1978ல் வெளிவந்த சிட்டுக்குருவி என்ற திரைப்படத்துக்காக
இளையராஜா இசையமைத்த பாடல் இது. பாடலைக் கேளுங்கள்.
பாடலின் சூழல்:
பேருந்தில் பயணம் செய்யும் காதலர்கள் மனதுக்குள் பாடும்
பாடலாக இசையமைக்கப்பட்டிருக்கிறது.
இளையராஜா எப்பொழுதும் பயன்படுத்தும் கிடார் டிரம்ஸ் தவிர
இசைக்கருவிகளில் பலவித ஒலிகளை எழுப்பி
இசையமைத்திருக்கிறார்.
குறிப்பாக சோதனை முயற்சியாக Counterpoint
என்று சொல்லக்கூடிய இரு மெட்டுகள் ஒன்றையொன்று தழுவி ஒரே
மெட்டாக ஒலிக்கும் மேற்கத்திய டெக்னிக்கை இந்தப்பாடலில் பயன்படுத்தி
அசத்தியிருக்கிறார். ஆண்குரலிலும் சரி பெண்குரலிலும் சரி பல்லவியில் நான்கு பேர்
பாடியதைப்போல ஒலிக்கும். ஆண்குரலுக்கும் பெண்குரலுக்கும் அதே வரியில்
பதில் சொல்வது போல் வருகிறது. இது ரெக்கார்டிங் டெக்னிக் மட்டுமல்ல
இசையமைப்பதிலும் அவ்வாறே இசையமைத்து அதற்கு வார்த்தைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த டெக்னிக்கில் இது நல்ல ஹிட் பாடலாக அமைந்தது. அது தவிர பஸ் பயணத்தின் நடுவில் பாடல் ஒலிப்பதால் இயற்கையாக
வரும் சத்தங்களை அதே சுதியில் ஒலிப்பது போல இணைத்துள்ளதும் அபாரம். நடுநடுவில் வரும்
வார்த்தைகளைக் கவனியுங்கள்
நல்லா சொன்னீர் போங்க,
இந்தாம்மா கருவாட்டுக்கூடை முன்னாடிபோ
தேனாம் பேட்டை சூப்பர்
மார்கெட் இறங்கு
-அதுதவிர கண்டக்டரின் விசில் சத்தமும் சுதியில் ஒலிக்கிறது.
என் கண்மணி’ பாடல் பற்றி இளையராஜா கூறியதாவது:-
“சிட்டுக்குருவி படத்தின் டைரக்டர்கள் தேவ்ராஜ்-மோகன் இரட்டையர்களில்,
தேவ்ராஜ் எப்போதும் ஏதாவது பரிசோதனையாக செய்ய முயற்சிப்பார். “சிட்டுக்குருவி” படத்தில்
காதலனும் காதலியும், தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக்
கொண்டிருப்பார்கள். இப்போது காதலனின் உள்ளமும், காதலியின் உள்ளமும் கலந்து பாடுவது
போல, ஒரு பாடலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
இது ஒரு புது விஷயமல்லவா? இதற்கு மேல் நாட்டு இசையின்
‘Counterpoint’-ஐ உபயோகிக்க முடிவு செய்தேன்.
இதுபற்றி தேவராஜிடமும் விளக்கி சம்மதமும் வாங்கி விட்டேன்.
கவிஞர் வாலி, இரவு நேரம் என்றும் பாராமல் ஒத்துழைத்து தினமும்
வந்தார். அவரிடம் இதை விளக்கியபோது, டியூனை
வாசிக்கச் சொல்லிக் கேட்டார். ‘ஒன்றுக்கு மேற்பட்ட
இரண்டு டியூன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா?’ என்று கேட்டார்.
நான் அவரிடம், “அண்ணே! இரண்டு டியூனும் தனியாக பாடப்பட்டால்
அதனதன் தனித்தன்மை மாறாமலும், ஒரு டியூனுக்கு இன்னொரு டியூன் பதில் போலவும், அமைய வேண்டும். அந்த பதில் டியூனும் தனியாகப் பாடப்பட்டால் அதன்
தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும். இரண்டையும்
சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல இல்லாமல், ஒரே பாடலாக ஒலிக்க வேண்டும்” என்றேன்.
பதிலுக்கு வாலி, “என்னையா நீ? இந்த நட்ட நடு ராத்திரியில ‘சிட்டுக்குருவிக்கு
சிட்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்குறே? முதல்ல ஒரு ‘மாதிரி’ (Sample) பாடலைச்
சொல்லு!” என்றார்.
உடனே வேறு ஒரு பாடலைப் பாடி விளக்கினேன். நான் ஒரு டியூனையும்,
அமர் ஒரு டியூனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினோம்.
‘சரி’ என்று புரிந்ததாகத் தெரிவித்த வாலி, கொஞ்சம் யோசித்தார். பின்னர் கையில் Pad-ஐ எடுத்தவர் யாருக்கும் காட்டாமல்
அவர் எழுதும் பாணியில் மளமளவென்று எழுதினார்.
பாடல் என் கைக்கு வந்தது.
இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும், மொத்தமாய் பாடும்போது பொதுவான
அர்த்தமும் வருவது மாதிரியே வாலி எழுதியிருந்தது எல்லோருக்குமே பிடித்துப் போயிற்று.
இந்தப் பாடலை Record செய்யும்போது இன்னொரு பிரச்சினை வந்தது. ஒரு குரலில் காதலன் பாட, இன்னொரு குரலில் காதலனின்
உள்ளமும் பாட வேண்டும் அல்லவா? இதை எப்படி
Record செய்வது?
ஏ.வி.எம். சம்பத் சாரிடம் “ஒரு குரலில் பாடுவதை மட்டும் முதலில்
Record செய்வோம். மற்றொரு குரல் பாடும் இடத்தை வெறுமனே விட்டு விடாமல் இசைக்கருவிகளை
இசைப்போம். இப்படி முழுப்பாடலையும் பதிவு செய்து
விட்டு, அதை மறுபடி Play செய்து இன்னொரு குரலை அதனுடன் பாட வைப்போம். பிறகு இன்னொரு Recorder-ல் மொத்தமாக இரண்டையும்
பதிவு செய்வோம் என்று முடிவு செய்து தொடங்கினோம்.
டைரக்டர்கள் தேவ்ராஜ்-மோகன் இருவரில், மோகன் சாருக்கு
Composing சமயத்தில் இருந்தே இதற்கு உடன்பாடில்லை. இந்தப் பாடலும் பிடிக்கவில்லை. பாடல் பதிவு நேரத்திலும் எதுவும் பேசாமல் ‘உம்’மென்றே
காணப்பட்டார். ‘எப்படி வருமோ?’ என்று அடிக்கடி
சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார்.
தேவ்ராஜோ உற்சாகமாக இருந்தார். ‘இந்த மாதிரி Idea வருவதே கஷ்டம். புதிதாக ஏதாவது செய்வதற்கு எப்போது சந்தர்ப்பம்
கிட்டும்? இப்படிச் செய்கின்ற நேரத்தில் அதைப்
பாராட்டாவிட்டாலும், புதிய முயற்சி என்று ஊக்குவிக்கவில்லை என்றால் கலைஞனாக இருப்பதற்கு
அர்த்தம் என்ன?’ என்று கூறினார்.
இந்தப் பாடலின் இடையிடையே ‘தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு!’ ‘இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னாடி போ!’ என்று பேசுகிற மாதிரி வரும். இதற்கு அண்ணன் பாஸ்கரைப் பேச வைத்தேன். பாடல் ரசிகர்களிடையே அதற்குரிய வரவேற்பைப் பெற்றது”. என்றார். (நன்றி தினமலர்)
என்
கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப்
பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான்
சொன்ன ஜோக்கைக் கேட்டு நானமோ
நீ
நகைச்சுவை மன்னனில்லையோ
நல்லா
சொன்னீர் போங்கோ..
என்
மன்னவன் என் காதலன்
ஓராயிரம்
கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா
இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ
ரசிக்கின்ற கன்னியில்லையோ
என்
கண்மணி..
இரு
மான்கள் பேசும்போது மொழியேதம்மா
பிறர்
காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
ஒரு
ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி
வேறு இல்லை கவனங்களில்..
இளமாலையில்..
அருகாமையில்..
வந்தாடும்
வேளை இன்பம் கோடியின்று
அனுபவம்
சொல்லவில்லையோ..
இந்தாம்மா
கருவாட்டு கூடை.. முன்னாடி போ..
என்
மன்னவன்..
என்
கண்மணி..
தேனாம்பேட்டை
சூப்பர் மார்க்கேட் இறங்கு..
மெதுவாக
உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி
எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான
நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாளச்
சின்னம் அன்று தரவேண்டுமே
இரு
தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும்
நேரமென்று கூடுமென்று
தவிக்கின்ற
தவிப்பென்னவோ
என்
கண்மணி..
என்
மன்னவன்..
பல்லவியில் இரு மெட்டுகள்
இருக்கும் இந்த அமைப்பில் இன்னொரு சேலஞ்ஜ் என்னவென்றால்,
இதற்கு வார்த்தைகள் அமைப்பதும் கடினம். எப்படியென்றால் அந்த
இரு மெட்டுகளின் வரிகளை சேர்த்துக் கேட்டாலும்
அர்த்தம் வரவேண்டும், தனித்தனியாகப் பாடினாலும் தனியாக அர்த்தம்
தொனிக்க வேண்டும்.. இந்தச் சவாலை எடுத்துக் கொண்டு கவிஞர் வாலி மிகச் சிறப்பாக
வரிகளை அமைத்திருக்கிறார். கூர்ந்து கேட்டுப்பாடிப்பாருங்கள் அந்த வித்தை புரியும்.
பல்லவி -1(ஆண்குரல்)
என் கண்மணி இளமாங்கனி சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக்கேட்டு நாணமோ.
பல்லவி-2
உன் காதலி உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதே
நீ நகைச்சுவை மன்னனில்லையோ.
பல்லவி-1(பெண்குரல்)
என் மன்னவன் எனைப்பார்த்தும் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத்தூண்டுமோ
பல்லவி-2
என் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான்
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
வாலி அவர்களின் முதல் சரணத்தைப் பாருங்கள்,”இருமான்கள்
பேசுவதற்கு மொழி தேவையில்லை அவை பிறருக்கும் கேட்காது ஏனென்றால் அது மெளன மொழி”,
என்று சொல்லுகிறார். அதோடு. “ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவின்றி வேறு
எந்தக்கவனமும் இருக்காது”, என்று சொல்லும்போது பாடலின் சூழலை படம்
பிடித்துக்காட்டுகிறது.
குரல்:
இந்தப்பாடலைப் பாடியவர்கள் SPB, P.சுசிலா, குறிப்பாக சுசிலாவின் குரல் தேனாக இனிக்கிறது. உச்சரிப்புச்
சுத்தம் காதல் கனியும் குரல் என்று இருவரும் அசத்துகிறார்கள். எனக்கொரு சந்தேகம். P.சுசிலா இளையராஜாவுக்குப் பாடிய பல பாடல்கள் பெரிய ஹிட்
ஆனாலும் சுசிலா என்றால் MSV இசையமைத்த பழைய பாடல்களை மட்டும் சொல்வது ஏன் என்று
தெரியவில்லை.
மொத்தத்தில் இளையராஜாவின் இந்த சோதனை முயற்சியில் இணைந்த
வாலி SPB,
சுசிலா ஆகிய யாவருக்கும் இது ஒரு வெற்றிப்பாடல் ஆகும்.
தொடரும்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>