நியூயார்க்கில் வ(க)சந்தகாலம் :
வீட்டுச்சிறையில்
வெகுகாலம் இருந்த நான் இன்று சற்றே
வெளியில் எட்டிப்பார்த்தேன்.
மண்ணில் புதைத்த கிழங்குகள்
மகிழ்ந்தே முகிழ்த்திருந்தன !
அவற்றுக்குத் தெரியும்
இது வசந்த காலம் என்று
வீட்டின் முன்
காவல் தூண்கள் போல்
காத்து நின்ற என்னிரு அசோக மரங்கள்
கரும்பச்சையில் களிப்பாய்
காற்றில் அசைந்தன !
அவற்றுக்குத் தெரியும்
இது வசந்த காலம் என்று
இலை உதிர்த்து , சில கிளை உளுத்து
உச்சி வரை குச்சியாய் நின்றிருந்த
சாலை மரங்கள்
பச்சையை வெளித்தள்ளி
பரவசமாய் இசைந்தன !
உருமாறி
பழுப்பேறிய புற்கள்
இளம்பச்சையில்
நிறம் மாறி
பச்சைப் போர்வையை
பதவிசாய் விரித்திருந்தன !
புல்தரையில் மேல்
ஆங்காங்கே
நீல பாணட்டுகள்
ஒளிந்து பார்த்துக்கண்சிமிட்டி
ஒளிர்ந்தன
பட்டுப்போன
என் மனைவியின் ரோஜாச்செடிகள்
பட படவென உயிர்த்தெழுந்து
பசுமையாடை உடுத்தி
மொட்டுக்கள் வருவதற்கு
மெட்டுக்கள் பாடின !
மறந்துபோன ,
இசைபாடும்
இச்சைக்குருவிகள்
பறந்து வந்து மறுபடியும்'
படுக்கையறை ஜன்னலில்
பூமி எழுமுன்
பூபாளம் இசைத்தன!
இவற்றுக்கெல்லாம் தெரியும்
இது வசந்த காலம் என்று
ஆனால்
கொரானாவுக்கு தெரியவில்லையே .
இது வசந்த காலம் என்று?
செய்தி வாசிப்பவள்
புன்னகை மாறாமல் சொன்னாள்
இன்றும் நியூயார்க்கில்
புது நோயாளிகள் நான்காயிரம்
புது இறப்புகள் நானூறு என்று !
இதற்கு ஒரு
சாவு காலம் வந்தால் தான்
நமக்கு இனி எந்த காலமும்
இல்லையென்றால் இந்த
வசந்த காலமும் நமக்கு
கசந்த காலம்தான் !
வெளியே
வசந்த காலமென்றாலும் உள்ளுக்குள்
அசந்த காலமாய் நீளும் இந்நிலை
எப்போது மீளும்?
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று முடியும் எங்கள் அடிமையின் நேரம் !
பரதேசி ஆல்ஃபி
ஏப்ரல் 30, 2020
வீட்டுச்சிறையில்
வெகுகாலம் இருந்த நான் இன்று சற்றே
வெளியில் எட்டிப்பார்த்தேன்.
மண்ணில் புதைத்த கிழங்குகள்
மகிழ்ந்தே முகிழ்த்திருந்தன !
அவற்றுக்குத் தெரியும்
இது வசந்த காலம் என்று
வீட்டின் முன்
காவல் தூண்கள் போல்
காத்து நின்ற என்னிரு அசோக மரங்கள்
கரும்பச்சையில் களிப்பாய்
காற்றில் அசைந்தன !
அவற்றுக்குத் தெரியும்
இது வசந்த காலம் என்று
இலை உதிர்த்து , சில கிளை உளுத்து
உச்சி வரை குச்சியாய் நின்றிருந்த
சாலை மரங்கள்
பச்சையை வெளித்தள்ளி
பரவசமாய் இசைந்தன !
உருமாறி
பழுப்பேறிய புற்கள்
இளம்பச்சையில்
நிறம் மாறி
பச்சைப் போர்வையை
பதவிசாய் விரித்திருந்தன !
புல்தரையில் மேல்
ஆங்காங்கே
நீல பாணட்டுகள்
ஒளிந்து பார்த்துக்கண்சிமிட்டி
ஒளிர்ந்தன
பட்டுப்போன
என் மனைவியின் ரோஜாச்செடிகள்
பட படவென உயிர்த்தெழுந்து
பசுமையாடை உடுத்தி
மொட்டுக்கள் வருவதற்கு
மெட்டுக்கள் பாடின !
மறந்துபோன ,
இசைபாடும்
இச்சைக்குருவிகள்
பறந்து வந்து மறுபடியும்'
படுக்கையறை ஜன்னலில்
பூமி எழுமுன்
பூபாளம் இசைத்தன!
இவற்றுக்கெல்லாம் தெரியும்
இது வசந்த காலம் என்று
ஆனால்
கொரானாவுக்கு தெரியவில்லையே .
இது வசந்த காலம் என்று?
செய்தி வாசிப்பவள்
புன்னகை மாறாமல் சொன்னாள்
இன்றும் நியூயார்க்கில்
புது நோயாளிகள் நான்காயிரம்
புது இறப்புகள் நானூறு என்று !
இதற்கு ஒரு
சாவு காலம் வந்தால் தான்
நமக்கு இனி எந்த காலமும்
இல்லையென்றால் இந்த
வசந்த காலமும் நமக்கு
கசந்த காலம்தான் !
வெளியே
வசந்த காலமென்றாலும் உள்ளுக்குள்
அசந்த காலமாய் நீளும் இந்நிலை
எப்போது மீளும்?
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று முடியும் எங்கள் அடிமையின் நேரம் !
பரதேசி ஆல்ஃபி
ஏப்ரல் 30, 2020