Friday, March 8, 2013

லிட்டில் இந்தியா - 1: ’கருவாட்டுக்குழம்பு படு அலட்சியமா யாரு வச்சது?’





ன்னைப் பொறுத்தவரைமனைவி அமைவதெல்லாம்ஐ விட உணவு அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்என்பேன். சமைக்காமல் இருப்பதற்கு எதுடா சாக்கு? என்று யோசிக்கும் மனைவிகளுக்கு மத்தியில், எங்க வூட்டுக்காரம்மா மட்டும் விதிவிலக்கா என்ன? நேற்று அவளுக்கு ஓவர்டைம். வீட்டுக்கு லேட்டாக வந்ததால் சமைக்கவில்லை.
எப்போதாவது அபூர்வமாக நல்லவளாக மாறும் என் மூத்த வாரிசு அனீஷா, மீதமிருந்த மாவில் தோசை ஊற்றி, குட்டி மம்மியாக மாறி, அனைவருக்கும் பரிமாறி, பாத்திரங்களைக் கவிழ்த்துவைத்தாள்.
பொதுவாக நாங்கள் இரவில் சமைக்கிற உணவை, கொஞ்சம் எடுத்து வைத்து அதையே மறுநாள் மதியத்துக்கும் எடுத்துச் செல்வது வழக்கம். அளவுக்கு மீறினால் அனிஷாவும் நஞ்சுஎன்ற எண்ணத்தில், அவளது தோசையை அலுவலகத்துக்கும் எடுத்துச்செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு,மதியச்சாப்பாடு எடுத்துச்செல்லாமல் அலுவலகம் சென்றேன்.
’பேக்கிரவுண்டுல சாப்பாடு,... ஃபோர் கிரவுன்டுல நான் பசியோடு
உடன் வேலைபார்க்கும் சலீமும் அன்று மதிய உணவு எடுத்து வராததால் இருவரும் வெளியே சென்று சாப்பிடுவதென்று முடிவெடுத்தோம். அகோரப்பசி கலந்த சிலபல ஆலோசனைகளுக்குப் பிறகு, லெக்சிங்டனில்  உள்ள சென்னை கார்டனுக்கு செல்வதென்று ஒருவயிறாக முடிவெடுத்தோம்.
பொதுவாக என் ஆபிஸில் உள்ள பேண்ட்ரியில், இந்தியர் அனைவரும் சம பந்தியர்களாக மாறி பாட்லக் முறையில் எங்கள் உணவைப் பகிர்ந்துகொள்வது வழக்கம்.
வடநாட்டான் காட்டானாக மாறி, நம் அரிசிச் சோறுக்கு அலைய, நாங்கள் அவர்களது சப்பாத்திக்கு சப்புக்கொட்டுவோம். என் வீட்டு இட்லியும், மட்டன் கறியும்[baby goat] பேண்ட்ரியில் பெரும் பிரபலம். மும்பையைச் சேர்ந்த மார்வாடிப்பையன் கொண்டு வரும் மினி சைஸ் சப்பாத்தி வாயில் வைத்தாலே கரைந்துவிடும். அவன் கொண்டு வரும் பாவ்பாஜிக்கு நான் ஆயுள் சந்தா கட்டாத அடிமை. அதுபோல் நான் வேறெங்கும்  சாப்பிட்டதில்லை.
பேண்ட்ரிக்கு கருவாட்டுக் குழம்பு கொண்டுவரக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம். ஒரு முறை அமீன் கொண்டுவந்த கருவாட்டுக் குழம்பை மைக்ரோ-ஓவனில் சூடு பண்ணும்போது கிளம்பிய நாற்றத்தால், ஜெயின் ஒருவன் வகைதொகையில்லாமல் வாந்தியெடுத்து, ஒருவார லீவு போட்டு வாயை சுத்தப்படுத்திக்கொண்டிருக்க, மற்றவர்களும் நாற்றத் தாக்குதலால் துடித்துப்போனார்கள். கருவாடு என்ற பெயரைக் கேட்டவுடன் லேசாக பூனையின் தோற்றத்துக்கு மாறிப்போகும் நானே கூட, அந்த நாற்றத்தால் நடுங்கிவிட்டேன் எனும்போது மற்றவர்களைப் பற்றி கேட்கவாவேண்டும்? [ இந்த சமயத்துல ராஜா குரல்ல ‘ கருவாட்டுக்குழம்பு கனகச்சிதமா யாரு வச்சது?’ பாட்டு ஏன் ஞாபகத்துக்கு வருதுன்னு தெரியலையே?]
கருவாட்டுக்கு ‘144’ வந்த கதை இதுதான்.
இதுபோலவே இங்கே இன்னும் சில  ’அன்பானவிதிமுறைகளும் உண்டு. நாம் கொண்டு வரும் உணவை மற்றவர்கள் எடுக்கும் முன் நாம் கைவைக்க முடியாது. சப்பாத்தி, வடை, இட்லி போன்றவற்றைக் கொண்டு வருபவர்கள் குறைந்தபட்சம் ஆளுக்கு ஒன்று கிடைக்கும்படியாவது கொண்டுவரவேண்டும். விவகாரமான விவகாரங்கள் எதுகுறித்தும் கண்டிப்பாக விவாதிக்கக்கூடாது.
பிறந்தநாள்,  Labor approvel, I140 approvel, Greencard approvel,Citizen ஆதல் போன்ற விஷேச நிகழ்வுகளுக்கு கண்டிப்பாக தனிப்பட்ட முறையில் எல்லோருக்கும் பார்ட்டி தரவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பார்ட்டிகள் ஒரே நாளில் அமைந்தால் செலவை ஷேர் பண்ணிக்கொள்ளலாம்.
எங்கள் பிரசிடண்ட் முகம்மது சதக், ஊரில் இருக்கும்போது சில சமயங்களில் மட்டும் பார்ட்டிகளில் கலந்துகொள்வார். அவர் பெரும்பாலும் மதியத்தில் சூப் அல்லது சூஷியை சாப்ஸ்டிக்கில் சாப்பிடுவார். சூஷி- ஒரு வகை பச்சை மீன். அவரைத்தவிர யாரும் அந்த பச்சை மீனின் வலையில் விழுவதில்லை.
விவரம் தெரியாத பாகிஸ்தானி சல்மான் ஒருமுறை, குட் ஃப்ரைடேக்கு பார்ட்டி கேட்க, அசைவப்பிரியர்களே அஞ்சி நடுங்கும் அளவுக்கு, அய்யங்கார் தோழி ஒருத்தி,சிக்கன்,மட்டன், பீஃப்,போர்க் என்று சகல ஜீவராசிகளையும் குழப்பி அடித்து குசலம் விசாரித்தபோது பேண்ட்ரி அன்பர்கள் அத்தனைபேரும் ஆவி ஒடுங்கி நின்றது ஒரு தனிக்கதை.

லெக்சிங்டன் அவென்யூவுக்கு எங்கள் அலுவலகத்திலிருந்து சப்-வே வழியாக இரண்டு ரயில்கள் மாறிப்போனால் 20 நிமிடங்கள் ஆகும்.விரைவாக  நடந்துபோனால் ஒரு ஐந்து நிமிடம் குறைவுதான் . எனவே குளிராய் இருந்தாலும் நடந்தே போவது என்று முடிவு செய்து,குளிரில் நடங்க ஆரம்பித்தோம்.
என் அலுவலகம் இருப்பது மிட்-டவுன் பிராட்வேயில் 30க்கும் 31க்கும் நடுவில் இருக்கும் தெருவில். இங்கே நுழைந்ததும், Haiti-யில் இருப்பது போல் ஒரு ஃபீலிங் இருக்கும். அந்நாட்டைச் சேர்ந்த பலர்சல்லிசான விலைகளில் கிடைக்கக்கூடிய ஆப்ரிக்க அழகு சாதனங்களைக் கொண்டு இங்கே கடைகளை விரித்துவிட்டனர். வாடகை இன்னும் குறைச்சல் என்பதால் ஏழாவது மாடியை வளைத்துப்போட்டுவிட்டார் சதக். இல்லாவிட்டால் மேன்ஹாட்டனில் வாடகை என்பது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று.
குறுக்கே புகுந்துத ஃபேமஸ் ஐந்தாம் அவென்யூ,மாடிசன் அவென்யூ, பார்க் அவென்யூ ஆகியவற்றைத் தாண்டி,லெக்சிங்டனின்லிட்டில் இந்தியாவந்தடைந்தோம்.
சமீபத்தில் துவங்கப்பட்டஅஞ்சப்பர் ஹோட்டல்செம ஹாட் ஹிட் என்பது ஒருபுறமிருக்க, ஆச்சரியமான ஒரு விஷயம், இந்தப்பகுதியில் பல ஆண்டுகளாகவே தென்னக உணவகங்கள் தான் சக்கைப்போடு போடுகின்றன. ‘பொங்கல் ரெஸ்டாரெண்ட்’,’உடுப்பி பவன்’,’மெட்ராஸ் மஹால்சென்னை கார்டன்’, ‘சரவண பவன்என்று இந்த ஏரியா முழுக்க நம்ம ஊரு அண்ணாச்சிகளின் ஆட்சியே. ஆலமரம்,அதன் அடிவாரத்தில் அடிவாங்கிய சொம்பு, அங்கே கட்டப்பஞ்சாயத்து நடைபெறாத ஒரே குறைதான்.
ரெஸ்டாரென்ட்  பேரும், அங்கே பரிமாறப்படும் உணவு வகைகளும் தான் நம்ம ஊரு என்றாலும், சும்மாக்காச்சுக்கும் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் நம்ம ஊர் ஆட்கள்  ஒன்றிரண்டு பேரைத்தவிர, அங்கே வேலை பார்ப்பது பெரும்பாலும் ரஷ்யர்களும், ஸ்பானியர்களும்.
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
நம்ம இட்லியையும்,தோசைகளையும், வெண்பொங்கல்,சாம்பார்களை அவர்கள் வாயால்,செம்மொழியாம் தமிழ்மொழியில் உச்சரித்து சர்வீஸ் செய்வார்களே, அதைக் கேட்க காது கோடி வேண்டும்.

அவிங்க கையால வாங்கிச் சாப்பிடனும் போல லைட்டா பசிக்குமே?’ உங்க பேரை கவுண்டர்ல எழுதி வச்சிட்டு, ப்ளீஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்,,,.



3 comments:

  1. சாப்பாடு பிரச்னை பெரும் பிரச்னை போல சார்......அதுவும் நம்ம ஊர் சாப்பாடு ரொம்ப அரிது போல ..

    ReplyDelete
  2. அதை ஏன் கேக்கறீங்க போங்க

    ReplyDelete