Thursday, October 30, 2014

பன்னீர் விட்ட கண்ணீர்!!!!!!!!!!!!!!

 ஒரு கற்பனை உரையாடல்

செயலாளர்: ஐயா உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்.
பன்னீர்: நான்தான் யாரையும் பார்க்க விரும்பலன்னு சொன்னேன்ல.
செயலாளர்: இல்லை ஐயா உங்க ஊர்னு சொல்றாரு.
பன்னீர்: ஓ அம்மூரா, அத முதல்ல சொல்லக்கூடாதா? சரி வரச்சொல்.
பரதேசி: முதல் அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.
பன்னீர்: யோவ் யாருய்யா இங்க முதலமைச்சர்? வாயை மூடு .கொஞ்ச நாள் இருக்கலாம்னு பாத்தா கெடுத்துருவாய்ங்க போலிருக்கு. ஆமா உன்னை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லையே. எந்தூரு நீ?
பரதேசி: நம்மூர்தான் பன்னீர், பெரியகுளம் பக்கத்தில தேவதானப்பட்டி. ஆனா இப்ப அமெரிக்காவில் இருக்கேன்.
பன்னீர்: ஓ அப்படியா நம்ம பய அமெரிக்காவில் இருப்பது ரொம்ப சந்தோஷம். ஆமா உன் பேரென்ன?
பரதேசி: பரதேசி.
பன்னீர்: கலவரப்பட்டு, ஏய் யாரப்பா அங்ஙன. பக்கி,பரதேசியை யெல்லாம் பார்க்கமுடியாது. இவனை வெளியே தள்ளி கடையை  அடை.
பரதேசி: என்ன பன்னீர் ஒங்க டீக்கடை ஞாபகம் வந்துருச்சா, கடையை அடைன்னு சொல்றீங்க ?

பன்னீர்: நீ யாருப்பா, விவகாரம் புடிச்சவனா இருக்க. ஆமா ஒனக்கு என்ன வேணும்?
பரதேசி: அம்மா அனுப்பினாக.
பன்னீர்: பதறி எழுந்து, குனிந்து ஒரு கும்பிடு போட்டு, ஏம்ப்பா இத முதல்லயே சொல்லக்கூடாது? சரி சின்னம்மாவா? பெரியம்மாவா, இளவம்மாவா?
பரதேசி: எந்த அம்மாவும் அனுப்பல, சும்மா சொல்லிப்பாத்தேன். அது சரி யாரு இந்த இளவம்மா? 

பன்னீர்: இளவரசியைத்தான் இளவம்மான்னு சொன்னேன்.
பரதேசி: ஓ அவர்களும் அம்மா வரிசையில் சேந்தாச்சா?
பன்னீர்: ரொம்ப குசும்பு ஒனக்கு. ஆனா எதுக்கு வந்திருக்க?. நான் எதுவும் உதவி செய்யமுடியாத நிலையிலிருக்கிறேன்.
பரதேசி: அது எல்லோருக்கும் தெரியும் பன்னீர், உங்களுக்கு உதவி செய்யத்தான் நான் வந்திருக்கிறேன்.
பன்னீர்: எனக்கு உதவியா? என்ன உதவி?
பரதேசி: யாரைப்பாத்தாலும் எதைப் பார்த்தாலும் பயம்மா இருக்கா?
பன்னீர்: ஆமா, அதான் எல்லாத்துக்கும் தெரியுமே?
பரதேசி: யாரையும் நம்பமுடியல, எதையும் பேசமுடியல?
பன்னீர்: அட ஆமா.
பரதேசி: இப்படி உள்ளுக்குள்ளயே எல்லாத்தையும் அடக்கி வச்சிருந்தா மாரடைப்பு வந்துரும்.
பன்னீர்: ஐயையோ என்னப்பா பயமுறுத்துற?
பரதேசி: அதனால யார்ட்டயாவது மனசுவிட்டுப் பேசினா இந்தப் பாரமெல்லாம் குறைஞ்சுரும்.
பன்னீர்: சரி யார்ட்ட  அப்படி பேச முடியும்?
பரதேசி: அதுக்குத்தானே நான் வந்துருக்கேன். என்ட்ட நீங்க மனந்திறந்து பேசலாம்.
பன்னீர்: உன்னை எப்படி நம்பறது?
பரதேசி: நான் நம்மூர்க்காரன், அதோட அமெரிக்காவில இருக்கிறவன். இங்க இருக்கப்போவதில்லை. எதையும் ரெக்கார்டு பண்ணல, இந்த ரூம்ல பேசினதை இங்கயே மறந்துரலாம்.
பன்னீர்: சரிப்பா நான் ரெடி (எழுந்து சென்று கதவுகளையும் ஜன்னல்களையும் அடைக்கிறார்)
பரதேசி: உங்களுக்கு கிடைத்த முதலமைச்சர் பதவியைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?
பன்னீர்: மாண்புமிகு இதயதெய்வம், தங்கத்தாரகை, புரட்சித்தலைவி அம்மா>>>>>>>.
பரதேசி: போதும் நிறுத்துங்க பன்னீர். நான்தான் சொன்னேன்ல. மனந்திறந்து பேசுங்கன்னு.
 பன்னீர்: ஹிஹி சரிவிடு பழக்க தோசம். முதலமைச்சர் பதவி எப்படியிருக்குன்னா (பாடுகிறார்) "உள்ளுக்குள்ள சக்ரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி".

பரதேசி: ஆமா என்னது தாடி வளர்த்து கண்ணீர் விட்டு பெரிய உலக நடிப்பா இருக்கே? எல்லோரும் உங்களை கண்ணீர் செல்வம்ல கூப்பிடுறாங்க.
பன்னீர்: நீ வேற என்னவிட பெரிய நடிகருங்க இருக்காய்ங்க.
பரதேசி: அம்மாவுக்கு இதெல்லாம் விளங்காதா?  
பன்னீர்: அவுங்களும் ஒரு நடிகைதானே. அதனால எல்லாவகை நடிப்பும் அவுங்களுக்குப் பிடிக்கும் (பாடுகிறார்) உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்.
பரதேசி: கண்டுபிடிச்சிர மாட்டாங்களா?
பன்னீர்: பக்கத்திலே இருக்கிற சசிகலா, இளவரசி நடிப்பையே கண்டுபிடிக்க முடியலயே. ஆனாலும் எனக்கு நடிப்புன்னா ரொம்பப் பிடிக்கும். எம்ஜியார் நடிப்பைப் பார்த்து வளர்ந்தவேன்ல.  
பரதேசி: அதெப்படி உங்களால அவ்வளவு குனிய முடியுது.சாஷ்டாங்கமா விழ முடியுது, இந்த வயசிலும்.

பன்னீர்: அதெல்லாம் யோகாவில் வேற வேற ஆசனம். நீதான் பாக்குறியே மந்திரி சபையில் எனக்கு மட்டும்தான் தொப்பை கம்மி.


பரதேசி: ஓஹோ அதான் விஷயமா? அதுசரி முதலமைச்சர் ஆயும் ஏன் அந்த அறையில உட்காரல? அவ்வளவு மரியாதையா?
பன்னீர்: நீ வேற அந்த ராசியில்லாத ரூமில போய் நான் உட்காருவேனா? ஏற்கனவே ஒரு தடவ உட்கார்ந்து ரொம்ப கொஞ்சக் காலத்தில பதவி போயிருச்சு.
பரதேசி: ஓ அப்படியா? ஆனா சமீபத்தில கார்டனில அம்மாவைப் பார்த்து கண்ணீர் விட்டீங்களே.
பன்னீர்: அது சோகக் கண்ணீர்தான். அதுக்குள்ள வெளியே வந்துட்டாங்களேன்னு.
பரதேசி: அடப்பாவி, அப்ப உள்ளே போன போது அழுதது.
பன்னீர்: அது ஆனந்தக் கண்ணீரப்பா. இனி நான்தேன் முதல்வர்னு நெனச்சு வந்தது. பரதேசி: ஓ இவ்வளவு விஷயம் இருக்கா. ஆமா எந்தத்துறை யெல்லாம் உங்க கீழே வருகிறது.?
பன்னீர்: அதெல்லாம் ஒன்னும் கிடையாது. எல்லாம் அம்மா துறை தான். அதான் IAS  அதிகாரிங்க இருக்காங்கல்ல. அம்மாகிட்டே நேரடியா ரிப்போர்ட் செய்றாய்ங்க.
பரதேசி: அப்ப உங்கள் யாருகிட்டயும் ஒரு அதிகாரமும் இல்லையா?
பன்னீர்: யாருக்கு வேணும் அதிகாரம்? பதவியை தக்கவைக்கிறதே பகீரதப் பிரயத்யனமா இருக்கு.
பரதேசி: அதான் OPS, OP அடிக்கிறாருன்னு சொல்றாங்களா? ஆமா அரசியல்ல உங்களுக்கு என்ன அனுபவம்?
பன்னீர்: என்ன இப்படி கேட்டுட்ட? என்னோட டீக்கடையில தினத்தந்தியும் மாலைமுரசும் தவறாம வாங்கிருவேன். வர்றவங்க படிச்சிட்டு பேசிக்கிட்டு இருப்பாய்ங்க. அதுலயிருந்து நிறைய கத்துக்கிட்டேன். எங்கடையில டீ ஆறினாலும் அரசியல் ஆறாதுல்ல.
பரதேசி: அப்ப பேப்பர் கூட நீங்க படிக்க மாட்டீங்க. சரி அண்ணா தி.மு.க -வில் எப்படி சேந்தீங்க?
பன்னீர்: ஓ அதுவா எனக்கு எம்ஜியார் படம்னா உசுரு. எங்கூரில்   ஜெயா டாக்கீஸ் அல்லது ரஹீம் தியேட்டர்னு எதில போட்டாலும் டெய்லி செகண்ட் ஷோ போயிருவேன். எங்கடையில எப்பவும் எம்ஜியார் பாட்டுதான் போடுவேன். அப்புறம் என்ன அதிமுகவில சேர்ந்திட்டேன்.
பரதேசி: அப்படின்னா திராவிட இயக்கம், பகுத்தறிவுக் கொள்கைகள் எல்லாம்?
 பன்னீர்: என்னப்பா என்னென்னவோ கேக்குற, அம்மாவுக்கே அதெல்லாம் தெரியாது.
பரதேசி: அப்ப நீங்க சேரும்போது உங்க கொள்கைகள் என்னவா இருந்துச்சு?.
பன்னீர்: அதான் சொன்னேன்ல, எம்ஜியார் படத்தை டெய்லி பாக்குறது. எம்ஜியார் பாட்டு மட்டும்தான் கேட்குறது. எம்ஜியார் படம் ரிலீசாகும்போது போஸ்டர் ஒட்டி, மாலை போட்டு தீபம் காண்பிக்கிறது.
பரதேசி: டீ கடைக்காரரெல்லாம் முதலமைச்சர் ஆயிட்டாருன்னு  சொல்றாங்களே?
பன்னீர்: என்னா அப்படி சொல்ற? டீக்கடை வச்சவர் நாட்டுக்கே பிரதமர் ஆகும்போது நான் ஆகக் கூடாதா. யாரு கண்டா நானும் ஒரு நாள் பிரதமர் ஆனாலும் ஆயிருவேன்.
பரதேசி: என்ன இப்படி பால் விலையை அநிநாயமா  ஏத்தீட்டீங்க ?
பன்னீர்: என்னாது பால் விலையை ஏத்தீட்டாய்ங்களா? அப்ப டீ விலையை ஏத்தச்சொல்லனும்.

பரதேசி: உங்க நீண்ட கால ஆசை எது?
பன்னீர் :ஒரு தடவையாவது ஹெலிகாப்டரல போயிரனும்.
பரதேசி: உங்க எதிர்கால திட்டம் என்ன?
பன்னீர்: அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. இன்னிக்கி நான்தான் முதலமைச்சர். அம்புட்டுத்தான்.

 பரதேசி: அப்ப பதவி போயிருச்சுன்னா ?
 பன்னீர்: இருக்கவே இருக்கு டீக்கடை.


No comments:

Post a Comment