நண்பர்களே ஏற்கனவே நான் அறிவித்தபடி கடந்த சனிக்கிழமை ஜனவரி 23அன்று , நியூ ஜெர்சியில் செயல்படும் தமிழ் அவை சார்பாக நடந்த கருத்தரங்கத்தில் அடியேன் கலந்து கொண்டு பண்டிகைகள் காட்டும் உறவுகள் என்ற தலைப்பில் பேசினேன் .அதன் சினைப்பை கீழே கொடுத்திருக்கிறேன் .கேட்டு உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள் .நன்றி .
https://www.facebook.com/103716554963097/videos/2489469564680351
சிறப்பு அழைப்பிதழ்
அன்பார்ந்த நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவாளர்களே,
வணக்கம்.
நமது சங்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் அங்கமாக, தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினைக் கொண்டாட இருக்கிறோம்.
இவ்விழாவில், இளையோர் பங்குபெறும் ஆடல், பாடல், நகைச்சுவை நாடகம், இலக்கியக்குழு சார்பாக நடுவர் கவிமாமணி இலந்தை ராமசாமி அவர்கள் தலைமையில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்,
மகாகவி திரு ஈரோடு தமிழன்பன் அவர்களின் சிறப்புரை மற்றும் பல சுவையான நிகழ்வுகள் நடக்கவுள்ளன.
நாள்: சனிக்கிழமை ஜனவரி 30, 2021 காலை 10 மணி முதல் நண்பகல் 2 மணி வரை
இணையம் வழியாக.(www.youtube.com/nytsponvizha)
Facebook è https://facebook.com/newyorktamilsangam
இப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வுகளை, தாங்கள் தங்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கண்டுகளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைக் காணவும்.
நன்றி.
அன்புடன்,
ஆல்ஃபிரட் தியாகராஜன்
தலைவர்,
இலக்கியக்குழு
நியூ யார்க் தமிழ்ச் சங்கம்.
அருமை நானும் இணையம் வாயிலாக இணைய முயல்வேன்
ReplyDeleteநன்றி அன்பு .
Deleteஇணைப்பிற்கு நன்றி...
ReplyDelete