Thursday, January 18, 2018

ஊனமற்றவர்களை வைத்து நடக்கும் பிசினஸ் !!!!

படித்ததில் பிடித்தது

ஏழாம் உலகம் - ஜெயமோகன் - கிழக்கு பதிப்பகம்

Related image

            இந்து மத நம்பிக்கையில் மொத்தம் ஏழு உலகங்கள் இருக்கிறதாம். நமக்கு நன்கு தெரிந்த (?) சொர்க்கம், நரகம் தவிர இன்னும் பல உலகங்கள் இருக்கின்றனவாம். ஆனால் இந்தப் புதினத்திற்கு "ஏழாம் உலகம்" என்று பெயர் வைத்தது, நாம் இருக்கும் இந்த உலகத்திலேயே நமக்குத் தெரியாத பல உலகங்கள் இருக்கின்றன என்று நமக்குத் தெரியப்படுத்துவதற்காகத்தான். ஜெயமோகன், அப்படிப்பட்ட நாம் பார்க்காத, அதிகம் தெரியாத ஒரு உலகத்தை நம் கண்முன்னால் கொண்டுவரும்போது அது ஆச்சரியத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் அளிக்கிறது.

Image result for naan kadavul

          "நான் கடவுள்" என்ற பாலாவின் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதினார் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அந்தப் படத்திற்கு மூலக்கதை இந்தப் புத்தகம்தான் என்பது எனக்குப் புதிய செய்தி.
          கதை முழுதும் நடக்கும் உரையாடல்கள் மலையாளமும் தமிழும் கலந்த நாகர்கோவில் பாஷையில் வருகிறது. பல இடங்களில் அர்த்தம் புரியாது என்பதாலேயே பின் இணைப்பாக அந்த வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தத்தைத் தந்திருக்கிறார்.
          இனி நாவலின் சாராம்சங்களை வழக்கம் போல் புல்லட் பாயிண்டில் பார்ப்போம்.
Related image
Jeyamohan

1)   உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் குறைப் பிறவிகளை வைத்துக்கொண்டு சிலர் வியாபாரம் செய்கிறார்கள். அவர்களை உறுப்படிகள் என்று அழைக்கிறார்கள்.
2)   பல இடங்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, பிச்சையெடுக்க வைத்து அதன் கலெக்சன் மூலம் லாபம் சம்பாதிக்கிறார்கள்.
3)   இதில் ஈடுபட்டிருக்கும் ஈனப்பிறவிகள் அவர்கள் உறுப்படிகளை அடிக்கடி வாங்கி விற்கும் வேலையிலும் ஈடுபடுகிறார்கள்.
4)   ஒவ்வொரு உறுப்படியின் விலை பத்தாயிரத்திலிருந்து பல லட்சம் வரை  பேரம் பேசப்படுகிறது.
5)   அதுமட்டுமல்ல இவர்களுக்கு கீழே இருக்கும் குறைப் பிறவிகளுக்குள் உடலுறவை உண்டாக்கி மேலும் குறைக் குழந்தைகளை உருவாக்கும் கொடுமையும் நடக்கிறது.
6)   பழநியில் நடக்கும் தைப்பூச விழாவிற்கு கர்நாடகா மற்றும் நாக்பூர் போன்ற தூர இடத்திலிருந்தும் இப்படிப்பட்டவர்களை கொண்டு வந்து இறக்குகிறார்கள்.
7)   அது மட்டுமல்லாமல், திருவிழா சமயத்தில் கள்ளச் சாராயம், கஞ்சா விலைமாதர் சப்ளையும்  வெகுவாக நடக்கிறது. அதோடு திருடர்களும் வந்து கூடுகிறார்கள்.
8)   இந்த பிஸினெஸ்  செய்யும் முதலாளிகளை மிரட்டியும் உருட்டியும் போலீஸ்காரர்களும் தங்கள் பங்குகளை வாங்கிக்  கொள்கிறார்கள்.
9)   அதைவிடக் கேவலம் அந்தக்குறை உருப்படிகள் பெண்களைத் தூக்கிக் கொண்டு போய் போலீஸ்காரர்கள் உடலுறவு செய்வதும் நடக்கிறது என்பதை நினைத்தால் வாந்தி வருகிறது. இரண்டு காலும் இல்லாதவர்கள் அல்லது கையிரண்டும் இல்லாதவர்கள் ஆகியோர்களும் இதிலிருந்து தப்ப முடிவதில்லை.
10)               அதற்கும் மேல் ஆஸ்பத்திரியில் யாருக்காவது இதயமோ கிட்னியோ தேவைப்பட்டால் இந்த ஊனமுற்றவர்கள் முதலாளிகளால் விற்கப்படுகிறார்கள்.
11)               சமூக சேவை மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் பேரில் அல்லது தன்னார்வ இயக்கங்களின் பேரிலும் இந்தச் சுரண்டல் நடப்பதை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது.
12)               அவர்கள் மத்தியிலும் குழு, குடும்பம், அன்பு பரிவு, வாழ ஆசை என்பதையும் பல இடங்களில் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.
13)               அதோடு பிச்சையெடுக்கும் பிச்சைக் காரர்கள் வருவோர், போவோரை, பரிதாபமாக பிச்சையோடு அணுகுவதும் ஆனால் அவர்கள் பின்னால் பழித்துப் பேசுவதும் நடக்கிறது.
14)               இதைவிடக் கொடுமை என்னவென்றால் சிலர் சிறுபிள்ளைகளைப் பிடித்து முகத்தில் ஆஸிட் ஊற்றி சிதைத்து அடையாளத்தை மாற்றி இந்த மாதிரி முதலாளிகளிடம் விற்றுவிடுவது நடக்கிறது.
15)               இந்த முதலாளிகள் தங்கள் பொறுப்பில் இருக்கும் ஊனமுற்றவர்ளை வெறும் பொருட்கள் போல நடத்துவதும் தன் சொந்தக் குடும்பத்தின் மீதுமட்டும் பாசம் வைப்பதும் பெரிய முரண்.
16)               மனம் பிறழ்ந்த பிச்சைக்காரர்களை சாமியார் ஆக்கி பிழைப்பு நடத்துவதும் நடக்கிறது.
17)               இதுதவிர மனித மனங்களின் பலவித வக்கிரங்களையும் ஜெயமோகன்  எழுதியதைப் படித்தபோது மனம் பேதலித்துப் போனது.

Related image

ஜெயமோகன் அந்தப் பகுதியைச் சேர்ந்ததால் அவருக்கு அந்த மொழி தங்கு  தடையின்றி வருகிறது. படிக்கும்போதும் ஆச்சரியப்படுத்தும் ஜெயமோகன், எந்த  மதத்தயக்கமுமின்றி  உண்மைகளைப் புட்டுப்புட்டு வைக்கிறார். ஒரு புறம் முன்னேறிக் கொண்டிருக்குகிறோம். பொருளாதார வளர்ச்சியடைந்தியிருக்கிறோம். வல்லரசாகும் பாதையில் துரித நடை நடக்கிறோம் என்று சொல்லும்போது, நம் நாட்டில் இன்னும் இந்த மாதிரி அவலங்கள் நடப்பதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே.


4 comments:

  1. Replies
    1. படித்தால் மனம் ரணமாவது உறுதி ஸ்ரீராம்.

      Delete
  2. I have seen the movie 'Naan Kadavul' Thank you for sharing Writer Jeyamohan's original work.

    ReplyDelete