all posts
Showing posts with label காலே. Show all posts

Tuesday, December 12, 2017

கடற்கன்னியும் வண்ண மீன்களும் !!!!!!!!!!!

இலங்கையில் பரதேசி -30


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post.html

கீழே வந்தது என்னவென்று பார்ப்பதற்கு முன் இந்த பவளப்பாறைகள், பாசிகளைப்பற்றி சிறிது பார்க்கலாம். இலங்கையின் பெரும்பாலான கடற்கரைகளில் இந்த அதிசயப் பவளப்பாறைகள் பாசிகள் இருக்கின்றன. காலே கடற்கரை அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. கிட்டத்தட்ட 180 வகைகள் இருக்கின்றனவாம்.நான் எங்கு சென்றாலும் அதன் சிறப்பு கூடுகிறது(?). இந்த ஆழ்கடலில் வீழ் உடலாக உள்ளே சென்றால் அவற்றை அருகில் பார்க்கலாம்.
“சார் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள், மெலிதான உடல் உள்ள உங்களைப் போன்றவர்களுக்கு நீச்சல்  செய்வது மிகவும் ஈஸி. நீச்சல் உங்களுக்குப் புத்துணர்ச்சி  ஆரோக்கியத்தைக் கூட்டும். அதுதவிர உங்கள் மூளை அதிவிரைவில் சிந்திக்கவும் தூண்டும்”.
“அம்ரி நீச்சலைக் குறித்த உன் விரிவுரை நன்றாக  இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அது எனக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. அதோடு தண்ணீரில் எனக்கு முண்டம் சாரி தண்டம் சாரி சாரி கண்டம் இருக்கிறது. பார்த்தாயா கண்டம் இருக்கிறது என்று சொல்வதற்கே எவ்வளவு தடுமாறுகிறது பார்”.
“என்ன கண்டம் சார்?”
“அதாவது எனக்கு சனி உச்சியில் இருக்கும்போது உக்கிரதிசை வழியில் செல்லும்போது, சுக்கில பட்சத்தில்  ராகுவும் கேதுவும் உறவாடும்போது நீரில் கண்டம் என்று குருஜி சொல்லியிருக்கிறார்”.   அம்ரிக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாதலால் கொஞ்சம் அள்ளிவிட்டேன்.
“யார் சார் அந்த குருஜி?”.
"அவரா அவர் பெயர் ஸ்ரீலஸ்ரீ மகா உபாத்யாய குருபீட குருப்பிரம்ம, குரு  விஷ்ணு குருதேவோ குருஆச்சாரிய".
“சரி பரவாயில்லை சார் விடுங்க. ஏதோ  இளையராஜா பாட்டில வர மாறி இருக்கு .
“ஏன் மீன் சாப்பிடமாட்டீங்கறீங்கன்னு கேட்டியே இதுதான் காரணம். கடல் பண்டம் எதுவும் சாப்பிடக் கூடாது. கடல் பண்டத்திலும் உடல் கண்டம் எனக்கு இருக்கிறது. (ஆஹா மீன் சாப்பிடாததற்கு ஒரு மீன் (mean) காரணம் கண்டுபிடித்தாகிவிட்டது)
“சரிசார் விடுங்க, விடுங்க”.
ஆழ்கடலில் ஸ்நார்க்லிங் செய்பவர்களுக்கு  பலவித வண்ணங்களில் இருக்கும் கோரல்களைப் பார்ப்பதும், ஆய்வதும் மிகுந்த ஆச்சர்யங்களை அளிக்க வல்லது. அதோடு பலவித ரகமான வண்ணமய மீன்களும் கூட்டம் கூட்டமாக அலைந்து வண்ணத்துக்கு வண்ணம் சேர்க்கிறது.






கோரல்கள் விதவிதமான அளவுகளில், வண்ணங்களில் வடிவங்களில் இருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சில இடங்களில் அவ்வளவு ஆளமில்லை. தொட்டுவிடும் தூரத்தில் நிறைய இருந்தன.  ஆனால் கண்ணாடி தடுத்தது. அப்படியே கை எட்டினாலும் எடுக்க முடியாது. இதெல்லாம் இலங்கை அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட இடங்கள். ஆண்டவனின் அதிசய படைப்புகள் தான் எத்தனை எத்தனை, அனைத்தையும் பார்த்து மகிழ ஒரு ஜென்மம் போதாது .
அப்போதுதான் கீழே அந்தப்பெரிய  மீன் தெரிந்தது . அது மீன் என்று உற்றுப்பார்த்தால் இல்லை இல்லை ஓ அது மெர்மைட் என்று சொல்லப்படும் கடற்கன்னி போலத்தெரிந்தது. அம்ரியும் குனிந்து சுவாரஸ்யமாகப் பார்த்து கையாட்ட அது கண்டுக்காமல் போனது.
“என்ன அம்ரி கடற்கன்னியா ?”      
"கன்னியா என்று தெரியவில்லை, சார் சும்மா விளையாடாதீங்க அது ஏதோ வெள்ளைக்காரப் பெண் ஸ்நார்க்லிங் செய்து கொண்டு இருக்கிறது".


Image result for snorkeling in galle

“எனக்கும் தெரியும் நீதான் உத்து உத்துப்பாத்தியே, அதனால் கேட்டேன்”.
அந்தப் பெண்ணை போட்டோ எடுத்துக் காண்பித்தால் கடற்கன்னி சொன்னால் யாரும் நம்பிவிடுவார்கள். 2 பீஸ் உடை இரு கால்களிலும் மீன் வாலைப் போன்ற ஒரு அமைப்பை மாட்டியிருந்தாள். கண்களில் ஒரு காகில்ஸ் முகமூடி. முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர். அவள் நீந்துவது மீன் கூட போட்டிபோடுவது போல் தெரிந்தது. இவ்வளவும் நடப்பது ஆழ்கடலில் நாங்கள் படகில் மேலே, அதற்குள் கடற்கண்ணன் வந்துவிட  முத்தமிட்டுக்கொண்டே இருவரும் நீந்திக்  கடந்தனர்.ஒரு சிங்கிள் கூட இல்லை இங்கே மிங்கிள் ஆக. எல்லோரும் ஜோடிதான் ஹீம் கடலின் ஆழத்திலும் சரி, கடற்கரையிலும் சரி, வான ஊர்தியிலும் சரி, நகர்ப்புறத்தில் சரி. தனியாக இருந்தது நான் மட்டும்தான் நல்லவேளை அம்ரியாவது இருக்கிறானே துணைக்கு.


படகு நகர்ந்து அடுத்த புறம் செல்ல அடியில் ஆயிரக்கணக்கில் ஒரு வண்ணமய மீன் கூட்டம் கடந்து சென்றது. சிறிது நேரம் சென்று இன்னொரு வண்ண மீன் கூட்டம் சென்றது,கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
Related image
Glass bottom 
இதென்ன இங்கு மீன் வளர்க்கிறார்களா? என்று  கேட்டால், படகுக்காரர் சொன்னார் எல்லாம் இங்கே இயற்கையாக வளர்வது என்று. என் மனைவி இப்போது மட்டும் இருந்திருந்தால் துள்ளிக் குதித்திருப்பாள். எங்கள் வீட்டில் வண்ணமீன்கள் தொட்டி வைத்து சில மீன்களை வளர்த்து வருகிறாள். ஒவ்வொன்றும்  நல்ல விலை. அதே சமயத்தில் மீன் உணவு என்றால் அவளுக்கு கொள்ளைப்பிரியம். அதெப்படி ஒரே சமயத்தில் ஒருபுறம் மீனைச் சாப்பிட்டுக் கொண்டு மறுபுறம் மீனையும் வளர்க்கவும் முடியும் என்பது எனக்கு எப்பவுமே ஆச்சரியம்தான். அதோடு எனக்கு மீன் என்றால் ஆகாது. அவளுக்கு மீன் என்றால் உயிர். இந்தக் கடவுள் எப்படியெல்லாம் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பாருங்கள்.
Image result for Glass boat in Galle

படகுக்காரர் எங்கெல்லாம் கோரல் இருக்கிறதோ  அங்கு சிலநிமிடம் நிறுத்துவார். அதே மாதிரி மீன் கூட்டம் வந்தாலும் நிறுத்துவார். இப்படி ஒரு வாய்ப்பு இதுவரை  எனக்கு கிடைத்ததில்லை. வண்ணமீன்களில் விதவித டிசைன்களைப் பார்க்கும்போது சொர்க்கத்தில் கடவுள் இதற்கென தனி டிபார்ட்மென்ட் வைத்து சில ஆர்ட்டிஸ்ட்டுகளை வேலைக்கு வைத்து வரைந்து, பெயிண்ட் செய்து, அனுப்புவார் போலத் தெரிந்தது.
 காலே பயணம் இனிமையாகக்கழிய, நானும் அம்ரியும் கிளம்பி கொழும்பு வந்து சேர்ந்தோம். அப்போது அம்ரி கேட்டான், “உங்களுக்கு பிரைட் ஐஸ்கிரீம் வேணுமா? வேணும் என்றேன். அதென்ன பொறித்த ஐஸ்கிரீம் என்று வியப்பாக இருந்தது.

தொடரும்>>>>>>>>

Monday, December 4, 2017

பரதேசிக்கு நீச்சல் தெரியுமா தெரியாதா ?

இலங்கையில் பரதேசி -29
Gale Beach

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2017/11/blog-post_27.html
          
அங்கிருந்து சிறிது தூரம் பயணித்து காலே பஸ் நிலையம் அருகில் இருந்த ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். சாலட் தவிர எதுவும் சொல்லிக் கொள்ளும் போல இல்லை. இந்திய உணவை மட்டுமே தேடிப்போகாமல் வெவ்வேறு உணவுகளைச் சாப்பிட்டுப் பார்க்கும்படி மனது சொல்கிறது. ஆனால் நாக்கும் வயிறும் கேட்க மாட்டேன்கின்றன. எத்தனை முறை ஏமாந்தாலும் இதுவே தொடர்கிறது. நான் என்ன செய்வது. அம்ரி நன்றாகவே சாப்பிட்டான்.  அவனுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை போலிருக்கிறது. வயிறு நிரம்பினால் போதும்போல தெரிகிறது. ஆள் நல்ல வாட்டசாட்டமாகவே இருந்தான். நல்லதுதான் டூர் கைட், டிரைவர் மட்டுமல்லாது என்னோட பாடிகார்டும் அவன்தானே. எனக்குத்தான் பிரச்சனை சுடர்மிகும் அறிவுடன் ஆண்டவன் படைத்தானோ இல்லையோ 'ருசிமிகும் நாவினைப் படைத்துவிட்டான் என்ன செய்வது.


          “சார் நீங்கள் ஸ்விம்மிங் போறீர்களா? இல்லை சர்பிங்கா இல்லை ஸ்நார்க்லிங்கா?
          “எங்கே எதில்?”
          "என்ன இப்படிக் கேட்கறீங்க, கடலில்தான்"
          (அடடே அம்ரிக்கு என்னைப்பற்றித் தெரியாது போலிருக்கு)
          “என்ன சார் சீக்கிரம் சொல்லுங்க”.
          “அந்தப் பொருட்களோ உடையோ எடுத்து வரவில்லையே”
          “சார் அதனால்தான் கேட்கிறேன் இங்கே அவையெல்லாம் வாடகைக்குக் கிடைக்கும்”.
          “அப்படியா இருக்கட்டும் பரவாயில்லை. இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்”.
          “சார் இங்கு திருப்பி வரமாட்டோம். இதுதான் கடைசி சான்ஸ். ஆமா உங்களுக்கு நீச்சல் தெரியுமா? தெரியாதா”?
          “தெரியும்ம்ம்ம் ஆனா தெரியாது?”
          “சார் கரெக்டா சொல்லுங்க, தெரியுமா? தெரியாதா?”
          “அட நீச்சல் கூடவா தெரியாது, ஏன் அழுத்தி அழுத்தி கேட்கற”,
 “அப்ப சரி வாங்க ரெண்டு ஸ்நார்க்ளிங் கிட் வாடகைக்கு எடுக்கலாம்”.
          “அது என்ன வென்று 5 வரிகளுக்கு மிகாமல் விளக்க முடியுமா?”
          “சார் ஸ்நார்க்ளிங் என்பது ஆழ்கடல் டைவிங், ஆக்சிகன் உதவியோடு கண்ணில் கண்ணாடி உரையை மாட்டிக் கொண்டு ஆழ்கடல் அதிசயங்களைப் பார்க்கலாம்”.
          “ஐயையோ அம்ரி நிச்சல் தெரியும் ஆனால் தண்ணீரில் தெரியாது”.
          “என்னாது, தண்ணீரில்லாமல் எப்படி நீச்சல் அடிக்க முடியும்?”
இல்லை தப்பாச் சொல்லிட்டேன். கடலில் அடிக்கத்தெரியாது. ஆறு, ஏறி, குளம் கிணறுஆகியவற்றில் அடிப்பேன்”.
“சார் இந்தக் கடல் ஆழமில்லை, ஆறு கிணறைவிட இது ரொம்ப சேஃப் சார்”.
          “அம்ரி உண்மையைச் சொல்லாறேன் எனக்கு  நீச்சல் தெரியாது?
நீச்சலும் தெரியாது பாய்ச்சலும் தெரியாது. கூச்சலும் தெரியாது என்னை இப்படி வளர்த்துவிட்ட என் அம்மா அப்பாவின் மேல் கோபங்கோபமாய்  வந்தது.
          "சரி விடுங்க சார், அப்ப போட்டில் போகலாம்
“அட அம்ரி போட் இருக்கா?, இதை முதல்லயே சொல்ல வேண்டியதுதானே?"
          எங்கள் வண்டி சந்துபொந்துகளில் நுழைந்து சென்றது.
          “என்னப்பா பீச்சுக்குப் போறேன்னு சொல்லிட்டு சந்து பொந்துக்குள்ள போற”.
          “சார் இது தான் வழி மத்ததெல்லாம் பிரைவேட்”.
Image result for Sun bath galle beach sri lanka

 வழியெங்கும் சிறுசிறு கடைகள் இருந்தன. அவற்றுக்குள் நீச்சல் உபகரணங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. அதுதவிர கடல்  பொருட்களை வைத்து செய்யப்பட அழகுப் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன. அதனையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றோம். வீடுகளுக்கு முன்னால் ஆட்கள் உட்கார்ந்து கொண்டு சில பண்டங்களை விற்றுக்கொண்டு இருந்தனர். அதுதவிர அவர்கள் வீட்டின் முன்னால் கார்களை விட கட்டணம் வசூலித்துக் கொண்டும் இருந்தனர். பீச்சுக்கு மிக அருகில் இருந்த ஒரு வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடக்க, பீச் வந்தது.
          மதிய வெய்யில் சுள்ளென்று அடித்தாலும்  கடற்காற்று அதனைத்தடவித்தடவி சாந்தப்படுத்தியதால் இ தமாகவே இருந்தது. வழியெங்கும் வெள்ளைக் காரர்கள் வெறும் ஷார்ட்ஸில் கையில் நீச்சல் சாதனங்களோடு வந்து கொண்டிருந்தார். வாயைப் பிளக்க வேண்டாம் ஆண்கள்தான். பெண்கள் டூபீசில் இருந்தார்கள். வழி சந்து பொந்தாக இருந்தாலும் உள்ளே நீண்ட கடற்கரை அழகாகவும் சுத்தமாகவும் இருந்தது. கடற்கரை முழுவதும் பலதரப்பட்ட மக்களைப் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் வெள்ளைக்கார வெளிநாட்டினர். சர்ஃபிங் செய்பவர்கள். ஸ்நார்க்லிங் செய்பவர்கள், வெறுமனே கடலில்           நீந்துபவர்கள், சன்பாத் எடுப்பவர்கள் என்று பலரும் இருந்தனர். ஸ்னார்க்லிங் செய்பவர்கள்  கிட்டத்தட்ட மீன் போன்றே மாறியிருந்தனர். சன்பாத் செய்பவர்கள் பெரும்பாலும் அரை நிர்வாணமாக இருந்தார்கள். ஆம் பெண்களும்தான். உடனே திரும்பவும் வாயைப் பிளக்க வேண்டாம். அவர்கள் குப்புறப் படுத்திருந்தார்கள்.
          அம்ரி ஒரு போட்காரரிடம் பேரம் பேசினான். பேரம்முடிந்து நானும் அம்ரியும் மட்டும் படகில் ஏறினோம். அது ஒரு மோட்டார் படகு.  அடடே நீச்சல் தெரிந்திருந்தால் கடலில் டைவ் செய்து ஆழ்கடல் அதிசயங்களை ஆத்மார்த்தமாக அனுபவித்திருக்கலாமே என்று ஆதங்கப்பட்டேன். (ஆஹா அ, ஆ ஐந்து தடவை வந்துவிட்டதே,இந்தப் பழைய புதுக்கவிஞன் அவ்வப்போது எட்டிப்பார்த்து அடம் பிடிக்கிறான், விட்டுவிடுங்கள் பாவம்)
          போர்ட்டில் இன்னொரு துடுப்பு போல இருந்தது. அந்தப் படகோட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு ஒருபுறம் உட்கார, அம்ரி அநாயசமாக ஏறி அடுத்தப்புறம் அமர்ந்தான் (மறுபடியும் அ நான்கு முறை அஹ்ஹா)
          கடல் பளிச்சிடும் நீல நிறங்களில் ஜொலித்தது. போட்டின் மேல் கூரை இருந்ததால் வெயில் தெரியாமல் அட்டகாசமாக இருந்தது அந்த மதிய நேரம். அப்போது போட் ஓட்டுபவர் கீழே இருந்த பலகையை உருவி விலக்க என்ன ஆச்சரியம் கடல் ஆழம்வரை தெரிந்தது. ஆம் படகின் கீழ்ப்புறம் நல்ல கெட்டியான ஃபைபர் கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தது. கீழே பவளப்பாறைகள், கலர் கலராய் சிறுசிறு அழகு மீன்கள் ,பவளப்பாசிகள்  என்று வேறு ஒரு உலகம் விரிந்தது. இவ்வளவு பாதுகாப்பாக இத்தனை அருகில் கடலின்  ஆழத்தைப் பார்ப்பது பிரமிப்பாக இருந்தது. அப்போதுதான் என் காலுக்குக் கீழே அந்த பெரிய மிகப்பெரிய மீனைப் பார்த்தேன்.
-தொடரும்.  

Monday, November 20, 2017

கடல் ஆமையும் காதல் அழகியும் !!!!!!!!

இலங்கையில் பரதேசி-27


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/10/800.html

"சார் சுனாமி வரும்னு பயந்துக்கிட்டேயிருந்தா, மீனவர் வாழ்க்கைக்கு என்ன செய்வது? "
"நீ சொல்வது சரிதான், விமான விபத்துகளுக்குப் பயந்து கொண்டு இருந்தால் நான் ஒரு இடத்திற்கும் போயிருக்க முடியாது".
"ஆமாம் சார், அல்லா எப்ப கூப்பிடுறானோ அப்ப போக வேண்டியது தானே".
கொஞ்சம் பொறுமையாய்க்  கூப்பிடச் சொல்லுப்பா, அல்லாவை, நான் ஊர்போய்ச் சேர்ந்திடுகிறேன்".
சரிவிடுங்க சார், உங்களுக்கு எப்போதும் கிண்டல்தான். சுனாமின்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது, ஒரு இடத்திற்கு உங்களைக் கூப்பிட்டுப் போகிறேன்.
Related image

போகிற வழியில் கூட்டம் கூட்டமாக வெள்ளைக்காரர்களைப் பார்த்தோம். கண்டியை விட  காலேயில் அதிகமான வெள்ளைக் காரர்களைப் பார்த்தேன். குடும்பம் குடும்பமாக கையில் சர்ஃபிங்  பலகையை வைத்துக் கொண்டு ஆண்கள் ஷார்ட்ஸ்களிலும்  பெண்கள் நீச்சல் உடையிலும் இருந்தார்கள். தெருவில் நடந்து திரிந்து கொண்டு இருந்தார்கள். அம்ரியிடம் கேட்டபோது சொன்னான், இவர்கள் இங்கு வந்து மாதக்கணக்காக தங்கி விடுவார்களாம். குறிப்பாக ஐரோப்பாவில் குளிர் சமய மாதங்களான  டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி காலத்தில் இங்கு வந்து மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் இங்கு தங்கி விடுவார்களாம். அவர்களுக்கென்று இங்கு விடுதிகளும் நிறைய உண்டாம். அவர்களின் பெரும்பாலான பொழுதுபோக்கு கடற்கரையில் சன்பாத் எடுப்பது, கடலில் நீந்துவது,ஸ்னார்க்லிங்,சர்ஃபிங்க் போன்றவைதான். “பீச்சில் இவர்களை நிறையப் பார்க்கலாம் சார்”, என்றான். உங்கள் கற்பனைகளை கொஞ்சம் நிறுத்தி விட்டு அம்ரியை பின் தொடர்வோம்.

அம்ரி, கூப்பிட்டுப் போன இடம் கொஞ்சம் வித்தியாசமான இடம் அனாதை யானைகளின் ஆசிரமத்தைப் பார்த்தோமே, நினைவிருக்கிறதா, இது அது போலவே ஒரு ஆசிரமம்தான். ஆனால் இது யானைகளுக்கு அல்ல, ஆமைகளுக்கு, என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? வாருங்கள் உள்ளே போவோம்.


இதனை நடத்துபவரின் குடும்பத்தில் அப்பா அம்மா ஆகியோர் சுனாமியால் இறந்துவிட அந்தப் பொறுப்பை ஏற்று இப்போது  மகன் இதனை நடத்துகிறார். இது முற்றிலும் பார்க்க வருபவர்களின் நன்கொடையால் நடத்தப்படும் ஒரு தனியார் இடம். உள்ளே பல தொட்டிகளில் உள்ள நீரில் பல விதவிதமான ஆமைகள் இருந்தன. சிறிய குஞ்சுகளிலிருந்து மிகப் பெரிய சைஸ் வரை இருந்தன. அதோடு ஆமைகள் என்றாலும் வேறுவேறு ஜாதிகள் இருந்தன. ஒவ்வொரு தொட்டியிலும் அவை பிறந்த தேதிகள் வயது ஆகியவை எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொரு தொட்டியாக போய்ப் பார்த்தேன். நான் உள்ளே போகும்போது அங்கே ஒருவருமில்லை. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு வெள்ளைக் காரக்குழு உள்ளே நுழைந்தது.


Add caption

உள்ளே வந்த ஒரு இளம் தம்பதிகளில் அந்தப் பெண்ணுக்கு ஒரு விபரீத ஆசை வந்தது, ஒரு ஆமைக்குஞ்சை எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்று. அவளுடைய ஆசையை தன் காதலன் அல்லது கணவனிடம் சொல்ல அவன் அதை ஒரு வழியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்ல, நான் என்ன பைத்தியக் காரத்தனம் இது என்று நினைத்த போது சற்றும் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது. அந்த இடத்தை நடத்துபவரின் மகள் வந்து ஒரு ஆமையை அப்படியே நீர் சொட்டச்சொட்ட தொட்டியிலிருந்து எடுத்து அவளுடைய கைகளில் கொடுக்க அவள் பரவசமானாள். அவள் கையில் இருக்கும்போது, ஆமையும் அழகாகத்தான் இருந்தது. அவளால் ஆமைக்கு அழகா, இல்லை ஆமையால் அவளுக்கு அழகா என்று தெரியவில்லை.



“ஏலேய் சேகர் ஒரு பழைய கவிஞன் கொஞ்சம்  எட்டிப்பார்த்து போலத் தெரிகிறதே?”.
“வந்துட்டாண்டா இம்சை அரசன் மகேந்திரவர்மன். ஏண்டா இந்த வரியைப் பாத்தா கவிதை மாதிரியா தெரியுது? சும்மா இரேண்டா. கவிதையெல்லாம் எழுதி 25 வருடம் ஆச்சுடா?”
“ஓ உனக்கு கல்யாணம் ஆகி சமீபத்தில் 25 வருஷம் ஆச்சே அதைச் சொல்றயா? அப்ப இந்த கவிதை கத்திரிக்காய் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாலதான் வரும்னு சொல்றியா?”
அடே சாமி ஆள விடுறா நான் அப்படில்லாம் எதுவும் சொல்லலை”
“ பின்ன நீ சொன்னதுக்கு என்னடா அர்த்தம்?”
ஒரு அர்த்தமுமல்ல நேரமாச்சு நீ போய்த்தூங்குடா”
 மகேந்திரன் சொல்றது உண்மைதானோ? ஏன் என்னுடைய கவிதைகள் நின்னு போச்சு?. நான் கவிதை பழகாமல் விட்டு விட்டேனோ?. இப்படி நம்ம திறமைகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் அது அப்படியே மறைந்துவிடும் தான். ஆனால் அதற்கேற்ப சந்தர்ப்பம் சூழ்நிலை அமையாவிட்டால் கவிதை எங்கே வரப்போகிறது?. இந்த எழுத்து உரைநடையாவது வருகிறது என்று சந்தோஷப்பட வேண்டியதுதான். என்ன மக்களே என்னுடைய பழைய கவிதைகளை வாசிக்க விரும்புபவர்கள் பின்நூட்டத்தில் தெரிவித்தால் அவ்வப்போது ஒவ்வொன்றாகப் பதிவிடுகிறேன்.
இந்த மகேந்திரன் வந்து டிராக்கை மாத்திட்டான். கொஞ்சம் இருங்க செல்போனை சைலன்ட் மோடில் போட்டுவிடுகிறேன். ஓகே மறுபடியும் காலேக்கு திரும்புவோம்.
நான் அதனை ஆச்சரியத்துடன் பார்க்க, "உங்களுக்கும் கையில் தரட்டுமா?”, என்று கேட்டாள். “இல்லை வேண்டாம்”, என்று அவசரமாக மறுத்துவிட்டேன்.


அதன்பின் அந்த ஆமைக்காப்பகப்  பெண்ணிடம் கேட்டேன், “எதற்காக இப்படி தொட்டியில் வைத்திருக்கிறீர்கள்? அவை சுதந்திரமாக இருப்பது தான் அவைகளுக்குப்  பிடிக்குமல்லவா?. கடல்ல போற ஆமையை எதற்கு இப்படி எடுத்து வந்து வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அப்போது அந்தப் பெண்ணின் அப்பா வந்து விளக்க ஆரம்பித்தார்.




அதற்குள் இன்னும் சில வெள்ளைக்காரர்கள் வர யூரோவோ டாலரோ கிடைக்குமென்று அவர்களிடம் சென்றார். எனக்கு கொஞ்சம் கோவம் வந்தது. நானும் நியூயார்க்கிலிருந்து வருகிறேன். நானும் டாலர் தருவேன் என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஒருவேளை சிங்கள தமிழ் பிரச்சனையாக இருக்குமோ?. நான் தமிழில் அம்ரியிடம் பேசியதை அவர்கள் கேட்டார்கள். அந்தக் குடும்பம் ஒரு சிங்களக்குடும்பம்.


என்னுடைய கற்பனைச் சந்தேகங்கள் எங்கெங்கோ செல்ல அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த வெள்ளைக்காரர்களுக்கு எடுத்துச் சொல்லுமிடத்திற்கு நானும் போய் வாய் பார்க்க ஆரம்பித்தேன்.


“ஆமைகளின் பூர்வீகம் எத்தனை ஆண்டுகள் என்று யாராவது யூகிக்க முடியுமா?” என்று கேட்டார் பெண்ணின் அப்பா.
சிலர் அப்போது ஆயிரம்/ பத்தாயிரம் என்று சொன்னார்கள். அவர் சொன்னார், “ஆமைகள் மிகவும் பழைமை வாய்ந்தது சுமார் 100 மில்லியன் வருடங்களாக இவைகள் பூமியில் இருக்கின்றன. டைனோசர்ஸ் வாழ்ந்த சமயத்தில் இவைகளும் வாழ்ந்து வந்தன”. என்று சொன்னார். ஆமைக் கதை சுவாரஸ்யமாக இருந்தது. மீதியை அடுத்த வாரம் சொல்கிறேன்.
- தொடரும்.